Jump to content

ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது.

அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம்பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் அடித்தாடியது.

சிறப்பாக விளையாடிய இருவரும் முதலில் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதனால், அந்த அணி விக்கெட் இழப்பின்றி ஓட்ட எண்ணிக்கை 100 ஐயும், 200 ஐயும், 250 ஐயும் கடந்தது. இதையடுத்து, இருவரும் அடுத்தடுத்து சதமும் அடித்தனர். 

D5zvnbzWsAMfSTP.jpg

D5zvnGAXsAcWRSZ.jpg

இதனால், முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 300 ஓட்டங்களும் பெறப்பட்டது. இருவரும் மேலும் அடுத்தடுத்து 150 ஓட்டங்களையும் கடந்தனர். இதன்மூலம், இந்த ஜோடி 48 ஆவது ஓவர் வரை முதல் விக்கெட்டை இழக்கவில்லை. 

எனினும் 48 ஆவது ஓவரை வீசிய மெக்கார்தி, ஒரே ஓவரில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ஓட்டங்களை குவித்தது.

கேம்பெல் மொத்தமாக 137 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 179 ஓட்டத்தையும். ஷெய் ஹோப் மொத்தமாக 152 பந்துகளை எதிர்கொண்டு  22 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 170 ஓட்டங்களை குவித்தார்.

இவர்களது இந்த ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை குவித்தது.

1183311_900x506.jpg

382 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 34.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 196 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இதற்கு முன்னர் சிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹக், பாஹர் சமன் இருவரும் இணைந்து முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 304 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

D5zrzaxX4AoBcyt.jpg

இதுவே இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டியில் பெறப்பட்ட முதல் விக்கெட்டுக்கான அதிகூடிய ஓட்டமாக பதியப்பட்டிருந்தது. இந் நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பூணம் ரவுத் மற்றும் தீப்தி சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்காக 320 ஓட்டங்களை குவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/article/55370

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.