Jump to content

காத்தான்குடி உங்களை வரவேற்கிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம்.

காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம்.

மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒன்று. ஆனால், சனநெருக்கடி மிக்க ஒரு ஊர்.

மட்டக்களப்புத் தமிழர்கள் என்னதான் முஸ்லிம்கள் மீது விமர்சனத்தை முன்வைத்தாலும் ஒரு உணவு விடுதியில் ஜாலியாகச் சாப்பிட வேண்டுமானால் அதிகமாகச் செல்லும் இடம் இதுதான். முஸ்லிம்களின் வணிகங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்ட காலகட்டங்களில் கூட மட்டுநகர் தமிழர்கள் காத்தான்குடி செல்வதும், அங்கு உண்பதும் என்றும் குறைந்தது கிடையாது.

இன்று நேற்றல்ல, “டல் கோப்பி” என்று அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கோப்பிக்கடைகளுக்கு காத்தான்குடி பிரபலமாக இருந்த பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமைதான்.

பாய் பின்னுதலும் பன் உற்பத்திப் பொருட்களும் சாரன்கள் என்னும் லுங்கிகளும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்ட காத்தான்குடியின் பரிமாணம் இன்று மாறிப்போய் இருக்கிறது. கிழக்கில் வணிகத்தில் சிறந்து விளங்கும் ஆட்கள் நிறைந்த ஊர். காத்தான்குடியில் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு நகரிலும் கணிசமான கடைகள் காத்தான்குடிக்காரர்களுக்கே சொந்தமானவை.

கிழக்கு மாகாணத்தில் வாகனம் ஓட்டுபவர்களைக் கேட்டால் ஒன்றை உறுதியாகக் கூறுவார்கள். அதாவது எந்த அகால நேரத்தில் போனாலும் காத்தான்குடியில் உணவுக்கடை திறந்திருக்கும் என்பதுதான் அது. அங்கு கிடைக்காத எந்தப் பொருளும் கிடையாது. இந்த வசதிகள் கிழக்கு மாகாணத்தில் எந்த ஊரிலும் கிடையாது.

காத்தான்குடிக்காரர்கள் மிகுந்த திறமைசாலிகள்; கடினமான உழைப்பாளிகள்.

ஆனால், முன்பகுதியில் கூறியது போல இப்போது எல்லா கரங்களும் காத்தான்குடியைச் சுட்டுகின்றன.

தாக்குதலாளிகளின் தலைவர் என்று கூறப்படுபவர் (தலைவர் யார் என்பது சில வேளைகளின் பின்னர் மாறலாம்) காத்தான்குடிக்காரர், மட்டக்களப்பு சியோன் தேவாலய தாக்குதலாளி காத்தான்குடிக்காரர் என்ற காரணத்தால் எல்லோர் கரங்களும் காத்தான்குடியை சுட்டுகின்றன. தமிழர், சிங்களவர் என்றல்ல சில ஏனைய ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் சுட்டுவிரலை நீட்டி காத்தான்குடியை குற்றஞ்சாட்டுகிறார்கள். “எல்லாத்துக்கும் இந்தக் காத்தான்குடிக்காரந்தான் காரணம் அண்ணன்” என்று என்னிடம் ஒரு முஸ்லிம் செய்தியாளரே சொன்னார். இதெல்லாம், விடுதலைப்போராட்டம் ஆரம்பித்து, குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய போது, “இதுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தாந்தான் காரணம் என்று ஏனைய இடங்களைச் சேர்ந்த சிலர் சொன்னதற்கு நிகரானது. அது தவறு. இங்கு எல்லோருக்கும் பொறுப்பு உண்டு.

காத்தான்குடியில் நடந்தவை குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால், அதற்காக காத்தான்குடியை தனிமைப்படுத்த முடியாது.

காத்தான்குடியில் 2017 இலேயே இந்தத் தீவிரவாதக் குழுவுடன் மோதல்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் அங்கு கத்திகளும் வாள்களுமே அதிகபட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இரு வருடங்களில் குண்டுகளும் தற்கொலைத்தாக்குதலாளிகளும் தயாராகியிருப்பதைப் பார்த்து அந்த ஊரே அதிர்ந்துபோய் இருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னரே உங்கள் ஊரில் தீவிரவாதிகள் இருப்பது தெரிந்தும் ஏன் அது குறித்துப் பேசவில்லை என்று கேட்டதற்கு காத்தான்குடி மக்கள் கூறிய பதில் நியாயமானதாகவே பட்டது. ‘அவர்கள் குறித்து அனைத்துத் தரப்புக்கும் முறையிட்டுள்ளோம், ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்கிறது காத்தான்குடி சிவில் சமூகங்களின் சம்மேளனம். அதனைவிட ஒரு சிவில் சமூகத்தால் எதனைச் செய்யமுடியும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது பற்றி (அது நடந்தது 1990இல்) 2002இல் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதனை ‘ஒரு வரலாற்றுத்தவறு’ என்று கூறும்வரை 12 வருடங்களாக சில மாற்றுக்கருத்தாளர்களைத் தவிர, தமிழ் சமூகத்தில் இருந்து எவரும் பேசவில்லை. எம்மிடம் தமிழ் சிவில் சமூகம், யாழ் சிவில் சமூகம் என்றெல்லாம் எவ்வளவோ அமைப்புக்கள் இருந்தும் அதனைப் பற்றிப் பேச தமிழ் சமூகத்துக்கு 12 வருடங்கள் பிடித்தன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை அடுத்து தமிழ் கிராமங்கள் தாக்கப்பட்டதால், அதனைப்பற்றியும் தமிழர் தரப்பில் பேசப்படவில்லை.

ஆனால், தேவாலயங்கள் தாக்கப்பட்டமை குறித்து ஒரு வாரத்தில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த வகையில் காத்தான்குடிச் சமூகம் மேம்பட்டு நிற்கிறது. அதனை நாம் மதித்தாக வேண்டும். அந்தச் சமூகத்தின் மீது குற்றம் சுமத்தும் எவரும் இதனை மனதில் கொண்டாக வேண்டும். காத்தான்குடி மக்கள் அல்லது அதன் தலைவர்கள் அனைவரும் செய்த எல்லாம் சரி என்று நான் கூறமாட்டேன். ஆனால், அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தனிமைப்படுத்த முடியாது.

காத்தான்குடி கடந்த சில நாட்களாக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பலரிடம் இதுபற்றிக் கதைத்த போது அங்கு வாழும் மக்கள் நிலைகுலைந்து போயிருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த அனுபவம் தமிழ் சமூகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது. இங்கு நாம் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று உண்டு. அந்த நிலைமை ஏனைய சமூகங்களுக்கு வர நாம் அனுமதிக்க முடியாது. பெரிய கடைகளை வைத்திருப்பவர் முதல் ஆட்டோ ரிக்ஷோ ஓட்டுனர் வரை மன வலியில் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த மன்னிப்பு கோரலுக்கும், மனவலிப் பிரதிபலிப்புக்கும் “பயம்” உட்பட வேறு காரணங்களை நாம் கற்பிக்க முடியும், சில சந்தர்ப்பங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம், ஆனால், நாம் அவர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது.

அந்த ஊரில் பாதுகாப்புச் சோதனைகள் முற்றாக முடிந்துவிட்டதா என்பதும் நமக்குத் தெரியாது, சல்லடை போட வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறதா என்றும் தெரியாது. ஆனால், நடவடிக்கைகள் எல்லாம் பொருத்தமான அளவுக்கு மாத்திரம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், மேலும் இளைஞர்கள் பயங்கரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாமல் போய்விடக் கூடும்.

பல மதத்தலைவர்கள் சமூக நல்லிணக்கத்துக்காக சில நிகழ்வுகளை இங்கு வைபவ ரீதியாகச் சடங்குபோலச் செய்வதைக் காணமுடிகிறது. ஆனால், இந்த வைபவ ரீதியான நிகழ்வுகள் எல்லாம் பெரும் பலனைத்தராது. சில நாட்களில் இவை முடிவுக்கு வந்துவிடும். சமூகங்களின் ஊடாட்டம் என்பது ஒருவரை அடுத்தவர் வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அடிமட்டத்தில் இருந்து அது வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பெரிய அளவில் இந்த மதத்தலைவர்கள் செய்ததாக என்னால் முழுமையாக நம்ப முடியாது.

குண்டு வெடிப்பை மக்கள் மறக்க அவர்களும் அப்படியே விட்டுவிடுவார்கள். உண்மையான நல்லிணக்கம் என்பது வெறும் ஜோடனைப் பொருள் போல ஆகிவிடும்.

ஆக, காத்தான்குடி மாத்திரமல்ல எந்தவொரு சமூகமும் தனிமைப்படுத்தப்பட முடியாது. தனிமைப்படுத்தப்படுபவர்களே அதிக வலியை அனுபவிப்பர். அது குண்டு வெடிப்பின் வலியைவிட மோசமானது. நாட்டை அது தீவிரவாதத்துக்குள் தள்ளிவிடும்.

- அரங்கம் பத்திரிகையில் இருந்து... 
சீவகன் பூபாலரட்ணம் ---

http://srilankamuslims.lk/test-author-6304/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பருப்பெல்லாம்  காத்தான்குடியை பற்றி தெரியாதவர்களிடம் எடுத்து விட்டால் கொஞ்சம் வேகும்
காத்தாங்குடியானுகளுக்கு மனிசியோட சண்டை எண்டாலே ரோட்டுக்கு தான் வருவானுகள் .
நான் பதின்ம வயதில் இருக்கும் போது யாரோ ஒருத்தனை வீட்டுக்குள்ளேயே புதைக்க ஒரு குழுவும் 
அதனை மறுத்து இன்னொரு குழுவும் சண்டைபிடிக்கிறேன் பேர்வழி என்று மட்டுநகரிலிருந்து கல்முனை செல்லும் பேரூந்துகளையும் பிரதான வீதியில் பயணித்த தமிழ் மக்களையும் படுத்திய பாட்டை இன்னும் மறக்க முடியாது, கடைசியாக அதிரடிப்படை வந்து ஊரடங்கு போட்டுத்தான் கட்டுப்படுத்தினார்கள் 
இப்படி அவர்களது தனிப்பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக்குவதில் கைதேர்ந்தவர்கள் 
இதனாலேயே விடுதைலைப்புலிகளிடமும் வாங்கிக்கட்டினர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்தப்பருப்பெல்லாம்  காத்தான்குடியை பற்றி தெரியாதவர்களிடம் எடுத்து விட்டால் கொஞ்சம் வேகும்
காத்தாங்குடியானுகளுக்கு மனிசியோட சண்டை எண்டாலே ரோட்டுக்கு தான் வருவானுகள் .
நான் பதின்ம வயதில் இருக்கும் போது யாரோ ஒருத்தனை வீட்டுக்குள்ளேயே புதைக்க ஒரு குழுவும் 
அதனை மறுத்து இன்னொரு குழுவும் சண்டைபிடிக்கிறேன் பேர்வழி என்று மட்டுநகரிலிருந்து கல்முனை செல்லும் பேரூந்துகளையும் பிரதான வீதியில் பயணித்த தமிழ் மக்களையும் படுத்திய பாட்டை இன்னும் மறக்க முடியாது, கடைசியாக அதிரடிப்படை வந்து ஊரடங்கு போட்டுத்தான் கட்டுப்படுத்தினார்கள் 
இப்படி அவர்களது தனிப்பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக்குவதில் கைதேர்ந்தவர்கள் 
இதனாலேயே விடுதைலைப்புலிகளிடமும் வாங்கிக்கட்டினர் 

 

மச்சி நம்மட நடுநிலைகள் கொஞ்சம் இப்பவரைக்கும் முண்டு கொடுக்கிறானுகளேடா ஏன்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மச்சி நம்மட நடுநிலைகள் கொஞ்சம் இப்பவரைக்கும் முண்டு கொடுக்கிறானுகளேடா ஏன்டா?

அது தான் நடுநிலை வகிக்கினமாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முன்பு ஒரு காலத்தில் காத்தான்குடி  சாத்திரியார் வீட்டுக்கு போயிருந்த போது இன்ன இன்ன ஒழுங்கைகளுக்குள் போகாமல் முக்கிய வீதிகளை பயன்படுத்துமாறு என்னை எச்சரித்தார்.

கல்லடியை நினைக்க கவலையாய் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மச்சி நம்மட நடுநிலைகள் கொஞ்சம் இப்பவரைக்கும் முண்டு கொடுக்கிறானுகளேடா ஏன்டா?

அது நமது இனத்தின் சாபக்கேடு ....இந்த குண்டுத்தாக்குதல் நடந்து கையும் மெய்யுமாக மாட்டிய பின்னும் சோனிகள் முகநூலில் அடிக்கும் அலப்பறைகளை நீங்கள் பார்க்கவில்லையா , புலிகளுடன் அவர்களது மொள்ளமாரிகளை ஒப்பிடுவதும் , சகட்டுமேனிக்கு C.I.A  இஸ்ரேலை இழுப்பதுமென்று... 
ஆனால் இதே நமது நடுநிலை நக்கிகள் என்றால் குண்டு வெடித்தவுடனே புலிகளுக்கெதிரான பிரச்சாரத்துடன் கிளம்பியிருப்பினம். Manufacturing Defect (உற்பத்தியின் குறைபாடு ) தான் வேறென்ன 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அது நமது இனத்தின் சாபக்கேடு ....இந்த குண்டுத்தாக்குதல் நடந்து கையும் மெய்யுமாக மாட்டிய பின்னும் சோனிகள் முகநூலில் அடிக்கும் அலப்பறைகளை நீங்கள் பார்க்கவில்லையா , புலிகளுடன் அவர்களது மொள்ளமாரிகளை ஒப்பிடுவதும் , சகட்டுமேனிக்கு C.I.A  இஸ்ரேலை இழுப்பதுமென்று... 
ஆனால் இதே நமது நடுநிலை நக்கிகள் என்றால் குண்டு வெடித்தவுடனே புலிகளுக்கெதிரான பிரச்சாரத்துடன் கிளம்பியிருப்பினம். Manufacturing Defect (உற்பத்தியின் குறைபாடு ) தான் வேறென்ன 

 

என்ற பேக் ஐடியில் நீங்களும் இருக்கிறியள் பாருங்களன் அங்கதான் முகம் காட்டாமல் களமாடால் நம்மகிட்டயேயா காத்தான்குடி பள்ளிவாயல் ஏன் களுவப்படாமல் இருக்கு ஏன் தேவாலயம் கழுவப்பட்டு விட்டது இருவருக்கும் உள்ள மனநிலையை புரிந்து கொண்டால் சரி இந்த நடுநிலை நக்கிஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.