Jump to content

உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே செய்கிறோம்: மலக்குழி தொழிலாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

: மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதைகளை பகிர்கிறார்கள்

விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ்
மணி

உயிருக்கு உத்தரவாதம் இல்லை, ஏராளமான உடல் உபாதைகள், போதிய ஊதியம் இல்லை, சமூதாயத்தில் மரியாதையும் இல்லை.

இதுதான் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் நிலை.

அரசாங்க வேலை என்று நம்பி...

"இது அபாயகரமான வேலை என்று தெரிந்தும் உடலையும் உயிரையும் பணயம் வைத்து இதை செய்வதற்கு ஒரே காரணம் இது அரசாங்க வேலை என்பதால்தான். எட்டு வருடங்களாக இந்த பணியில் இருக்கிறேன் ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு தான் இது அரசாங்க வேலை இல்லை என்பது தெரியவந்தது" என்கிறார் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சென்னை சூளையை சேர்ந்த மணி.

மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனித கழிவுகளின் குழிக்குள் இறங்கி விஷவாயுத் தாக்கி உயிரிழிந்தனர் என்ற செய்தியை நாம் கேட்காமல் இல்லை.

இந்தியா முழுவதிலும் தமிழகத்தில்தான் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமைகள் குறித்து பணியாற்றும் சஃபாயி கர்மசாரி அந்தோலன் என்னும் அமைப்பு.

மணி

இந்த வருடத்தில் மட்டுமே தமிழ்நாட்டில் இதுவரை 12 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இறந்துள்ளனர். ஆதாவது வெறும் நான்கு மாதங்களில் மட்டும் என்கிறது இந்த அமைப்பு.

பொதுவாக சமூக நிர்பந்தங்களால் தாங்களாக இந்த பணியில் ஈடுபடுவதும் மற்றும் அரசாங்கத்தில் ஒப்பந்தம் எடுத்த நபர்களால் பணி அமர்த்தப்படுவதும் என இரண்டு விதமாக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கத்தில் ஒப்பந்தம் பெரும் நபர்களால் பணியமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே இதில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இது அரசாங்க பணியில்லை. அரசாங்க பணியில் கிடைக்கும் எந்த ஒரு நலனும் இதில் கிடைக்காது. இது ஒரு தினக்கூலி வேலை மட்டுமே என்று தெளிவாக சொல்லப்படுவதில்லை.

'வேறு வழியில்லை'

இவர்கள் பெரும்பாலும் அரசாங்க ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்பட்டாலும் இவர்களுக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.

"வயிற்று போக்கு, வாந்தி, தலைவலி இது எல்லாம் அடிக்கடி வரும். ஆனால் லீவு எடுத்தால் அன்றைய கூலி போய்விடும் என்பதால் அதை கண்டுகொள்ளாமல் வேலைக்கு போய்தான் தீர வேண்டும்" என்கிறார் மணி.

மூன்று பேர் ஒன்றாக உட்காரக்கூட முடியாத ஒரு சின்ன வீட்டில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சிரமப்பட்டு வசித்து வருகிறார் இவர். இவர் குடும்பத்தின் முக்கிய வருமானம் இவருக்கு கிடைக்கும் தினக்கூலிதான்.

மணி

"இந்த அடைப்பு வேலையை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடக்கூட முடியாது, வாந்தி மயக்கம்தான் வரும், யாரேனும் பக்கத்தில் வந்து எதுவும் கேட்டால் கூட பேச முடியாத அளவு சோர்வு இருக்கும், இதை வீட்டில் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் இதுதான் என் குடும்பத்தின் வருமானம்" என்கிறார் அவர்.

சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது எங்களுக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்று கூறும் இவர், தலைவலி தாங்க முடியாமல் தன்னுடன் வேலை செய்த ஒருவர் தன்னைதானே மாய்த்துக் கொண்ட ஒரு சம்பவத்தை கண்ணீருடன் நினைவு கூறுகிறார்.

சமூகத்தில் புறக்கணிப்பு

இந்த பணியில் ஈடுபடுவதால் நியாயமான ஊதியமும் கிடைப்பதில்லை சமூகத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை என்கிறார் எண்ணூர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி.

இவர் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 18 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். இவரின் பகுதியில் பெரும்பாலானோர் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் உட்பட. இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

"சுத்தம் செய்யும் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டால் பாத்ரூமில் இருக்கும் தண்ணீரை கொடுப்பார்கள். அதையும் சகித்து கொண்டு நாங்கள் குடிப்போம். அவர்களுக்காக சுத்தம் செய்யும் பணியை நாங்கள் செய்யும்போது, அவர்கள் எங்களை கேவலமாக மட்டுமே நடத்துவார்கள். மனிதர்களாக கூட பார்க்கமாட்டார்கள்" என்கிறார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி

இது உயிருக்கே ஆபத்தான ஒரு பணி என்று தெரிந்துதான் பலரும் இதை செய்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் இதை விருப்பத்தோடு செய்வதில்லை. ஏதோ ஒரு நாள் தங்களுக்கு மாற்று வழி ஏற்படும் என்றே இவர்கள் நம்புகின்றனர்.

'சாதிய வன்கொடுமை'

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சாதி ரீதியான கொடுமை என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

இதன் அடிமட்டத்தில் சாதிய வேறுபாடுகள் மிக வலுவாக வேறூன்றி உள்ளது என்கிறார் சஃபாயி கரம்சாரி அந்தோலன் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தீப்தி சுகுமார்.

இந்த அமைப்பின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1993 - 2017ஆம் ஆண்டு வரை 251 பேர் இந்த பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள்.

"இது சட்டப்படி குற்றமாகும், மேலும் இந்த சட்டத்தின்படி இந்த பணியில் ஈடுபடுவோருக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு ஏற்ற மாற்று வழிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

தீப்தி Image caption இது ஒரு சாதிய வன்கொடுமை என்கிறார் தீப்தி

ஆனால் பெரும்பாலும் பணியாளர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை" என்கிறார் தீப்தி சுகுமார்.

'சென்னையில் இல்லை'

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 252 மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இல்லை என்று தெரிவிக்கிறார் சென்னை மாநகராட்சியின் கட்டடங்கள் மற்றும் திடக்கழிவுத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் ஜி.வீரப்பன்.

"சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை சுத்தம் செய்யும் பணிகள் இயந்திரங்களை வைத்தே செய்யப்படுகிறது" என்கிறார் அவர்.

"ஏற்கனவே இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று உதவிகளை செய்து அவர்கள் இந்த பணியைவிட்டு வேறு பணிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்" என்கிறார்

2013ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடை செய்யும் சட்டம் அதில் ஈடுபவர்களுக்கு முறையான மாற்று தொழில்களை அமைத்து தரப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

ஆனால் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை என்கிறார் சிரஞ்சீவி

"ஏதோ ஒரு படிவத்தை நாங்கள் நிரப்பி கொடுத்தோம். ஆனால் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அதனால் எங்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை" என்கிறார் அவர்.

தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய எந்த உதவித் தொகை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமலேயே பேசுகிறார் சிரஞ்சீவி,

இழப்பீடு கிடைப்பதில் தாமதம்

நாம் பேசிய பலருக்கும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவித்தொகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது.

ஆதிலட்சுமி

அதுமட்டுமல்லாமல் விஷவாயு தாக்கி உயிரிழந்தால் கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை பெறுவதற்கும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக சொல்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

"என் கணவர் இறந்து 18 வருடங்கள் ஆகிறது நானும் பல மனுக்களை கொடுத்து பார்த்துவிட்டேன் இதுவரை எந்த உதவியும் எனக்கு கிட்டவில்லை" என்கிறார் ஆதிலட்சுமி.

ஆதிலட்சுமியின் கணவரும் அவரின் தம்பியும், கழிவுநீர் தொட்டி ஒன்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்துவிட்டனர். ஆனால் சட்டப்படி அவருக்கு வரவேண்டிய இழப்பீடு இன்றும் கிடைக்கவில்லை.

மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது சட்டப்படி குற்றம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது என்கிறது சட்டம். ஆனால் இதுகுறித்து அங்கங்கு சில விழிப்புணர்வு இருந்தாலும் பெரும்பாலும் இது நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு எதிராக போராடிவரும் செயற்பாட்டாளர்கள்

https://www.bbc.com/tamil/india-48112886

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது, பாதுகாப்பு ஆடைகளும் இல்லை, சுவாச கருவிகளும் இல்லை.
மனிதர்கள் உள்ளே செல்ல முன்னர் விசவாயுவை வெளியேற்ற முடியாதா? நீண்ட குழாய்கள் போன்றவற்றை பொருத்தி உயர்வான இடத்தில் விசவாயுவை வெளியேற்ற முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

என்ன கொடுமை இது, பாதுகாப்பு ஆடைகளும் இல்லை, சுவாச கருவிகளும் இல்லை.
மனிதர்கள் உள்ளே செல்ல முன்னர் விசவாயுவை வெளியேற்ற முடியாதா? நீண்ட குழாய்கள் போன்றவற்றை பொருத்தி உயர்வான இடத்தில் விசவாயுவை வெளியேற்ற முடியாதா?

திரைப்படங்களிலும்  அரசியலிலும்  மட்டும் தங்களை வல்லரசு என பிமிப்பூட்டும் நாடு அது.மனிதத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை மறைத்து கேளிக்கைகளை முன்னிலைப்படுத்தும் நாடு அது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.