Jump to content

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 3 மீன் வளர்த்தல்


Recommended Posts

2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள்.   

ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   

அவர்களது கட‌ற்றொழில் சார் நடவடிக்கைகள், சட்ட ரீதியற்ற வகையில் அமைந்து, தமிழ் மீனவர்களது பொருளாதாரத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது; கடல்வளம் சூறையாடப்பட்டது.   

இவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்த வந்த மீனவர்கள், கடற்கரை ஓரங்களிலும் வீதி ஓரங்களிலும் வாடிகள் அமைந்து, தொழில் புரிந்து வந்தனர். இது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்; ஆனால், முல்லைத்தீவு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது.   

இவ்வாறாக, முல்லைத்தீவில் சாலை என்ற இடத்தில் மட்டும் சுமார் 2,500 முஸ்லிம், சிங்கள மீனவர்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி அசம்பாவிதங்களை அடுத்து, அவர்கள் முல்லைத்தீவிலிருந்து ஓட்டமெடுத்து வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிழையாக-வழிநடத்தும்-மதவாதமும்-இனவாதமும்/91-232842

Link to comment
Share on other sites

அலங்கார மீன் வளர்ப்பு  

ஒரு சுய தொழில் அடிப்படையில் இல்லை ஒரு சில குடும்பங்களாக இணைத்து இந்த மீன் வளர்ப்பை செய்யலாம். அது சந்தைப்படுத்தி ஒரு சுய தொழில் வருவாயை செய்யலாம். 

நன்னீர் மீன்கள், குட்டி ஈனுபவை மற்றும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என இரு வகைப்படும். குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்பவைகளில் கப்பி, மொலி, பிளாட்டி, ஸ்வோர்ட்டேய்ஸ் ஆகியவைகள் சாதாரணமாகக் கண்ணாடித் தொட்டியை அலங்கரிப்பவை.

கப்பி: ஆண் மீன்கள் 2.5 செ.மீ. நீளமும், பெண் மீன்கள் 5 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 7.5-8.5 கார அமில நிலையும் வளர்ப்பிற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலையும் (26-30 டிகிரி செ.கி) ஏற்றவை. 4-6 வார காலத்திற்கு ஒருமுறை 50 குட்டிகளை இடுகின்றன.

மோலி: கறுப்பு, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சாக்லேட் நிறமுடையவை. 9 செ.மீ. நீளமும், 10-15 கிராம் எடை வரையிலும் வளர்பவை. 5 வாரத்திற்கு ஒரு முறை 250 குட்டிகளை இடும். ஆண் மீன்களின் முதுகுத் துடுப்பு நிமிர்ந்து விசிறி போல் காணப்படும்.

பிளாட்டி: பல்வேறு வண்ண வகையினை உடையது. ஆண் மீன்கள் 4 செ.மீ. வரையிலும், பெண் மீன்கள் 5 செ.மீ. வரையிலும் 3-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 50-75 குட்டிகளை இடும். 10 பெண் சினை மீன்களுக்கு ஒரு ஆண் மீன் என இருப்பு செய்ய வேண்டும்.

ஸ்வோர்ட்டெய்ல்: ஆண் மீன்கள் 8 செ.மீ. வரையிலும் பெண் மீன்கள் 12 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 5 பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் போதுமானது. ஆண்மீனின் வால் துடுப்பு வீரனின்வாள் போல் நீண்டு வனப்புடன் காணப்படும்.

எல்லா வகையான குட்டியிடும் அலங்கார மீன்களுக்கும் நீர்ப்பாசிகள் மறைவிடமாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகின்றன. புழு, பூச்சி போன்ற உயிர் உணவுகளையே மீன்கள் விரும்பி உண்கின்றன. எனவே சினை மீன்களின் இனப்பெருக்க உணர்ச்சியினைத் தூண்ட புரதம் நிறைந்த உணவுகளையும் தகுந்த மறைவிடங்களையும் அளித்து குட்டிகளைப் பாதுகாத்து உற்பத்தி செய்ய வேண்டும்.

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்களில் கோய் கெண்டை, செவ்வால் சுறா, பொன்மீன், ரோசி பாரிப், டைகர் பாரிப், டெட்ரா, கவுராபி, பைட்டர், ராமிரன் நீல சிக்ளிட், அவுரோங்கல், ஏஞ்சல், ஆஸ்கார் ஆகியவை கண்ணாடித் தொட்டிகளை அலங்கரித்து கண்களுக்கு விருந்தூட்டுபவை. வியாபார ரீதியில் வளர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவை.


பொன்மீன்: சிவப்பு ஒராண்டா, சிங்கத்தலை, முட்டைக்கண் முத்துச்செதில், காரிகோ, கருப்புமூர் போன்ற நூற்றுக்கணக்கான வகையான பொன்மீன்கள் உள்ளன. இம்மீன்கள் தாவர மற்றும் புழுபூச்சி போன்ற மாமிச உணவுகளை உண்டு 4 மாதகாலத்தில் 20 முதல் 25 கிராம் உடல் எடையினைப்பெறும். 5 முதல் 6 மாத காலத்தில் பருவ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. காரத்தன்மையுடையதும் (7.5 – 8.5) மிதமான வெப்பநீரும் (25-28.5 டிகிரி செ.கி), மித கடின நீரும் (150-250 மி.கி/லி) பொன் மீனுக்கு ஏற்ற நீர்ச்சூழல் குணங்கள் 25 கிராம் எடையுள்ள பொன்மீன் கிட்டத்தட்ட 750 ஒட்டும் தன்மையுள்ள முட்டைகளை நீர்ப்பாசிகளில் இடுகின்றன.

சிறிய நூல் போன்ற நுண் குஞ்சுகள் 65-72 மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. பொன்மீன்களைத் தொட்டிகளில் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

-நன்றி–டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
-தகவல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை


பொன் மீன் வளர்த்தல் பற்றிய காணொளி - தமிழில் 
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

வடமாகாணம் 40% கடல் சார்ந்த கரைப்பரப்பை கொண்டது. 

இதனுடன், பல சிறு தீவுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடல் சார்ந்த நீர்ப்பரப்புக்களை கொண்டது. மீன்பிடிப்பிற்கு, மீன் வளர்ப்பதற்கு தமிழர் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த சூழல் உதவும்.  

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தகவல்படி 40% மீனை எமது வடநிலம் கொண்டிருந்தது 

This ADB report states “In 1983, prior to escalation of the conflict, the Northern Province, which has 40% of the nation’s coastal belt, accounted for 40% of its marine fish catch”. Data from the Ministry of Fisheries for 1981 which I found in a report by the United Nations’ Food and Agriculture Organisation (FAO) shows that in that year Jaffna District (until 1984 Killinochchi was part of Jaffna District) contributed 25% of Sri Lanka’s coastal fish production, with Mullaitivu and Mannar contributing a further 13.9%.

 

FisheryAreas.png

 

புதீய நவீனமுறைகளை மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து மீன்வளர்ப்பை கொண்டு செல்லலாம். 

1 கடல்மீன் வெள்ளரி ( sea cucumber)   : 2017ல் 28.75 துடிக் மெட்ரிக் தொன்  அளவில் இந்த வகையான மீனை மன்னர், கிளிநொச்சி மற்றும் யாழில் தனிப்பட்ட நிறுவனம் வளர்த்துள்ளது 

Vegetarian Sea Cucumber/Vegetarian Food/Frozen Food/Healthy Food/Sea Cucumber in Vegetarian

2. கரற்பாசி வளர்ப்பு ( see weed)  : 2017 692 மேட்ரிக் தொன் யாழிலும் புத்தளத்திலும் தனிப்பட்ட நிறுவனம் வளர்த்துள்ளது.

Image result for seaweed

 

3. கடல் பாஸ்  Seabass : ஓசன்பிக் என்ற தனியார் நிறுவனம் 2017ல் 173 மெட்ரிக் தொன்னை திருகோணமலை கடலில் கூண்டுக்குள் வளர்ந்துள்ளது. ஆழம் குறைந்த கடலிலும் இதை வளர்க்கலாம் 

OceanPick.jpg

இதை இந்த ஆங்கில கட்டுரை சார்ந்த தொகுப்பு 

https://www.lankabusinessonline.com/fishing-for-sustainable-profits-in-the-northern-province/?fbclid=IwAR3_1L0AzgJRngCWdZOFI-rCiMNxsJkgsKO9YVtDmroCTMdQRsWqpEgqsos

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.