Jump to content

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

hqdefault.jpg?w=1170&is-pending-load=1#0hqdefault.jpg

.

இந்த மனிதரைப்பற்றி எப்போது முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்? பதின்மவயதில், பாடப்புத்தகத்தில் கவனமில்லாமல் குமுதம், கல்கண்டு போன்ற வார இதழ்களைப் புரட்டிக்கொண்டு, வீட்டில் திட்டுவாங்கிய எழுபதுகளின் காலகட்டம். ஒரு நாள் கல்கண்டு இதழின் டிட்பிட்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில் சிறிய  ஜே.கிருஷ்ணமூர்த்தி படம். யாரிது? பெயரைப் பார்த்தால் யாரோ ஒரு தமிழ்க்காரர்போல் தெரிகிறதே. ’ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். ஒரு தத்துவஞானியான இவர்..’ என்பதுபோல் தமிழ்வாணன் நாலு வரி எழுதியிருந்ததாக நினைவு.  நம் சமகால தத்துவஞானியா, தலைசிறந்த சிந்தனையாளரா.. ஒரு இந்தியரா? அதெப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று ஏதோ எல்லாவற்றையும் படித்துக் கடந்தவனைப்போல் மனதில் சிந்தனை வந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் அவரை மறந்துவிட்டேன். அடுத்த சில வருடங்களில் அவர்பற்றி மேற்கொண்டு ஏதும் படிக்கவில்லை, கேள்விப்படவில்லை.

எனது முதல் டெல்லி விசிட் முடித்து 1975- மார்ச் இறுதியில் ஒருநாள் காலை ஜி.டி.எக்ஸ்ப்ரஸில் மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கினேன். இரவில்தான் புதுக்கோட்டை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ். நிறைய நேரம் இருக்கிறதே. டிஃபன் காப்பி என்று முடித்து ஸ்டேஷனுக்குள்ளேயே இருந்த கடைகளை நோட்டம்விட்டபோது, ஹிக்கின்பாதம்ஸ் கண்ணில்பட்டது. ஏதாவது பத்திரிக்கைகள் வாங்கலாம் என நினைத்து அதில் நோட்டம்விட்டேன். சற்று உள்ளே பக்கவாட்டு ஸ்டாண்டுகளில் கலந்துகட்டியாக ஆங்கிலப் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். கேள்விப்பட்டதும், படாததுமாய் புத்தகங்கள், எழுத்தாளர்கள்.  அங்கே.. அது என்ன? ஒரு பெங்குவின் புத்தகத்தில் அந்த முகம்.. எங்கோ பார்த்ததாய் இருக்கிறதே. எடுத்துக் காண்பிக்கச் சொன்னேன் கடைக்காரரிடம். இவனா இதை வாங்குவான் என்கிற சிந்தனையில்  தயக்கத்தோடு எடுத்துக்கொடுத்தார். ’தி செகண்ட் பெங்குவின் கிருஷ்ணமூர்த்தி ரீடர்’ என்றது கையடக்கமாக இருந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு. ஆ.. ஜே.கிருஷ்ணமூர்த்தி!  மனது வேகமாக அந்தப் பழைய கல்கண்டுப் பக்கத்தைக் காட்டியது. அட! அவர்பற்றியதா இது? செகண்ட் ரீடர்? அப்படியென்றால் ’ஃபர்ஸ்ட் ரீடர்’ என்று ஒரு புத்தகம்வேறு வெளிவந்திருக்கிறதா இவரைப்பற்றி? பின்பக்க அட்டையில், முன்னுரையில் என வேகமாகக் கண்ணோட்டினேன்.  முதல் பக்கத்தில் படிக்க ஆரம்பிக்க, ஜே.கே.யின் மாலைநடை ஒன்றின்போது அவர் பார்க்க நேர்ந்த இயற்கைச்சூழல்பற்றி எளிய ஆங்கிலத்தில் இதமான வர்ணனை. மனம் திளைக்க ஆரம்பித்த அந்த நொடிகளில்..  ’வாங்கப்போறீங்களா?’’ என்று சற்றே எரிச்சல்காட்டும் குரலில் வெட்டினார் கடைக்காரர். இல்லாட்டி அதக் திருப்பிக்கொடுத்துடு..இதெல்லாம் ஒனக்கு ஒத்துவராது என்பதுபோல் அலட்சியப்பார்வையுடன் கையை நீட்டினார். ’வாங்கிக்கிறேன்’ என்று அவரை எதிர்ப்பதைப்போல் சொல்லிவிட்டுப் பணம் கொடுத்தேன். புத்தகம் எனக்குச் சொந்தமாகிவிட்டது. இனி இந்தக் கடைக்காரரின் அரிப்பில்லை. அதனைப் பெருமையோடு தடவிப் பார்த்துக்கொண்டு பையில் பத்திரமாக வைத்தேன். வீடு திரும்பி, நிதானமாக படிக்கவேண்டும்.

கிராமத்து வேப்பமரத்தின்கீழே அமர்ந்து அதனை மெல்ல, மெல்ல அசைபோட்டிருக்கிறேன். 1895-ல் தென்னிந்தியாவில் மதராஸுக்கருகே ஒரு கிராமத்தில் ஏழை அந்தணக் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி, தன் 14-ஆவது வயதில் அவர், மதராஸிலிருந்து இயங்கிய சர்வதேச தியஸாஃபிகல் சொசைட்டியின் டாக்டர் அன்னி பெஸண்ட் மற்றும் நண்பர்களினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டு வளர்க்கப்பட்டது, பின் இங்கிலாந்தில் படித்தது, வளர்ந்தது, அவரது வாழ்வின் சோகங்கள், ஏனைய அனுபவங்கள், தனது 34-ஆவது வயதில் தன் பெயரில் ஏற்கனவே  1911-ல் உருவாக்கப்பட்டிருந்த ஆன்மீக இயக்கத்தைக் (The Order of the Star in the East) கலைத்தது, கூடவே ’இறுதி உண்மை என்பது தன்னைத்தானே ஒருவன் எல்லாவித கட்டுகளிலிருந்தும் முழுதுமாக விடுவித்துக்கொண்டாலன்றி, எந்த ஒரு மதத்தின் மூலமாகவும், நம்பிக்கை சார்ந்த குழுக்களின் மூலமாகவும் கண்டுபிடிக்க முடியாதது என அறிவித்தது, ‘நான் யாருக்கும் குரு அல்ல. எனக்கு எந்த சிஷ்யரும் இல்லை’ என அறிவித்து தன்னைச் சார்ந்தவர்களையும், தொடர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பின்னர் வருடம் முழுதும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் அவர் நடத்திய, மனித வாழ்வினூடே உண்மையை நோக்கிய பயணம் தொடர்பான பிரசங்கங்கள் என அறிய அறிய மனம் ஆச்சரியமானது. எத்தகைய அதிசயப் பிறவி  இந்த ஜே.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய காலகட்டத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு பெருமைதான் என்று சொல்லிக்கொண்டது மனம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய புதிய வாசகர்களுக்கான அந்த பெங்குவின் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில், எங்கே ஆரம்பித்தாலும் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஜேகே-யின் சிந்தனைகள், வார்த்தையாடல்கள் மனதை பெரிதும் வசப்படுத்திவிட்டிருந்தன. வாழ்க்கையில் உருப்படியாக ஒரு நல்ல புத்தகம் வாங்கியிருக்கிறோம் என நினைத்தேன். அவர் சுற்றுப்புற இயற்கையை சொன்னாலும், மனதின் சிந்தனைவெளி தாண்டிய அனுபவத்தைக் கோடிட்டுக் காட்ட முயன்றாலும், ஒரு அதிசயமான நெருக்கத்தை அதில் கண்டுகொண்டேன். மனம் அந்த இளம்வயதில் இப்படி சந்தோஷப்பட்டது ஒரு அபூர்வ அனுபவம். 

மேலும் சிலவருடங்களுக்குப்பின்,  டெல்லியில் வெளியுறவுத்துறையில் பணி கிடைக்க, அங்கேயே வந்து தங்கிவிட்டேன். அந்த கிருஷ்ணமூர்த்தி புத்தகம் பக்கத்திலேயே துணையாக இருந்தது. அவ்வப்போது நேரங்கிடைக்கையில் மீண்டும் படித்துப் பார்ப்பேன். சில பத்திகளுக்குப்பின் சிந்தனையில் ஆழ்வதும், புத்தகத்தை வைத்துவிட்டு நடந்துகொண்டிருப்பதுமாக ஒரு  அனுபவம் தொடர்ந்தது. ஒருமுறை, அபூர்வமாகவே கிட்டும், கிட்டத்தட்ட ஒத்த சிந்தனையுடைய ஒரு மலையாள நண்பனிடம் அதுபற்றி பிரஸ்தாபித்திருக்கிறேன்.

அன்று காலையில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸைப் புரட்டியபோது உள்பக்கமொன்றின் ஒரு கால்பக்க விளம்பரம், மௌலங்கர் ஆடிட்டோரியத்தில் மூன்று நாட்களுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கம் என்றது. டெல்லிக்கா வருகிறார் ஜேகே? மாலையில்தானே? விடக்கூடாது. போய்ப் பார்த்துவிடவேண்டியதுதான். மனம் படபடத்தது. 

அக்டோபர் 27, 1984. அப்போதெல்லாம் அக்டோபர் கடைசியிலேயே டெல்லியில் குளிர் மெல்ல அடிவைத்திருக்கும். இதமாகக் குளிர்ந்திருந்த அந்த மாலையில் சுமார் 5 3/4-க்கு  நண்பனோடு பார்லிமெண்ட் வளாகம் அருகிலிருக்கும் மௌலங்கர் ஆடிட்டோரியம் சென்றடைந்தேன். கட்டிட முன்பக்க புல்வெளியில் ஷாமியானா (வண்ணத் துணிப்பந்தல்) போட்டிருக்க, சிறிய மேடையில், மைக் ஒன்று நடுவில் வைக்கப்பட்டிருந்தது. முன் பரப்பியிருந்த நாற்காலிகளில் ஆட்கள் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தனர். ஜேகே நேரம் தவறாமைக்குப் பேர்போனவர். அவரது பிரசங்கம் சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடும் எனக் கேள்விப்பட்டிருந்தேன். வந்திருந்தவர்களும் அவ்வாறே அறிந்திருப்பார்கள் போலும்  சில வரிசைகள் தள்ளி எங்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. வந்திருந்த கூட்டமே கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருந்தது. ஒரு பெரும் சிந்தனையாளர், தத்துவஞானி என அறியப்படுவதால் அவரின் பிரசங்கத்துக்கு வருபவர்கள் வாழ்ந்து களைத்த பெரியவர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இத்தனை வருடங்களில் உலகின் சிலபகுதிகளிலாவது, எல்லா வயதுக்குழுவினரிடேயேயும் ஜே.கே.யை அறிந்திருந்தோருண்டு. அன்று வந்திருந்தது ஒரு கலவையான 250-300 பேர் அடங்கிய சிறுகூட்டம். முன் வரிசையில் ஒரு பக்கத்தில், தலைநகரின் அறிவுஜீவிகளென அறியப்பட்டவர்களில் எனக்குத் தெரிந்த சிலர் கண்ணில் பட்டார்கள். இந்தியன் எக்ஸ்ப்ரெஸின் ஆசிரியராய் இருந்த அருண் ஷோரி, கார்ட்டூனிஸ்ட் ஓ.வி.விஜயன் போன்ற சிலர். புத்த பிட்சுகள் சிலர் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தார்கள். இளைஞர்கள் பலரில் கல்லூரி மாணவ, மாணவியர்போன்று தெரிந்த சிலர் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசியவாறு காத்திருந்தார்கள். மத்திம வயது மற்றும் முதிய மனிதர்களிடையே சர்தார்ஜிகள் சிலர். கூட்டம் நிறைய ஆரம்பிக்க, ஐரோப்பியர்களைப்போல் தெரிந்த வெளிநாட்டுக்காரர்கள் சிலர் ஒரு பகுதியில் அமர்ந்தும், சிலர் நின்றுகொண்டும் இருந்தனர். அவர்களில் அழகிய பெண்முகங்கள் சில, வித்தியாசமான ஒரு சூழலுக்கு மேலும் களையூட்டின.  டெல்லியில் சுற்றிக்கொண்டிருந்த டூரிஸ்ட்டுகளாக இருக்குமோ அல்லது கிருஷ்ணமூர்த்தி ஃபௌண்டேஷனிலிருந்து சிலர் முன்னரே வந்திருக்கலாமோ? சரியாக 5.55-க்கு ஒரு வெள்ளைநிற அம்பாஸடர் அன்னம்போல் வந்து நின்றது. ஜேகே இறங்கி மெல்ல நடக்க, அவரை சிலர் மேடைவரை வழிகாட்டி வந்து உட்காரவைத்து, உடன் பின்பக்கமாய் விலகிக்கொண்டார்கள். 

உலகில் எந்த இடத்திலும் அவரின் பிரசங்கத்தின்போது ஜேகே- யை யாரும் அறிமுகம் செய்துவைக்கும் வழக்கமில்லை என்று படித்திருக்கிறேன். அவ்வாறே இங்கும் ஒன்றும் நிகழவில்லை. புத்தக அட்டையில் மட்டுமே பார்த்திருந்த உலகம் வியக்கும் ஒரு மனிதரை நேரிடையாகப் பார்ப்பதில் ஒரு த்ரில் மனதுக்கு ஏற்பட்டிருந்தது. வயது எண்பதுக்கருகில் என்பதுபோல் காட்டிய மெலிந்த தேகம். இந்திய வகைமைப்படி மாநிறம் என்பதையும் தாண்டிய ஒரு ரசமான நிறம். சராசரி உயரம். அடர்த்தி குறைந்த முடி ஒழுங்காக வாரப்பட்டிருக்கிறது. ஒழுங்காகப் ப்ரெஸ் செய்யப்பட்ட வெளிர் பிங்க் குர்த்தாவுடன் வெள்ளை பைஜாமா. மைக்கின் முன், சற்றுத் தள்ளி அமர்ந்தவரின் முதுகுப்பகுதி நேராக, ஒரு யோகநிலைபோல் இருந்தது.  ஒரு பதின்மவயதுப் பையன் (மைக் கம்பெனிக்காரன்போலும்) மேடையில் வேகமாக ஏறி மைக்கின் உயரத்தையோ எதையோ சரிசெய்ய முயல, அதனால் பாதிக்கப்பட்டவராய், சற்று அழுத்தமான குரலில் ‘லீவ் இட்!’ என்கிறார் ஜேகே. பதற்றமான பையன் உடனே கீழிறங்கி மறைகிறான். அமைதி தவழும் முகத்துடன் வந்திருப்பவர்களை நேராகப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி, கைகூப்புகிறார். கடிகாரத்தில் கண் ஓட, சரியாக ஆறு மணி. வெகுகால நினைவுகளிலிருந்து, மீட்க முடிந்தவற்றைத் தருகிறேன்.

’நாமெல்லோரும் இந்த மாலையில் இங்கு கூடியிருக்கிறோம். வாழ்க்கை, இந்த உலகில் நம் எல்லோரின் வாழ்க்கை, அதன் ஓயாத பிரச்னைகள் என ஆராய்ந்து பார்க்கவென இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். இங்கே வந்திருக்கும் சிலர், இதனை ஒரு மாலைப்பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன். இது ஒரு பொழுதுபோக்குக்கானதல்ல. மேலும், எல்லோரும் ஆளுக்கொருவராக ஒவ்வொரு கருத்தாகச் சொல்லி விவாதிக்க அல்ல இந்த ஏற்பாடு. ஒரு பொது வசதி கருதி,  பேசும் இந்த நபர் (the speaker) -தன்னைக் காட்டிக்கொள்கிறார்- இங்கே, நீங்கள் எல்லோரும் எதிரே என உட்கார்ந்திருக்க, ஒருவர்  பேச,  நீங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் ஒரு ஏற்பாடு. நான் ஏதோ சொல்ல, நீங்கள் அதை ஏற்றோ, மறுத்தோ உங்களுக்குள் விவாதம் செய்வதல்ல இதன் நோக்கம்.   உண்மையில், நாம் நமது வாழ்வின் தீராத பிரச்னைகளை உள்ளது உள்ளபடி எதிர்கொண்டு, ஏன் இப்படி, இது இன்னும் நன்றாக இருக்கமுடியாதா என்றெல்லாம் நமக்கு நாமே கேட்டுக்கொண்டு, ஒருசேர இதனை ஆராயவிருக்கிறோம். பேசும் இந்த நபரும், நீங்களும் ஒரே திசையில் பயணிக்கவிருக்கிறோம். இது புரிகிறது,  இல்லையா?  எனக் கேட்கிறார். ஒரு ஆழமான அக்கறை குரலில் தெரிகிறது.

’…எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் ஏதோ சரியில்லை.  நிம்மதி, மகிழ்ச்சி இல்லை என்பது நமக்கெல்லாம் நிதர்சனமாகத் தெரிகிறது இல்லையா. மனம் கொள்ளாப் பிரச்னைகள், என்றும் ஓயாத மோதல்கள்(conflicts), அதற்கான காரணங்கள் (causes) என்ன என்று இப்போது நாம் ஆழமாகச் சென்று பார்க்கவிருக்கிறோம்…

…சதா சலசலத்துக்கொண்டிருக்கும் மனம், என் மனம், உங்கள் மனம் என்றில்லை, பொதுவாக மனிதமனம் – அதன் செயல்பாடுகள் என்ன, எப்படியெல்லாம் அது நடந்துகொள்கிறது என்று ஆராய்ந்திருக்கிறீர்களா?’ கொஞ்சம் நிறுத்துகிறார். தனக்குள்ளேயே ஓடும் அந்தக் கேள்விகளை ஆராய்பவர்போல.  பிறகு, தொடர்கிறார்: நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம், சேர்ந்து பயணிக்கிறோம் இல்லையா..?’  ஒருவேளை, இவர்களால் தொடரமுடியவில்லையோ.. மேலும் புரியுமாறு சொல்லவேண்டுமோ என்று அவர் கவலைப்படுவதுபோல் தெரிகிறது. எதிர் அமர்ந்திருப்போரைக் கனிவோடு பார்க்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

அவர் இவ்வாறு தன் வாக்கியங்களுக்கிடையே சிறு சிறு இடைவெளி கொடுக்கையில், அந்தக் கணநேர நிசப்தமும் பெரிதும் நம்மை ஆட்கொள்கிறது. மீண்டும் திடீரென உயரும் அவரது அபூர்வமான, சற்றே வினோதமான குரல், மனதிற்குள்ளே சென்று எதனையோ  அசைப்பதுபோன்று தோன்றுவதை அவ்வப்போது உணர்கிறேன். இங்கே வந்து விழுந்துகொண்டிருப்பது வெறும் ஆங்கில வார்த்தைகளல்ல என்பதான எண்ணமும் கூடவே.  இன்னொன்றும் திடீரெனக் கண்ணில்பட்டு, பின் மனதில் பதிகிறது. இப்போது அங்கே நன்கு இருண்டுவிட்டிருக்க, பந்தலில் போட்டிருந்த ஃபிலமெண்ட் பல்புகளின் பொன்னிற ஒளியில் அவரது உருவம் ஒரு அசாத்திய அழகில் தெரிகிறது. லேசாக மினுமினுக்கும் ஒருமாதிரியான பிங்க் நிறமாய் முகம். அவரது உருவைச்சுற்றி தெரிவது மிருதுவான ஒரு ஒளிக்கூட்டல். அந்தக் காட்சியை விளக்குவதற்கு வார்த்தைகள் போதுமானதாகத் தெரியவில்லை. ஒருவேளை, எனக்குமட்டும்தான் இப்படித்தோன்றியதா?

ஜேகே தொடர்கிறார்: ’இந்த மனம், எதற்காவது, எப்போதும் அலைந்துகொண்டுதானிருக்கிறது. கவனித்திருக்கிறீர்களா?  ஏதாவது ஒன்றை, அது உடல்ரீதியான, அல்லது அதைத்தாண்டிய ஒரு இன்பமாகவோ, ஒரு அனுபவமாகவோ இருக்கக்கூடும் – எதையாவது இது தேடிக்கொண்டே இருக்கிறது. அல்லது எதையாவது இடைவிடாது சொல்லிக்கொண்டிருக்கிறது? இத்தகைய குறுகிய, சஞ்சலமான மனம், சலனமின்றி அமைதியாக இருக்குமா, இருக்கமுடியுமா அதனால் என்பது கேள்வி. இந்த மனதினால் அமைதியாக இருக்கமுடியுமா?  முடியும் அல்லது முடியாது என உடனே பதிலுடன் பாயாதீர்கள். உள்ளூர ஆராயுங்கள்.  எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கும் இந்த மனம் அமைதி நிலைக்கு வரவேண்டுமெனில், அதற்காக என்ன நிகழவேண்டும்? அந்த மனதில், எண்ணம் (thought) என்ற ஒன்று வராதிருக்கவேண்டும். அப்படி ஒரு நிலைக்கு அது வரநேர்ந்தால், அது அமைதியாக, சலனமற்று இருக்கக்கூடும். அப்படி ஒரு நிலை நிகழலாம்..’

இப்படியெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போக, பேசப்படும் விஷயத்தின் ஆழத்தில் தோய்ந்து, அசையாது அமர்ந்திருக்கிறது சபை. பத்தொன்பது, இருபது இருக்கலாம் வயது அவளுக்கு. தென்னிந்தியப் பெண்ணாக இருக்கும் என்பதாக ஒரு தோற்றம். எழுந்திருக்கிறாள்.  கேட்கிறாள்:  ’மனதில், எண்ணமில்லாமல் இருப்பது எப்படி?’

’என்ன ஒரு சிந்தனையிலாக் கேள்வி! (What a thoughtless question!)’ என்கிறார் அவளைப் பார்த்து ஜேகே சட்டென்று. அந்தப் பெண் கூச்சத்துடன் தலைகுனிந்து உட்காருகிறாள். சபையில் ஆங்காங்கே லேசான சலசலப்பு…சிரிப்பு. ’தயவுசெய்து சிரிக்கவேண்டாம்.. இது சிரிப்பதற்கான விஷயமில்லை’ என்கிறார் குரலில் ஒரு அழுத்தம் தெரிய.

மேலும் மேலும் அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக, சரளமாக வந்து விழுகின்றன. மிகவும் ஜாக்ரதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. அதே சமயத்தில், புரியாது பயமுறுத்தும் கடினமான வார்த்தைகளல்ல. சாதாரணமானவை. அழகானவை. அவரிடமிருந்து வருவதால் நீரோடை போன்ற தெளிவுகொண்டவை. அவரது நளினமான ஆங்கில உச்சரிப்பு. குரலில் காணப்பட்ட ஒரு கனிவும் மென்மையும். ஒருமணிநேரம் எப்படிப் போனது?

மாலை 6.50, 6.55.. என்று நிமிடங்கள் நகர, வார்த்தையோட்டம் வேகம் குறைந்து, அன்றைய பிரசங்கத்தின் நிறைவு நோக்கி சுகமாக நகர்கிறது. ’நமது அடுத்த சந்திப்பில் ’பிறந்ததிலிருந்து இறுதிவரை நம் எல்லோரையும் விடாது தொடரும் ஒன்றைப்பற்றி.. பயம் என்கிற ஒன்றைப்பற்றி ஆராய்வோம்’ என்று சொல்லி முடிக்கிறார். வந்திருந்தவர்களை நோக்கிக் கைகூப்பிவிட்டு, மெல்ல எழுந்து மேடையைவிட்டு வெளியேறுகிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. 

மயங்கிக்கிடந்ததுபோலிருந்த ஒரு மனநிலையிலிருந்து திடீரென விடுபட்டதுபோல், வந்திருந்தவர்களில் சிலர் அவசரமாக எழுந்து அவர் போகும் திசையில் நடந்தோம். இங்கேயும் ஒன்றைக் கவனிக்கிறேன். ஜேகே காரை நோக்கி நடந்து செல்கையில் அவரிடமிருந்து இடைவெளிவிட்டு, தள்ளியே அவரை அழைத்துவந்தவர்களும் நடக்கிறார்கள். யாரும் நெருங்கிப் பேசுவதோ, கைகுலுக்க முயலுவதோ இல்லை. அவர்,  தொடுவதை, தொடப்படுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பவர் என எங்கோ படித்த நினைவு

காரை ஜேகே நெருங்கியதும், அவரைத் தொடர்ந்து அதுவரை வந்துவிட்ட ஒரு தென்னிந்திய தம்பதி, அவரிடமிருந்து பத்தடி தள்ளி நின்று கைகூப்பிவிட்டு, கீழே சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நமஸ்கரிக்கிறார்கள். எங்களில் சிலர் ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த தம்பதியை வாஞ்சையோடு பார்க்கிறார். திருப்பி வணங்குவதாக, அவர்களைப் பார்த்து சில நொடிகள் கைகூப்பிவிட்டு காரில் ஏறிக்கொள்கிறார். அம்பாஸடர் மெல்ல நகர்ந்து டெல்லியின் பெருவீதியில் கலந்து மறைகிறது.

நானும் நண்பனும் அங்கிருந்து வெளியேறி சாலையில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். அவரது தரிசனமா, அவரது வார்த்தைகளா – எதன் தாக்கமிது என்று நினைத்து நான் நடந்துகொண்டிருக்கையில், நண்பன் கேட்டான், ’ஏன் பேசாது வருகிறாய்..?’   ’கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்கவிரும்புகிறேன்’ என்றேன். புரிந்துகொண்டவன் போல் அவனும் நடந்தான். 

ஜேகே-யின் அடுத்த பிரசங்கம்  நான்கு நாள் கழித்து அக்டோபர் 31-ல், அதே மௌலங்கர் ஆடிட்டோரியத்தில் நிகழ்வதாக இருந்தது. அவசியம் வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அது நிகழவே இல்லை. அந்த நாளின் காலையில்தான் டெல்லியில், இந்தியப் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டார், கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால்,  சீக்கியர்களுக்கெதிராக அன்று  வெடித்த வன்முறை, டெல்லி முழுதும்  கோரத்தாண்டவம் ஆடி, ஏகப்பட்ட அப்பாவி உயிர்களை பலிவாங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு தலைநகரில் மனிதர் வெளியே நடமாடுவதே அரிதாகிவிட்டிருந்தது.

ஜேகே-யின் பிரசங்கங்கள் சிலவற்றிற்கு சென்றிருந்த ஒரு வெளிநாட்டுப் பெண், ஓரிடத்தில் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது: ’ஜேகே-யின் பேச்சுகள் அடங்கிய ஆடியோ காஸட்டுகள் எத்தனையோ கேட்டிருக்கிறேன். அவர் பேசுவது, சொல்லவருவது புரிகிறது. ஆனால்.. அவர்முன் உட்கார்ந்து கேட்கும் அனுபவம் என்று ஒன்று இருக்கிறதே.. அது முற்றிலும் வேறானது அதை விவரிப்பதற்கில்லை’. 

அதற்காகத்தான் என் மனம் ஏங்கியது. ஆனால், அதற்கப்புறம், அந்த அனுபவம் கிட்டவே இல்லை.  

**

https://solvanam.com/2019/04/26/ஜே-கிருஷ்ணமூர்த்தியுடன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 என்னிடமும் ஜே . கே யின் சில புத்தகங்கள் இருக்கின்றன, நல்ல காலம் அவை எனக்கு புரியவில்லை. அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், ஒருவேளை புரிந்திருந்தால் எப்பொழுதும் சிந்தனையுடன் உர்ர் என்று இருந்திருப்பேனோ என்னமோ. தாங்ஸ் காட் .....!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.கே யின் புத்தகங்கள் எதுவும் என்னிடம் இல்லை! எதையும் படிக்கவும் இல்லை. ஒரேயொரு மேற்கோள் பதின்ம வயதில் இருந்து நினைவில் உள்ளது!!

"நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல எதிர்ப்படுகின்ற தடைகளோடு கூடிய போராட்டமே வாழ்க்கை" என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கின்றார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரம் பரீட்சை எழுதி விட்டுக் காத்திருந்த போது ஜே.கேயையும் ஓஷோவையும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது! .ஜே.கேயின் "சிந்தனைகளைக் கண்காணித்தல்" என்பது பிடிபடவேயில்லை! ஓஷோவை நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎7‎/‎2019 at 3:09 AM, கிருபன் said:

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன்

 அந்த அனுபவம் கிட்டவே இல்லை.  

**

https://solvanam.com/2019/04/26/ஜே-கிருஷ்ணமூர்த்தியுடன்/

தவறவிட்ட வாளிப் பட்டியலில் உள்ள ஒரு ஐட்டம்

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு 3 JK  Video ஆவது பார்ப்பேன். தற்போது  " The flight of the Eagle" என்ற புத்தகம் படிக்க தொடங்கி உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதர். 

1 hour ago, சாமானியன் said:

தவறவிட்ட வாளிப் பட்டியலில் உள்ள ஒரு ஐட்டம்

        

இந்த முக்கியமான வாளி  பட்டியலை விட்டு விடாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை நான் இம்மாதிரி புத்தகங்களை படிக்கவில்லை.

வாழ்க்கை மிக எளிமையானது,அப்பப்போ வரும் இன்ப துன்பங்களை கடந்து போய்க்கினே இருக்கணும்..! பிராய்ச்சி ஆராயப்படாது..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

உயர்தரம் பரீட்சை எழுதி விட்டுக் காத்திருந்த போது ஜே.கேயையும் ஓஷோவையும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது! .ஜே.கேயின் "சிந்தனைகளைக் கண்காணித்தல்" என்பது பிடிபடவேயில்லை! ஓஷோவை நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது!  

Observing the observer,  I didn't get either. So you are not alone 

Link to comment
Share on other sites

  • 4 months later...

என்னை மிகவும் கவர்ந்த ஒரு தத்துவஞானி. நான் முதன்முதலில் வாசித்த நூல் “Limits of Thoughts", ஜே.கே மற்றும் டேவிக் போஹம். மிக அருமையான கலந்துரையாடல்.

இன்னொன்று “The awakening of intelligence", அறிவுசார் நூல்களில் ஒன்று.

Link to comment
Share on other sites

1 hour ago, Eelathirumagan said:

என்னை மிகவும் கவர்ந்த ஒரு தத்துவஞானி. நான் முதன்முதலில் வாசித்த நூல் “Limits of Thoughts", ஜே.கே மற்றும் டேவிக் போஹம். மிக அருமையான கலந்துரையாடல்.

இன்னொன்று “The awakening of intelligence", அறிவுசார் நூல்களில் ஒன்று.

வணக்கம் ஈழத் திருமகன், கன காலத்தின்பின் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான மனிதன் .நாம் யார் என்பது பற்றியும் எமது உள் மனங்களின் குடைந்து உருளும் அந்த நச்சு பாம்பு பற்றியும் மனித நேயம் மனித சிந்தனை உலக சமாதானம் இவை அனைத்தயும் அழகான மொழியில் மிகவும் தெளிவாக விழகிய பெரும் தத்துவமேதை என்று சொல்லலாம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.