Jump to content

புலிகள் என தமிழர்களை பார்த்ததுபோல் பயங்கரவாதிகள் என முஸ்லிம்களை பார்க்க வேண்டாம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்.

maithiri.jpg

பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி சிறப்புரையை நிகழ்த்தினார். 

இதில் அவர் கூறுகையில்.  

இந்த பிரச்சினை இலங்கையின் பிரச்சினை அல்ல இது சர்வதேச பிரச்சினை, இந்த பிரச்சினை குறித்து பின்னணி தெரியாது பலர் பேசுகின்றனர். கண்மூடித் தனமாக இந்த பிரச்சினை குறித்து பேசுகின்றனர். ஆகவே இது குறித்து அனைவரும் முதலில் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும். 

இன்று பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பின் நாட்டினை மீட்டுள்ளோம் என்பதே உண்மை. இப்போதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் பலர் சந்தேகநபர்கள். இதுவரை நேரடிக் குற்றத்தில்  சிலர் தொடர்புபட்டுள்ளனர்.. இவர்களின் 12   முக்கியமான பயங்கரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பல பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த பயங்கரவாதிகளுடன்  தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்கு  பிரதான பயங்கரவாதிகளினால்  ஒரு நபரிடம் 20 இலட்சம் ரூபாய்கள்  வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுதுறையினால் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல்  15 வாகனங்கள், 4 மோட்டார் சைக்கிள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்த மேலதிக  விசாரணை வெற்றிகரமாக முன்னகர்கின்றது. 

இன்று நாட்டுக்குள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட 150க்கும் குறைவான பயங்கரவாத நபர்கள் உள்ளதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்கான ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 83 கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவ நம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகால யுத்தத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. 

ஆகவே  இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம்.  அதேபோல் எமது பாதுகாப்பு படைகள் மற்றும் எமது புலனாய்வு குறித்து நம்பிக்கைவைத்து செயற்பட வேண்டும். பாதுகாப்பு படைகளுக்கு நான் அதிகாரம் கொடுத்துள்ளேன். நான் இன்று முழுமையான அதிகாரங்களை இராணுவத்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் தமது கடமையை சரியாக செய்து வருகின்றனர். புலனாய்வு, பாதுகாப்பு படை, பொலிஸ் துறையை புனர்நிர்மாணம் செய்து வருகின்றேன். கடந்த காலங்களில் பொலிஸ் துறைக்கு அதிகாரம் வழங்கவில்லை. நான் இவற்றை பொறுப்பேற்ற பின்னர் மாற்றியமைத்தேன். எவ்வாறு இருப்பினும் இன்று பாதுகாப்பு படைகள் பலமாக உள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சகலரும் கைதுசெய்யப்படுவார்கள். 

http://www.virakesari.lk/article/55492

Link to comment
Share on other sites

ஆகவே  இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம்." 

பெரும்பாலான தமிழர்கள் விடுதலைப்புலிகளை தமது இனத்தின், இழந்த அடிப்படை உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கி, ஐ.நா.வின் மற்றும் சர்வதேச சுயநிர்ணய உரிமைக்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் போராடியவர்களாக பார்க்கின்றனர். அந்த போராட்டம் அகிம்சை மற்றும் அரசியல் முறைகளால் போராடி மறுக்கப்பட்ட நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டது. 

ஐ.எஸ் போன்ற அமைப்பானது ஒரு மதபேரினவாத, ஒரு பிற்போக்கான சிந்தனைக்கு வடிவம் கொடுக்க போராடுகின்றது. தமது கொள்கையை ஏற்காத இஸ்லாம் உட்பட்ட எல்லா மதங்களையும் அழிக்க வேண்டும் என போராடிவருகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

விசயம் வேறை எண்டு சொல்ல வாறார் போல கிடக்கு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.