Jump to content

நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் !

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்னுக்கும் அவரது  நீண்ட நாள் காதலரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கிளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைப்பவமொன்றில் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி  நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு  பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தைக்கு நெவி தி அரோஹா எனப்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2 ஆவது பிரதமர் என்ற பெருமையை பெற்றார்  ஜசிந்தா. இதற்கு  முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.

நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலில்,  தாக்குதல் நடந்த சமயத்தில்  இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ஜசிந்தாவின் நடவடிக்கைகள்  நாடு கடந்து அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55372

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா.. குழந்தை பிறந்தாப் பிறகா.. நிச்சயதார்த்தம். கொடுமைடா சாமி. 😂

அதுசரி...

நியூ பிரதமர் இந்த பாட்டை அடிக்கடி பார்த்திருப்பா போல. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nedukkalapoovan said:

 

என்னப்பா.. குழந்தை பிறந்தாப் பிறகா.. நிச்சயதார்த்தம். கொடுமைடா சாமி. 😂

 

 

இலண்டன் வந்தும் தமிழ் தலபான்கள் போல சிந்தனை இருக்கக்கூடாது நெடுக்ஸ்.

உலகம் மாறிவிட்டது. பேசிப் பழகி, குடும்பம் நடத்தி, பிள்ளை பெத்துப் பார்த்தால்தானே நீண்டகாலம் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கலாம். 😁

சட்டப்படி கல்யாணம் கட்டினால்தான் தொடவிடுவேன் என்று சொல்லிக்கொண்டு கல்யாணம் கட்டின பலரின் திருமண ஆயுள் கோர்டில்போய் விரைவில் முடிவதைவிட இது பரவாயில்லை!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இலண்டன் வந்தும் தமிழ் தலபான்கள் போல சிந்தனை இருக்கக்கூடாது நெடுக்ஸ்.

உலகம் மாறிவிட்டது. பேசிப் பழகி, குடும்பம் நடத்தி, பிள்ளை பெத்துப் பார்த்தால்தானே நீண்டகாலம் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்கலாம். 😁

சட்டப்படி கல்யாணம் கட்டினால்தான் தொடவிடுவேன் என்று சொல்லிக்கொண்டு கல்யாணம் கட்டின பலரின் திருமண ஆயுள் கோர்டில்போய் விரைவில் முடிவதைவிட இது பரவாயில்லை!😎

உலகம் மாறிட்டுது.. என்று சொல்லுறேள்.. இதை தானே கற்காலத்தில செய்தான் மனிதன். சடங்கும் இல்ல.. எழுத்தும் இல்ல.. கண்டதும் புணர்ந்து பிள்ளை பெத்துக்கிட்டான்.. விலங்குகள் போல.

நீங்க அந்த கற்காலத்துக்கு.. திரும்பவதை.. உலகம் மாறிட்டுது என்றோ.. புரட்சி என்றோ.. நவீனத்துவமென்றோ... பின் நவீனத்துவம் என்றோ.. வரையறுத்துக் கொள்ளலாம்.. அது உங்கட பிரச்சனை.

ஆனால்.. இப்படிப் பரிசோதனைகள் செய்யப் போய் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண் பிள்ளைகள் தான். 

இந்த விடயத்தில்... தமிழ் தலபான்களை விட கொஞ்சம் இறுக்கமாவே இருப்பது கற்காலத்துக்கு திரும்பாத நிலையை உறுத் செய்து கொள்ள உதவும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

ஆனால்.. இப்படிப் பரிசோதனைகள் செய்யப் போய் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண் பிள்ளைகள் தான். 

நெடுக்கரே! எப்ப தொடக்கம் லேடீஸ் பக்கம் கட்சி மாறினனீங்கள்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நெடுக்கரே! எப்ப தொடக்கம் லேடீஸ் பக்கம் கட்சி மாறினனீங்கள்? 😂

யார் பக்கம் நியாயத்துக்கு குரல் கொடுக்கனுமோ.. அங்க கொடுப்பம். அதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அதேபோல்.. அநியாயத்தையும் சுட்டிக்காட்டுவோம்.. அதிலும் எந்த வேறுபாடும் கிடையாது. 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.