Jump to content

300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை' - திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம்


Recommended Posts

`300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை' - திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம்

 
`300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை' - திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம்

"சமீபத்தில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை" என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர்களுக்கு வேலை கோரி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகை

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சமீபகாலமாகத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தென்னக ரயில்வே துறையில் சுமார் 300 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லை என்று குற்றம்சாட்டிவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் மா.பொ. சின்னதுரை, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயச் சங்கங்கள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், “வெளியாரை வெளியேற்று” , “இந்திய அரசே... தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டாதே”,  “தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவிகிதம் வேலைகொடு” என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன்,   திருச்சி பொன்மலை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக முழக்கமிட்டு வந்தவர்கள்,  பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்றனர்.

 

முன்பாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு குவிக்கப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் ரயில் பணிமனையை  முற்றுகையிட முயல்வதைப் பார்த்த போலீஸார், அவர்களை மறித்து நின்றார்கள். இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல் துறைக்கு எதிராகவும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் கோஷமிட்டபடி, சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதனையடுத்து, திருச்சி மாநகரம் பொன்மலை பகுதி போலீஸார், மணியரசன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் பொன்மலை பகுதியில் உள்ள ரயில்வே பணிமனை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

பெ.மணியரசன் போராட்டம்

கூட்டத்தில் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், “ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுவருகிறது.  குறிப்பாக ரயில்வே துறையில் முழுவதுமாக வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள், 90 லட்சம் பேருக்குமேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலை கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், மத்திய அரசு தமிழ்நாட்டினருக்கான வேலையை முறைகேடாக வட மாநிலத்தினவருக்கு கொடுத்து, தென்னாப்பிரிக்காவைப் போன்று இனப்பாகுபாடு காட்டி வருகிறார்கள். இதனால் தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி முதற்கொண்டு அனைத்து அரசு வேலைகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் பல்வேறு  கோட்ட அலுலகங்களில் 300 பேருக்குப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதில், ஒருவர்கூட தமிழர் இல்லை. முறைகேடாகப் பிறமாநிலத்தவர்களைச் சேர்த்தது, மத்திய அரசின் தமிழர்கள் மீதான இனப் பாகுபாடு, மொழிவழி மாநிலச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, அதிகபட்சமாக 10 சதவிதம் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம், அதனைத் தவிர்த்து அதைவிட, அதிகமாக உள்ள வெளிமாநிலத்தவரை  அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் அடுத்தடுத்து மாபெரும் போராட்டங்களைக் கையிலெடுக்க உள்ளோம்” என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/156566-protest-against-southern-railway-in-trichy.html?fbclid=IwAR3uaMCEyM4G5s1rnysaDeCpZ1y5S6cAKLtLKvRdrJR5Z4ou6K7Wo7Jk9i4

Link to comment
Share on other sites

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடே நீ இற்றைவரை உனக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுத்த முதல்வர்களில் எத்தனை பேர் தமிழர்கள்.???? 

தற்போது நடைபெறும் தேர்தலில் நீ உனக்கு ஒரு தமிழனைத் தேர்ந்தெடுக்ககாது விட்டால் உனக்கேன் போராட்டம்.????? 

தமிழ்நாட்டு முலமைச்சர்கள் 1920 முதல் 2017 வரை.

1. ஏ. சுப்பராயலு

2. பனகல் ராஜா

3. பி. சுப்பராயன்

4. பி. முனுசுவாமி நாயுடு

5. ராமகிருஷ்ண ரங்காராவ்

6. பி. டி. இராஜன்

7. கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு

8. சி. இராஜகோபாலாச்சாரி

9. த. பிரகாசம்

10. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

11. பூ. ச. குமாரசுவாமி ராஜா

12. பி. எஸ். குமாரசுவாமிராஜா

13. சி. இராஜகோபாலாச்சாரி

14. கே. காமராஜ்

15. எம். பக்தவத்சலம்

16. சி. என். அண்ணாத்துரை

17. இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)

18. மு. கருணாநிதி

19. எம். ஜி. இராமச்சந்திரன்

20. ஜானகி இராமச்சந்திரன்

21. மு. கருணாநிதி

22. ஜெ. ஜெயலலிதா

23. ஓ. பன்னீர்செல்வம்

24. எடப்பாடி கே. பழனிச்சாமி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.