Jump to content

இந்த‌ குண்டு வெடிப்பு கார‌ண‌மாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீதான‌ ப‌ல‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் பொய்யான‌வை என‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

 

மேற்ப‌டி தேடுத‌ல்க‌ளில் நாம் க‌ண்ட‌வை.
1. குண்டு வெடிப்பை தொட‌ர்ந்து கிழ‌க்கில் உள்ள‌ அனைத்து முஸ்லிம் 
ஊர்க‌ளும், அனைத்து வீடுக‌ளும், ப‌ள்ளிவாய‌ல்க‌ளும், க‌டைக‌ளும் பாதுகாப்பு ப‌டையின‌ரால் ச‌ல்ல‌டை போட்டு தேடியும் ஸ்ஹ‌ரானுடைய‌ ஓரிரு ஆட்க‌ளும் அவ‌ர்க‌ளின் குண்டு த‌யாரிப்புக்கான‌ பொருட்க‌ளுமே பிடிப‌ட்டுள்ள‌ன‌. அவை த‌விர‌  ஏனைய‌ ஊர்க‌ளில் சில‌ த‌னிந‌ப‌ர்க‌ள் துப்பாக்கி, துப்பாக்கி ர‌வை,  க‌த்திக‌ளும் வாள்க‌ளும் த‌விர‌ வேறு எந்த‌ தீவிர‌வாத குழுவும் குண்டுக‌ளுட‌ன் பிடிப‌ட‌வில்லை.


2.  ஸ்ஹ‌ரான் என்ப‌வ‌ரின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சில‌ரை த‌விர‌ வேறு குழு ரீதியாக‌ ஆயுத‌ம் தாங்கிய‌ எந்த‌ தீவிர‌வாத‌ முஸ்லிம் குழுவும் கிழ‌க்கில் இல்லை பிடிப‌ட‌வில்லை என்ப‌தால் அவ்வாறான‌ முஸ்லிம் ஆயுத‌ குழு இல்லை என்ப‌து நிரூப‌ண‌மாகியுள்ள‌து.

3.  ச‌ம்பிக்க‌ ர‌ண‌வ‌க்க‌ 2000ம் ஆண்டு முத‌ல் சொல்லிவ‌ருகிறார் கிழ‌க்கில் ஆயுத‌க்குழுக்க‌ள் இருப்ப‌தாக‌. 2000ம் ஆண்டில் ஸ‌ஹ்ரானின் வ‌ய‌து சுமார் 15. ஆக‌வே அந்நாளில் வேறு ஆயுத‌ குழுக்க‌ள் இருந்திருந்தால் இந்த‌ தேடுத‌லில் பிடி ப‌ட்டிருப்ப‌ர். நாட்டில் தீவிர‌வாதிக‌ள் 200 பேர் அள‌வில் உள்ள‌தாக‌ அமைச்ச‌ர் ச‌ம்பிக்க‌ த‌ற்போது அறிவித்துள்ளார். அவ‌க‌ளும் ஸ‌ஹ்ரானின் ஆட்க‌ள்தான். ஆக‌ கிழ‌க்கில் பெரும் ஆயுத‌ முஸ்லிம்  குழுக்க‌ள் உள்ள‌தாக‌ ச‌ம்பிக்க‌வும், ஹாம‌துருமாரும் சில‌ த‌மிழ் இன‌வாதிக‌ளும் இன்று வ‌ரை சொன்ன‌வை பொய் என‌ நிரூப‌ண‌மாகியுள்ள‌து.

4. புலிக‌ள் தோல்வியுற்று நாட்டை விட்டு ஓடிய‌ போது கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளிட‌ம் த‌ம‌து  ஆயுத‌ங்க‌ளை விற்றுவிட்டு ஓடிய‌தாக‌ முன்னாள் விடுத‌லைப்புலி உறுப்பின‌ர் க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ருத்து தெரிவித்திருந்தார். அவ்வாறு புலிக‌ளின் ஆயுத‌ம் எதுவும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளிட‌ம் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ அர‌சு அறிவிக்க‌வில்லை. இத‌ன் மூல‌ம் முன்னாள் புலி உறுப்பின‌ர் ப‌ச்சைப்பொய்யை சொல்லியுள்ளார் என்ப‌தும் நிரூப‌ண‌மாகிற‌து.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பேர்வழி தானே  அமெரிக்காவுக்கு முதன் முதலில் போனவர்கள் ( செவ்விந்தியருக்குப்   பிறகு) சோனகர்  தான் என்றும்  அமீர் / காக்கா / கக்கா என்பதனால் தான் ( அமீர் காக்கா கடற்கரையில் கக்கா இருக்க செவ்விந்தியனின் அம்பு வந்து பின்பக்கம் தைக்க etc  etc )  அமெரிக்கா என்ற பெயரே வந்தது என்று மணக்க மணக்க அவித்து விட்ட ஆள்   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாமானியன் said:

உந்த பேர்வழி தானே  அமெரிக்காவுக்கு முதன் முதலில் போனவர்கள் ( செவ்விந்தியருக்குப்   பிறகு) சோனகர்  தான் என்றும்  அமீர் / காக்கா / கக்கா என்பதனால் தான் ( அமீர் காக்கா கடற்கரையில் கக்கா இருக்க செவ்விந்தியனின் அம்பு வந்து பின்பக்கம் தைக்க etc  etc )  அமெரிக்கா என்ற பெயரே வந்தது என்று மணக்க மணக்க அவித்து விட்ட ஆள்   

 

 

அது இவரோட பெயரில் நம்மட பயலுக அவுத்து விட்ட கதை 
ஆனால் பய எமகாதகன் வரலாறு எழுதுறேன் பேர்வழி என்று கம்பி எண்ணிய கதையும் உண்டு 
அதோடு எந்த வித உசாத்துணை நூலும் இல்லாமல் வரலாறு எழுதிய ஒரே விண்ணர் இவர்தான் 
இவரது வரலாற்று நூலை படித்தால் குபீர் குபீர் என்று சிரிப்பு மட்டும் தான் வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது இவரோட பெயரில் நம்மட பயலுக அவுத்து விட்ட கதை 
ஆனால் பய எமகாதகன் வரலாறு எழுதுறேன் பேர்வழி என்று கம்பி எண்ணிய கதையும் உண்டு 
அதோடு எந்த வித உசாத்துணை நூலும் இல்லாமல் வரலாறு எழுதிய ஒரே விண்ணர் இவர்தான் 
இவரது வரலாற்று நூலை படித்தால் குபீர் குபீர் என்று சிரிப்பு மட்டும் தான் வரும் 

அட நம்ம முபாறக் அப்துல் மஜித் நானா இவர் மெகா நடிகர் ஆச்சே  இந்தாழுக்கு பொய்யே வராது அடிச்சுக்கூட கேட்டால் கூட சொல்ல மாட்டார் நம்புங்க மக்காள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பிடித்து உரிஞ்சாங்குண்டியுடன் மிளகாய்ச்சாக்குக்குள்ள தலையைப்போடு அடிச்சால் எல்லா ஐ எஸ் ஐ எஸ் நானாக்களையும் வெளியில எடுக்கலாம்.

சம்மாந்துறையில பிள்ளத்தாச்சிக்காறி எனப்பார்க்காமல் கைக்குழந்தையையும் குண்டு வைக்ச்சு கொண்டது என்ன கமலகாசன் விஸ்வரூபம் படத்தில் எடுத்த வெளிவராத காட்சியோ.

யாழ்ப்பாணத்தில இருந்து இவர்களைக் கலைக்கும்போது சத்தியமாக நான் கவலைபட்டனான் காரணம் அதில் என்னுடன் படித்த முஸீம் பொடியளும் அடக்கம் நேற்றுவரை நான் அவர்களை நினைப்பது உண்டு முனீஸ் இஸ்திகார் நாசர் ஜமால் இப்படிப்பலர் என்னுடன் படிச்சவர்கள் இன்னமும் அவர்களது முகம் என் மனதில் மறையாமல் நிற்கிறது அவர்களது ரம்சான் விசேடங்கள் கலியான வீடு இவைகளுக்கு நான் போயிருக்கிறன் ஆனால் பொதுவில் பார்க்கும்போது அவர்களைக் கலைத்தது சரியாகப்படுகுது என இப்போது இவர்கள் செய்யும் தற்குறித்தனத்தால் தெரியுது. நியூ மாக்கற்றுக்க ஒருவர் கடை வைத்திருந்தார் பெயர் நினைவில் இல்லை (அவரது பெயர் "சாளி" என்பதாக இருக்கலாம் ) அவரது வீட்டிலிருந்துதான் அந்த வேளையில் ஆயுதம் எடுத்ததாகச் சொன்னவர்கள் அப்போது ஆனையிறவு தாண்டித்தான் குடாநாட்டுக்குச் சாமான் வரும் யாழ்ப்பாணம் வியாபாரிகளது சாமாஙள் சேதாரமில்லாமல் வரவேணுமெனில் இவர்மூலம்தான் அலுவல் பார்க்கிறவயள்.

 

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பிள்ளை ஒன்றும் தாக்குதலில் தொடர்பு என இன்னுமொரு பதிவில் இருக்கு அவரது தாயார் கூறும் விடையங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கு  உதாரணமாக ராசிக்கிடன் இனிமேல் என்னுடைய பிள்ளை உன்னுடைய பொறுப்பி எனக்கூறிவிட்டு தான் சவூதிக்கொ எங்கேயொ  போய் விட்டாவாம் இதை நம்ப யாழ் இணையத்தில் யாராவது இருக்கலாம் ஆனால் இவவையும் விசாரிக்கிற முறையில் விசாரித்தால் உண்மை வெளியில வரும் அனெகமாக இவர்களுக்குக் குமரப்பா வங்கர் செட்டப்தான் சரிவரும்.

ஆனால் ஒரு உண்மை வெளிவருகுது தழர்களது கட்டுப்பாடுப் பிரிவில் ஆழெளெளடுருவித் தாக்குதல் நடாத்தியவர்கள் கொத்தாவுடன் புலனாய்வில் இருந்தவர்கள் இப்போதும் இருப்பவர்கள் இவர்கள்தான் இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் கட்டுப்பாட்டுப்பகுகியில் கண்ணிவெடி கிளைமோர் இவைகளைத் தாக்க அதிகமாக இவர்களைத்தான் தயார் படுத்தி வைத்திருந்தவர்களாகவிருக்கும் இப்போது அதுவே தலைய்யிடியாகிவிட்டது எனவும் சொலாலாம் அல்லது கொத்தா அதிபர் தேர்தலில் வெல்ல இப்படியான தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது இவரோட பெயரில் நம்மட பயலுக அவுத்து விட்ட கதை 
ஆனால் பய எமகாதகன் வரலாறு எழுதுறேன் பேர்வழி என்று கம்பி எண்ணிய கதையும் உண்டு 
அதோடு எந்த வித உசாத்துணை நூலும் இல்லாமல் வரலாறு எழுதிய ஒரே விண்ணர் இவர்தான் 
இவரது வரலாற்று நூலை படித்தால் குபீர் குபீர் என்று சிரிப்பு மட்டும் தான் வரும் 

இன்று காலையில்.... முகநூலில், ஒரு காணொளி பார்த்தேன்,
அதிலை.... ஒரு முஸ்லீம் சொல்கிறார், யாழ்ப்பாணத்தின் மூத்த குடி... இஸ்லாமியர்களாம்.
அதற்கு மேல்... அந்தக் காணொளியை, காலையில்  பார்க்க, மனம் இல்லாததால்  கடந்து போய் விட்டேன்.   மீண்டும் கண்ணில் பட் டால், இணைத்து விடுகின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.