Jump to content

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு

“வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினார் அதனை வழங்கத் தாயார்”

DSC_0591-1024x683.jpg

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர் படிக்கின்றனர். அவற்றில் எந்தொரு பாதுகாப்பு தன்மைகள் கூடமால் இருக்கின்றது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகரபகுதியில் உள்ள 84  தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும். பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

வடமாகாணத்தின் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினார் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம் – என்றார்.

 

http://www.virakesari.lk/article/55145

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு

முதல்ல உங்கடை வாள்வெட்டுகளும் கடத்தல்களும் எப்ப நிக்கும் என்டு சொல்லுங்கோ பாக்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.