Jump to content

நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

60341432_2243317509087902_615024155552645120_n.jpg?_nc_cat=111&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=f80def77ed069580e37d1041fab9f070&oe=5D5AB74C

நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் காரணம் காட்டி கிழக்கு ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்
அவர்களின் ஆளுனர் பதவிநிலைக்கு எதிரான நாளைய ஹர்த்தால்  அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.
 
 
"வேண்டுமென்றே துவேஷ உணர்வுகள் திணிக்கப்படுவதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்."
 
அதேபோல், 
 
"திட்டமிட்டு இனவாதம் வளர்க்கப்படுகிறது என்றால் தேர்தல் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்."
 
ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் இன்றைய கருத்தாலுக்கு அழைத்திருப்பதை அரசியல் திணிப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.
 
எந்தவித அடிப்படையும் இல்லாமல் இனவாதச் செயற்படுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த அப்பாவி தமிழ்மக்களையும் பகடைக்காயாக மாற்ற முயலுவது இன்னும் பல தசாப்தங்கள் தமிழ்மக்களை பின்னோக்கி நகர வைக்கும் என்பதனை தமிழ் இனத்திலுள்ள புத்திஜீவிகளும் புரிந்துகொள்வார்கள் என்றே கருதுகின்றோம்.
 
இதேபோன்று, கடந்த காலங்களிலும் மக்களை துவேஷ உணர்வுகளால் வழிப்படுத்தி பலரை நாடற்றவர்களாகவும், நடுத்தெருவிலும் விட்டிருக்கிறீர்கள் என்பதனை தெளிந்த மனதுடன் சம்பந்தப்பட்ட இனவாதிகள் புரிந்துகொள்ளவும் வேண்டும். தமிழர்கள் தனக்கான உரிமையினைப்  பெற்றுக் கொள்ளும் அதே வேளை முஸ்லீம் மக்களுக்கான உரிமையினையும் பெற்றுக் கொள்ள உந்துவது இந்த நாட்டில் நிரந்தர சகவாழ்வை ஏற்படுத்தும்.
 
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிலரால் அரங்கேற்றப்படும் இனவாத தாக்குதல்களுக்கும் - தற்போதைய நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்தறது என்றே தோன்றுகிறது.
 
இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலுக்காக அதிலும் குறிப்பாக தேர்தல்கள் நெருங்கி விட்டால் இனவாதம் கக்கப்படுவதும், பிரதேசவாதம் பேசப்படுவதும் இயல்புதான் இருந்தாலும் இதனால் அப்பாவி மக்கள் தேவையற்ற முறையில் பாதிக்கப்படுவதுதான் கவலையாகவுள்ளது.
 
இவ்வாறான இனவாதங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்த்தான் என்பதனை சம்பந்தப்பட்ட இனவாத நடவடிக்கைகளுடன் தொடர்பானவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். இதற்கு பல உதாரணங்கள் கடந்தகால அனுபவங்களிலும் மிகத் தெளிவாக இருக்கிறது.
 
இவ்வாறான இனவாத நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எவைகளை கடந்த காலத்தில் இழந்தார்கள்.
 
1. தங்களது பாசமான சிறுவர்களின் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.
 
2. அன்பான குடும்பத்தார்களை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக அனுப்பியுள்ளார்கள்.
 
3. அண்மைய தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அதிக வறுமையில் சிக்குண்டிருப்பவர்கள் முஸ்லீம்களைவிட தமிழ் மக்கள்தான் அதிகம்.
 
4. அதிகமான தமிழ் இளைஞர்கள் எவ்வித இலக்குகளும் இல்லாமல் முஸ்லீம்களை விட அதிகமாக மதுபோதைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
5. கடந்த கால தமிழ் ஈழ வடுக்களில் இருந்து இன்னும் மீழாத பல அப்பாவி தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
 
6. தமிழ் அரசியல்வாதிகளை வைத்து தமது பிரதேச அரசியலை முறையாக செய்யப் பழகாத தமிழ் மக்கள்.
 
"தேர்தல் காலங்களில் கோயிலுக்கு இரண்டு ஒலிபெருக்கியும், இரவு நேரங்களில் பருகுவதற்கு  மதுபானங்களும்தான்  அதிமான தமிழ் இளைஞர்களின் முற்போக்கற்ற நடைமுறைகளாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது"
 
ஒன்றை மட்டும் சம்பந்தப்பட்ட குழப்பதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான இனத்துவேசங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்களே. ஏனென்றால் திட்டமிடப்பட்ட பொருளாதார நடைமுறைகள், சமூக கலாசார விடயங்கள் முறையாக தமிழ்ப்பகுதிகளில் அமுல்படத்தப்படவில்லை என்பதுதான்.
 
அதேபோல் கிழக்கு கிழக்காகவும், வடக்கு வடக்காகவும் இருப்பதுதான தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பிரயோசனமானது அதனால் முஸ்லீம் ஆளுனரோ அல்லது முதலமைச்சரோ கிழக்கில் முஸ்லீமாக இருப்பதில் எந்தவித தவறும் இல்லை.
 
கடந்தகாலங்களில் தமிழ் மக்களை தமிழ் ஈழம் என்ற பெயரில்  நட்டாற்றில் விட்டு சின்ணாபின்னமாக்கியவர்கள்தான் இன்று தமிழ் சமூகம், தமிழ் மக்களின் வளர்ச்சி, என்றெல்லாம் அரசியல் பேசுகிறார்கள் என்பதனை புரிந்துகொள்ளாதவரை இவ் இனத்துவேசங்களை எம்மால் தவிர்க்க முடியாது என்பதே உண்மையுமாகும்.
 
அரங்கேற்றம் செய்யப்பட்ட ISIS பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாரிய அரசயல் காரணிகள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்ற அதேவேளை திட்டமிட்டு முஸ்லீம்களின் மத கலாசார விடயங்களுக்கு பல தடைகளும் ஏற்படுத்தப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் தங்கள் சார்பான கவனயீனங்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுனர் பதவியை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் நாளைய கருதாலுக்கான அழைப்பானது திட்டமிட்ட இனவாதமே.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் இனவாத அறிக்கையே..இதற்கு இங்கு கருத்தை இதேரீதியில் எழுதினால் இங்கு  உடன் தூக்கப்படும்..அதைவிட ..இத செய்தி  இணப்பாளரின்  செய்தி  தொடர்ந்து இருந்து  உணர்வாளர்களின்  பிரசரை ஏத்தும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.