Jump to content

உடற்பருமனாதல்:மருத்துவக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல! இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன்  மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்)

உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை  உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது  உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி!   ஆனால் முழுமையான ஆரோக்கியத்தைப் பேண இந்தக் குறிகாட்டியை மற்றைய பரிசோதனை முடிவுகளோடு இணைத்துப் பயன்படுத்துவது முக்கியம். உதாரணமாக, வருடாந்தம் உடற்பரிசோதனைகள் செய்யும் போது பெறப்படும் இரத்தக் கொழுப்பின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குழூக்கோஸ் அளவு என்பனவும் ஒருவரின் அனுசேபத் தொழிற்பாட்டின் ஆரோக்கியத்தை (metabolic health) முழுமையாக அளவிடுவதற்குப் பயன்படுத்தப் பட வேண்டும். 

- தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள் ஜஸ்டின்.........!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nilmini said:

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

உண்மையில் இரத்த குழாய்களில் ஏற்படும் காயங்களை குணமாக்கவே LDL படிகிறது, தொடர்ச்சியாக படிவதனால் அடைப்பு ஏற்படுகிறது. பசுமஞ்சள், கருந்துளசி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் பயன்பெறலாம்.

https://paleogod.blogspot.com/2018/03/by-neadner-selvan.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பருமன்: ஒரு வரவு செலவுக் குழப்பம்!

உடலின் சக்தித் தேவை, கட்டுமானம், தொழிற்பாடு என்ற மூன்று தேவைகளுக்குமாகத் தான் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்று பிரதான போசணைப் பொருட்கள் உள்ளெடுக்கப் படுகின்றன. இந்த மாபோசணைப் (macro nutrients) பொருட்களை உடலின் கலங்கள் பயன்படுத்த பல்வேறு நொதியங்கள் சிறப்பாகத் தொழிற்பட வேண்டும்: அதற்கு நுண்போசணைப் (micro nutrients) பொருட்களான விற்றமின்களும், கனிய உப்புகளும் அவசியம். இந்த மூன்று தேவைகளுக்காக நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், எங்கள் குடல் அதைச் சமிபாடடையச் செய்து, உறிஞ்சப் படக்கூடிய எளிமையான மூலக்கூறுகளாக மாற்றுகிறது. மாச்சத்து எந்த வடிவில் எடுக்கப் பட்டாலும், அது குளூக்கோசாகவும், பிரக்ரோசாகவும் மாற்றி  உறிஞ்சப் படுகிறது. புரதங்கள் அமினோ அமிலங்களாகவும், கொழுப்புணவு கொழுப்பமிலங்களாகவும் மாற்றப் பட்டு உடலினுள் பிரவேசிக்கின்றன. எனவே உடலின் கலங்களைப் பொறுத்த வரையில், அவை காண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் குளூக்கோஸ், சிறிது பிரக்ரோஸ், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பமிலம் ஆகிய மூலக்கூறுகளைத் தான். இவற்றுள் குளூக்கோஸ் உடற்கலங்களின் default ஆன சக்தி எரிபொருள்! குளூக்கோஸ் நேரடியாக கலங்களால் சக்தித் தேவைகளுக்காக எரிக்கப் படும் அதே வேளை, எஞ்சியது கிளைக்கோஜன் (glycogen) எனப்படும் சேமிப்புப் பொருளாக மாற்றப் பட்டு தசைகளிலும், ஈரலிலும் சேமிக்கவும் படுகிறது! உடல் பட்டினி கிடக்கும் போது, இந்த களஞ்சிய சேமிப்பில் இருக்கும் கிளைக்கோஜனைத் தான் குளூக்கோசாக மீள மாற்றி உடல் பயன்படுத்திக் கொள்ளும். இதே வேளை கொழுப்பமிலங்களும் நேரடியாக உடற்கலங்களின் சக்தி எரிபொருளாக எரிக்கப் படலாம். உண்மையில், ஒரு யுனிற் கொழுப்பை எரிப்பதால் வரும் சக்தி, ஒரு யுனிற் குளூக்கோசை எரிப்பதால் வெளிவரும் சக்தியை விட அதிகமானது! ஆனால், உடல் கொழுப்பை சாதாரண நிலைமைகளில் பிரதான சக்தி எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருக்க சில காரணங்கள் இருக்கின்றன. உடற்கலங்களின் பிரதான பாகங்களின் கட்டுமைப்புக்கு மட்டுமன்றி, உடலின் முக்கிய ஹோர்மோன்கள், நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பு , குருதி உறைதல் என உயிர்காக்கும் பல தொழிற்பாடுகளுக்கு கொழுப்பு அவசியம். எனவே, சாதாரண நிலைமைகளில் உடல் கொழுப்பை எரிக்காமல்  பாதுகாப்பது  மட்டுமல்ல, ஒரு படி மேலே சென்று தனது தேவைக்கதிகமான குளூக்கோசை கொழுப்பாகவும் மாற்றும் வேலையை ஈரல் மூலம் செய்கிறது. இதனால் தான் கொழுப்பைக் குறைத்தாலும், சோறு, பாண் போன்ற மாச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வோர் உடல் பருமனாதல் பிரச்சினையை எதிர் நோக்குகின்றனர். 

ஒரு சிக்கலான பிரச்சினையை நாம் அணுகும் போது, நாம் வனத்தையும் பார்க்க வேண்டும், அந்த வனத்தை உருவாக்கும் மரம் செடி கொடிகளையும் பார்க்க வேண்டும். மேலே சொல்லப்பட்டவை மரம் செடி கொடிகள். இப்போது முப்பதாயிரம் அடிகள் மேலெழுந்து, வனத்தைப் பார்த்தால் உடல் கொழுத்தல் என்பது தேவைக்கதிகமான போசணையும் குறைவான எரிப்பும் என்பதைக் காணலாம்.  உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய ஜீன்கள் (பரம்பரை அலகுகள், இவையே பெற்றோரிடமிருந்து எமக்குக் கடத்தப்படும் கூறுகள்) பல  கடந்த 10 ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. பரிசோதனை கூடங்களில், இந்த ஜீன்களில் சிலவற்றை எலிகளில் மாற்றிப் பரிசோதிக்கையில் அவற்றின் உடல் எடை சாதாரண எலிகளை விட இரட்டை மடங்காக அதிகரிப்பதைக் காண்கிறோம். இந்த எலிகள் சாதாரண எலிகளை விட அதிகம் சாப்பிடுகின்றன, ஆனால் குறைவாக சக்தியை எரிக்கின்றன. இந்த உடல் எடை தொடர்பான ஜீன்களில் முக்கியமானவை எங்கள் மூளையில் இருக்கும் ஹைப்போதலமஸ் என்ற பகுதியில் பசியைக் கட்டுப் படுத்தும் நியூரோன்களின் செயற்பாட்டுடன் சம்பந்தப் பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மூளையின் இந்தப் பகுதியை மையமாகக் கொண்ட மெலனனொகோர்ட்டின் (melanocortin) வலையமைப்பு எங்கள் பசி (hunger), பசியாறிய உணர்வு (satiety) என்பவற்றைக் கட்டுப் படுத்தும் பிரதான செயற்பாட்டு மையமாக இருக்கிறது. உடற்பருமனுடையோரில் மாறியிருக்கும் பிரதான ஜீன்களில் பல இந்த மெலனோகோர்ட்டின் கட்டமைப்புடன் நேரடித் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஆய்வு நடத்தப் பட்ட இனக்குழுக்களின் வகையைப் பொறுத்து, அதீத உடற்பருமனுடையோரில் இந்த மெலனோகோர்ட்டின் தொடர்பான பிரதான ஜீன் பிரச்சினை 2% முதல் 40% வரையாக இருக்கிறது. 

எமக்கான நல்ல செய்தி என்னவெனில், ஆசிய இனங்களில், இந்த பிரதான ஜீன் பிரச்சினை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், பரம்பரையாகக் கடத்தபடும் சீரியசான உடற்பருமன் பிரச்சினையால் ஆசியர்கள் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவு. இன வேறுபாடின்றி எல்லோருக்குமான நல்ல செய்தியும் இருக்கிறது:  எங்கள் பசியைக் கட்டுப் படுத்தும் ஜீன்களில் இருக்கும் பிரச்சினையால் மிதமான போசணை அதிகரித்தாலும், உடல் எடை கூடாமல் ஆரோக்கியமாக இருக்க உடல் எமக்கு ஒரு பிரதான வழியைத் திறந்தே வைத்திருக்கிறது. அந்த வழியின் பெயர் சக்திச் செலவழிப்பு! 

-தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 12:31 PM, ஏராளன் said:

உண்மையில் இரத்த குழாய்களில் ஏற்படும் காயங்களை குணமாக்கவே LDL படிகிறது, தொடர்ச்சியாக படிவதனால் அடைப்பு ஏற்படுகிறது. பசுமஞ்சள், கருந்துளசி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் பயன்பெறலாம்.

https://paleogod.blogspot.com/2018/03/by-neadner-selvan.html

ஏராளன், நீங்கள் இணைத்திருக்கும் கட்டுரை இணைப்பில் இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் கூட. அடிப்படையான உயிர் இரசாயனவியல் அறிவற்ற ஒருவரால் எழுதப் பட்ட கட்டுரை இது. மூளையில் அதிகம் கொழுப்பு இருப்பதால் அதிக கொழுப்பு நல்லது என்பதும், சிவப்பு இறைச்சி இதயத்தில் இருப்பதால் அதிக சிவப்பு இறைச்சி நல்லது என்பதும்  அரைவேக்காட்டு விளக்கங்கள். இந்த விளக்கத்தின் படி, நாம் கீரையும் காய்கறிகளும் சாப்பிட்டால் பச்சை நிறமாக மாறி விட வேண்டும்! அப்படி நடக்கிறதா? இல்லை! 

1. சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னிரின் (carnitine) என்ற மூலக்கூறு இதயநோயோடு தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறது. எங்கள் உடற்கலங்களில் சிறுமணிகளில் (mitochondria) இருக்கும் ஒரு மூலக்கூறு  இந்த கார்னிரின். அதனால் இதை விற்றமின் போல எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது என்ற போலி விஞ்ஞான தகவல், கார்னிரின் அதீத அளவில் இதய நோயை அதிகரிக்கும்  என்ற ஆய்வு முடிவினால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

2. கொலஸ்ட்ரோல் அதிகம் எடுத்துக்  கொண்டால் இதய குருதிக் கலன்களில் கொழுப்புத் திட்டு (atheroma) அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது என்பது Framingham Heart Study என்ற பல்லாயிரம் பேரைக் கொண்டு  நடத்தப் பட்டு வரும் ஆய்வின் முடிவு. மேலும் கொலஸ்ரோலின் LDL வகை ஈரலில் இருந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு கொழுப்பைக் காவிச் செல்வதால் அது குருதிக் கலன்களில் படிவைக் கூட்டுகிறது. HDL வகை உடலின் உறுப்புகளில் இருந்து ஈரலுக்கு கொழுப்பை எடுத்துச் செல்வதால் அது ஆரோக்கியமானதாக வகைப் படுத்தப் படுகிறது. 


3. பசு மஞ்சள், துளசி கொழுப்பைக் குறைக்குமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த தகவலை உங்கள் இணைப்பின் சொந்தக் காரரான அரைவேக்காட்டு விஞ்ஞானி எழுதியிருந்தால் அதுவும் புலுடாவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். 

ஆரோக்கியமற்ற போலி விஞ்ஞானத் தகவல்களை நம்பாமல், உரிய ஆதாரங்களுடனான தகவல்களை மட்டுமே இங்கு இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆரோக்கியமற்ற போலி விஞ்ஞானத் தகவல்களை நம்பாமல், உரிய ஆதாரங்களுடனான தகவல்களை மட்டுமே இங்கு இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 

ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவினர் விஞ்ஞானிகள் இல்லை, கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். உணவு பழக்கங்களை மாற்றி தம்மை தாமே ஆராய்ந்து தற்போதைய நவீன ஆய்வுகூட இரத்த பரிசோதனைகள் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தியுள்ளதை நிரூபித்துள்ளனர்.
என்னை விட நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். குழுவிற்குள் சென்று சற்று வாசித்து பாருங்கள், நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை.
நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவினர் விஞ்ஞானிகள் இல்லை, கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். உணவு பழக்கங்களை மாற்றி தம்மை தாமே ஆராய்ந்து தற்போதைய நவீன ஆய்வுகூட இரத்த பரிசோதனைகள் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தியுள்ளதை நிரூபித்துள்ளனர்.
என்னை விட நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். குழுவிற்குள் சென்று சற்று வாசித்து பாருங்கள், நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை.
நன்றி அண்ணா.

ஏராளன், மருத்துவரோ அல்லது உயிரியல் தெரிந்த கல்வியாளரோ உங்கள் இணைப்பில் உள்ள கட்டுரையை எழுதியதாக நான் நம்பவில்லை! உங்களுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் கட்டுரையைக் காட்டிப் பாருங்கள், அவரும் இதையே சொல்வார்! உயிரியல் அடிப்படை இல்லாத முட்டாள் தனமான கருத்துகள் அதில் இருப்பவை! அவர்களின் தங்கள் மீதே அவர்கள் செய்து கொண்ட பரிசோதனை இந்த கட்டுரையின் அடிப்படையில் இருக்குமானால் அவர்களின் பரிசோதனைகளும் ஏமாற்றுத் தனமானவையாகவே இருக்கும் என நான் ஊகிக்கிறேன்! இது போன்ற நிரூபணமாகாத முட்டாள் தனங்களை யாரும் நம்புவது அவர்களது உரிமை! ஆனால், அதைப் பரப்பும் போது அதன் அடிப்படை பற்றிய கேள்விகள் எழும்! இது போன்ற போலி விஞ்ஞானக் கருத்துகள் கொண்ட இணைப்புகளை இங்கே இணைக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 12:03 PM, nilmini said:

Very good info Justin. This is my contribution.

பதப்படுத்திய உணவு வகைகளில் பொதுவாக எண்ணெய் இருக்கும். இந்த  எண்ணெய் ஹைட்ரஜன் (H)  சேர்க்கப்பட்டதால் அறை வெப்பநிலையில் கட்டியாக இருக்கும். மேலும் நிறைய காலத்துக்கு பழுதாகாமல் கடையில்  வைத்து விக்கலாம். ஆனால் இந்த  ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட  எண்ணெய் LDL எனப்படும்   கெட்ட கொலஸ்டெராலை கூட்டி  HDL  எனப்படும் நல்ல குறைக்கும். இந்த கெட்ட LDL  தான் எமது  ரத்த குழாய்களை அடைத்து விடுகிறது. கடலை என்னை, நல்லெண்ணெய்  ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய்  என்பவை LDL குறைந்தவை. மரக்கறி என்னை, margarine போன்றவை மிகவும் கூடாத எண்ணெய் வகைகள். பதப்படுத்தி கடயில் விக்கும் எல்லா உணவுகளும்  transfat  என்னும் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்ட  எண்ணெய் உள்ளவையே 

நில்மினி, தகவலுக்கு நன்றி! ஆனால் அமெரிக்காவில் 2018 ஜூன் முதல் உணவுகளில் transfat பயன்படுத்தத் தடை! இன்னொரு விடயம்: ஆரோக்கியமான எண்ணையில் எப்படி தேங்கயெண்ணை வந்திருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை! பாமிற்றிக் அமிலம் என்ற நிரம்பிய கொழுப்பமிலம் மிகவும் நிறைந்தது தேங்கயெண்ணை (அதனால் தான் ஊரில் மாசிமாதக் குளிரில் தேங்காயெண்ணை நெய் போல உறைந்து விடும்!). இப்போது தேங்கயெண்ணை நல்லது ஒலிவ் எண்ணை கூடாது என்பதும் எங்கள் தமிழ் ஆட்கள் நம்பும் ஒரு fake news தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Candid ஆக சில விடயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது! அதைச் சொல்லி விட்டு விடை பெறலாமென நினைக்கிறேன்!

பேலியோ உணவு முறை பற்றி அது வேலை செய்வது பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை! ஆனால், இந்த பேலியோ முறையை வியாபாரமாக மாற்றுவோரின் உயிரியல் விளக்கம் என்பது எந்த அடிப்படையும் அற்ற முட்டாள் தனமான கற்பனை என்பது எனக்கு விளங்குகிறது. முறைசார் ரீதியாக உயிரியல் படித்து அதையே தொழிலாகச் செய்யும் எவருக்கும்விளங்கும்! இதை இலகு தமிழில் இங்கே சொல்லவே இந்தத் தொடர் தொடங்கப் பட்டது! இங்கே மோட்டுத் தனமான அரைவேக்காட்டு இணைப்புகளை இணைக்காதீர்கள் என்று டீசன்டாகத் தான் கேட்கப் பட்டது! அதைக் கூட கேட்க முடியாத முட்டாள் தனத்தோடு என் நேரம் விரயமாவதை நான் விரும்பவில்லை!

இத்தொடர் இத்துடன் முற்றுப் பெறுகிறது! ஏராளன் இதைத் தொடர்ந்து தன் "போலி விஞ்ஞான" விளக்கங்களால் உங்களுக்கு நன்மை பயப்பார்! ஆதரவுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்கள் எழுத்தை தொடருங்கோ, நான் வாசிக்கிறேன்.
இடையூறு செய்யும் ஆசையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2019 at 7:18 PM, Justin said:

இத்தொடர் இத்துடன் முற்றுப் பெறுகிறது! ஏராளன் இதைத் தொடர்ந்து தன் "போலி விஞ்ஞான" விளக்கங்களால் உங்களுக்கு நன்மை பயப்பார்! ஆதரவுக்கு நன்றி!

ஜஸ்ரின் அண்ணா உங்கடை எழுத்தை குழப்ப இணைப்புகளை இணைக்கவில்லை, அதில் இருப்பதை வாசித்து எங்களுக்கும் தெளிவுபடுத்துவீர்கள் என்று நினைத்தேன்.
நீங்கள் ஆரம்பிக்கும் திரிகளில் இனிமேல் ஒன்றும் எழுதமாட்டேன்.
உங்கள் எழுத்தை தொடருங்கோ, தவறு ஏதும் செய்திருப்பின் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஜஸ்டின் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...விமர்சனங்களை வாசிக்காமல், அல்லது வாசித்தாலும் கருத்தில் கொள்ளாமல் தொடருங்கள்...என் போல் ஒரு சிலருக்காகவாவது தொடரலாம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்கள் கடந்து இந்தத் திரி தொடர்வதால் ஒரு முன்கதைச் சுருக்கம்: மாச்சத்தையும், கொழுப்பையும் குறைவாக எடுத்துக் கொள்ளும் போது நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைகிறது. உடல் உழைப்பை அதிகரிக்கும் போது உடல் எரிக்கும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. இந்த இரண்டு வழிகளால் உடலின் போசணையை சமநிலையில் வைத்திருப்பதால் உடற்பருமனாதலை பெரும்பாலானோரில் தடுக்கலாம் என்பது ஐந்தாறு தசாப்தங்களாக மீள மீள நிரூபிக்கப் பட்ட மருத்துவ உண்மை.

 உடற்பயிற்சியின் அறியப் பட்ட நன்மைகள் எவையென்று பார்க்தால் ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.  உடற்பயிற்சி:

  •  உடற்பருமனைக் குறைக்கிறது
  • இதய குருதிக்கலன் நோய்களைக் குறைக்கிறது
  • நீரிழிவு வரும் வாய்ப்பைக் குறைக்கிறது
  • வயது முதிர்ச்சியால் ஏற்படும் ஞாபக மறதியையும் (dementia) மூளையின் வினைத்திறன் இழப்பையும்       குறைக்கிறது
  • பாலுணர்வை (libido) இருபாலாரிலும் அதிகரிக்கிறது
  • மன அழுத்தம் (depression) , மனப்பதட்டம் (stress) என்பவற்றைக் குறைக்கிறது.

அனேகமான இந்த நன்மைகள் உடற்பயிற்சியின் போது அதிகரிக்கும் இரத்தவோட்டம் உடலுறுப்புகளுக்கு அதிகரித்த ஒட்சிசனையும் போசணைகளையும் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது. இதை விடவும், சில நன்மைகளுக்கு அடிப்படையான  சிறப்புக் காரணிகளைக்  கண்டறிந்திருக்கிறார்கள்.உதாரணமாக, நாம் சந்தோசமாக இருக்கும் வேளைகளில் எங்கள் மூளையில் சுரக்கும் என்டோர்பின்கள் (endorphin)  எனப்படும் சுரப்புகள் உடற்பயிற்சியின் போது அதிகம் சுரப்பதால் மன அழுத்தமும் பதகளிப்பும் குறைவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உடற்பயிற்சியினால் சிறிது அதிகரிக்கும் ரெஸ்ரோஸ்ரிறோன் எனும் ஆண் ஹோர்மோன் (இது பெண்களிலும் சிறிது இருக்கிறது), பாலுணர்வு அதிகரிப்பிற்குக் காரணமாக அறியப் பட்டிருக்கிறது. இந்த ஹோர்மோன் வெறுமனே பாலுணர்வை அதிகரிப்பதற்காகவல்லாமல், உடலின் சக்தி எரிப்பை ஊக்குவிக்கவும் தசைகளை எதிர்கால உடற்பயிற்சிக்குத் தயாராக பலப்படுத்தவுமே சுரக்கப்படுகிறது என்று நம்பப் படுகிறது.

எனவே, உடற்பயிற்சி உடல்பருமன் உட்பட பல உபாதைகளுக்கு  நல்ல நிவாரணி என்பது கேள்விகளுக்கிடமற்ற ஒரு தரவு. ஆனால், எவ்வளவு உடற்பயிற்சி இந்த நன்மைகளையடைய அவசியம் என்பது மட்டும் தான் கடந்த சில ஆண்டுகளில் விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறது. தற்போதைய அறிவியலின் படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான சக்தி செலவழிக்கும் உடற்பயிற்சி மேற்சொன்ன நன்மைகளை பெரும்பாலான மக்களில் ஏற்படுத்தப் போதுமானது.

நடை, வேகநடை மிதமான உடற்பயிற்சியாகவும், 10 நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடுதல் தீவிர உடற்பயிற்சியாகவும் பெரும்பாலானோரில் உதாரணப் படுத்தப் படலாம். சும்பா (Zumba) போன்ற குறுகிய நேரத்தில் அதிக கலோரி எரிக்கும் பயிற்சிகளும் தீவிர உடற்பயிற்சியின் உதாரணங்கள். உடற்பயிற்சியின் தீவிரம் என்பது உங்கள் உடல் நன்கு பயிற்சிக்கு பழக்கமடையும் போது மாறுவதை நீங்கள் உணர்வீர்கள். வேகநடையை பல மாதங்களாகச் செய்து வரும் ஒருவர், ஒரு கட்டத்தில் அதனால் களைப்படையாது போகும் கட்டத்தில், ஓடுதல் போன்ற தீவிர உடற்பயிற்சிகளுக்கு மாறுவதால் கலோரி எரிப்பைப் பேணலாம்.

 கலோரி எரிப்பிற்காக சுவாசத்தை அதிகரிக்கும் aerobic பயிற்சிகளையே மேலே நாம் பார்த்தோம். உடற்பயிற்சியின் இன்னுமொரு முக்கியமான, ஆனால் அனேகம் புறக்கணிக்கப் படும், வகை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளாகும் (resistance or weight training). உடல் அழகுக்காக தசைகளைக் கட்டமைக்கும் பயிற்சிகள் உடல் வனப்பையும் தாண்டி எமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தசைகளை முறுக்கேற்றும் பழுதூக்குதல் போன்ற பயிற்சிகள்  கலோரி எரிப்பை கொஞ்சம் அதிகரிக்கின்றன. வலுவான தசைகள், குறிப்பாகக் காலின் தசைகள், வேகநடை, ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளின் போது எமது மூட்டுக்கள், சவ்வுகள் அதிகம் சேதமாகாமல் காக்க அவசியமானவை என்று ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். தசைக்கட்டமைப்புப் பயிற்சிகளால் ரெஸ்ரெஸ்ரிறோன் ஹோர்மோன் நன்கு அதிகரிப்பதால், மேலே நாம் குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும்.

உடலில் இன்சுலின் சுரந்தாலும் உடற்கலங்கள் குழூக்கோசை உள்வாங்க இயலாத நிலை இரண்டாம் வகை நீரிழிவு (type 2 diabetes, T2D)எனப்படுகிறது. இந்த வகை நீரிழிவு தான், மிகையான போசணை, உடற்பருமன் அதிகரிப்பு, உடற்பயிற்சியின்மை என்பன அதிகரித்த மேற்கு நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப் பட்ட ஒரு ஆய்வில், இந்த வகை நீரிழிவுடைய நோயாளிகளின் தொடையின் சுற்றளவை பழுதூக்கும் பயிற்சிகளால் அதிகரித்தால், அவர்களது நீரிழிவு கட்டுப் பாட்டுக்குள் வந்ததை அவதானித்தார்கள். இது எப்படி நிகழ்கிறது?  எமது தொடைப்பகுதியில் உள்ளவை உடலின் பாரிய தசைகளாகும். இந்தத் தசைகளைப் பயிற்சியினால் பெருப்பித்தால் அவற்றின் குழூக்கோஸ் தேவையும் அதிகரித்து, இரத்தத்தில் இருந்து குழுக்கோசை அவை பசியோடு உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் மிகக் குறைந்த மருத்துவத்துடனேயே இரத்தக் குழுக்கோஸ் கட்டுப் பாட்டில் வந்து விடுகிறது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் ஒரு தசையைப் பயிற்சியினால் பெருப்பித்தால் நீரிழிவு கட்டுப் பாட்டில் வருகிறதெனில், எங்கள் கைகள், தோள்கள், முதுகு  என சகல தசைகளையும் பயிற்சியினால் பெருப்பித்தால் எவ்வளவு இலகுவாக உடலின் குழூக்கோசைக் கட்டுப்படுத்தலாம் என யோசித்துப் பாருங்கள். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு தான் வாரம் 150 நிமிட கலோரி எரிப்புப் பயிற்சியோடு, வாரத்தில் இரண்டு தடவையாவது பழுதூக்குதல் போன்ற தசைப் பயிற்சிகளையும் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உள்ளெடுக்கும் கலோரியைக் குறைத்தல், எரிக்கும் கலோரியை அதிகரித்தல், இதற்கு உதவியாக உடல் தசைகளை வலுப்படுத்திப் பெருப்பித்தல் ஆகியன உடற்பருமனைக் குறைக்க உதவும் எனப் பார்த்தோம். ஆனால், இந்த உடற்பருமனாதல் சமன்பாட்டில் முக்கியமான இன்னொரு அம்சமாக மனப்பதகளிப்பு (stress) இருக்கிறது. மனப்பதகளிப்பும், தூக்கமின்மையும் எப்படி உடற்பருமனாதலை அதிகரிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். அதைத் தொடர்ந்து, நாம் உண்ணும் கொழுப்பு வகைகள், எமக்குள் இருக்கும் குடல் நுண்ணங்கிகள் எப்படி  உடற்பருமனாதலைப் பாதிக்கின்றன என்றும் பார்ப்போம்.

-தொடரும்    

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.