Jump to content

யானைக்கு... முத்தம் கொடுத்த இளைஞர், ஆஸ்பத்திரியில் அனுமதி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®à¯à®à®¿à®ªà¯à®ªà®¿à®à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®¤à¯à®¤à®®à¯

ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்!

வேண்டாம்னு நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் முத்தம் கொடுக்க போனார்.. கடைசியில் ஆஸ்பத்திரியில் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கிறார் இளைஞர்!

கன்னடத்தில் ஒரு படம்.. அதில் யானைக்கு ஹீரோ முத்தம் தருவார். இந்த காட்சி அங்கு ரொம்ப பிரபலம் போலும்.

அதனால் பெங்களூருவை சேர்ந்த ராஜு என்ற 24 வயது இளைஞருக்கு இந்த காட்சி அப்படியே மனசில் பதிந்துவிட்டது. அதனால் தானும் அதேபோல யானைக்கு முத்தம் தர ஆசைப்பட்டார்.

இதற்காக நண்பர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு போய் யானையை பார்த்து முத்தம் தர முடிவு செய்தார். அதன்படி, கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவர்களுடன் சென்றார். அப்போது அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்திருந்தார்கள். சிறிது தூரத்தில் அங்கே யானை கூட்டமும் வந்தது.

பà®à¯à®à®¾à®¯à®®à¯

யானைகளை பார்த்ததும், முத்தம் தந்துவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி யானை கூட்டம் அருகில் செல்ல முயன்றார் ராஜூ. ஆனால் நண்பர்கள் அவரை தடுத்தனர். "வேண்டாம்.. ஏதாவது விபரீதமாகிவிட போகிறது" என்று உஷார் பண்ணினார்கள்.

ஆனால் ராஜு கேட்கவே இல்லை. மண்டை நிறைய போதையும் ஏறி இருந்தது. யானை கூட்டத்துக்குள் நுழைந்து விட்டார்.. யானையை கட்டிப்பிடித்து கொண்டு இச்.. இச்சென்று முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து யானைக்கு முத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த யானைகள் என்ன நினைத்ததோ தெரியவில்லை.. 6 யானைகள் சேர்ந்து ராஜூவை தூக்கி வீசி எறிந்தது. இதில் ஒரு கட்டத்தில், 6 யானைகளால் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் ராஜூ மரத்தின் மீது மோதி கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார். பிறகு உடனடியாக பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/drunk-youth-from-bengaluru-who-tried-to-kiss-jumbo-and-admit-in-hospital-348896.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த யானைக்கு இவர் குடித்த "பிராண்ட் மது" அலர்ஜி போல......!   🐘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அந்த யானைக்கு இவர் குடித்த "பிராண்ட் மது" அலர்ஜி போல......!   🐘

 அவனுக்கு துள்ளி குதித்து விளையாட ஆசை வந்திருந்தால் ஓர் அவலச்சாவு நேர்ந்திராது🧐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.