Jump to content

சட்ட பூர்வ கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட பூர்வ கொலை.

தாத்தா வயது 79. மனைவியோ படுத்த படுக்கை. அவரை பராமரிக்கும் வேலை.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், ஒருநாள் அதிகாலை வேளை. போதைப்பொருள் உள்கொண்ட நிறை மயக்கத்தில் 37 வயது திருடன் வீட்டினுள் புகுந்து கொண்டான். அவனுடன் இன்னுமோர் திருடன்.

வயதானவர்கள்.... தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

தனது மனைவிக்கு உணவு தயாரிக்க கீழ்தளத்தில் இருந்தார் தாத்தா.

அவனது கையில் நீளமான screwdriver. அவைதான் அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள். போலீஸ் செக் பண்ணினாலும், அது சட்டதுக்கு மாறான பயங்கர ஆயுதம் கிடையாது என்பதால் போய் கொண்டே இருக்கலாம்.

பெரிய வாள் ஒன்றை தூக்கிக் கொண்டார் தாத்தா. 'இதோ பார்... நான் வைத்திருப்பது மிக நீளமானது. எனது வீட்டிலிருந்து வெளியே போய் விடு, கிராதகனே... எச்சரித்தார் தாத்தா.

கிழவனுக்கு லொள்ளை பார் என்பதுபோல அவரை கடந்து செல்ல முனைந்தான் அவன்.

5ccaec6e240000d80038c95c.png.cf.jpg

சுழட்டினார் வாளை . சுருண்டு விழுந்தான் அவன். கூட வந்தவனோ, பின்னம் கால் பிரடியில் அடிபட ஓடிவிட்டான்.

போலீசார் வந்தனர். பிணத்தினை அகற்றி, தாத்தாவை கொண்டு சென்றனர். அவரிடம் வாக்குமூலம் எடுக்கவே என்று சொன்னாலும், அவர் கைதானார் என்றே செய்தி பரவியது.

5ccaf3a82400002601e52380.png.cf.jpg

மக்கள் கொதிக்க தொடங்கினர். தாத்தா அனுப்பி வைக்கப்பட்டார. 

இறந்தவனோ, பரம்பரை திருடன். குடும்பமே திருட்டு தான் தொழிலே.

அவர்கள் திரண்டு வந்து, தாத்தாவின் வீட்டு வேலியில் பூக்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பலி வாங்காமல் விடமாடோம் என்று சூளுரைத்தனர்.

5ccaf3dc2300008500948557.png.cf.jpg

தாத்தாவின் பாதுகாப்புக்காக, அவரையும், மனைவியையும் வேறு ஒரு ஊருக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.

அந்த பகுதியில் இருக்கும் மக்கள், பூங்கொத்துகளை புடுங்கி வீசுவதும், காலால் மிதித்து கோபத்தினை காட்டுவதும், அவர்கள் குடும்பமாக வந்து மீண்டும் பூக்கொத்துகளை வைப்பதுமாக நிலைமை இருந்தது.

5ccaf3be2300009400d165cc.png.cf.jpg

பொலிசாருக்கோ, அதிகாரிகளுக்கோ தர்மசங்கட நிலை.

இறந்தவனுக்கு துக்கம் அனுசரிப்பது அவர்களதுஉரிமை. அதனை தடுக்க முடியாது. ஆனாலும், அங்கே வந்து கொல்லுவோம், எரிப்போம், பழி  வாங்குவோம் என்று அலம்பறை பண்ணுவது சரியல்ல என்பது ஊரார் வாதம்.

சில நாட்கள் விட்டுப் பிடித்து, போதும் இதுக்கு மேல் இங்கே வரவேண்டாம் என்று சற்று இறுக்கம் காட்டினார்கள்.

மெதுவாக ஓய்ந்தது.

மரணவிசாரணை தீர்ப்பு இன்று வழங்கப் பட்டது. 

தாத்தா செய்தது, தன்னையும், தனது மனைவியையும், வீட்டினையும் காப்பாத்திக்கொள்ள செய்த சட்ட பூர்வமான கொலை என்று தீர்ப்பு வந்துள்ளது.

இத்துடன் வழக்கு முடிவுக்கு வந்தது.

இதே போல, டோனி மார்ட்டின் என்பவர் தோட்டத்துக்குள்ளும் திருடர்கள் அடிக்கடி வந்து போனார்கள். ஒரு நாள் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டார்.

மக்களின் அனுதாபம் இருந்த போதும், அவர் மீது கொலை வழக்கு பாய்ந்தது. குறைந்தளவாயினும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். ஒன்று கை மோச கொலை. இரண்டாவது திட்டமிட்ட கொலை.

அதுவே சட்டத்தின் பார்வை. இன்றும் கூட, வீட்டினுள் வந்து விட்ட திருடனை கொல்ல சட்ட அனுமதி இல்லை. காரணம் ஒருவரை பிடிக்காவிடில், தனது வீட்டுக்கு, கடத்தி வந்தோ, வரவழைத்தோ கொலை செய்து விட்டு, வீட்டினுள் என்னை தாக்க வந்தார், கொன்றேன் என்று சொல்லி தப்பலாம் என்பதாலே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வாள் இல்லை குசினியில் பாவிக்கும் கத்தி என்றுதானே செய்தியில் சொன்னது!

கிழவன் வாளைச் சுழட்டவில்லை. தன்னைப் பாதுகாக்க முன்னுக்கு நீட்டிப் பிடித்தார். ஸ்க்ரூ ட்றைவருடன் அவரைக் கொல்ல  வந்த திருடன் நீட்டிக்கொண்டு நின்ற கத்தியில் செருகுப்பட்டதால் இறந்தான் என்றுதான் கிழவனின் வாக்குமூலம் உள்ளது. அதனால்தான் இது சட்டபூர்வமான கொலையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரும் கள்ளனைத் தீர்த்துக்கட்டலாம் என்று யாராவது வெளிக்கிட்டால் உள்ளே போவது நிச்சயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயத்தினை மொழி பெயர்க்கும் போது, வாசிப்பவர்களுக்கு சட்ட நுணுக்க வியாக்கியானம் தேவையில்லை என்பதே என் கருத்து. அவர்களுக்கு புரியும் இலகுவான தமிழ் தான் முக்கியமானது என்பதே எனது நோக்கம். வாள் இலங்கை, இந்தியாவில் வாசிக்கும் மக்களுக்கு புரியும். மிக நீளமான கத்தி என்று சொல்வதிலும் பார்க்க வாள் என்பது புரியக் கூடியது. இதன் காரணமாகவே அவர்களது பெயரைக் கூட சொல்லாமல், தாத்தா, திருடன் என்றேன்.

தின்னையில் கோசனும் கதைவை திறந்து விட்டு வார்னிங் கொடுத்ததாக சொல்கிறார். அப்படி தெரியவில்லையே.  

அடுத்ததாக, நான் வாளை சுழட்டினார் என்று சொன்னேன். கிருபன், நீங்கள், கையில் வைத்திருந்த கத்தியில் வந்து தானே வந்து சொருகிக் கொண்டு இறந்தான் என்கிறீர்கள். இது தான் சட்ட நுணுக்க வியாக்கியானம். 

பொது அறிவுள்ள எவனும், துப்பாக்கியில் இருந்து வந்த குண்டின் வழியில் நின்றதால் அவர் இறந்து போனார் என்று சொல்வார்களா?

இந்த கிழவருக்கு இருந்த பெரும் அனுதாபத்தினாலும், ஆதரவினால், இந்த சட்ட நுணுக்க வியாக்கியானதுடன் வழக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது.

(ஐயோ.... தாங்களும் தின்ன மாட்டினம், பந்தில இருந்தும் எழும்ப மாட்டினம் கோஸ்டிகளால பெரிய அக்கப்போராக கிடக்குது.... இதோட விடுங்கப்பா.... திருப்பி வந்து.... நியாயம் பிளவாம 😀 
- சும்மா பகிடிக்கு... கோவியாதைங்கோ-)

Osborn-Brooks had warned Vincent that his knife was “bigger than yours and if you don’t leave my house you will be sorry”, the hearing was told.

“I was just showing him that the knife I had was actually bigger than the screwdriver. So if he was to lunge at me he would hit my knife rather than hit me first.

“I thought he would look at my knife and see it is bigger than his implement and he would take the opportunity to run out the front door, which was open. My intention was to get him out of the house and away from my wife.

https://www.theguardian.com/uk-news/2019/may/02/hither-green-stabbing-of-burglar-was-lawful-killing-coroner-rules

4 hours ago, கிருபன் said:

பெரிய வாள் இல்லை குசினியில் பாவிக்கும் கத்தி என்றுதானே செய்தியில் சொன்னது!

கிழவன் வாளைச் சுழட்டவில்லை. தன்னைப் பாதுகாக்க முன்னுக்கு நீட்டிப் பிடித்தார். ஸ்க்ரூ ட்றைவருடன் அவரைக் கொல்ல  வந்த திருடன் நீட்டிக்கொண்டு நின்ற கத்தியில் செருகுப்பட்டதால் இறந்தான் என்றுதான் கிழவனின் வாக்குமூலம் உள்ளது. அதனால்தான் இது சட்டபூர்வமான கொலையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வரும் கள்ளனைத் தீர்த்துக்கட்டலாம் என்று யாராவது வெளிக்கிட்டால் உள்ளே போவது நிச்சயம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அடுத்ததாக, நான் வாளை சுழட்டினார் என்று சொன்னேன். கிருபன், நீங்கள், கையில் வைத்திருந்த கத்தியில் வந்து தானே வந்து சொருகிக் கொண்டு இறந்தான் என்கிறீர்கள். இது தான் சட்ட நுணுக்க வியாக்கியானம். 

பொது அறிவுள்ள எவனும், துப்பாக்கியில் இருந்து வந்த குண்டின் வழியில் நின்றதால் அவர் இறந்து போனார் என்று சொல்வார்களா?

 வாளைச் சுழட்டினார் என்று சொன்னதை நம்பி நண்டனும் பெருமாளும் கள்ளன் வீட்டுக்குள் வந்தால்  கிடைக்கிற வாளை எடுத்து ரசனி ஸ்ரைலில் சுழட்டி கள்ளனின் தலையைச் சீவினால் அதுக்கு நீங்கள்தான் பொறுப்பு நிக்கவேண்டும் நாதம்ஸ்!😂

கிழவன் கத்தியாலை கொல்லவேண்டுமென்று நினைத்துத்தான் சொருகி இருப்பார். ஆனால் சாட்சி இல்லாததால் கத்தியைப் பிடிச்சுக்கொண்டு நின்றேன். வந்து தானாகச் சொருகிக்கொண்டான் என்று சொல்லித் தப்பிக்கொண்டார். வந்த ஜிப்ஸியும் தூளடித்துவிட்டு வேறு வந்திருக்கான்..

ஆகவே மக்காள், வீட்டுக்குள் வரும் கள்ளனைக் கொல்லும் உரிமை இந்த வழக்கு மூலம் கொடுக்கப்படவில்லை🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.... நல்ல சுவராசியாமான கதை. :)
நேற்று, இந்தக் கதையை... வாசித்து, விட்டு... இன்று  இதனை... 
வேலை இடத்தில், மற்ற ஆட்களுடன் கதைக்காலம் என்ற ஆர்வத்துடன் போய் ....
இந்த  விடயத்தை....  ( "ரொப்பிக்கை") எப்படி அங்கு நுழைப்பது, என்று....
சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதனைவிட.... பெரிய,  "ஆர்கியூமென்ட்"  எல்லாம் நடந்து கொண்டிருந்ததால்,  
இந்தக் கதையை... வாற  திங்கள் கிழமை,எப்படியும்.... சொல்லியே... தீருவேன். 

 "இல்லாவிடில், என் மண்டை வெடித்துவிடும்."  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இதனைவிட.... பெரிய,  "ஆர்கியூமென்ட்"  எல்லாம் நடந்து கொண்டிருந்ததால்,  
இந்தக் கதையை... வாற  திங்கள் கிழமை,எப்படியும்.... சொல்லியே... தீருவேன். 

 "இல்லாவிடில், என் மண்டை வெடித்துவிடும்."  :grin:

அதென்ன எல்லாத்தையும் விட பெரிய "ஆர்க்கியூமென்ட்" ???? அதை என்னெண்டு இஞ்சை சொல்லாட்டில் என்ரை மண்டை வெடிக்கும் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதென்ன எல்லாத்தையும் விட பெரிய "ஆர்க்கியூமென்ட்" ???? அதை என்னெண்டு இஞ்சை சொல்லாட்டில் என்ரை மண்டை வெடிக்கும் 😃

குமாரசாமி அண்ணை, அது, பெரிய கதை... 

எங்களுடைய... வேலை இடம் மாறுகின்றோம். அதற்காக.... பல புதிய வேலை ஆட்கள் வந்துள்ளார்கள். அவர்களில்..  பல நாட்டுக்காரரும், பல பல பழக்க வளத்துடன்  இருப்பார்கள் தானே... 

அதில்.... ஒருத்தன், பன்றி கறி, உள்ள சாப்பாட்டை, "மிக்றோ..மெசினி´ல்" சூடாக்கி விட்டான்.
அதனை.... துருக்கி கண்டு, விட்டு... கிளம்பிய, பஞ்சாயத்தை,
மேலிடம்... போகாமல், தவிர்க்கிற வேலையில்...  ஈடுபட்டு விட்டேன்.

பஞ்சாயத்து தீர்ப்பு:  என்னவாக இருக்கும் என்று, நீங்கள் சொல்லுங்களேன்.:grin:      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 1:22 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, அது, பெரிய கதை... 

எங்களுடைய... வேலை இடம் மாறுகின்றோம். அதற்காக.... பல புதிய வேலை ஆட்கள் வந்துள்ளார்கள். அவர்களில்..  பல நாட்டுக்காரரும், பல பல பழக்க வளத்துடன்  இருப்பார்கள் தானே... 

அதில்.... ஒருத்தன், பன்றி கறி, உள்ள சாப்பாட்டை, "மிக்றோ..மெசினி´ல்" சூடாக்கி விட்டான்.
அதனை.... துருக்கி கண்டு, விட்டு... கிளம்பிய, பஞ்சாயத்தை,
மேலிடம்... போகாமல், தவிர்க்கிற வேலையில்...  ஈடுபட்டு விட்டேன்.

பஞ்சாயத்து தீர்ப்பு:  என்னவாக இருக்கும் என்று, நீங்கள் சொல்லுங்களேன்.:grin:      

இரண்டு பேரையும் திரத்திப்பொட்டு, பன்றி சாப்பாட்டை நீஙகள் அடிச்சிருப்பியள்.

******

கம்பர் மகன் அம்பிகாபதியை, அரசர் தனது மகள் அமராவதியை சந்திக்க போனால் தலை சீவப்படும் என்று சொல்லி விட்டார்.

அம்பிகாபதி களவாக அரண்மனை நந்தவனம் சென்று காதல் புரிந்து திரும்பும் போது, நந்தவனத்தில் மட்டுமே காணப்படும் அரிய மலர் ஒன்றை கையில் வைத்து மணந்து கொண்டு வரும் போது காவலன் பிடித்துவிடுகிறான்.

அம்மலர் கையில் இருப்பதால், அமராவதியை சந்திக்க போயிருக்கிறாய், வா அரசரிடம் என்கிறான்.

அப்போது, அவ்வழியே வந்த கம்பர், கவிதையால் சிலேடை செய்ய, புரிந்து கையில் இருந்த பூவை, வாயில் போட்டு மென்று விழுங்க, ஆதாரம் இன்றி விளித்த காவலன், மேலிடத்துக்கு போக வழியின்றி, நகர்ந்து செல்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது மிக்ரோ மெஷின் வாங்கிக் கொடுத்திருப்பார் கொம்பனியிடம் சொல்லி......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிசினுக்குளே இறைச்சியை வைத்து சுத்துற தட்டை மாற்றிக் கொடுத்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்காரனுக்கு பன்றி இறைச்சி சாப்பிட பழக்கி இருப்பீங்கள்😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.