Jump to content

குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை!


Recommended Posts

குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை!

 
 

இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும்  அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைப்பது வெடிகுண்டு பயங்கரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குமிடையே இருக்கும் ரகசிய டீலிங் தற்போது அம்பலமாகியிருக்கிறது. 

 

srilanka incidents



அமெரிக்கா, சீனா, இந்தியா, நார்வே, பிரிட்டன், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில் தமிழீழத்தை அழித்தொழித்தனர் ராஜபக்சேவும் சகோதரர்களும். யுத்தம் முடிவுக்கு வந்தது. சீனா மற்றும் பாகிஸ்தானின்  செல்லப்பிள்ளையாக மாறினார் மகிந்தா. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரிட்டன், நார்வே நாடுகளின் உதவியுடன் 2015-ல் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தாவை வீழ்த்த, மைத்ரியை அதிபராக கொண்டு வந்தது அமெரிக்கா. ஆனால், மைத்ரியும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். 

 

rajapaksay



இந்தச் சூழலில்தான், கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை பலப்படுத்தி வருகிறார் கோத்தபய ராஜபக்சே. இரட்டை குடியுரிமையாக அமெரிக்காவின் குடியுரிமையையும் பெற்றவர்.  இலங்கைக்கு அடுத்தாண்டு அதிபர் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் மைத்ரியை வீழ்த்தி கோத்தபயவை அதிபராக்க கடந்த 6 மாதகாலமாக ரகசிய வியூகங்களை மேற்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதன் ஒரு கட்டமாக, கோத்தபயவின் அமெரிக்க குடியுரிமையை ரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்சே சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 

srilanka primeminister



இது குறித்து நம்மிடம் பேசும் இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய  தமிழீழ ஆதரவாளர்கள், "இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை  பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபய, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். தனது இமேஜுக்கு பாதிப்பில்லாமல், அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை வித்ட்ரா செய்தது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபயவின் கோரிக்கை. அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் கோத்தபய போட்டியிடுவது கசியக்கூடாது என்பதற்காகவே குடியுரிமை ரத்து ரகசியமாக வைக்கப்படுகிறது. கோத்தபயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றன. அதிபர் தேர்தல் வரை இலங்கையை பதட்டத்திலேயே வைத்திருக்க திட்டமிடுகிறது அமெரிக்கா'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமெரிக்க-கோத்தபயவின் இந்த ரகசிய திட்டங்களுக்கு செக் வைத்திருக்கிறார், ராஜபக்சே கும்பலால் 2009-ல் படுகொலை செய்யப்பட்ட இலங்கை "சண்டே லீடர்' பத்திரிகையின் இணையாசிரியர் லசந்தா விக்ரமதுங்கேவின் மகள் அகிம்ஷா விக்ரமதுங்கே. மகிந்தாவின் நண்பராக இருந்தபோதும் அவரது அரசியல் படுகொலைகளை அம்பலப்படுத்திய லசந்தா, இதன்காரணமாக, ராஜபக்சே சகோதரர்களால், தான் கொல்லப்படலாம் என்பதை சண்டே லீடரில் பதிவு செய்தார். அது அச்சாகி ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் என குற்றம்சாட்டி வந்தார் லசந்தாவின் மகள் அகிம்ஷா விக்கிரமதுங்கே. 

அவரது தற்போதைய செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், "கோத்தபயவின் நடவடிக்கைகளை அறிந்த அகிம்ஷா, அமெரிக்காவில் தனது நண்பர்களான சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் எனவும், இவர்மீது நிறைய போர்க்குற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் கோத்தபயவிற்கு எதிராக ஏப்ரல் 7-ந் தேதி வழக்குத் தொடர்ந்தார் அகிம்ஷா. நீதிமன்றம் 10-ந் தேதி கோத்தபயவுக்கு சம்மன் அனுப்பியது. அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபய மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும்வரையில் குடியுரிமையை ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ முடியாது. கோத்தபயவை அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே அவர் மீது அகிம்ஷா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா அரசின் உயரதிகாரிகளின் உதவியுடன் வழக்கை தடுத்து நிறுத்த கோத்தபய முயற்சிப்பார் என யோசித்த அகிம்ஷாவின் சட்ட நிபுணர்கள், கோத்தபய மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனையும்  அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்'' என விவரித்தனர். அமெரிக்கா+கோத்தபய கூட்டுச் சதியில் இலங்கை அரசியல் களம் அதிர்ந்து அலறுகிறது.

https://www.nakkheeran.in/special-articles/special-article/america-involved-srilnaka-issues-srilanka-government-shocked?fbclid=IwAR3FfkjRRcP1wojiaY1UR9ELcDQDYxygPrngwnFVTVcCPS4KyWyBpr7WGNo

Link to comment
Share on other sites

மகிந்த அண்ட் கோவின் இன்றைய கதாநாயகன் கோத்தா. தமிழர்களின் பெரும்பாலான வாக்குகள் கிடைக்காது என்ற நிலையில் முஸ்லீம்  மக்களையும் எதிர்க்க முடிவெடுத்துள்ளார் போல தெரிகின்றது. 

தேசிய வாதம் கொண்ட சிங்களவர்களை, மேலும் கிறிஸ்த சிங்களவர்களை நம்பியே தேர்தல் களத்தில் கோத்தா இறங்கியாகவேண்டும். 

எனவே மீண்டும் தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் தேர்தல் வெற்றிக்கு இரையாக்கப்படக்கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009இன் பின்  ஒரு வேலையும் இல்லாமல் இருந்த அந்த  2 பியர் அடிச்சிட்டு வானொலியிலும் தமிழ் பத்திரிககைளிலும் பக்கம் பக்கமாக மணித்தியால கணக்கில் பொழந்து கட்டின நம்ம அரசியல் ஆய்வாளர்கள் மறுபடியும் கிளம்பிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.