Jump to content

பௌத்தர்களின் வழிகாட்டுதலிலேயே சிறுபான்மையினர் வாழவேண்டும்-பேராயர்!


Recommended Posts

ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலமைகள் காரணமாக தமிழ் – முஸ்லீம் மக்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினமான பௌத்தர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வாழ வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கள பௌத்த கடும்போக்குவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தக் கோரிக்கையை கர்தினால் முன்வைத்திருக்கின்றார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து ஐ.எஸ். ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பிலான ஐந்து அம்ச செயற்திட்டம் அடங்கிய நூலொன்று நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

ஜாதிக்க ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து அம்ச செயற்திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட தலைமை பௌத்த பிக்குகள், முஸ்லிம் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித், சிறிலங்காவின் கலாசாரம் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருப்பதால், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய சமூகங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் கலாசாரம் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை ஏனைய மதத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். ஏனையவர்களுக்கான வாய்ப்புகளை நாம் வரவேற்கின்றோம். அதனை நாம் சகோதரத்துவத்துடனான குடும்பத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே இந்த நாட்டின் குடும்பம். இந்த குடும்பத்தில் மூத்த சகோதரர் பௌத்தம்.

அவரது வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எமக்கு எந்தவொரு பாதிப்பையும், நட்டத்தையும் ஏற்படுத்தாது. குடும்பத்தில் மூத்த சகோதரரின் வழிகாட்டலை பின்பற்றுவது தவறான விடயமல்ல. அது நல்ல விடயமே. அதுபோல், மூத்த சகோதரர் சிறியவர்களை மதிக்க வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த உரையின் போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை தயாரித்து அவற்றை விற்பதற்காக உலக நாடுகளில் யுத்தங்களையும், மோதல்களையும் கட்டவிழ்த்து விடுவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியதுடன் அந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரமாக பல விடையங்களையும் முன்வைத்தார்.

இதற்கமையவே ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக்குழுவினரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமே உருவாக்கியிருப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டினார்.

அதனால் மேற்குலக நாடுகள்தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக ஐ.எஸ் போன்ற அனைத்து தீவிரவாதக் குழுக்களையும் உருவாக்கி அவற்றை இயக்கிவரும் நிலையில், சிறிலங்காவில் வாழும் மக்கள் அந்த சதித்திட்டங்களின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு துணை போய்விடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் மேற்குலக நாடுகளின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது என்பது எனது கருத்து. இதற்கு இஸ்லாமிய மக்களை தொடர்புபடுத்துவது பிழையான விடயமாகும். இஸ்லாமிய மதத்திற்குள் அதற்கு இடமில்லை. குர்-ஆனிற்குள் இவ்வாறு சர்ச்சைக்குரிய 26 பிரிவுகள் உண்டு. அதனைவிட வேறு எதுவும் இல்லை.

சகோதரத்துவத்தைவும், சமாதானத்தையும் வலியுறுத்துவதே இஸ்லாமிய சமயம். இது இஸ்லாமிய பிரச்சினையல்ல, இது வேறுவொரு செயற்றிட்டம். பிரிவினைவாதத்தை தோற்றுவித்து, அமைப்புகள் உருவாவதற்கு வாய்ப்பளித்து, அதன் மூலம் ஆயுதங்களை உற்பத்தி செய்து தமது பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்துகொள்கின்றார்கள். இஸ்லாமியர்கள் மிகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அவர்களை தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கக்கூடாது. இதிலிருந்து மீள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். இதன் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி ஒன்று காணப்படுகின்றது. மதங்களுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி, முழு உலகையும் ஆள்வதற்கான செயற்றிட்டமே இது.

லிபியா மிக அழகாகக் காணப்பட்ட நாடு, இன்று என்ன நடந்துள்ளது. அழிவின் விழிம்பில் இருக்கின்றது. அதுவே உண்மை. இது முஸ்லிம்களின் செயற்பாடுகள் அல்ல. அவர்களில் ஒரு சிலர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். எனினும் அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்” என தெிரிவித்தார்.

சிறிலங்காவில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலக நாடுகளே பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டிய கர்தினால் ரஞ்சித், அதனை புரிந்துகொள்ளாமலேயே தமிழ் – சிங்கள மக்கள் மோதிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இரு இனங்களுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. பல தசாப்தங்களாக ஒன்றாக வாழ்ந்த மக்கள் மோதிக்கொண்டனர். இதற்கு மேற்குலகே காரணம். இஸ்ரேலில், மொசாட் என்ற அமைப்பு எமது இராணுவத்திற்கு பயிற்சியளித்தது. அதே அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பயிற்சியளித்தது.

அவர்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என அவர்களே பயிற்சியளித்தார்கள். எமது முட்டாள்தனமான சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மோதிக்கொண்டார்கள். அவர்களிடமே ஆயுதங்களையும் கொள்வனவு செய்துகொண்டோம். உலக வங்கியும் அவர்களின் ஒரு நிறுவனமே. இந்த செயற்திட்டத்திற்குள் நாங்கள் அவர்களிடம் யாசகம் கேட்பவர்களாக மாறிப்போகின்றோம்” எனவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/

 

இலங்கையில் வாழும் கத்தோலிக்க மக்களே? உங்களுக்கு இந்தக் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்யித் தொடர்ந்தும் பேராயராக இருக்க வேண்டுமா...? சிந்தனை செய்யுங்கள்...??

Link to comment
Share on other sites

பேரினவாத  பேராயரின் உளறல் அளவுக்குமிஞ்சி  போய்விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பெளத்தனாக இருந்தாலென்ன கிறீஸ்த்தவனாக இருந்தாலென்ன, அவன் பேரினவாதச்சிங்களவன் தான். அவன் ஆயனாக இருந்தாலென்ன, வீதியில் கையேந்தும் பிச்சைக்காரனாக இருந்தாலென்ன அவனது உடலில் ஓடுவது மிருக ரத்தம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இஸ்லாமியர்கள் சிங்களவர்களை அரவணைத்து போகவேணும்  போகவேணும் ,நாட்டை பிரிவினை செய்ய இடமளிக்க மாட்டோம் என்று சொல்லி சொல்லியே  நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு சொந்தம் என்று சொல்லி போராட வெளிக்கிட்டார்கள்.....இதை  போலத்தான் இவரும் அவர்களை பப்பாமரத்தில் ஏற்றி பிறகு என்ன சொல்லுவாரோ தெரியாது....
 

Link to comment
Share on other sites

13 hours ago, Paanch said:

இலங்கையில் வாழும் கத்தோலிக்க மக்களே? உங்களுக்கு இந்தக் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்யித் தொடர்ந்தும் பேராயராக இருக்க வேண்டுமா...? சிந்தனை செய்யுங்கள்...??

அவர் இப்ப மட்டுமல்ல, முன்பிலிருந்தே சிங்களவர்களுக்கு வால் பிடிப்பவர். நீங்கள் இப்ப தான் பார்த்திருக்கிறீர்களாக்கும்.

ஆனாலும் உலகத்திலை என்ன நடக்குதெண்ட விஷயம் கொஞ்சம் ஆளுக்கு தெரிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தொடர்ந்தும் பேராயராய் உயிரோடு இருக்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

அவர் தொடர்ந்தும் பேராயராய் உயிரோடு இருக்க வேண்டாமா?

தமிழர்களுக்குத் தலைமை இல்லை. வந்தாலும் அதனை அழித்துவிட்டு சீரழிந்துபோகிறார்கள். கத்தோலிக்கப் பேராயர்களுக்கும் தலைமை உண்டே....! அது வத்திக்கானில் என்ன செய்கிறது.....??

Link to comment
Share on other sites

54 minutes ago, Paanch said:

தமிழர்களுக்குத் தலைமை இல்லை. வந்தாலும் அதனை அழித்துவிட்டு சீரழிந்துபோகிறார்கள். கத்தோலிக்கப் பேராயர்களுக்கும் தலைமை உண்டே....! அது வத்திக்கானில் என்ன செய்கிறது.....??

அடுத்த போப் ஆக வருவதற்கான போட்டியில் முன்னணியில் நிற்பவர்களில் இவரும் ஒருவர் என்று Forbes   சஞ்சிகை எழுதி இருக்கிறது. இலங்கையில் எதிர்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் இணைந்து இவரை நோபல் சமாதான பரிசுக்கு பிரேரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிற்குமாறும் கேட்டு இருக்கிறார்கள்.

https://www.scmp.com/week-asia/opinion/article/3009577/voice-nation-sri-lanka-loses-faith-government-it-looks-cardinal

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா.. இவர் ஆயர் பதவியை திறந்திட்டு தேரர் ஆக வேண்டும். வசதி எப்படி..??! 🤣

வந்திட்டானுங்க.. தங்களின் வசதிக்கு தேவைக்கு ஏற்ப பேசுறதுக்கென்னே.. சில பதவிகளை தக்க வைச்சுக் கொள்ளுறது. 🙄

Link to comment
Share on other sites

46 minutes ago, nedukkalapoovan said:

அப்படின்னா.. இவர் ஆயர் பதவியை திறந்திட்டு தேரர் ஆக வேண்டும். வசதி எப்படி..??! 🤣

ஆயர் பதவியை திறந்திட்டு தேரர் ஆக வேண்டும் என்றால் ஆயருக்கு மொட்டை போடுவது யார்......? கோத்தா சனாதிபதி ஆசையைத் திறந்திட்டு தொழிலுக்கு வருவாரா.... ?? 🤣 

Link to comment
Share on other sites

8 hours ago, Paanch said:

ஆயர் பதவியை திறந்திட்டு தேரர் ஆக வேண்டும் என்றால் ஆயருக்கு மொட்டை போடுவது யார்......? கோத்தா சனாதிபதி ஆசையைத் திறந்திட்டு தொழிலுக்கு வருவாரா.... ?? 🤣 

இப்படியான நடவடிக்கைக்கெண்டால் கோத்தா வருவார். 

D4wckVwXkAEGnAs?format=jpg&name=small

Link to comment
Share on other sites

9 hours ago, Paanch said:

ஆயர் பதவியை திறந்திட்டு தேரர் ஆக வேண்டும் என்றால் ஆயருக்கு மொட்டை போடுவது யார்......?

ஆயர்ற தொப்பியை கழட்டினா மொட்டையோட தான் தயாரா இருப்பார்னு தோணுது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.