Jump to content

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்


Recommended Posts

9 hours ago, ரஞ்சித் said:

சண்டமாருதன்,

நீங்கள் இணைத்த இணைப்பில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ரேகன் ஆப்கானிஸ்த்தானிய போராளிகளுக்கு, தலிபான்கள் உற்பட வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் வல்லமையுடைய ஸ்டிஞ்சர் ஏவுகணைகளைக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறார்கள். 

இதில் வேடிக்கை என்னவென்றால், தலிபான் ஆரம்பிக்கப்பட்டதோ 1994 ஆம் ஆண்டு 10 ஆம் திகதி. ரொனால்ட் ரேகன் பதவியிலிருந்து வெளியேறியது 1989 ஜனவரி 20 ஆம் திகதி. அதன்படி பார்த்தால், தான் அதிகாரத்தில் இல்லாதபொழுது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தலிபான்களுக்குக் கொடுத்தார் என்கிறது செய்தி. இது சாத்தியமா?

ஆனால், செய்தியின் மற்றைய பகுதியான முஜஹிதீன்களுக்கு சோவியத் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டதென்பது உண்மை, ஆனால் அவர்கள் தலிபான்கள் இல்லை. ஏவுகணைகள் வழங்கப்பட்ட நேரம் சோவியத்துடனான போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். தலிபான்கள் உருவானது சோவியத் வெளியேறி 5 ஆண்டுகளுக்குப் பிறகு.  

 

Quote

 

At one point, the CIA was providing Stingers to seven different mujaheddin groups, which then distributed them among their own subcommanders.

"We were handing them out like lollipops," a U.S. intelligence official in Washington said.

 

Washington Post special correspondent Kamran Khan contributed to this article.

https://www.washingtonpost.com/archive/politics/1994/03/07/cia-falters-in-recovery-of-missiles/73a9a4d7-2952-4077-9746-46bd2e5b81ca/?utm_term=.df05e163b18

மிட்டாய்கள் கொடுப்பது போல் ஏழு குறுப்புகளுக்கு இந்த ஏவுகணைகளை கொடுத்தார்கள் என்பதை அவர்களே பின்னாளில் தெரிவித்துள்ளனர். 

முஜாகுதீன் அமைப்பு ஒரு தலமையின் கீழ் முழுவதுமாக கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பாக இருந்ததில்லை. இவர்களில் சில பிரிவினரே பின்னர் தலிபான்களாக உருவெடுத்தனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகள். 

இதை விட  ஆப்கானிஸ்தான்  ஒபியம் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் சி ஐ ஏ க்கும் மான உறவு புறம்பானது. விரும்பினால் முன்னாள் சி ஐ ஏ அதிகாரிகள் வாக்கு மூலங்களை இணையத்தில் நிறைய படிக்கலாம். 

 

Quote

 

அமெரிக்கா அல்கொயிதாவுக்கோ, தலிபானுக்கோ அல்லது ஐஸிஸிற்கோ எப்போதுமே ராணுவ உதவிகளைக் கொடுக்கவுமில்லை, அவர்களை உருவாக்கி அழகு பார்க்கவுமில்லை.

ஆனால், இவர்களின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா விட்ட தவறுகளே காரணமாக அமைந்தது என்பதையும் நான் மறுக்கவில்லை. அமெரிக்காவின் தொடர்ச்சியான இஸ்ரேல் ஆதரவுப் போக்கும், கம்மியூனிசத்தெற்கெதிரான அதனது நிலைப்பாடுமே இன்று உலகெங்கும் அவர்களுக்கெதிரான அலையினை ஏற்படுத்தியிருக்கிறதென்பதையும் மறுப்பதற்கில்லை. 

  •  

 


 

 

உங்கள் கருத்தின் சுருக்கத்தில் அமையப்பெற்ற  " அமரிக்கா விட்ட தவறுகள், இஸ்ரேல் ஆதரவுப்போக்கு கம்னியுசத்துக்கு எதிரான நிலைப்பாடு,  என்பனவெல்லாம் இவ்வாறான வார்த்தைகளால் அணுகப்படுவதில்லை மாறாக வியட்னாமில்  இவர்களால் கொல்லப்பட்ட இரண்டு மில்லியன் அப்பாவி மக்களின் சாவுகளில் இருந்தும்  ஈராக்கில் கொல்லப்பட்ட்ட அரை மில்லியனுக்கம் மேற்பட்டவர்களின் சாவுகளில் இருந்தும்  என்னும் ஏராளமான இடங்களில் இவர்களின் மானுட வேட்டைகளில்  தொடரும் உயிர்ப்பலிகளில் இருந்தும் அணுகப்படுவது. அதற்கு  அறம் சார்ந்த சிந்தனை முறை இன்றி சாத்தியமில்லை. 

பொதுவான அமரிக்க வக்காலத்து என்று வரும் போது கொன்ஸபிரசி தியரி  இணைய யுரியுப் குப்பைகள் என அனைத்தையும் புறந்தள்ளும் ஒரு வினோத நிலை இங்கிருக்கின்றது. இதையே தான் ஏகாதிபத்தியனம் தன்னை நியயப்படுத்த பாவிக்கின்றது. அதை  இங்கு ஏன் செய்கின்றார்கள் என்று புரியவில்லை. அதனால் தான் நாங்கள் உதவினோம் என்று கில்லாரி கிளின்டன் சொன்னதையும் வாசிங்டன் போஸ்ட்டில் வந்ததையும் மக்கேய்ன் சிரியாவுக்கு போன போட்டோவை அவரே தான் முதலில் டுவிட்டரில் போட்டார். அதையும் இணைத்தேன்.  இவற்றையும் வேண்டுமானால் குப்பை அல்லது கொன்ஸ்பிரசி தியரி என்று வேண்டுமானல் சொல்லுங்கள். 

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். 

 

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆகவே ரஞ்சித் அவர்களின் தகவல்களின் படி அமெரிக்கா நல் வழியில் பயணிக்கின்றது. அவர்களிடம் சூதுவாது எதுவுமேயில்லை.

அவர்கள் உலக நலன் விரும்பிகள்.

ஹிரோசிமாவுக்கு குண்டு போட்டது சீனா எண்டு சொல்லாதவரைக்கும் நன்றி.

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவதென்பது இதைத்தான். 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அமெரிக்கா உருவாக்கி வளர்க்கவில்லை என்று நான் எழுதியதை நான் அமெரிக்காவிற்கு வெள்ளையடிப்பதாகத் திரிக்கிறீர்கள் பாருங்கள், அதுதான் உங்களின் வல்லமை.

உங்களின் என்மீதான இப்புதிய காழ்ப்புணர்ச்சியின் காரணம் என்னவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் ஈழத்துச் சைவர்களின் மதச் சகிப்புத்தன்மை தொடர்பான உங்களின் கருத்திற்கு நான் எழுதிய பதிலே உங்களைக் கடுப்படைய வைத்திருக்கிறது என்பது புரிகிறது.

நான் சொல்லவருவது புரியவில்லை என்றால் இன்னொருமுறை படித்துவிட்டு, எங்கே எப்போது நான் அமெரிக்கர்களை நல்லவர்கள் என்று சொல்கிறேன் என்று காட்டுங்கள், தொடர்ந்து பேசலாம்.

1 hour ago, சண்டமாருதன் said:

 

Washington Post special correspondent Kamran Khan contributed to this article.

https://www.washingtonpost.com/archive/politics/1994/03/07/cia-falters-in-recovery-of-missiles/73a9a4d7-2952-4077-9746-46bd2e5b81ca/?utm_term=.df05e163b18

மிட்டாய்கள் கொடுப்பது போல் ஏழு குறுப்புகளுக்கு இந்த ஏவுகணைகளை கொடுத்தார்கள் என்பதை அவர்களே பின்னாளில் தெரிவித்துள்ளனர். 

முஜாகுதீன் அமைப்பு ஒரு தலமையின் கீழ் முழுவதுமாக கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பாக இருந்ததில்லை. இவர்களில் சில பிரிவினரே பின்னர் தலிபான்களாக உருவெடுத்தனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகள். 

இதை விட  ஆப்கானிஸ்தான்  ஒபியம் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் சி ஐ ஏ க்கும் மான உறவு புறம்பானது. விரும்பினால் முன்னாள் சி ஐ ஏ அதிகாரிகள் வாக்கு மூலங்களை இணையத்தில் நிறைய படிக்கலாம். 

 

 

உங்கள் கருத்தின் சுருக்கத்தில் அமையப்பெற்ற  " அமரிக்கா விட்ட தவறுகள், இஸ்ரேல் ஆதரவுப்போக்கு கம்னியுசத்துக்கு எதிரான நிலைப்பாடு,  என்பனவெல்லாம் இவ்வாறான வார்த்தைகளால் அணுகப்படுவதில்லை மாறாக வியட்னாமில்  இவர்களால் கொல்லப்பட்ட இரண்டு மில்லியன் அப்பாவி மக்களின் சாவுகளில் இருந்தும்  ஈராக்கில் கொல்லப்பட்ட்ட அரை மில்லியனுக்கம் மேற்பட்டவர்களின் சாவுகளில் இருந்தும்  என்னும் ஏராளமான இடங்களில் இவர்களின் மானுட வேட்டைகளில்  தொடரும் உயிர்ப்பலிகளில் இருந்தும் அணுகப்படுவது. அதற்கு  அறம் சார்ந்த சிந்தனை முறை இன்றி சாத்தியமில்லை. 

பொதுவான அமரிக்க வக்காலத்து என்று வரும் போது கொன்ஸபிரசி தியரி  இணைய யுரியுப் குப்பைகள் என அனைத்தையும் புறந்தள்ளும் ஒரு வினோத நிலை இங்கிருக்கின்றது. இதையே தான் ஏகாதிபத்தியனம் தன்னை நியயப்படுத்த பாவிக்கின்றது. அதை  இங்கு ஏன் செய்கின்றார்கள் என்று புரியவில்லை. அதனால் தான் நாங்கள் உதவினோம் என்று கில்லாரி கிளின்டன் சொன்னதையும் வாசிங்டன் போஸ்ட்டில் வந்ததையும் மக்கேய்ன் சிரியாவுக்கு போன போட்டோவை அவரே தான் முதலில் டுவிட்டரில் போட்டார். அதையும் இணைத்தேன்.  இவற்றையும் வேண்டுமானால் குப்பை அல்லது கொன்ஸ்பிரசி தியரி என்று வேண்டுமானல் சொல்லுங்கள். 

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். 

 

ஏன் இந்தக் கோபம்? நீங்கள் இணைத்த இணைப்பில் இருந்த தகவலைத்தானே விளக்கியிருந்தேன்?

நான் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதாக ஏன் நினைக்கிறீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

ஈராக்கில் பொம்மை அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சில நூறு ராணுவ ஆலோசகர்களை மட்டுமே விட்டு விட்டு, மீதி ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை பராக் ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கமைய விலக்கிக் கொண்டார்.

அமெரிக்க ராணுவத்தின் போர்த்தளபாடங்கள், துப்பாக்கிகள், தாங்கிகள், ஹம்வி எனப்படும் பல்தரை தாக்குதல் வண்டிகள் என்று பெருமளவு ஆயுத தளபடாடங்களைப் பெற்றுக்கொண்ட ஈராக்கிய ராணுவம் அமெரிக்கா வெளியேறிய நகரங்களில் பொறுப்பெடுக்கத் தொடங்கியது.

அமெரிக்க அதிகாரிகளின் பயிற்சி கிடைக்கப்பெற்றாலும் கூட, நேர்த்தியான தாக்குதல் பயிற்சியையோ அல்லது போர் அனுபவத்தையோ புதிய ஈராக்கிய ராணுவம் கொண்டிருக்கவில்லை.  ஆகவே, பக்த்தாதியின் ஐ. ஸிஸ்கள் சண்டையைத் தொடங்கியபோது, ஈராக்கிய ராணுவம் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தப்பியோடியது. எதிர்த்துப் போரிட்ட ஈராக்கிய ராணுவ வீரர்களை ஐ. ஸிஸ்கள் சரணடைந்த பின் கொன்றுகுவித்த கொடூரம் வெளிவந்தபோது, மீதமிருந்த ஈராக்கிய ராணுவ சண்டை எதுவுமின்றி ஆயுதங்களுடன் ஒன்றில் சரணடைந்தது அல்லது விட்டு விட்டுத் தப்பியோடியது. இதன் விளைவு, அமெரிக்காவினால் பல பில்லியன் டாலர்கள் செலவில் ஈராக்கிய பொம்மை அரசிற்கும், அதன் ராணுவத்திற்கும் வழங்கப்பட்ட நவீன போராயுதங்கள் எதிர்ப்பின்றியே ஐ. ஸிஸ் அமைப்பின் கைகளுக்கு மாறின. 

ஆக, அமெரிக்கா ஐஸிஸ்களுக்கு ஆயுதங்களை வழங்கியது, அவர்களை உருவாக்கியதென்பது  இதோடு அடிபட்டுப் போய்விடுகிறது.

முதலில் மூச்சு விடாமல் தொடர்ந்து எழுதியத்துக்கு நன்றிகள் 
நான் மேம்படும் கல்லூரியில் இருப்பதால் இப்போ செமஸ்ட்டர் இறுதி 
பரீடசை காலம் இங்கே செலவழிக்க நேரம் இல்லை...

உங்களின் எழுத்த்துகளில் 60 வரை உண்மையும் 
முன் பின் முரணான தகவல்கள் நிறைய இருக்கின்றன 
கொஞ்சம் பின் தள்ளிய காலம் என்பதால் நேர கால அடடவணையில் உங்கள் 
கருத்துக்கள் கொஞ்சமும் பொருந்தவில்லை. 

ஐஸ்ஸ் முதலில் தாக்குதல் செய்து பாரிய இடங்களை கைப்பற்றியது சிரியயாவில் 2012இல்.
2011 இல் சிரிய விடுதலை போராளிகள் என்று தொடங்கிய போர் ஐ நா தலையீட்டுடன் ஓர் பேச்சுவார்த்தை 
அளவில் சிறிய தொங்கு நிலை கொண்டு இருந்தது மீண்டும் 2012 ஜூனில்தான் தொடங்கியது 
இப்போது வீறு கொண்டு உள் புகுந்தது ஐஸ்ஸ் ..... 
நீங்கள் சியா சன்னி பிரச்னையை 2007-2010 நடந்ததை இதுக்குள் புகுத்துகிறீர்கள் ..
சிறிய போரின் முழு உதவியையும் செய்தது சவூதி அரேபியா ... நீங்கள் லாபகமாக மறைக்க அல்லது தெரியாது இருந்து இருக்கிறீர்கள் அதனால்தான் 2012இல் நடந்த சிறிய போருக்குள் இதை கொண்டு வருகிறீர்கள். ஐஸ்ஸ் அமைப்பே சவுதி அடிப்படைவாத கொள்கை கொண்டது. 
முதன் முதலில் ஐஸ்ஸ் எனும் பெயரை கொண்டுவந்ததே எகிப்த் நாட்டடை  சேர்ந்த அபு ஆயுப் அல்-மஷ்ரி 
இவர் சாரஃவாவி விமான தாக்குதலில் இறந்ததும்  அல்-கெய்த்தா என்பதை விட்டு விட்டு இதை உருவாக்கினார் இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் என்பதுதான் இதன் தொடக்கம்.
இவருக்கும் அமேரிக்கா வுக்குமான தொடர்பு நெடியது அதை பின்பு எழுதுகிறேன். 

2014இல் தான் ஐஸ்ஸ் ஈராக் மீது படை எடுக்க தொடங்குகிறது  1000 கணக்கான டொயோட்டா பிக்கப் வாகனங்கள்  ஈராக்குக்குள் (மீண்டும்) நுழைகின்றன. பாலுஜா ..... திக்ரிக் கை தொடர்ந்து மொசூல் எனும் நகரமும் அவர்களிடம் வீழ்கிறது பக்தாத் எட்டி தொடும் தூரம் வரை வந்தார்கள். 

சவுதிய உதவி ஐஸ்ஸ் போராளிகள் எந்த எந்த நாடுகளில் பெருமளவில் சென்றார்கள் 
நேர காலத்தை கொஞ்சம் சரி பாருங்கள் 

அதுக்குள் துருக்கியில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் குண்டு வெடித்து சிதறியது 
இரு ரஷ்ய போர் விமானம் துருக்கி இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானப்படை வீரர் துருக்கி இராணுவத்தால் கைதுசெய்ய பட்டது .....
பின் துருக்கி சிரிய எல்லையில் வரிசையாக நின்ற எண்ணெய் வவுசர்களை ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி 
எரித்தது.
தற்போதைய துருக்கி  பிரசிடண்டுக்கு எதிராக எழுந்த இராணுவ புரட்சி 
மக்கள் ஆதாராவோடு எவ்வாறு மக்களால் தோல்வி கண்டது?

என்னும் நிறைய விடயங்களை நடந்த திகதி அடிப்படையில் பாருங்கள்.

தலிபான்  அல்-கெய்த்தா உருவான காலங்களை தவறாக எழுதி இருக்கிறீர்கள் 
1990இல் சதாம் குவைத் மீது தாக்குதல் தொடுத்த போது சதாமை தாக்க அமெரிக்க படைகள் 
சவூதி செல்கின்றன அப்போதான் ... ஒசாமா அமெரிக்காவுக்கு எதிராக மாறினார். இஸ்லாமிய புனித பூமிக்குள் அந்நியர்களுக்கு இடமில்லை என்று ஒசாமா கூறுகிறார். அதை சவூதி மறுக்கிறது 
சதாம் சவூதி நோக்கி வந்தால் புனித போராளிகள் நாங்கள் சதாமை பார்த்து கொள்கிறோம் அமெரிக்க இராணுவம் எமது மண்ணில் கால்வைக்க முடியாது என்று மறுக்கிறார்.
சவூதி ஏற்றுக்கொள்ளவில்லை அமெரிக்க படைகள் தரை இறங்கின ..... அப்போதான் ஒசாமா மீண்டும் 
ஆப்கானிஸ்த்தான் அல் ஸவாரியை வரவழைத்து விட்டு போகிறார். 

உங்கள் கதைகள் முன் பின் முரணாக இருக்கிறது. 

தாலிபான்களுடன் கிளிண்டன் அமெரிக்கா அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது யூடியூப்பில் இருக்கு 
ஒருமுறை பார்க்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

முதலில் மூச்சு விடாமல் தொடர்ந்து எழுதியத்துக்கு நன்றிகள் 
நான் மேம்படும் கல்லூரியில் இருப்பதால் இப்போ செமஸ்ட்டர் இறுதி 
பரீடசை காலம் இங்கே செலவழிக்க நேரம் இல்லை...

உங்களின் எழுத்த்துகளில் 60 வரை உண்மையும் 
முன் பின் முரணான தகவல்கள் நிறைய இருக்கின்றன 
கொஞ்சம் பின் தள்ளிய காலம் என்பதால் நேர கால அடடவணையில் உங்கள் 
கருத்துக்கள் கொஞ்சமும் பொருந்தவில்லை. 

ஐஸ்ஸ் முதலில் தாக்குதல் செய்து பாரிய இடங்களை கைப்பற்றியது சிரியயாவில் 2012இல்.
2011 இல் சிரிய விடுதலை போராளிகள் என்று தொடங்கிய போர் ஐ நா தலையீட்டுடன் ஓர் பேச்சுவார்த்தை 
அளவில் சிறிய தொங்கு நிலை கொண்டு இருந்தது மீண்டும் 2012 ஜூனில்தான் தொடங்கியது 
இப்போது வீறு கொண்டு உள் புகுந்தது ஐஸ்ஸ் ..... 
நீங்கள் சியா சன்னி பிரச்னையை 2007-2010 நடந்ததை இதுக்குள் புகுத்துகிறீர்கள் ..
சிறிய போரின் முழு உதவியையும் செய்தது சவூதி அரேபியா ... நீங்கள் லாபகமாக மறைக்க அல்லது தெரியாது இருந்து இருக்கிறீர்கள் அதனால்தான் 2012இல் நடந்த சிறிய போருக்குள் இதை கொண்டு வருகிறீர்கள். ஐஸ்ஸ் அமைப்பே சவுதி அடிப்படைவாத கொள்கை கொண்டது. 
முதன் முதலில் ஐஸ்ஸ் எனும் பெயரை கொண்டுவந்ததே எகிப்த் நாட்டடை  சேர்ந்த அபு ஆயுப் அல்-மஷ்ரி 
இவர் சாரஃவாவி விமான தாக்குதலில் இறந்ததும்  அல்-கெய்த்தா என்பதை விட்டு விட்டு இதை உருவாக்கினார் இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் என்பதுதான் இதன் தொடக்கம்.
இவருக்கும் அமேரிக்கா வுக்குமான தொடர்பு நெடியது அதை பின்பு எழுதுகிறேன். 

2014இல் தான் ஐஸ்ஸ் ஈராக் மீது படை எடுக்க தொடங்குகிறது  1000 கணக்கான டொயோட்டா பிக்கப் வாகனங்கள்  ஈராக்குக்குள் (மீண்டும்) நுழைகின்றன. பாலுஜா ..... திக்ரிக் கை தொடர்ந்து மொசூல் எனும் நகரமும் அவர்களிடம் வீழ்கிறது பக்தாத் எட்டி தொடும் தூரம் வரை வந்தார்கள். 

சவுதிய உதவி ஐஸ்ஸ் போராளிகள் எந்த எந்த நாடுகளில் பெருமளவில் சென்றார்கள் 
நேர காலத்தை கொஞ்சம் சரி பாருங்கள் 

அதுக்குள் துருக்கியில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் குண்டு வெடித்து சிதறியது 
இரு ரஷ்ய போர் விமானம் துருக்கி இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானப்படை வீரர் துருக்கி இராணுவத்தால் கைதுசெய்ய பட்டது .....
பின் துருக்கி சிரிய எல்லையில் வரிசையாக நின்ற எண்ணெய் வவுசர்களை ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி 
எரித்தது.
தற்போதைய துருக்கி  பிரசிடண்டுக்கு எதிராக எழுந்த இராணுவ புரட்சி 
மக்கள் ஆதாராவோடு எவ்வாறு மக்களால் தோல்வி கண்டது?

என்னும் நிறைய விடயங்களை நடந்த திகதி அடிப்படையில் பாருங்கள்.

தலிபான்  அல்-கெய்த்தா உருவான காலங்களை தவறாக எழுதி இருக்கிறீர்கள் 
1990இல் சதாம் குவைத் மீது தாக்குதல் தொடுத்த போது சதாமை தாக்க அமெரிக்க படைகள் 
சவூதி செல்கின்றன அப்போதான் ... ஒசாமா அமெரிக்காவுக்கு எதிராக மாறினார். இஸ்லாமிய புனித பூமிக்குள் அந்நியர்களுக்கு இடமில்லை என்று ஒசாமா கூறுகிறார். அதை சவூதி மறுக்கிறது 
சதாம் சவூதி நோக்கி வந்தால் புனித போராளிகள் நாங்கள் சதாமை பார்த்து கொள்கிறோம் அமெரிக்க இராணுவம் எமது மண்ணில் கால்வைக்க முடியாது என்று மறுக்கிறார்.
சவூதி ஏற்றுக்கொள்ளவில்லை அமெரிக்க படைகள் தரை இறங்கின ..... அப்போதான் ஒசாமா மீண்டும் 
ஆப்கானிஸ்த்தான் அல் ஸவாரியை வரவழைத்து விட்டு போகிறார். 

உங்கள் கதைகள் முன் பின் முரணாக இருக்கிறது. 

தாலிபான்களுடன் கிளிண்டன் அமெரிக்கா அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது யூடியூப்பில் இருக்கு 
ஒருமுறை பார்க்கவும். 

உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன். சில விடயங்களை, மிகச் சரியான விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். சவுதிக்கும் ஐஸிஸிற்குமான உறவு தெரியும். அமெரிக்காவின் பங்குபற்றியே திரி செல்வதால் அதை எழுத நினைக்கவில்லை.

மற்றும்படி, காலக் கிரமப்படி நான் எழுதவில்லையென்பதும் உண்மைதான். 

நன்றி மருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன். சில விடயங்களை, மிகச் சரியான விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். சவுதிக்கும் ஐஸிஸிற்குமான உறவு தெரியும். அமெரிக்காவின் பங்குபற்றியே திரி செல்வதால் அதை எழுத நினைக்கவில்லை.

மற்றும்படி, காலக் கிரமப்படி நான் எழுதவில்லையென்பதும் உண்மைதான். 

நன்றி மருது

ரஞ்சித், நீங்கள் குழம்பி விடஎதுவும் இல்லை! மருதர் வந்து உறுதிப் படுத்திய தகவல்கள் மாதிரி தன் சந்தேகங்களைத் தெளித்து விட்டுப் போயிருக்கிறார். எல்லாம் "எப்படி, எப்படி?" என்று முடியும் கேள்விகள்! பல கேள்விகளின் விடைகள் மிக இலகுவாகக் கிடைக்கும் ஆவணங்களிலேயே இருப்பவை! (உதாரணம்: ஐசிஸ் என்பது Islamic state of Iraq and Levant என ஆரம்பிக்கப் பட்டமை, அதற்கு இயல்பாகவே வஹாபிசத்தை அங்கீகரிக்கும் நாடான சவூதியில் இருந்து பலர் சென்றமை!). வேறு சில ஆதாரமேயில்லாத பொய்கள்! (உதாரணம்: கிளின்ரன் டலிபானை அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசி அது யு ரியூபில் "மட்டும்" வந்த வீடியோ! கிளின்ரன் தலிபானின் ஒரு பிரிவினரோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பகிரங்கமாகவே சொன்னது தான் மற்றைய செய்தி ஊடகங்களில் வந்தது!)

மொத்தத்தில் கண்முன்னே இருக்கும் எதையும் மருதர் உட்பட பல சதிக் கோட்பாட்டு ஆர்வலர்கள் பார்ப்பதில்லை! அவர்களுக்கும் சில ரகசிய யூ டியூப் வீடியோக் காரர்களுக்கும் மட்டுமே தெரிந்த "உடான்ஸ்" கதைகளை அதிகம் நம்புவர்! இந்த யூரியூபும் முகநூலும் பார்த்து இவர்கள் படிக்கும் வரலாறு இருக்கிறதே, அது பாக்கியராஜ் படம் பார்த்து பாலியல் கல்வி கற்றுக் கொள்வதற்கு ஒப்பானது! கிழுகிழுப்பாக இருக்கும்! ஆனால், யாவும் கற்பனையாக இருக்கும்!

Link to comment
Share on other sites

44 minutes ago, Justin said:

மொத்தத்தில் கண்முன்னே இருக்கும் எதையும் மருதர் உட்பட பல சதிக் கோட்பாட்டு ஆர்வலர்கள் பார்ப்பதில்லை! அவர்களுக்கும் சில ரகசிய யூ டியூப் வீடியோக் காரர்களுக்கும் மட்டுமே தெரிந்த "உடான்ஸ்" கதைகளை அதிகம் நம்புவர்! இந்த யூரியூபும் முகநூலும் பார்த்து இவர்கள் படிக்கும் வரலாறு இருக்கிறதே, அது பாக்கியராஜ் படம் பார்த்து பாலியல் கல்வி கற்றுக் கொள்வதற்கு ஒப்பானது! கிழுகிழுப்பாக இருக்கும்! ஆனால், யாவும் கற்பனையாக இருக்கும்!

விவேகம் படத்திலிருந்து ஒரு காட்சி 😀 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"விவேகம் படத்திலிருந்து ஒரு காட்சி 😀

 

ம்..இது நல்லா "ஓடும்" போல இருக்கு!  அதுக்குத் தானே கொஞ்சம் "குகூ" தனமான ஆட்களை மூளையைக் கழுவி வைத்திருக்கிறார்கள்?

அது சரி, இலிமினாற்றிக்கு corporate headquarters இல்லை,  என்று 1-800 நம்பர் எதுவும் இல்லை! அவனுகள் செய்வதை யாரும் அறியவும் முடியாது! அதனால் தடுக்கவும் முடியாது! பிறகேன் வேலை மெனக்கெட்டு இலுமினாற்றியைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்? வேலை, படிப்பு, பிழைப்பு என்று அனுபவித்து விட்டுச் செத்துப் போவது தானே?

Link to comment
Share on other sites

10 minutes ago, Justin said:

"விவேகம் படத்திலிருந்து ஒரு காட்சி 😀

 

ம்..இது நல்லா "ஓடும்" போல இருக்கு!  அதுக்குத் தானே கொஞ்சம் "குகூ" தனமான ஆட்களை மூளையைக் கழுவி வைத்திருக்கிறார்கள்?

அது சரி, இலிமினாற்றிக்கு corporate headquarters இல்லை,  என்று 1-800 நம்பர் எதுவும் இல்லை! அவனுகள் செய்வதை யாரும் அறியவும் முடியாது! அதனால் தடுக்கவும் முடியாது! பிறகேன் வேலை மெனக்கெட்டு இலுமினாற்றியைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்? வேலை, படிப்பு, பிழைப்பு என்று அனுபவித்து விட்டுச் செத்துப் போவது தானே?

நான் தியேட்டர் போய் படம் பார்ப்பதில்லை. இந்திய படங்களிலேயே secret society என குறிப்பிட்டு படம் எடுக்க வெளிக்கிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக இணைத்தேன். உங்கள் நக்கலுக்கு பதிலாக.

JFK ஐ விட அறிவு கூடின மாதிரி கதைக்கிற உங்களை போன்றவர்களுக்கு அல்ல, சாதாரண மக்களுக்கு கொஞ்சம் உலகத்தில நடக்கிற விஷயம் விளங்கினால் நல்லது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Lara said:

நான் தியேட்டர் போய் படம் பார்ப்பதில்லை. இந்திய படங்களிலேயே secret society என குறிப்பிட்டு படம் எடுக்க வெளிக்கிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக இணைத்தேன். உங்கள் நக்கலுக்கு பதிலாக.

JFK ஐ விட அறிவு கூடின மாதிரி கதைக்கிற உங்களை போன்றவர்களுக்கு அல்ல, சாதாரண மக்களுக்கு கொஞ்சம் உலகத்தில நடக்கிற விஷயம் விளங்கினால் நல்லது தானே?

ஓ..JFK  தான் உலகத்தில் அறிவாளியா? அல்லது உங்கள் போன்ற வாலுக்கும் தும்புக்கும் வித்தியாசம் தெரியாத "அறிவாளி"களின் தலைமை "அறிவாளியா"? இலுமினாற்றி என்ற சொல்லின் உருவாக்கமே தெரியாமல் பயனற்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் அலையும்! அதை விளங்கினவன் "அறிவாளி" - விளங்காதவன் என்னைப் போல முட்டாள் என்று தான் நான் நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

4 minutes ago, Justin said:

ஓ..JFK  தான் உலகத்தில் அறிவாளியா? அல்லது உங்கள் போன்ற வாலுக்கும் தும்புக்கும் வித்தியாசம் தெரியாத "அறிவாளி"களின் தலைமை "அறிவாளியா"? இலுமினாற்றி என்ற சொல்லின் உருவாக்கமே தெரியாமல் பயனற்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் அலையும்! அதை விளங்கினவன் "அறிவாளி" - விளங்காதவன் என்னைப் போல முட்டாள் என்று தான் நான் நினைக்கிறேன்!

மீண்டும் உங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள முற்படும் வரிகள்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து அங்கு நடைபெறும் விடயங்கள் தெரிந்து அதெற்கெதிராக வெளிப்படையாக கதைத்து அதன் காரணமாக கொல்லப்பட்ட ஒருவர் JFK. அவர் secret society என்றால் என்ன, அதன் உருவாக்கம் என பலதும் தெரிந்து தான் கருத்து வைத்தார்.

உங்களுக்கு இவற்றில் நம்பிக்கையில்லாவிட்டால் அது உங்கள் தெரிவு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மட்டம் தட்டி கருத்து எழுத வேண்டியதில்லை.

எழுதினால் மீள திரும்பி வருவதையும் எதிர் பார்க்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Lara said:

மீண்டும் உங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள முற்படும் வரிகள்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து அங்கு நடைபெறும் விடயங்கள் தெரிந்து அதெற்கெதிராக வெளிப்படையாக கதைத்து அதன் காரணமாக கொல்லப்பட்ட ஒருவர் JFK. அவர் secret society என்றால் என்ன, அதன் உருவாக்கம் என பலதும் தெரிந்து தான் கருத்து வைத்தார்.

உங்களுக்கு இவற்றில் நம்பிக்கையில்லாவிட்டால் அது உங்கள் தெரிவு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மட்டம் தட்டி கருத்து எழுத வேண்டியதில்லை.

எழுதினால் மீள திரும்பி வருவதையும் எதிர் பார்க்கத்தான் வேண்டும்.

லாரா, நீங்கள் மேலே எழுதியிருப்பது எல்லாமே உங்கள் போன்ற ஆட்களின் பிரமையில் உதித்த கதையொன்றும் அதன் வழி வந்த முட்டாள் தனங்களும்!  இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது JFK இன் துரதிர்ஷ்டம்! அந்த முட்டாள் தனங்களை உங்களுக்கல்ல நான் சுட்டிக் காட்டுவது! இது உண்மையா கற்பனையா என்று அறியும் ஆவலுள்ளோருக்குச் சொல்ல எனக்கு நானே உழைத்து நேர்வழியில் பெற்ற அறிவும் தகுதியும் இருக்கிறது! இதை மட்டம் தட்டலாக நீங்கள் பார்க்க வேண்டியதில்லை! நானும் உங்கள் போல யுரீயுபிலும் இணையக் குப்பை மேட்டிலும் மேல்வாரியாகக் கிடைப்பதைக் கொண்டு கதையளக்கவில்லை என்பதை வெளிக்காட்ட வேண்டுமல்லவா? அது தான் நான் செய்ய முயல்வது! அவ்வாறு செய்யும் போது தரக் கட்டுப்பாடு கொண்ட தகவல்களைத் தரமுடியாத ஒருவர் காயமுற்றால் அதற்கு நான் பொறுப்பல்ல! நோக்கமில்லாமல் செய்யப் படும் இந்த மட்டந்தட்டலுக்கு நான் மன்னிப்பெதுவும் கேட்கப் போவதில்லை! திருப்பி என்னை நீங்கள் தாக்கலாம், ஆனால் அதற்காவது credible ஆன தகவல்களைப் பாவியுங்கள்! சும்மா என்னை போலி அறிவாளியென்பதெல்லாம் என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை! 

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

லாரா, நீங்கள் மேலே எழுதியிருப்பது எல்லாமே உங்கள் போன்ற ஆட்களின் பிரமையில் உதித்த கதையொன்றும் அதன் வழி வந்த முட்டாள் தனங்களும்!  இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது JFK இன் துரதிர்ஷ்டம்! அந்த முட்டாள் தனங்களை உங்களுக்கல்ல நான் சுட்டிக் காட்டுவது! இது உண்மையா கற்பனையா என்று அறியும் ஆவலுள்ளோருக்குச் சொல்ல எனக்கு நானே உழைத்து நேர்வழியில் பெற்ற அறிவும் தகுதியும் இருக்கிறது! இதை மட்டம் தட்டலாக நீங்கள் பார்க்க வேண்டியதில்லை! நானும் உங்கள் போல யுரீயுபிலும் இணையக் குப்பை மேட்டிலும் மேல்வாரியாகக் கிடைப்பதைக் கொண்டு கதையளக்கவில்லை என்பதை வெளிக்காட்ட வேண்டுமல்லவா? அது தான் நான் செய்ய முயல்வது! அவ்வாறு செய்யும் போது தரக் கட்டுப்பாடு கொண்ட தகவல்களைத் தரமுடியாத ஒருவர் காயமுற்றால் அதற்கு நான் பொறுப்பல்ல! நோக்கமில்லாமல் செய்யப் படும் இந்த மட்டந்தட்டலுக்கு நான் மன்னிப்பெதுவும் கேட்கப் போவதில்லை! திருப்பி என்னை நீங்கள் தாக்கலாம், ஆனால் அதற்காவது credible ஆன தகவல்களைப் பாவியுங்கள்! சும்மா என்னை போலி அறிவாளியென்பதெல்லாம் என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை! 

நான் ஏற்கனவே கூறியது போல் “உங்களுக்கு இதில் நம்பிக்கையில்லாவிட்டால் அது உங்கள் தெரிவு”. மற்றும் படி நான் எழுதியதை என் போன்ற ஆட்களின் பிரம்மையில் உதித்ததென்றும் அதன் வழி வந்த முட்டாள் தனமென்றும் நிறுவ முயற்சிப்பதும் JFK இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது போல் காட்ட முயல்வதும் உங்கள் அறியாமை.

இப்பொழுது கூட நீங்கள் உங்கள் சொந்த அறிவை கொண்டு கதைப்பதாகவும் நான் youtube, இணைய குப்பைகளை வைத்தும் கதைப்பதாக தான் உங்கள் எண்ணம். நான் பல வருடங்களாக பல துறைகளில் நடைபெறும் விடயங்களை அவதானித்தே வந்திருக்கிறேன். எனக்கென்றும் சுய அறிவு உள்ளது என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த திரியில் முதலிலிருந்து வைத்த கருத்துகளை பாருங்கள். நீங்கள் தான் மீண்டும் மீண்டும் நக்கல் கருத்துகளை வைத்தது. நானாவது ஒரு சில ஆதாரங்களை தந்துள்ளேன். நீங்கள் எங்கேயும் எழுந்தமானமாக மறுப்பு கூறுகிறீர்களே தவிர நம்பத்தகுந்த காரணங்களை முன் வைத்து மறுப்பு தெரிவிக்கவில்லை.

Céline Dion என்னத்துக்கு gender neutral clothes என்ற பெயரில் illuminati symbol உடனான ஆடைகளை (அதில் ஒரு ஆடைக்கு வேறு new order என்று பெயர்) விளம்பரப்படுத்தி குழந்தைகள், சிறுவர்களுக்கு விற்று வருகிறார் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதில் வைத்திருப்பீர்கள். 

Music industry, hollywood industry இலுள்ள பலர் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதிலை நீங்கள் தரக்கூடும்.

உங்களுடன் வாதாடும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Lara said:

நான் ஏற்கனவே கூறியது போல் “உங்களுக்கு இதில் நம்பிக்கையில்லாவிட்டால் அது உங்கள் தெரிவு”. மற்றும் படி நான் எழுதியதை என் போன்ற ஆட்களின் பிரம்மையில் உதித்ததென்றும் அதன் வழி வந்த முட்டாள் தனமென்றும் நிறுவ முயற்சிப்பதும் JFK இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது போல் காட்ட முயல்வதும் உங்கள் அறியாமை.

இப்பொழுது கூட நீங்கள் உங்கள் சொந்த அறிவை கொண்டு கதைப்பதாகவும் நான் youtube, இணைய குப்பைகளை வைத்தும் கதைப்பதாக தான் உங்கள் எண்ணம். நான் பல வருடங்களாக பல துறைகளில் நடைபெறும் விடயங்களை அவதானித்தே வந்திருக்கிறேன். எனக்கென்றும் சுய அறிவு உள்ளது என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த திரியில் முதலிலிருந்து வைத்த கருத்துகளை பாருங்கள். நீங்கள் தான் மீண்டும் மீண்டும் நக்கல் கருத்துகளை வைத்தது. நானாவது ஒரு சில ஆதாரங்களை தந்துள்ளேன். நீங்கள் எங்கேயும் எழுந்தமானமாக மறுப்பு கூறுகிறீர்களே தவிர நம்பத்தகுந்த காரணங்களை முன் வைத்து மறுப்பு தெரிவிக்கவில்லை.

Céline Dion என்னத்துக்கு genderless clothes என்ற பெயரில் illuminati symbol உடனான ஆடைகளை (அதில் ஒரு ஆடைக்கு வேறு new order என்று பெயர்) விளம்பரப்படுத்தி குழந்தைகள், சிறுவர்களுக்கு விற்று வருகிறார் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதில் வைத்திருப்பீர்கள். 

Music industry, hollywood industry இலுள்ள பலர் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதிலை நீங்கள் தரக்கூடும்.

உங்களுடன் வாதாடும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. நன்றி.

நான் மேலே எழுதியதையே நீங்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்! ஒரு அடிப்படையும் இல்லாத உங்கள் பிரமையை பொய் என்று நேரம் மெனக்கெட்டு நிரூபிக்க நான் லூசு அல்ல! அதற்கென்று பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் தான் நீங்கள் அதைத் தேட வேண்டும்!  பார்க்கிற நிகழ்கிற எல்லாத்துக்கும் பதிலும் அர்த்தமும் தேடும் அளவுக்கு என் போன்ற ஆட்களுக்கு நேரமில்லை! உங்களுக்கு நிறைய இருக்கிறது! இணையக்குப்பையில் பொறுக்கிய லூசுத் தனமான ஐடியாக்களை வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்! தண்ணீர் கோப்பி தேனீர் எல்லாம் கவனமாகப் பார்த்துக் குடியுங்கள்! மூளைக்குள் புகுந்து உங்கள் மனதோடு விளையாடும் பதார்த்தங்களை இலுமினாட்டிகள் கலந்திருப்பார்கள்!

எனக்கு பயனுள்ள வேலைகள் இருக்கின்றன! நன்றி உரையாடலுக்கு!

Link to comment
Share on other sites

4 hours ago, Justin said:

நான் மேலே எழுதியதையே நீங்கள் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்! ஒரு அடிப்படையும் இல்லாத உங்கள் பிரமையை பொய் என்று நேரம் மெனக்கெட்டு நிரூபிக்க நான் லூசு அல்ல! அதற்கென்று பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் தான் நீங்கள் அதைத் தேட வேண்டும்!  பார்க்கிற நிகழ்கிற எல்லாத்துக்கும் பதிலும் அர்த்தமும் தேடும் அளவுக்கு என் போன்ற ஆட்களுக்கு நேரமில்லை! உங்களுக்கு நிறைய இருக்கிறது! இணையக்குப்பையில் பொறுக்கிய லூசுத் தனமான ஐடியாக்களை வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்! தண்ணீர் கோப்பி தேனீர் எல்லாம் கவனமாகப் பார்த்துக் குடியுங்கள்! மூளைக்குள் புகுந்து உங்கள் மனதோடு விளையாடும் பதார்த்தங்களை இலுமினாட்டிகள் கலந்திருப்பார்கள்!

எனக்கு பயனுள்ள வேலைகள் இருக்கின்றன! நன்றி உரையாடலுக்கு!

எதையெடுத்தாலும் அடிப்படையில்லாத பிரம்மை என நீங்கள் நினைப்பது தான் உங்களால் சாதாரணமாக மறுப்பு கருத்து வைக்க முடியாமலிருப்பதற்கான காரணம்.

இணையக்குப்பைகளிலிருந்து நான் இதை பொறுக்கவில்லை.

Céline Dion ஐ சமூக வலைத்தளங்களில் follow பண்ணிய போது அவர் விளம்பர பதிவுகள் தற்செயலாக முன்னர் கண்ணில் பட்டன.

Elite க்கு எதிராக மைக்கல் ஜக்சன் கருத்து தெரிவிக்க வெளிக்கிட்ட பின், பின்னணியில் நடக்கும் பல விடயங்களை மக்கள் முன் கூற வெளிக்கிட்ட பின் அவரை அழிப்பதில் முன்னைவிட மும்முரமாக செயற்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டும் விட்டார்.

Killuminati என்ற பாடலை பாடிய பின் Tupac சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படி பல.....

எனக்கும் பயனுள்ள வேலைகள் இருக்கின்றன. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன். சில விடயங்களை, மிகச் சரியான விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். சவுதிக்கும் ஐஸிஸிற்குமான உறவு தெரியும். அமெரிக்காவின் பங்குபற்றியே திரி செல்வதால் அதை எழுத நினைக்கவில்லை.

மற்றும்படி, காலக் கிரமப்படி நான் எழுதவில்லையென்பதும் உண்மைதான். 

நன்றி மருது

இதில் நான் சொல்வது சரி நீங்கள் சொலவ்து சரி என்று சொல்லி வாக்குவதபட்டு 
காணப்போவது ஒன்றும் இல்லை.
எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததை அறிந்ததை வைத்து ஓரளவு என்ன நடந்தது 
என்ற இடத்தை சென்றடையலாம் அதுக்கு உங்களைப்போல பக்குவம் வேண்டும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் எழுத தொடங்கி இருந்தால் 
நான் அப்படியே போயிருப்பேன் ....... எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் என்று நீங்கள் தொடங்கிய 
விதம் இதை விரிவாக்குகிறது. 

அமெரிக்க இராணுவம் எந்த இலாபமும் இன்றி ஒரு நாட்டை கைப்பற்றி பில்லியன் டாலர் 
செலவில் வைத்திருக்காது.  இப்போதைய (2011) அமெரிக்க இராணுவ தொழிலநுட்பத்தின் ஊடாக 
தாலிபான்களை ஒசாமா பின்லாடனை இங்கிருந்தே கொன்றிருக்க முடியும். அமெரிக்க இராணுவத்தின் இலக்கு ஆப்கானிஸ்தானில் கால் ஊன்றி நிற்பதுதான். முதலாவது திட்டம் 90களிலேயே இருந்தது அதனால்தான் கிளிண்டன் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அது ஒரு அமெரிக்க எண்ணெய் 
கொம்பனியின் பைப் லைன் ப்ராஜெக்ட் .... அது பின்பு கைவிடப்பட்டு விட்டது. 
இப்போதும் ஆப்கானிஸ்தான் ஓபியம் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறது இது வருடம் 4-5 பில்லியன் டாலர் வருமானம் வருவது 60 % ஓபியம் சென்றடைவது  ரஷிய வாலிபர்களை... (இதை  பற்றி எழுத போனால் இது  கான்ஸ்பிரசி தியறியாகிவிடும்) 

உங்களால் முடிந்தால் இதை ஒருக்கால் எனக்கு தெளிவு படுத்தி எழுத முடியுமா? 

அமெரிக்க கடன் 21.21 ட்ரில்லியன் டாலர்கள் 
இதில் 8 ரில்லியன் டாலர் கடன் வாங்கியது  அமெரிக்க அரசிடமும் 
அமெரிக்க ரெசெர்வ் வங்கியிடமும்.
யார் கடன் வாங்கியது?
யாரிடம் வாங்கியது? 

கான்ஸ்பியரி பற்றி பிறகு பேசுவோம். 

MW-GO672_nation_20180821130954_MG.jpg?uuid=05b585b6-a565-11e8-b6ab-ac162d7bc1f7

ஒன்றை கவனத்தில் எடுங்கள் அனைத்து அமெரிக்க டாலர்களும் 
ரெசெர்வ் வங்கிக்கே சொந்தம். பெடரல் ரெசெர்வ் வாங்கித்தான் டாலரை அச்சடித்து 
விநியோகிக்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இதில் நான் சொல்வது சரி நீங்கள் சொலவ்து சரி என்று சொல்லி வாக்குவதபட்டு 
காணப்போவது ஒன்றும் இல்லை.
எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததை அறிந்ததை வைத்து ஓரளவு என்ன நடந்தது 
என்ற இடத்தை சென்றடையலாம் அதுக்கு உங்களைப்போல பக்குவம் வேண்டும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் எழுத தொடங்கி இருந்தால் 
நான் அப்படியே போயிருப்பேன் ....... எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் என்று நீங்கள் தொடங்கிய 
விதம் இதை விரிவாக்குகிறது. 

அமெரிக்க இராணுவம் எந்த இலாபமும் இன்றி ஒரு நாட்டை கைப்பற்றி பில்லியன் டாலர் 
செலவில் வைத்திருக்காது.  இப்போதைய (2011) அமெரிக்க இராணுவ தொழிலநுட்பத்தின் ஊடாக 
தாலிபான்களை ஒசாமா பின்லாடனை இங்கிருந்தே கொன்றிருக்க முடியும். அமெரிக்க இராணுவத்தின் இலக்கு ஆப்கானிஸ்தானில் கால் ஊன்றி நிற்பதுதான். முதலாவது திட்டம் 90களிலேயே இருந்தது அதனால்தான் கிளிண்டன் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அது ஒரு அமெரிக்க எண்ணெய் 
கொம்பனியின் பைப் லைன் ப்ராஜெக்ட் .... அது பின்பு கைவிடப்பட்டு விட்டது. 
இப்போதும் ஆப்கானிஸ்தான் ஓபியம் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறது இது வருடம் 4-5 பில்லியன் டாலர் வருமானம் வருவது 60 % ஓபியம் சென்றடைவது  ரஷிய வாலிபர்களை... (இதை  பற்றி எழுத போனால் இது  கான்ஸ்பிரசி தியறியாகிவிடும்) 

உங்களால் முடிந்தால் இதை ஒருக்கால் எனக்கு தெளிவு படுத்தி எழுத முடியுமா? 

அமெரிக்க கடன் 21.21 ட்ரில்லியன் டாலர்கள் 
இதில் 8 ரில்லியன் டாலர் கடன் வாங்கியது  அமெரிக்க அரசிடமும் 
அமெரிக்க ரெசெர்வ் வங்கியிடமும்.
யார் கடன் வாங்கியது?
யாரிடம் வாங்கியது? 

கான்ஸ்பியரி பற்றி பிறகு பேசுவோம். 

MW-GO672_nation_20180821130954_MG.jpg?uuid=05b585b6-a565-11e8-b6ab-ac162d7bc1f7

ஒன்றை கவனத்தில் எடுங்கள் அனைத்து அமெரிக்க டாலர்களும் 
ரெசெர்வ் வங்கிக்கே சொந்தம். பெடரல் ரெசெர்வ் வாங்கித்தான் டாலரை அச்சடித்து 
விநியோகிக்கிறது. 

 

நீங்கள் எதற்காக இந்தக் கேள்வியை இங்கே கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக கூகிளில் நான் தேடியபோது கிடைத்தவை.....

அமெரிக்க மத்திய அரசின் செலவுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடன் தொகை 22 றில்லியன் டாலர்கள். இதில் 70% உள்நாட்டு முதலீட்டாலர்களாலும் மீதி 30 % வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் திறைசேரி ஆவனங்கள் வடிவில் வாங்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் இரு வகைப்படுகிறார்கள். முதலாவது பொதுமக்கள்(public) மற்றையது உள்நாட்டு அரசு (domestic government).

பொதுமக்களால் வாங்கப்பட்டிருக்கும் கடன் முறிகள் ஓய்வூதிய நிதிகள் மற்றும் தனியார் முதலீடுகளால் ஆனவை.

உள்நாட்டு அரசுகளால் வாங்கப்பட்ட கடன் முறிகள் social security fund, retirement funds, annual tax , federal pension funds மற்றும் காப்புறுதியினால் கிடைத்த லாபம் ஆகியவற்றைக்கொண்டு வாங்கப்படுகிறது.

நான் விளங்கிக் கொண்ட வரையில் மத்திய அரசு செய்யும் செலவுகளுக்கு திறைசேரி பணம் கொடுக்கிறது. திறைசேரி கொடுக்கும் கடன் பத்திரங்களை அது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் தனது பணத்தை மீட்டுவிடுகிறது. சில சமயங்களில் கடன் தொகையின்   ஒரு பகுதியை தன்னுடனும் வைத்துக்கொள்கிறது.

கொசுறுச் செய்தியாக.... வெளிநாட்டு முதலீட்டாளர்களில் சீனா முதலாமிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

ரஞ்சித், நீங்கள் குழம்பி விடஎதுவும் இல்லை! மருதர் வந்து உறுதிப் படுத்திய தகவல்கள் மாதிரி தன் சந்தேகங்களைத் தெளித்து விட்டுப் போயிருக்கிறார். எல்லாம் "எப்படி, எப்படி?" என்று முடியும் கேள்விகள்! பல கேள்விகளின் விடைகள் மிக இலகுவாகக் கிடைக்கும் ஆவணங்களிலேயே இருப்பவை! (உதாரணம்: ஐசிஸ் என்பது Islamic state of Iraq and Levant என ஆரம்பிக்கப் பட்டமை, அதற்கு இயல்பாகவே வஹாபிசத்தை அங்கீகரிக்கும் நாடான சவூதியில் இருந்து பலர் சென்றமை!). வேறு சில ஆதாரமேயில்லாத பொய்கள்! (உதாரணம்: கிளின்ரன் டலிபானை அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசி அது யு ரியூபில் "மட்டும்" வந்த வீடியோ! கிளின்ரன் தலிபானின் ஒரு பிரிவினரோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பகிரங்கமாகவே சொன்னது தான் மற்றைய செய்தி ஊடகங்களில் வந்தது!)

மொத்தத்தில் கண்முன்னே இருக்கும் எதையும் மருதர் உட்பட பல சதிக் கோட்பாட்டு ஆர்வலர்கள் பார்ப்பதில்லை! அவர்களுக்கும் சில ரகசிய யூ டியூப் வீடியோக் காரர்களுக்கும் மட்டுமே தெரிந்த "உடான்ஸ்" கதைகளை அதிகம் நம்புவர்! இந்த யூரியூபும் முகநூலும் பார்த்து இவர்கள் படிக்கும் வரலாறு இருக்கிறதே, அது பாக்கியராஜ் படம் பார்த்து பாலியல் கல்வி கற்றுக் கொள்வதற்கு ஒப்பானது! கிழுகிழுப்பாக இருக்கும்! ஆனால், யாவும் கற்பனையாக இருக்கும்!

மருது குறிப்பிட்ட விடயங்கள் நடந்தவைதானே. அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்த்தானிலிருந்து வெளியேறிய ஒசாமா மீண்டும் எப்போது எதற்காக அமெரிக்காவுக்கு எதிரியாக மாறினார் என்பதை நான் விளக்கவில்லை, மருது எழுதியிருக்கிறார். 

நான் சாராம்சமாக எழுதிய விடயங்கள் பற்றி மேலதிகத் தகவகளைத் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இங்கே எழுதும் ஒரு சில விடயம் அறிந்தவர்களில் உங்களைப்போல்  மருதரையும் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Lara said:

Elite க்கு எதிராக மைக்கல் ஜக்சன் கருத்து தெரிவிக்க வெளிக்கிட்ட பின், பின்னணியில் நடக்கும் பல விடயங்களை மக்கள் முன் கூற வெளிக்கிட்ட பின் அவரை அழிப்பதில் முன்னைவிட மும்முரமாக செயற்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டும் விட்டார்.

Killuminati என்ற பாடலை பாடிய பின் Tupac சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படி பல.....

பாடகர் பொப் மாலி மீதும் அமெரிக்க அரசிற்கு பயங்கர கோபம் இருந்ததாமே?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 6:29 AM, ரஞ்சித் said:

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவதென்பது இதைத்தான். 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அமெரிக்கா உருவாக்கி வளர்க்கவில்லை என்று நான் எழுதியதை நான் அமெரிக்காவிற்கு வெள்ளையடிப்பதாகத் திரிக்கிறீர்கள் பாருங்கள், அதுதான் உங்களின் வல்லமை.

உங்களின் என்மீதான இப்புதிய காழ்ப்புணர்ச்சியின் காரணம் என்னவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் ஈழத்துச் சைவர்களின் மதச் சகிப்புத்தன்மை தொடர்பான உங்களின் கருத்திற்கு நான் எழுதிய பதிலே உங்களைக் கடுப்படைய வைத்திருக்கிறது என்பது புரிகிறது.

நான் சொல்லவருவது புரியவில்லை என்றால் இன்னொருமுறை படித்துவிட்டு, எங்கே எப்போது நான் அமெரிக்கர்களை நல்லவர்கள் என்று சொல்கிறேன் என்று காட்டுங்கள், தொடர்ந்து பேசலாம்

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவது நீங்கள்தான்.வேறொரு திரியின் கருத்தாடலை இங்கே புகுத்தி அதனை காழ்ப்புணர்ச்சி என்ற வடிவில் கருதெழுத்தெழுதுவதை என்னவென்று சொல்வது?

புரியாத விடயத்திற்கும் தெரியாத விடயத்திற்கும் நான் கருத்தெழுதுவதில்லை. நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை என்று நினைத்தால் அது உங்கள் பிரச்சனை.

இன்னொரு முறை திருப்பி படிக்க எனக்கு நேரமுமில்லை. வேலைவெட்டி இல்லாமல் இருப்பவனுமில்லை.

இனிவரும் காலங்களில் திருப்பி படியுங்கள் எனும் சொல்லை எங்கும் பாவிக்காதீர்கள். அது உங்கள் இயலாண்மையைத்தான் தொனிக்க வைக்கும்.நல்ல எழுத்து வன்மையும் உலகறிவும் உள்ள நீங்கள் இப்படி எழுதுவது உங்களுக்கு அழகல்ல.


சரி எனக்கும்  வெங்காயம் வெட்டுவது போன்ற பயனுள்ள வேலைகள் இருக்கின்றன உரையாடலுக்கு நன்றி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். திருப்பிப் படியுங்கள் எனும் சொல்லைத் தவிர்க்கப் பார்க்கிறேன். அது நாகரீகமில்லை என்பது உண்மைதான்.

நன்றி குசா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 3:51 AM, Lara said:

இவரது கொலையையும் conspiracy theory ஆக காட்ட நினைப்பதை விடுத்து அவர் என்ன கதைத்தார் என்பதை தேடியறிய முயற்சி செய்யலாம்.

இது அவர் secret Society என குறிப்பிட்டு கதைத்த ஒரு காணொளி.

 

Secret societies, Bilderburg group உற்பட சில பலம்பொறுந்திய இரகசிய குழுக்கள்பற்றிப் படித்திருக்கிறேன். இளவரசர் சார்ள்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உற்பட பல பிரபலங்கள் இதில் அங்கத்தவர்கள் என்றும் படித்தது ஞாபகம். ஆழமாகத் தேடிப் பார்த்ததில்லை.

உலக ஒழுங்கை எமது சக்திக்கப்பாற்பட்ட ஒரு குழு இயக்குகிறதென்றால், நாம் என்னதான் செய்யமுடியும்? இக்குழுக்கள் பற்றி சுமார் 60-70 வருடங்களாக கூறப்படுகிறது, ஆனால் யாருமே இவர்களைக் கேள்விகேட்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லையே.

உலக சனத்தொகையை 5 பில்லியன்களுக்கு மட்டுப்படுத்தவேண்டும் என்கிற இக்குழுவின் தீர்மானமும் , இதற்காகவே உலகில் அமெரிக்கா ஐரோப்பா உள்ளடங்காத பகுதிகளில் சிவில் யுத்தங்களும், கொள்ளை நோய்களும் இவர்களால் உருவாக்கப்படுகின்றன என்றும் இக்குழுக்களின் இருப்பை நம்புபவர்கள் கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை, உலகிற்கு வந்துவிட்டோம். இருக்கும்வரை இருக்கலாம். இறைவனோ அல்லது இலுமினாட்டியோ நினைக்கும் நேரத்தில் இறக்கலாம். எப்படியோ இறப்பது மட்டும் உண்மைதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் எதற்காக இந்தக் கேள்வியை இங்கே கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக கூகிளில் நான் தேடியபோது கிடைத்தவை.....

அமெரிக்க மத்திய அரசின் செலவுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடன் தொகை 22 றில்லியன் டாலர்கள். இதில் 70% உள்நாட்டு முதலீட்டாலர்களாலும் மீதி 30 % வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் திறைசேரி ஆவனங்கள் வடிவில் வாங்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் இரு வகைப்படுகிறார்கள். முதலாவது பொதுமக்கள்(public) மற்றையது உள்நாட்டு அரசு (domestic government).

பொதுமக்களால் வாங்கப்பட்டிருக்கும் கடன் முறிகள் ஓய்வூதிய நிதிகள் மற்றும் தனியார் முதலீடுகளால் ஆனவை.

உள்நாட்டு அரசுகளால் வாங்கப்பட்ட கடன் முறிகள் social security fund, retirement funds, annual tax , federal pension funds மற்றும் காப்புறுதியினால் கிடைத்த லாபம் ஆகியவற்றைக்கொண்டு வாங்கப்படுகிறது.

நான் விளங்கிக் கொண்ட வரையில் மத்திய அரசு செய்யும் செலவுகளுக்கு திறைசேரி பணம் கொடுக்கிறது. திறைசேரி கொடுக்கும் கடன் பத்திரங்களை அது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் தனது பணத்தை மீட்டுவிடுகிறது. சில சமயங்களில் கடன் தொகையின்   ஒரு பகுதியை தன்னுடனும் வைத்துக்கொள்கிறது.

கொசுறுச் செய்தியாக.... வெளிநாட்டு முதலீட்டாளர்களில் சீனா முதலாமிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

 

 

15 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் எதற்காக இந்தக் கேள்வியை இங்கே கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக கூகிளில் நான் தேடியபோது கிடைத்தவை.....

அமெரிக்க மத்திய அரசின் செலவுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கடன் தொகை 22 றில்லியன் டாலர்கள். இதில் 70% உள்நாட்டு முதலீட்டாலர்களாலும் மீதி 30 % வெளிநாட்டு அரசாங்கங்களினாலும் திறைசேரி ஆவனங்கள் வடிவில் வாங்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் இரு வகைப்படுகிறார்கள். முதலாவது பொதுமக்கள்(public) மற்றையது உள்நாட்டு அரசு (domestic government).

பொதுமக்களால் வாங்கப்பட்டிருக்கும் கடன் முறிகள் ஓய்வூதிய நிதிகள் மற்றும் தனியார் முதலீடுகளால் ஆனவை.

உள்நாட்டு அரசுகளால் வாங்கப்பட்ட கடன் முறிகள் social security fund, retirement funds, annual tax , federal pension funds மற்றும் காப்புறுதியினால் கிடைத்த லாபம் ஆகியவற்றைக்கொண்டு வாங்கப்படுகிறது.

நான் விளங்கிக் கொண்ட வரையில் மத்திய அரசு செய்யும் செலவுகளுக்கு திறைசேரி பணம் கொடுக்கிறது. திறைசேரி கொடுக்கும் கடன் பத்திரங்களை அது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் தனது பணத்தை மீட்டுவிடுகிறது. சில சமயங்களில் கடன் தொகையின்   ஒரு பகுதியை தன்னுடனும் வைத்துக்கொள்கிறது.

கொசுறுச் செய்தியாக.... வெளிநாட்டு முதலீட்டாளர்களில் சீனா முதலாமிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

 

இலுமினாட்டி 

கொன்ஸ்பிரஸி தியரி 

என்பவற்றை எடுத்த எடுப்பில் மறுக்க முடியாமலும்  விடை தெரியாத அல்லது அறிய முடியாத 
விடயங்களாகவும் நிறைய உண்டு. சில பொய்யான போலியான விடயங்களை சிலர் பேசிக்கொண்டு இருந்தாலும்  அவர்களையும் யாரோ ஒருவர் ஆட்டி கொண்டு இருக்கிறார்கள்.

மதங்களை பார்த்தால் உலகில் 60-70 வீதமான மக்கள் ஒரு மதத்தில் ஊறிப்போய் இருக்கிறார்கள் 
அடுத்தவனின் மதத்தை ஆணித்தரமாக மறுக்க தெரிந்தவர்கள் எந்த ஆதாரமும் அற்ற நிலையில் 
தமது மதத்துக்காக பிறரை கொலை செய்வதை கூட எதோ மத வெறி என்று ஏற்றுக்கொள்ளலாம் . தாமும் 
தமது அற்பமான வாழ்வையம் உயிரையும் துறக்கிறார்கள். 
இந்து மதத்தை எமக்கு பரிட்ச்யம் என்பதால் உதாரணத்துக்கு எடுத்து பார்த்தால். கிருஷ்ணரை இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்ட்டி படைத்தவர் உலகை ஆள்பவர் என்று சொல்கிறோம். இவை தவிர தானே 10 முறை 
உலகிற்கு விஜயம் கூட செய்து இருக்கிறார் ..... 10 முறையும் இந்தியாவில்தான் தோன்றி இருக்கிறார் இவருக்கு 
தான் படைத்த ஆபிரிக்க ஐரோப்பிய மக்கள் பற்றி கவலை இல்லையா? 

நான் அந்த கேள்வியை கேட்டதன் காரணம் இலுமினாட்டி பற்றியது 
எல்லா அரச அமைப்பும் எழுத்து வடிவில் அந்த நாட்டு மக்கள் பார்க்கும் படி உண்டு.
அமெரிக்க அரசமைப்பு ஒருவருக்கும் புரியாது எழுத்திலும் இல்லை யாருக்கும் முழு விபரமும் தெரியாது.

அமெரிக்க பெடரல் ரெசெர்வ் வங்கி அமெரிக்கர்களுக்கு சொந்தமில்லை 
அமெரிக்கர்களுக்கு சொந்தமில்லாத ஒரு குழுமம்தான்  பெடரல் ரெசெர்வ் எனும் பெயரில் 
அமெரிக்க டாலர்களையும் அச்சிட்டு வெளியிடுகிறது.
இந்த குழுமம் யாருடையது? யாருக்கு சொந்தம்? 
இது அமெரிக்காவின் என்றால் .... நான் எப்படி எனக்கு கடனாளி ஆவது

இதை வைத்து இலுமினாட்டி இருக்கிறது எனும் முடிவுக்கு வர முடியாது 
இந்த பெடரல் ரெசெர்வ் வங்கி  மற்றும் ஐ எம் ப்   உலக வங்கி (Federal Reserve Bank, IMF, World Bank, Central Bank) 
இவை யாருக்கு சொந்தம் ... இவர்களுக்கு எவ்வாறு இவளவு தொகை பணம் வந்தது? 
எனும் கேள்வியும்  உலக வியாபாரம் டாலரில் மட்டுமே நடக்கவேண்டும் என்றும் 
அதுக்கு எதிராக இருப்போர் மீது போரும் ஏன் கட்டவிழ்த்து விடபடுகிறது? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாணய நிதியம்கூட ஒரு ரகசிய குழுவினால்த்தான் கட்டுப்படுத்தப்படுகிறதென்றும், உலக நாடுகளின் பொருளாதாரங்கள், நாணயப்பெறுமதி முதல் வட்டிவீதம்வரைக்கும் இந்தக் குழுவே தீர்மானிக்கின்றதென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

இதன் உண்மைத்தன்மை பற்றி அறிந்துகொள்வது கடிணமானது மட்டுமல்லாமல், அறிந்தாலும் என்னால் பெரிதாக எதையும் செய்யமுடியாது. இக்குழு சர்வதேச வல்லரசுகளைக் காட்டிலும் பலம் பொறுந்தியதென்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Maruthankerny said:

நான் எப்படி எனக்கு கடனாளி ஆவது

உங்களைக்காட்டி, உங்களுக்காக, உங்களது பெயரில் மருத்துவ வசதி, பெருந்தெருக்கள், பாடசாலைகள், பாதுகாப்பு என்று உங்களது அரசாங்கங்கள் செலவு செய்திருக்கிறார்களே? அந்தப் பணத்தை யாரிடமிருந்து அவர்கள் வசூலிப்பது? உங்களிடமிருந்துதானே? ஆகவேதான் நீங்களே உங்களுக்கு கடனாளி. 

மொத்த்ச் செலவை உங்களது நாட்டின் சனத்தொகையால் வகுத்து ஒவ்வொருவரும் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லுகிறார்கள்.

Link to comment
Share on other sites

On 5/9/2019 at 4:55 PM, குமாரசாமி said:

பாடகர் பொப் மாலி மீதும் அமெரிக்க அரசிற்கு பயங்கர கோபம் இருந்ததாமே?????

 

உண்மை தான். இவரை கொலை செய்தது கூட CIA தான்.

நான் கேள்விப்பட்டதிலிருந்து,

CIA, FBI போன்றன இவரை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பின. ஆனால் இவர் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை. 

சில CIA அலுவலர்கள் இவரை தம்முடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்டும் இவர் மறுத்து விட்டார். Rat race என்ற பாடலில்   “rasta don’t work for no CIA” என்றும் பாடியிருந்தார். 

CIA அந்நேரம் Jamaica இல் அரசியல் வன்முறைகளை தூண்டிக்கொண்டிருந்தது. மறுபக்கம் துப்பாக்கி விற்பனை, போதைப்பொருள் விற்பனையை முன்னெடுத்திருந்தது.

இவரது பாடல்கள் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் அமைதியை, ஒற்றுமையை வலியுறுத்துவதும், அமெரிக்கா, அமெரிக்க உளவுத்துறைக்கு எதிரான வகையில் அமைந்ததும், அடக்குமுறைக்கு எதிராக, கறுப்பின விடுதலை பற்றியதாக, “world system” க்கு எதிராக என பலவாறு இருந்தமையும், இவருக்கு மக்கள் ஆதரவு, அரசியல் பலம் இருந்தமையும் CIA விரும்பாத விடயங்கள்.

PNP (Peoples National Party) இன் Michael Manley க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் JLP (Jamaican Labour Party) இன் Edward Seaga ஐ ஆட்சியிலமற்றும் முயற்சியிலும் CIA செயற்பட்டது. Bob Marley வெளிப்படையாக எவருக்கும் ஆதரவு தெரிவிக்காத போதும் இவரை Michael Manley இன் ஆதரவாளராக தான் CIA உட்பட பலர் பார்த்தார்கள்.

அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறையை அடுத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையிலும் வன்முறையிலிருந்து ஆறுதல்படுத்தும் வகையிலும் 5/12/1976 அன்று “Smile Jamaica” concert நடத்தவிருந்த நிலையில் இரு நாட்கள் முன் (3/12/1976) அதற்கான rehearsel இல் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது CIA இன் பின்னணியுடன் JLP ஏவி விட்ட சிலர் வந்து இவரை கொல்லும் முயற்சியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இவர், இவர் மனைவி, மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர். 

இதில் இவர் உயிர் தப்பி விட்டதால் CIA director William Colby இன் மகன் Carl Colby ஐ அனுப்பி, அவர் தன்னை ஒரு camera man ஆக அறிமுகப்படுத்தி அவர் மூலம் ஒரு சோடி boots ஐ இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்கள். அதை போட்டுப்பார்க்க முயற்சித்த போது அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கதிரியக்க செப்புக்கம்பி இவர் விரலில் குற்றி அது cancer உருவாக காரணமானது. (செயற்கையாக cancer ஐ புகுத்தினார்கள்)

(இவர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாலும் காயத்துடன் ஒற்றுமையை வலியுறுத்தும் concert இல் 5 ஆம் திகதி கலந்து கொண்டார், பின் Bahamas சென்று தங்கினார், பின் London சென்றார்)

July 1977 இல் கால்பந்தாட்ட விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்துடன் காலை பரிசோதித்த போது தான் அவ்விரலில் cancer இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் விரலை துண்டிக்குமாறு கூறியுள்ளார்கள். இவர் தனது rastafarian நம்பிக்கை காரணமாகவும், துண்டித்தால் Performance செய்வதில் தடங்கல் ஏற்படும் என்றும் நினைத்து மறுத்து விட்டதாகவும், அதற்கு பதிலாக  நகம் மற்றும் நகப்படுக்கையை அகற்றி தொடையிலிருந்து தசையை வெட்டியெடுத்து அப்பகுதியை மூடியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அது cancer உடலில் பரவுவதை தடுக்க முடியவில்லை. 

மீண்டும் Jamaica இல் வன்முறை தூண்டிவிடப்பட்ட நேரம் மீண்டும் ஒற்றுமையை வலியுறுத்தி 1978 இல் “one love peace” concert ஐ நடத்த லண்டனிலிருந்து திரும்பி வந்து நடத்தியிருந்தார்.

Cancer மத்தியிலும் இவர் பாடல் வெளியீடு, தனது tour நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவர் ஒருநாள் Central Park இல் jogging செய்து கொண்டிருந்த போது சுய நினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். பின் ஏனைய நடைபெறவிருந்த concerts ரத்து செய்யப்பட்டது.

இவரை Dr. Josef Issels என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதற்காக ஜேர்மனிக்கு சென்று அவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். (Dr. Josef Issels என்பவர் ex SS officer என்றும் CIA உடன் இணைந்து Bob Marley க்கு விஷமூட்டியவர் என்றும் தகவல்). 8 மாதங்கள் கடந்த நிலையிலும் சிகிச்சை வெற்றியளிக்கவில்லை. எனவே மீண்டும் Jamaica இற்கு செல்ல முற்பட்டு விமானத்தில் ஏறியுள்ளார். Flight இல் அவரது நிலை மோசமடைந்ததாகவும் மியாமியில் தரையிறங்கி உடனே மருத்துவமனைக்கு (அந்நேரம் Cedars of the Lebanon Hospital என அழைக்கப்பட்டது) கொண்டு செல்லப்பட்டு பின் அங்கு 11/05/1981 அன்று இறந்தார்.

பி.கு: விமானத்தினுள்ளும் மருத்துவமனையிலும் என்ன நடைபெற்றது என்ற விரிவான தகவல் என்னிடம் இல்லை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.