Jump to content

குழந்தை பிறப்புக்குப் பின் செக்ஸ் குறைவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பிறப்புக்குப் பின் செக்ஸ் குறைவது ஏன்?

10.jpg

பெற்றோர் என்ற தகுதியை அடைந்தவுடன் செக்ஸ் என்ற விஷயம் ஒரு தம்பதியின் வாழ்க்கையிலிருந்து தொலைதூரத்துக்குச் சென்றுவிடுகிறது. சில தம்பதிகள் தங்களது செக்ஸ் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட எண்ணங்களுக்கு ஆட்படுகின்றனர். ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கை, உறவினர்கள் வருகை, குழந்தைக்கு முக்கியத்துவம் என்று பல காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. இது பற்றிக் கணவனோ, மனைவியோ வேறு எவருடனும் விவாதிப்பதில்லை என்பதும் முக்கியமான விஷயம். ஏன், அவர்களுக்குள்ளேயே விவாதிக்கும் அளவுக்குச் சூழல் அமையாது என்பதே நிதர்சனம். இதனால், குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் கொள்வது தானாகக் குறைந்துபோகிறது.

முற்காலத்தில் வழக்கத்திலிருந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் வயதில் மூத்த உறவினர் ஒருவர், குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். குறிப்பாக, தாய்ப்பால் புகட்டுதல் நிறுத்தப்பட்ட குழந்தைகள் பாட்டிகளின், அத்தைகளின், பெரியம்மாக்களின் பராமரிப்பில் வளரும். இப்போது நிலைமை அப்படியில்லை.

தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் எதுவானாலும் கணவனோ அல்லது மனைவியோ மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். தங்களுக்குள் சரிவரப் பேசிக்கொள்ளாமல் இருப்பது, குறைவான நேரம், களைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், பொருளாதாரக் கவலைகள் போன்றவை அவர்களது செக்ஸ் ஆசையை மனதின் ஆழத்தில் பதுக்கி வைக்கின்றன. மீறி உறவு கொள்ளும்போது, இருவரில் ஒருவருக்கு ஏற்படும் அயர்வும் நிலைமையை மோசமடையச் செய்கின்றன.

10a.jpg

தள்ளிபோடப்படும் செக்ஸ்

குழந்தை பிறப்புக்குப் பிறகு, பெண்கள் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை செக்ஸ் ஆசையைத் தள்ளிப்போடுவது வழக்கத்தில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமான பிறகு, இந்த கால அவகாசம் ஆறு மாதங்களாக மாறிவிட்டது. தாய்ப்பால் ஊட்டும்போது ஆக்சிடோசின் எனும் ஹார்மோனால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு எழும். ஆனால், அதே காரணத்தினால் செக்ஸ் கொள்ளும் ஆசையும் குறையும் என்பது நிச்சயம் முரண்தான். தாய்மையினால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களும்கூட செக்ஸ் ஆசை குறைவதற்குக் காரணங்களாக அமைகின்றன.

பிரசவத்துக்குப் பிறகு உறவு கொள்ளும்போது, சில பெண்கள் வலியை உணர்வார்கள். காலப்போக்கில் இது சரியாகும் என்றாலும், உயவு எண்ணெய் அல்லது ஆஸ்ட்ரோஜன் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவது பயன் தரும். சில பெண்களுக்கு செக்ஸின்போது தசைப்பிடிப்பு அல்லது பதற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வயிற்றுப் பகுதியில் தளர்வாக இருக்கும் சதை போன்ற காரணங்களால் பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைவாகவே இருக்கும். தொடையிடுக்குப் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரி செய்ய முடியும்.

10b.jpg

தாய்ப்பால் சுரப்பது, பெண்ணுறுப்பு உலர்ந்திருப்பது ஆகியவையும் செக்ஸ் நிகழத் தடை போடும். என் கணவர் கண்ணுக்கு நான் அழகாகத் தெரிவதில்லை என்ற வருத்தம் சில பெண்களுக்கு உண்டு. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றம், சில பெண்களின் மனதில் இந்த சிந்தனையை விதைக்கின்றன. ஆனால், குழந்தைப் பிறப்பினால் ஆண்களுக்கும்கூட செக்ஸ் விஷயத்தில் ஆர்வம் குறைவதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்றின் முடிவு.

பிரசவத்தினால் பாதிக்கப்படும் ஆண்கள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் நோட்டர்டாம் நகரில் டாக்டர் லீ கெட்லர் என்பவர், குழந்தை பிறப்புக்குப் பிறகு அப்பாவாக ஆன ஆண்களிடம் ஏற்படும் மாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் போலவே ஆண்களும் உயிரியியல் ரீதியில் மாற்றத்துக்கு உள்ளாகுகிறார்கள் என்பதே இந்த ஆய்வின் சாராம்சம்.

“குழந்தைகளின் தேவைகளை உயிரியல்ரீதியாகத் தந்தைகளும் பூர்த்தி செய்கின்றனர். புதிதாக அப்பா ஆனவர்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் அளவு 33-34 சதவிகிதம் வரை குறைகிறது. குறிப்பாக, நாள் முழுவதும் குழந்தை நலத்தில் கவனம் செலுத்துபவர்களிடம் இது நிகழ்கிறது. பாலூட்டி இனங்களில் மனிதன் தவிர வேறெந்த இனத்திலும் தந்தை இது போன்ற பணிகளை ஆற்றுவதில்லை” என்கிறார் கெட்லர்.

10c.jpg

டெஸ்டோஸ்டீரான் குறைதல்

கெட்லரின் ஆய்வுக்காக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 400 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அவர்களது வயது 21 ஆக இருந்தது. அதன்பின்னர், ஐந்து ஆண்டுகள் கழித்து அவர்களில் பலர் தந்தையாக ஆகியிருந்தனர். அப்போதும், அவர்களைச் சோதனைக்கு உட்படுத்தினார் கெட்லர். அதில், அவர்களது டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுவே குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் செக்ஸ் உறவு குறைந்துபோவதற்கும் காரணமாக அறியப்படுகிறது.

அதே நேரத்தில், டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகமுள்ள ஆண்களில் பலரது திருமண வாழ்வு பிரச்சினைகள் மிகுந்ததாகவும், விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்துவதாகவும் உள்ளன என்பதும் பின்னர் தெரியவந்தது. “புதிதாகத் திருமணம் ஆகி அப்பா ஆனவர்கள் வாழ்க்கையில் செக்ஸ் குறைந்துபோனது உண்மை. அனைவரது டெஸ்டோஸ்டீரான் அளவும் குறைந்திருந்ததும் உண்மை” என்று இதற்கு விளக்கமளித்தார் கெட்லர். அதே நேரத்தில், ஆய்வுக்கு உட்பட்ட தந்தைகளின் எச்சிலில் அதிகளவில் ஆண்டிபாடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவை சளி, ப்ளூ காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கும் இயல்புடையதாக இருந்தன. அதாவது டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு உடலில் அழுத்தத்துக்கு உள்ளாவது உறுதியானது.

டெஸ்டோஸ்டீரானுக்கும் ஆண்மைக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்தாலும், நிறைய ஆண்கள் சிறந்த ஆணாக இருப்பதைவிடச் சிறந்த தந்தையாகவே இருக்கின்றனர் என்பது கெட்லரின் வாதம். குழந்தை பிறப்புக்குப் பிறகு பெண்களுக்கு மட்டுமே செக்ஸ் ஆசை குறையும் என்ற வாதத்தை, கெட்லரின் ஆய்வு பொய்யாக்கியது.

10d.jpg

நெருக்கத்தை வளர்த்தெடுக்கலாம்

குழந்தை பிறந்த பிறகு செக்ஸ் குறைவதைத் தவிர்க்க, அதை ஈடு செய்ய பல வழிகள் உள்ளன. சரியான செக்ஸ் உறவு அமையாதபோது இருவருக்குமான தகவல் தொடர்பு குறைந்துபோக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும்; இணையின் பேச்சைக் கேட்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டைக் கவனிப்பவராகவும் இருக்கும் பட்சத்தில் வீட்டு வேலைகளைச் சிறிதளவிலாவது பகிர்வது நலம் பயக்கும். குறைந்தபட்சம் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தையாவது மேற்கொள்ள வேண்டும். செக்ஸ் என்பது முக்கியம் என்றாலும், அதற்கு முன்பான கட்டியணைத்தல், கையை பிடித்துக் கொஞ்சுதல் போன்றவையும்கூட இருவரிடையேயான புரிதலை அதிகப்படுத்தும்.

24 மணி நேரமும் குழந்தையைக் கவனிக்கும் பெண்கள், தங்களுக்கென்று 15 நிமிடங்களாவது தினமும் ஒதுக்க வேண்டும். நடைப்பயிற்சி, புத்தக வாசிப்பு, நட்புடன் அளவளாவுதல் போன்றவற்றை மேற்கொள்வது மனதைப் புத்துணர்ச்சியாக்கும்.

நன்றி: தி டெலிகிராஃப்

ரெய்ஸிங் சில்ரன்

 

https://minnambalam.com/k/2019/05/05/10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

எனக்கு அப்படி ஒரு வித்தயாசமும் தெரியல

 சார் அஞ்சு விரலும் ஒரு மாதிரியா இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

எனக்கு அப்படி ஒரு வித்தயாசமும் தெரியல

அப்ப இன்னும் குழந்தை பிறக்கல்லை.

யாருக்காவது குறையுது என்று ஒரு எண்ணம் இருந்தால்
மனைவியுடன் சண்டை பிடித்து இரண்டு நாளுக்கு கதைக்காமல் இருந்து மூன்றாம் கதைக்கும் போது அன்றிரவு முதலிரவு ஞாபகம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி?
எதோ ஒரு இடத்தில் வேகம் குறைந்து கூடத்தானே வேண்டும் 

50வயது என்பது ஆயுளின் வெறும் அரைவாசி என்பதையும் 
இன்னமும் மிகுதியாக அதே அளவு ஆண்டுகள் உள்ளது என்பதையும் 
மனது தளராது ஏற்றுக்கொண்டு ஓடினால் கொஞ்ச தூரம் கூட ஓடிட வாய்ப்பிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2019 at 6:02 AM, Maruthankerny said:

இப்பிடியே ஓட்டிக்கொண்டு இருந்தால் எப்படி?
எதோ ஒரு இடத்தில் வேகம் குறைந்து கூடத்தானே வேண்டும் 

50வயது என்பது ஆயுளின் வெறும் அரைவாசி என்பதையும் 
இன்னமும் மிகுதியாக அதே அளவு ஆண்டுகள் உள்ளது என்பதையும் 
மனது தளராது ஏற்றுக்கொண்டு ஓடினால் கொஞ்ச தூரம் கூட ஓடிட வாய்ப்பிருக்கு. 

மருதர் உங்களின் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும்...... இது பலருக்கு புரிவதில்லை.....!  ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2019 at 4:49 AM, ஈழப்பிரியன் said:

அப்ப இன்னும் குழந்தை பிறக்கல்லை.

யாருக்காவது குறையுது என்று ஒரு எண்ணம் இருந்தால்
மனைவியுடன் சண்டை பிடித்து இரண்டு நாளுக்கு கதைக்காமல் இருந்து மூன்றாம் கதைக்கும் போது அன்றிரவு முதலிரவு ஞாபகம் வரும்.

   நீங்கள் பேய்க்காய் எண்டது எனக்கு தெரியும்....... :grin:

உங்கள் ஆலோசனைக்கு நன்றி.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2019 at 4:50 AM, குமாரசாமி said:

   நீங்கள் பேய்க்காய் எண்டது எனக்கு தெரியும்....... :grin:

உங்கள் ஆலோசனைக்கு நன்றி.💐

அவர் சொல்கிறார் என்றால் சிக்கி சேதாரமாகி விடாதீர்கள்  யாழுக்கு ஆள் வேண்டும் கருத்து எழுத 🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் சொல்கிறார் என்றால் சிக்கி சேதாரமாகி விடாதீர்கள்  யாழுக்கு ஆள் வேண்டும் கருத்து எழுத 🤠

என்ரை வீட்டுக்கு நாலுகாணி தள்ளித்தான் அம்புலன்ஸ்சும் ஆஸ்பத்திரியும் இருக்கு.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ரை வீட்டுக்கு நாலுகாணி தள்ளித்தான் அம்புலன்ஸ்சும் ஆஸ்பத்திரியும் இருக்கு.....😎

 

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் சொல்கிறார் என்றால் சிக்கி சேதாரமாகி விடாதீர்கள்  யாழுக்கு ஆள் வேண்டும் கருத்து எழுத 🤠

ஒன்பது பிள்ளை பெத்தவளுக்கு, ஒத்தபிள்ளை பெத்தவள், 10 வது பிள்ளை பெறுவது பத்தி சொல்லுற மாதிரி கதை.... நம்ம தனி... சாமியாருக்கு அறிவுரை சொல்லுறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ரை வீட்டுக்கு நாலுகாணி தள்ளித்தான் அம்புலன்ஸ்சும் ஆஸ்பத்திரியும் இருக்கு.....😎

அறிவுரை சொன்னா இப்ப ஆருதான் கேட்கிறார்கள்  எல்லாம் அவன் செயல் 😁

 

33 minutes ago, Nathamuni said:

 

ஒன்பது பிள்ளை பெத்தவளுக்கு, ஒத்தபிள்ளை பெத்தவள், 10 வது பிள்ளை பெறுவது பத்தி சொல்லுற மாதிரி கதை.... நம்ம தனி... சாமியாருக்கு அறிவுரை சொல்லுறது.
 

ஹாஹாஹா  சும்மா ஓர் உசுப்பேத்தல் தான் நாதா அது சரி கு. சாமியரை கண்டதோ ஆஸ்பத்திரி பக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“குழந்தைகளின் தேவைகளை உயிரியல்ரீதியாகத் தந்தைகளும் பூர்த்தி செய்கின்றனர். புதிதாக அப்பா ஆனவர்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் அளவு 33-34 சதவிகிதம் வரை குறைகிறது. குறிப்பாக, நாள் முழுவதும் குழந்தை நலத்தில் கவனம் செலுத்துபவர்களிடம் இது நிகழ்கிறது. பாலூட்டி இனங்களில் மனிதன் தவிர வேறெந்த இனத்திலும் தந்தை இது போன்ற பணிகளை ஆற்றுவதில்லை” என்கிறார் கெட்லர். "

எங்களின் நாரிமணிகள் இது சம்பந்தமாக அப்பா மாருக்கு பச்சை புள்ளி அளிப்பார்களா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.