Jump to content

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது.

 

இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. பல காலமாக அவர்களின் அறையில் இருந்த படங்களையும், ஆவணங்களையும் காரணம் காட்டி மாணவர்கள் கைது செய்யப்பட்டதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. 

சேனாதிராஜாவும் , நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களுடன் உரையாடி அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் உரையாடி விடுவிக்க கோரியபோது பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்க முடியாது. எனத் தெரிவித்தனர். அதன்படி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் மே16 வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு மாணவர்களிற்கும் எதிராக பொலிஸார் நான்கு சட்டங்களின் அடிப்படையில் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதிலொன்று பயங்கரவாத தடைச் சட்டம். இரண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள். மூன்றாவது சிவில் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச பட்டய சட்டம். நான்கவதே 2019 ஏப்பிரல் 22 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகள். ஆகிய சட்டங்களை மேற்கோள் காட்டி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய காரணத்தினால் இவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு கிடையாத காரணத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த இரு மாணவர்கள் சார்பிலும் சட்டத்தரணி கே.சயந்தனும் பல்கலைக் கழகம் சார்பில் குருபரன், சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதேநேரம் குறித்த மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த இணக்கத்தை சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடரபில் வடக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலே வடக்கில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியதாக தவறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். 

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவரும் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரவில்லை. அப்படியான தவறான கூற்று வந்திருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பல்ல. மாறாக இவ்வாறான கோரிக்கையை விடுத்த ஒரேயொரு நபர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் மட்டுமே ஆகும்.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீது மற்றுமோர் குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார். அதாவது அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றில் எதிர்க்காமல் விட்டுவிட்டு கைது செய்தவர்களை விடுமாறு பொலிஸ் நிலையம் சென்றதாகவே அந்தக்குற்றச்சாட்டு உள்ளது.

மேலே கூறப்பட்டதன் பிரகாரம் இந்த இரு மாணவர்களும் அவசர கால விதியின் கீழ் மட்டும் கைது செய்யப்படவில்லை. அதற்கு அப்பாலும் மூன்று சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சட்ட விதிகளும் அடங்கும். இந்தச் சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பலர் விக்கினேஸ்வரன் மேல்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த சமயங்களில் பலர் குற்றவாளிகளாக கானப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர். ஆனால் அவசரகாலச் சட்டத்தை கூட்டமைப்பு எமிர்க்கவில்லை எனக் காரணம்காட்டி தன்னை புனிதவானாக காட்ட முனைவது பொருத்தமற்றது.

அவசரகால பிரகடனத்தை கூட்டமைப்பு மட்டுமல்ல எவருமே எதிர்க்கவில்லை. ஆனால் அவசர காலம் வேறு அதன்கீழ் செய்யப்படும் அவசரகால சட்ட விதிகள் வேறு. அவசரகால பிரகடனத்தின் பின்பு கொண்டு வந்த அவசரகால விதியில் சில மோசமான விதிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளோம். 

அதனை உரிய இடத்தில் சவாலுக்கு உட்படுத்துவோம். இங்கே அவசரகால விதிகள் இல்லாதிருப்பினும் இந்த மாணவர்கள் ஏனைய மூன்று விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்க கூடும். எனவே விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்து விக்கினேஸ்வரன் அறிக்கை வெளியிட்டமை துரதிஸ்டவசமான செயல்பாடாகும்.

 

http://www.virakesari.lk/article/55303

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவசர காலச் சட்டம் இல்லாமல்.. இந்தச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதோ..??!

உலகில் வளர்ந்த சனநாயக நாடுகளில்.. அவசர காலச் சட்டம் என்பது மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால்.. சொறீலங்காவில்.. கல்லெறிந்தாலும் உடனடியாக அவசரகாலச் சட்டமும் இராணுவம் வீதிக்கு வந்து விடுகிறது.

பிரித்தானியாவிலும்.. தொடர் குண்டு வெடிப்புக்கள்.. கத்தி வாள் வெட்டுக்கள்.. வாகனங்களால் மோதித் தாக்குதல்கள் என்று இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அங்கு அவசரகாலச் சட்டமோ.. இராணுவமோ இறக்கப்படவில்லை.

மாறாக.. பொலிஸ் மற்றும் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற பொலிஸ்.. மற்றும் உளவுத்துறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில்.. இந்த மத அடிப்படைவாதிகளிடம்.. பெரிய ஆயுதங்கள் கிடையா. குண்டு வெடிப்புக்கள்.. மற்றும் கத்திக் குத்துக்கள்.. வாகன மோதல்களையே செய்ய முடியும். அவற்றை தடுக்க அவசரகாலச் சட்டம் அவசியமில்லை. ஏன் இராணுவம் கூட அவசியமில்லை.

ஒழுங்கான பொலிஸூம்.. நல்ல உளவுத்துறையும்.. மக்களின் விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்தால் போதும்.

ஆனால்.. சொறீலங்கா அரசு... இதில்.. அவசரகாலச் சட்டம்.. பயங்கரவாதச் சட்டம்.. இராணுவம்.. முப்படைகள்.. என்று.. பயன்படுத்துவதும்.. வடக்குக் கிழக்கில் அதன் இராணுவ நெருக்குவாரங்களை மற்றைய பகுதிகளை விட அதிகம் பயன்படுத்துவதும்.. இவர்களின் நோக்கங்களை சந்தேகிக்கச் செய்கிறது மட்டுமன்றி.. தமிழ் மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஏன் கூத்தமைப்பு ஒத்துழைக்க வேண்டும்..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு அவசரகால சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு கைதுசெய்தவர்களை காட்டுமிராண்டிகளின் காலத்து முறைப்படி விசாரணைசெய்யவும் விளக்கமறியலை காலவரையறையறையின்றி நீட்டிக்கொள்ளவும்  அதை  ஆயுதமாக பயன்படுத்துகிறது. 
ஐ.நா வின்உதவிக்கான வேண்டுதலை வேண்டாம் என்று தட்டிக்கழித்ததும் அதே காரணம்தான்.

"பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனை" ஏன் என்பது புரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளும் இருக்கிறபடியால ஏதோ அறிக்கையாவது விட்டினம்!
இப்பிடியான விடயங்களில் வழக்கமா தூங்கிடுவாங்களே?!

Link to comment
Share on other sites

சுமந்திரன் தன்றை எடுபிடி அரசியலை செய்ய விக்கி அய்யாவின் செயற்பாடுகள் இடஞ்சலா இருக்குப் போல! அதான் சுமந்திரன் குத்தி முறியிறார்!

அதுசரி, கேப்பாபிலவு இதோ விடுபடப்போகுது என்று சுமந்திரன் ரீல்விட்டு 2 மாதம் ஆகப்போதாம்! என்ன நடக்கிது அந்த விஷயத்தில!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.