Jump to content

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை?

உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார்.

கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

”இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தபின், அதில் இருந்து திரும்பி அபாரமான ஆட்டத்தை நான்கு வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் அதிக அளவில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமீபகாலமாக அவர்களது விளையாட்டை பார்த்தீர்கள் என்றால், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில உலகக் கிண்ண தொடரை பார்த்தீர்கள் என்றால், தொடரை நடத்திய நாடுதான் கிண்ணத்தை வென்றுள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதும் நடக்கலாம். இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் மோத வேண்டும்” என கூறினார்.

எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் பெரும்பாலும் இங்கிலாந்து அணியே சம்பியன் பட்டம் வெல்லும் என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணிக்கு இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் கடும் சவாலாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.

இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/உலகக்கிண்ண-கிரிக்கெட்-தொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இனிமேல் போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவியாக இருக்குமோ?

28 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாகருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இது இனிமேல் போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவியாக இருக்குமோ?

 

காதைக் குடுங்கோ. ஒரு சின்ன இரகசியம்!

இன்னும் போட்டியில் பங்கு பற்றாமல் இருப்பவர்கள் கலந்துகொள்ள வந்தால் கவாஸ்கரை நம்பிக் கவிழவேண்டும் என்ற ஐடியாவோடுதான் இந்தச் செய்தியை வெட்டி ஒட்டினேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

காதைக் குடுங்கோ. ஒரு சின்ன இரகசியம்!

இன்னும் போட்டியில் பங்கு பற்றாமல் இருப்பவர்கள் கலந்துகொள்ள வந்தால் கவாஸ்கரை நம்பிக் கவிழவேண்டும் என்ற ஐடியாவோடுதான் இந்தச் செய்தியை வெட்டி ஒட்டினேன்! 

அப்ப இது உபத்திரவமாகவே இருக்கப் போகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.