Jump to content

ராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனைகளிலிருந்து  விலக்களிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மைத்திரி

ராணுவ , விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள், குறிப்பாக உளவுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கடமையின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக தண்டனைகளை அனுபவிப்பதைத் தடுக்கும் முகமாக, "விலக்களிப்பு பரிந்துரை" ஒன்றை முன்னால் படை அதிகாரிகள் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்தபோது, அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதிக்கான இலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது. 

எதிர்க்கட்சித் தலைவர், முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபெய ரஜபக்ஷ மற்றும் முன்னால் ராணுவ, கடற்படை விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட இப்பரிந்துரைகளை முன்னால் ராணுவத்தளபதியும் போர்க்குற்றவாளியுமான ஜகத் ஜயசூரிய, கொழும்பு மற்றும் தெற்கில் பல தமிழ் மக்கள் கடத்திக் கொல்லப்பட்டமைக்குக் காரணமான வசந்த கரன்னகொட மற்றும் விமானப்படையின் ரொஷான் குணதிலக ஆகியோர்ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர். 

தனது நாட்டு ராணுவத்தினரைத் தண்டனைகளிலிருந்து காத்துவரும் சரித்திரத்தைக் கொண்ட இலங்கையரசு 1980 களில் நிறவேற்றிய சட்டமொன்றின் மூலம் பாரியளவில் மனிதவுரிமைகளில் ஈடுபட்டு வரும் தனது படைகளைக் காத்து வந்திருக்கிறது. ஏறக்குறைய ராணுவத்திற்கெதிரான தண்டனைகளை முற்றாக மறுதலிக்கும் இச்சட்டங்களைப் பயன்படுத்தி, தெற்கில் சிங்கள இளைஞர்களுக்கெதிரான பாரிய படுகொலைகளையும், வடக்குக் கிழக்கில் தமிழருக்கெதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கெதிரான குற்றங்களையும் இலங்கை ராணுவம் புரிந்திருக்கிறது என்றும் இச்செய்தி கூறுகிறது. 

http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/882-sri-lanka-president-accepts-proposal-to-legalise-impunity-video

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.