Jump to content

முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

rishad-bathiudeen-maithripala-sirisena.j

இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்துத்துரைத்தார்.

பள்ளிவாசல்களுக்குள் சப்பாத்துக் கால்களால் அங்குள்ள புனித குர்ஆன் பிரதிகள், அரபு கித்தாபுகளை உதைத்து வீசுவது, பள்ளிவாசல்களில் கடமைபுரியும் இமாம்கள் கத்தீப்மார்களுடன் தரக்குறைவாகப் பேசி சந்தேகத் தோரணையில் நடந்து கொள்ளும் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் மன வேதனைக்குள்ளாவதாகவும் விளக்கியுள்ளார்.

குறிப்பாக, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு முஸ்லிம் சமூகமும் சம்பூரணமாக ஒத்துழைக்கையில் சகலரையும் குற்ற உணர்வுடன் நோக்கும் ஒரு சில படையினரின் போக்குகள் ஒரு சமூகத்தையே ஓரங்கட்டும் முயற்சிகளாகவே உள்ளன. வீடுகளில் சமையலறைகளிலுள்ள சிறு,சிறு கத்திகள் இரும்புகள், பாத்திரங்களைக் கூட சில இனவாத ஊடகங்கள் ஆயுதங்களாகச் சித்தரித்துக் காட்டுவதாலும். பேசுவதாலும் மாற்று சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாகக் காண்பிக்க முயற்சிக்கப்படுகிறது.

இது சில வேளைகளில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை பாழ்படுத்திவிடும். இன உறவுகளிடையே இடைவெளியை ஏற்படுத்த முனையும் இவ்வூடகங்கள் சிங்கள, முஸ்லிம் முறுகல்களுக்குத் தூபமிடுவதாக உள்ளமை தமக்குப் பெரும் கவலையளிப்பதாகவும் கூறினார்.

குற்றவாளிகளைப் பூண்டோடு அழிக்க முஸ்லிம்கள் வழங்கும் பூரண ஆதரவைப் படையினர் புரிந்து கொண்டு செயற்படுவதனூடாகவே அடிப்படைவாதத்தை தனிமைப்படுத்தி அவர்களை ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே தாடி, தொப்பி, ஜுப்பா போன்ற இஸ்லாமியக் கலாசார அடையாளத்துடன் தோன்றும் சகல முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் நோக்குவதைத் தவிர்ந்து நடந்து கொள்ளுமாறு படையினருக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இவர்களே முஸ்லீம் ஊர்காவல் படைகளாகவும்.. ஜிகாத் ஒட்டுக்குழுக்களாகவும்.. சொறீலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் உறுப்பினர்களாகவும்.. சொறீலங்கா அரச பயங்கரவாத உளவாளிகளாகவும் இருந்து.. இதனை தமிழ் மக்களுக்கு எதிராக ஆண்டாண்டு காலமாகச் செய்து வந்துள்ளனர்.

எமது தங்கை கிருசாந்தி குமாரசாமியை கொன்று புதைத்த கூட்டங்களோடு கூட.. இவர்களின் தொடர்பு. கொழும்பில் தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதைகளை சிங்கள இனப்படுகொலை படை அதிகாரிகளுக்கு நிகராக முஸ்லிம் படை அதிகாரிகளும் உளவாளிகளும் அரங்கேற்றி இருந்தனர்.

அன்று சேர்ந்து போட்ட கூத்து.. இன்று இவர்கள் மீதான ஊழியாகி (வினையாகி) உள்ளது.. அவ்வளவே.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அன்று சேர்ந்து போட்ட கூத்து.. இன்று இவர்கள் மீதான ஊழியாகி (வினையாகி) உள்ளது.. அவ்வளவே.  

ம்ம் அதேதான் வினை விதைத்தால் அதை அறுவடை செய்தே ஆகவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது நண்பர், மூன்று ஜிகாதிகளின் தந்தையை விடச் சொல்லி கேட்கக் கூடிய, தில் கொண்டஆள் தான் இவர்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையேயான அரசியல் குழப்பத்தினால், (பெயர் குறிப்பிடாமல்) ஜிகாதிகளுடன் தொடர்புள்ளவர்களாக தெளிவாக தெரிபவர்கள் (இவர்) இன்னும் அமைச்சரவையில் இருக்கும் துரதிருஷ்ட நிலை உள்ளதாக ஆங்கில பத்திரிகை தெரிவிக்கிறது.

ரணில் தான், இவரை நீக்க கோரவேண்டும. நீக்கினால், ரணில் பதவி அம்போ. மறுபுறம் மகிந்தா காத்திருக்கிறார்.

ஆகவே இவர் காட்டில் மழை தான்.

Link to comment
Share on other sites

இலங்கை ஒரு பௌத்த நாடு, 70% மக்கள் இந்த மதத்தை தம் மதமாக அடையாளம் காண்கிறார்கள். இதை அரசியல் தலைவர்களும் மகாநாயக்கர்கள் மூலம் தக்க வைக்கிறார்கள். 

ஆனால், சர்வதேசத்திற்கு தான் ஒரு பல் மத நாடாகாவும் சகலருக்கும் சம உரிமைகள் வழங்ப்படுவதாயும் வெற்றிகரமாக கூறி வருகின்றது. 

முஸ்லீம் - தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து  தமது மக்களுக்காக குரல் கொடுக்கவிட்டால், இலங்கையில் எல்லோரும் ஊதும் பிரித் மட்டுமே கேட்கும்.  அரச மரங்கள் மட்டுமே சந்திகளில் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இலங்கை ஒரு பௌத்த நாடு, 70% மக்கள் இந்த மதத்தை தம் மதமாக அடையாளம் காண்கிறார்கள். இதை அரசியல் தலைவர்களும் மகாநாயக்கர்கள் மூலம் தக்க வைக்கிறார்கள். 

ஆனால், சர்வதேசத்திற்கு தான் ஒரு பல் மத நாடாகாவும் சகலருக்கும் சம உரிமைகள் வழங்ப்படுவதாயும் வெற்றிகரமாக கூறி வருகின்றது. 

முஸ்லீம் - தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து  தமது மக்களுக்காக குரல் கொடுக்கவிட்டால், இலங்கையில் எல்லோரும் ஊதும் பிரித் மட்டுமே கேட்கும்.  அரச மரங்கள் மட்டுமே சந்திகளில் இருக்கும். 

தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைத்து பலத்துடன் உரிமைகளை வாங்கலாமே என்று சம்பந்தரும் தலையால கிடங்கு கிண்டிப் பார்த்தாரே.

மிதப்பில திரிஞ்சினமே. ஹக்கீம் போன்ற மிதவாதிகள் கூட, வாயை திறக்க முடியாதவாறு ஹிஸ்புல்லா, றிசாட் கோஸ்டிகளின் அலம்பறை இருந்தது.

ஹிஸ்புல்லா, றிசாட் அரசியல் எடுபடாது. முஸ்லீம் மக்கள் நிராகரிப்பார்கள். அத்துடன் அவர்களது எதிர்கால அரசியல் முனைவுகள் சிங்களத்தினால் தடுக்கப்படும். 

இன்று அவர்களாக சம்பந்தரிடம் வரவேண்டிய புற சூழல் உண்டாகி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.