Jump to content

இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன்.  வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். 
வ.ஐ.ச.ஜெயபாலன்
.
ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூக்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். அதனால்தான் கவிஞர் மஜீத் எழுதிய கவிதைகளை விட அவன் எழுதாத கவிதைகளும் முக்கியனாவை எனக் கருதுகிறேன்.
.
ஈழத்து கவிஞர் மஜித், தனது கொடிமின்னல்போல் படர்ந்தொளிரும் புதிய சொற் தொடர்களால், செழுமைபெற்ற கவிதைகளுக்காகவும் தலைக்குமேல் வெள்ளம் போனபோதும் கவிதையை உயர்திப்பிடித்த மிடுக்குக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவார். கவிஞர் மஜீத்போல வாழ்வின் பாதிக்காலம் ஒருகையால் காலனை அமுக்கி பிடித்தபடி, மறுகையால் கவிதை எழுதுகிற மனோபலம் உள்ள ஒரு கவிஞனை நான் சந்திததில்லை. ஒவ்வொரு அற்புதத்தின் பின்னரும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். சகோதரி சபிறா மஜீத் போல கவிதைக்காக, திருமணமாகி ஒரு வருடத்தில் நோய்வாய்ப்பட்ட கணவனின் இருப்பை புயலில் தீபமாய் காத்து, ஊட்டுங் கரமாகவும் உடுத்துங் கரமாகவும் கேட்டு கவிதை படியெடுக்கும் வரமாகவும் வாழ்ந்த இன்னொரு காதல் மனைவியை நான் சந்திததில்லை. நான் ஒரு விமர்சகனல்ல என்பதாலும் சக கவிஞன் என்பதாலும் கவிஞர் மஜீத் பற்றிய என்பதிவு அவர் எழுதிய கவிதைகளை மட்டுமே பேசவில்லை. ஒடுக்கும் கொடுங்கோல் நோயின் ஆட்சிக்குp பணியாது, எழுதுகோலை உயத்திய அவரது கவிச் செருக்குப் பற்றியும் பேசுகிறது. அவர் நோயற்றிருந்தால், தொட்டிருக்கக்கூடிய உச்சங்களையும் உய்த்துணர்கிறது. அதனால், இது விமர்சனமுமல்ல மதிப்பீடுமல்ல உணர்ச்சி வசபட்ட மிகைபடுத்தலென தோன்றினால், எனக்குத் தொழில் கவிதை என்பதுதான் என் பதிலாகும்.
. 
கவிஞர் மஜீத்தின் வாழ்க்கைக் குறிப்பை இணைப்பது என் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும். . 
கவிஞர், கேரளம்போல கலைகளும் நெய்தலும் மருதமும் நீர்நிலைகளுமாக அழகு செளிக்கும் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பொத்துவில் நகரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் 03.10.1969ல் பிறந்தவர். கவிஞரின் கல்விப் பருவமும் தேடலும் பொத்துவிலில் தேங்கிவிடாது, அக்கரைபற்று பாடசாலை. யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியென என தொடர்ந்தது அவரது அதிஸ்ட்டம்தான். அவரது கவிதை மற்றும் அரசியல் வாழ்வில், யாழ்ப்பாணக் காலமும் அக்கரைப்பற்றுக் காலமும் முக்கியமானவையாகும். யாழ்ப்பாணக் காலத்திதான் கவிஞர், ஈழ விடுதலை அமைப்பின் தலைவர் தோழர் வே.பாலகுமாரனை சந்திக்கிறார். ஈழத்தில் பாலகுமாரன் என்றால் மனசு நிறைந்த தோழமையும் வீடு நிறைந்த அரசியல் இலக்கிய புத்தகங்களும்தான் நினைவுவரும். தன்னையும் தன் திசையையும் தேடிய கவிஞரின் இளமையில், பாலகுமாரனுடன் நிகழ்ந்த வாசிப்பும் புத்தக பரிமாற்றங்களும் விவாதங்களும் முக்கியமான மைல் கற்களாகும். அவரது யாழ்பாண காலத்தில்தான், இடது சாரி தத்துவ விவாதங்களும் ’வானம்பாடி’ கவிதை வாசிப்பும் பின்நவீனத்துவ இலக்கிய தேடலும் ஆரம்பித்தது. 
கவிஞர் மஜீத் கிழக்குமாகாணத்தில் பணிபுரியும் ஆர்வம் நிறைந்தவராக ’வானம்பாடி’ கவிதைகளில் ஈடுபாட்டோடும் பின்நவீனத்துவ எழுத்துக்கள்பற்றிய அறிமுகங்களோடும் யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைபற்றுக்குத் திரும்பிவந்தார். 
ஐந்து வேளையும் பாங்கொலிக்கும் அக்கரைப்பற்று, கிழக்கில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய ஊராகும். அந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தின் அக்கரைபற்றிலும் அயலிலும் நுஃமான் , மெளனகுரு ,சண்முகம்சிவலிங்கம்,சோலைக்கிளி, உமாவரதராசன், வேதாந்தி என ஈழத்து நவீன இலக்கியத்தின் முன்னணி படை ஒன்று தீவிரமாக இயங்கிவந்தது. இந்த பின்னணியில்தான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவிஞர் மஜீத், தன் காவியக் கனவான வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரது நாற்பத்தொன்பது வருட வாழ்வை நோய்க்குமுன் -நோய்க்குப் பின் என பகுப்பது தவிர்க்க முடியாதது. கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.
. 
கொடுக்க ஒருகையும் கெடுக்க மறுகையுமாக ஆட்டம்போடும் பிசாசுத்தேவதையான மனிதன் விதி, கவிஞர் உடல் நலத்தை கெடுக்குமுன் இரண்டு வரங்களை கொடுத்திருந்தது. கவிஞர் மஜித்தின் இறுதிக் கணம்வரைக்கும் உடனிருந்த அந்த வரங்களை போற்றுகிறேன். மரணத்துள் தத்தளித்த கவிஞனின் பலமாகி, இரட்டையர் என இலக்கிய உலகம் வியந்திட வாழ்ந்த கவிஞர் ரியாஸ்குரானாவின் தோழமை மகத்தான வரம். அதனை மிஞ்சிய பெருந்தவம் கவிதையோடும் கவிஞனோடும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட சபிறா மஜீத்தின் காதலாகும். அது திருமணம் நடந்து ஒருவருடத்துக்குள் கவிஞன் நோய்ப்பட்டபோது விசுவரூபம் எடுத்த சினேகமாகும். நோயுள் விழுந்து நொடித்த தன்கணவனை சாவின் புதை மணலில் மூழ்க்க விடாமல் அவனோடு சேர்த்து அவனது உயிரான மகளையும் ஆன்மாவான கவிதையையும் சுமந்து வளர்த்த இதிகாசக் காதல் மனைவிக்கும் நண்பர்களுக்கும் நாளை அவனைக் கண்டெடுத்துக் கொண்டாடப்போகும் தமிழ் இலக்கிய உலகத்துக்கும் என் அஞ்சலிகளை சமர்பிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

தங்களின் இப்பதிவு விகடன் வாரப் பத்திரிக்கையிலும் வந்துள்ளது. கவிஞரின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு இதுவரை அமையப் பெறவில்லை, ஆனால் தங்களது இந்த இரங்கல் பதிவை படித்த பிறகு அன்னாரது படைப்புகளை வாசிக்க ஆர்வமாகவுள்ளேன். 

'கவிஞர் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தும் நோயில் வீழ்ந்து நொந்தும் தன் மீதி இருப்பின் கவிதையை வாழ்ந்து முடிந்ததார்.' - அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

"மழைக்காலம் அருவருப்பாகவும்

கூதல் ஒரு வியாதியாகவும்
எம்மை அச்சமூட்டுகின்றன
எனக்குள்ளிருந்த பறவை
தூக்கிட்டுக்கொண்டது.
எழுத்துகள் புழுக்களாகி
என்னை மூடிக்கொள்கின்றன
எனது பறவையைப் பாட அழைக்கிறேன்
எனது சொற்கள் துள்ளிச் சென்று
அவர்களின் கண்கள் மீன்களான
ஆற்றில் குதித்துச்
சாகின்றன.’

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.