Jump to content

மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

z_p05-why.jpg

மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு

வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மக்களுக்கான-காலக்கெடு-நி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில மரக்கறி வெட்டிற, குழை வெட்டிற கத்திகளையும் ஒப்படைக்கணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தொட்டிகள் வைத்தால் பொலிஸூக்கு பயப்படும் மக்களும் இதனை ஒப்படைப்பார்கள். பிரித்தானியாவில் அண்மையில் அதிகரித்துள்ள கத்திக் குத்துச் சம்பவங்களுக்குப் பின்.. பொதுத் தொட்டிகளில்.. கூரிய ஆயுதங்களை.. மனிதருக்கு உயிர் ஆபத்து விளைவிக்க வல்ல.. கூரிய ஆயுதங்களை ஒப்படைக்க கோரப்பட்டது. ஒப்படைப்பவர்கள் அநாமதேயத்தவர்களாக.. அனானிமஸ்.. ஆக தொடர்ந்து இருக்கலாம். 

இப்படியான காலக்கெடுக்கள் எந்தளவுக்கு வேர்க் அவுட் ஆகுமோ..?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வடக்கில் வாள்வெட்டுகாரரின் அட்டகாசம் துளியும் இருக்காது(?) அல்லது குறஞ்சிடும் என்று நம்பலாமா? வாளுக்கு பஞ்சமில்லை கொழும்பிலை யாரோ ஒரு முஸ்லிம் கனவான் சீனாவிலிருந்து பெரிய தொகை வாள் எடுப்பிச்சு மசூதியில் பற்றை வெட்ட கொடுத்ததாக அண்மையிலைதான படிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. 

 

என்னடா சூட்கேஸ் உறை செய்யுற துணியில உடுப்பு செய்து போட்டுருக்க..🤔

SarcasticCheapFinwhale-size_restricted.g

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்குவெட்டி, சத்தகம், அரிவாள், உளி இப்படி உள்ள கூர்ச்சாமான்கள் எல்லாத்தையும் எங்கடைசனத்திட்டையிருந்து புடிங்கிட்டிபோயிற்றா ஊரிலை மிஞ்சியிருக்கிறது வெறும் சேமணையாத்தான் இருக்கும். அப்ப இந்த வருசமும் ஊருக்குபோறதை நினைச்சும் பார்க்கேலாது. அடங்கொய்யால எதை கொண்டுபோனாலும் கொண்டு போங்க என்ரை நல்லூரான்ரை வேலாயுதத்தை மட்டும் கேட்டுபோடாதையுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

இவர்களின் அறிவிப்பை நம்பி..... நேரில் கொண்டு போய் ஒப்படைக்க, 
பயங்கரவாதிகள் அவ்வளவு முட்டாள்கள், என நான் நம்பவில்லை.
கிழக்கில் முஸ்லீம் மயானத்தில் சில துப்பாக்கிகளும், குண்டுகளும் கண்டு பிடித்தார்கள்.

வடக்கில், நாவாந்துறையில்... கூரிய  ஆயுதங்களை எறிய வந்த...  மூன்று முஸ்லீம்களில்,
ஒருவர் பொது மக்களால் பிடிக்கப் பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்  பட்டுள்ளார்.
மற்ற இருவர் தப்பி ஓடி விட்டார்களாம்.

மிகுதி ஆயுதங்களை... எங்காவது குளத்தில் எறிந்திருப்பார்கள்.
கோடைக்கு குளம் வத்தும் போதுதான்,   உண்மை தெரியவரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களது கோரிக்கைக்கு யாராவது ஆயுதங்கள் ஒப்படைத்தார்களா?

கிழக்கில் நிறைய முஸ்லீம் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இறைச்சி வெட்டும் கத்தி,வாள் போன்றவற்றை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்களாம் என்று கேள்விப் பட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

கிழக்கில் நிறைய முஸ்லீம் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இறைச்சி வெட்டும் கத்தி,வாள் போன்றவற்றை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்களாம் என்று கேள்விப் பட்டேன் 

ரதி கிழக்கு நிலமை வேறு.
வடக்கில் யார்யாரிடம் என்ன என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்பது பாதுகாப்பு படையினருக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.