Jump to content

அகிலன்... மரணம் வாழ்வின் முடிவல்ல


Recommended Posts

image1.jpeg
 
மே 10, 1989 காலை 5:45 மணி.
யாழ்ப்பாணம்
 
இந்திய இராணுவமும் அதனோடிணைந்த ஒட்டுக் குழுக்களும் யாழ்ப்பாண மண்ணை ரத்தத்தால் தோய்த்தெடுத்துக் கொண்டிருந்த கொடிய காலங்களின் இன்னுமொரு நாள் புலர்ந்து கொண்டிருந்தது. அரங்கேற இருக்கும் இன்னுமொரு அநியாய படுகொலையின் கொடூரத்தை அறியாமலே யாழ்ப்பாணத்தின் கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. 
 
இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை வேளையில், கோயில் வீதியில் அமைந்திருந்த அகிலனின் வீட்டின் முன்னால் இந்திய இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுவான ஈபிக்காரன்களும் வந்திறங்குகிறார்கள்.
 
கோயில் வீதியில் இருந்த மேல் மாடி வீட்டில், மேல் வீட்டில் அகிலன் குடும்பமும், கீழ் வீட்டில் பரி யோவான் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவரான சஞ்சீவனின் குடும்பமும் குடியிருந்தார்கள். சஞ்சீவனும் அகிலனும் 1988 மற்றும் 1989 என்று இரு ஆண்டுகள் தொடர்ந்து பரி யோவான் கிரிக்கெட் அணியை தலைமை தாங்கிய உற்ற நண்பர்கள்.
 
கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒட்டுக் குழுவினரை சஞ்சீவனின் அம்மா வழி மறிக்கிறார். “திருச்செல்வத்தின்ட வீடு இது தானோ” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முரசொலி நாளிதழின் பிரதான ஆசிரியரான, அகிலனின் அப்பா, திருச்செல்வத்தைத் தான் ஈபிக்காரன்கள் விசாரிக்கிறார்கள். 
 
“ஓம்.. மேல் வீடு தான்.. நீங்க நில்லுங்கோ.. நான் கூப்பிடுறன்” என்று சஞ்சீவனின் அம்மா கேட்டை திறக்க விடாமல் பிடித்துக் கொண்டிருக்கவும், அகிலனின் அம்மா balconyக்கு வரவும் சரியாக இருக்கிறது.
 
“இப்ப தான் வந்தவர்.. பல்லு மினுக்கிக் கொண்டு நிற்கிறார்.. கூப்பிடுறன்” கேட்டடியில் நடந்த உரையாடலைக் கேட்டு விட்ட, அகிலனின் அம்மா, உள்ளே சென்று ஈபிக்காரன்கள் தேடி வந்த அகிலனின் அப்பாவை அழைத்து வருகிறார். அப்போது தான் பத்திரிகை அலுவலகத்தில் கடமைகளை முடித்து விட்டு திரும்பியிருந்த திருச்செல்வத்தார் வாயில் Brush ஓடே Balconyக்கு வருகிறார்.
 
“உங்களோட ஒருக்கா கதைக்கோணும்” ஈபிக்காரன்கள் திருச்செல்வத்தை கூப்பிடுகிறார்கள் “ ஒருக்கா கீழ வாங்கோ”. யாழ்ப்பாணத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான திருச்செல்வத்திற்கு நிலைமையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கிறது.
 
“ஓமோம்.. பல்லை மினுக்கிட்டு.. முகம் கழுவிட்டு.. கீழ வாறன்” என்று விட்டு உள்ளே சென்ற திருச்செல்வம், வீட்டின் மறுபுறத்தால் பாய்ந்து இறங்கி, அயல் வளவுகளினூடாக சத்தம் போடாமல் தப்பி ஓடி விடுகிறார்.
 
திருச்செல்வத்தை காணாத ஈபிக்காரன்கள் கேட்டைத் தள்ளிக் கொண்டு மேல் மாடிக்கு ஓடுகிறார்கள். அன்று காலை கல்லூரியில் நடக்கவிருந்த monthly examற்காக இரவிரவாக படித்து விட்டு நித்திரைக்கு சென்றிருந்த அகிலன் ஆரவாரம் கேட்டு அப்போது தான் நித்திரையால் எழும்புகிறார். 
 
அன்று காலை ஆறு மணிக்கு அகிலனிற்கு Shamrock tutoryயில் Botany வகுப்பு வேறு இருந்தது. வழமையாக tutionற்கு போக வெள்ளனவே எழும்பும் அகிலன் அன்று மட்டும் ஏனோ நித்திரையாகி விட்டிருந்தார். 
 
ஐந்தே ஐந்து நாட்களிற்கு முன்னர், மே 5, அன்று அகிலன் தனது 19வது பிறந்த நாளை தனது வீட்டில் நண்பர்களை அழைத்து கொண்டாடியிருந்தார். எப்பவுமே தனது பிறந்த நாளை கொண்டாடாத அகிலன் அந்த முறை மட்டும் ஏனோ கொண்டாட முடிவு செய்து விட்டு, பரி யோவான் நண்பர்களை மட்டுமல்ல பிற பாடசாலை நண்பர்களையும் நேரில் சென்று அழைக்கும் போது, பம்பலாக “இதான்டா கடைசி party, கட்டாயம் வாங்கடா” என்று அழைத்ததை அவரது நண்பர்கள் கவலையோடு நினைவுறுத்தினார்கள். 
 
வீட்டிற்குள் தேடியும் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை காணாத ஈபிக்காரன்கள், அகிலனைக் கண்டதும் “இவர் யார்” என்று விசாரிக்க, தாங்கள் தேடி வந்த திருச்செலவத்தின் மகன் என்று அறிந்ததும், “நீர் எங்களோடு வாரும்.. அவரை எங்கட campக்கு வரச் சொல்லுங்கோ.. அவர் வந்ததும் இவரை விடுறம்” என்று அகிலனை பிடிக்க, அகிலனின் அம்மா ஓவென்று அழத் தொடங்கினா. 
 
அம்மாவை பயப்பட வேண்டாம், தான் அவர்களோடு போய் விட்டு வருகிறேன் அன்று ஆறுதல்படுத்தி விட்டு, Shirtஐ மாட்டிக் கொண்டு, உடுத்திருந்த சாரத்தோடு, ஈபிக்காரன்களின் வாகனத்தில் அகிலன் ஏற, நல்லூர் கோயில் பக்கமாக அந்த வாகன தொடரணி புறப்பட்டுச் செல்கிறது.
 
இந்த சம்பவங்கள் நடந்த போது கீழ் வீட்டில் இருந்த அகிலனின் நண்பன் சஞ்சீவன், வாகனம் போன கையோடு சைக்கிளை எடுத்துக் கொண்டு பரி யோவான் அதிபர் தேவசகாயத்திடம் தகவல் சொல்ல விரைகிறார். இந்திய இராணுவத்தின் உயர்மட்டத்தினரோடு தொடர்புகளை பேணிய அதிபரால் அகிலனை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு அந்த காலை வேளையில் பரி யோவான் அதிபரின் வீட்டுக் கதவை சஞ்சீவன் தட்டுகிறார்.
 
அகிலனை ஈபிக்காரன்கள் பிடித்துக்கொண்டு போனதையறிந்து அதிர்ந்த அதிபர், உடனடியாக செயலில் இறங்கி, இந்திய இராணுவ உயரதிகாரிகளை தொடர்பு கொள்ள முயல்கிறார். 
 
அகிலனை ஏற்றிக் கொண்டு நல்லூர் பக்கமாக சென்ற வாகனம் Brown Rd இந்து மகளிர் கல்லூரியடியில் நடு ரோட்டில் நிறுத்தப்படுகிறது. வாகனத்தில் இருந்து சாரமும் ஷேர்ட்டும் அணிந்த பெடியன் ஒருவன்  இறக்கப்படுவதை அந்த வீதியில் வசித்து வந்த அம்மா ஒராள் பார்த்துக் கொண்டு இருக்கிறா. 
 
வாகனத்தில் இருந்து இறக்கபட்ட பெடியன் முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதும் அந்த அம்மாவிற்கு வடிவாக தெரிகிறது. முழங்காலில் இருக்கும் பெடியனிற்கு முன்னால் யாழ்ப்பாணமே அறிந்த மண்டையன் குழு கொலைஞன் துப்பாக்கியோடு நிற்பதும் அம்மாவின் கண்களுக்கு தெரிகிறது.
 
“ஐயோ அண்ணே.. என்னை ஒன்றும் செய்யாதீங்கோ” முழங்காலில் இருக்கும் பெடியன் கதறி அழுது கொண்டே அந்தக் கொலைஞனின் காலில் விழுந்து புரள்கிறான். அந்தக் கதறல் சத்தமும் அந்த அம்மாவுக்கு நன்றாகவே கேட்கிறது.
 
அப்ப.. அப்பத் தான்....முழங்காலில் இருந்த பெடியனிற்கு பின் பக்கத்தால வந்த ஒருத்தன், முழங்காலில் இருந்தவனின்ட தலைமயிரை பிடித்து இழுத்து நிமிர்த்த...முன்னால் நின்ற அந்த மண்டையன் குழு கொலைகாரன்.. துவக்கை முழங்காலில் இருந்த அந்தப் பெடியனின் மண்டையில் வைத்து..... 
 
முழங்காலில் இருந்த பெடியன் சரிந்து விழுவதை அம்மா பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெடியனின் உயிரைப் பறித்த வேட்டொலி அம்மாவின் காதில் எதிரொலிக்கிறது.
 
Brown Rd சந்தியில் சுடப்பட்டு குற்றுயிராய் கிடந்த அகிலனை, அதே வீதியால் Tutionற்கு போன இன்னுமொரு ஜொனியன் அடையாளம் கண்டு கொள்கிறான். சைக்கிளை வீதியில் போட்டு விட்டு தரையில் அமர்ந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்த அகிலனின் தலையை தூக்கி தனது மடியில் கிடத்தி.. “டேய் மச்சான் அகிலன்.. ஒன்றுமில்லைடா” என்று தேற்றவும் “ஹூம்” என்ற சத்தத்துடன் அகிலனின் உயிர் தான் நேசித்த பெற்றோரையும் நண்பர்களையும் விட்டு பிரிந்து செல்கிறது.  
 
அகிலனின் இறுதி யாத்திரைக்கு பரி யோவானின் மாணவர்கள் அலையென திரண்டார்கள். கோயில் வீதி எங்கும் வெள்ளை சீருடையணிந்த அண்ணாமாரும் நீலக் காற்சட்டையும் வெள்ளை ஷேர்ட்டும் அணிந்த பெடியளும் தான். வரிசை வரிசையாக அகிலனின் வீட்டிற்குள் சென்று இறுதி வணக்கத்தைத் தெரிவித்து விட்டு வந்தவர்களை மாணவ தலைவர்கள் ஒருங்கிணைத்து இறுதி ஊர்வலத்தை  நெறிப்படுத்த ஆயத்தமானார்கள்.
 
“அவன்ட Birthday party அன்று நான் யாழ்ப்பாணத்தில் நிக்கேல்ல” அகிலனின் இன்னுமொரு நெருங்கிய நண்பரும் பரி யோவான் கிரிக்கெட் அணியும் விக்கெட் காப்பாளருமான ரதீசன் கதைக்கத் தொடங்கினார். “எனக்கென்று சொல்லி கேக், லட்டு என்று சாப்பாட்டை எல்லாம் plateல் போட்டு fridgeல் வச்சிருக்கிறான்டா” ரதீசனின் குரல் தழுதழுத்தது. “நான் செத்த வீட்டுக்கு போக.. அகிலன்ட அம்மா.. கத்தி அழுதுகொண்டே போய் அந்த plateஐ கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால என்னை சாப்பிட வச்சா” என்று அகிலனின் செத்த வீட்டு நினைவுகளை ரதீசன் நினைவுகூர்ந்தார்.  
 
பரி யோவான் கிரிக்கட் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளராக new ballஐ கையில் எடுக்கும் அகிலனின் கையிற்குள் செருகப்பட்டிருந்த புத்தம் புதிய cricket பந்தோடு அவரது பேழை மூடப்படும் போது எழுந்த அழுகுரல் அந்தப் பிரதேசத்தையே கலங்க வைத்துக் கொண்டிருந்தது. 
 
இறுதி ஊர்வலத்தை ஈபிக்காரன்கள் குழப்பலாம் என்ற பீதியையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குறிவைக்கப்படலாம் என்ற பயத்தையும் துணிவுடன் மீறி, முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு கண்களில் கண்ணீர் முட்ட பரி யோவான் மாணவர்களோடு பிற பாடசாலை மாணவர்களும் கோயில் வீதி நெடுக அணிவகுக்கத் தொடங்கினார்கள். 
 
அகிலனின் பூதவுடலை சுமந்த பேழைக்கு முன்னால் பரி யோவானின் கல்லூரி கொடியை Prefects மாறி மாறி சுமந்து வர, அகிலன் அண்ணா தனது இறுதி யாத்திரையை, கொலைஞர்கள் அவனை கடைசியாக கொண்டு போன அதே நல்லூர் கோயில் பக்கமாக ஆரம்பித்தான். 

.................................................................
 
அகிலனின் படுகொலையுடன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதே காலப்பகுதியிலேயே ஈபிகாரன்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கென பிள்ளை பிடிபடலத்தை தொடங்க பல மாதங்கள் யாழ் நகரில் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டுப் போகின.
 
அந்த ஆண்டு, ஓகஸ்ட் 1989ல் நடந்த உயர்தரப் பரீட்சையில் அகிலனின் SJC89 பிரிவு மாணவர்கள் ஒரு கலக்கு கலக்கினார்கள். Bio பிரிவில் சுபநேசன் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பிடித்து பரி யோவான் கல்லூரியின் வரலாற்று ஏடுகளில் இடம்பிடித்துக் கொண்டார். 1988ம் ஆண்டு கச்சேரியடி கார் குண்டுவெடிப்பில் கண்ணில் ஏற்பட்ட காயத்துடன் கஷ்டப்பட்டு படித்த சுபநேசனின் சாதனையை பரி யோவான் இன்றும் கொண்டாடுகிறது.
 
அதே பரீட்சையில் Maths பிரிவில் திசைநாயகம் 4A எடுக்க, 3AC பெறுபேறுகளை பெற்று, அந்த பெறுபேறுகளை அறியாமலே ஈபிக்காரன்களால் அழிக்கப்பட்ட இன்னுமொரு ஜொனியன் தான் அறிவாளி என்றழைக்கப்பட்ட தேவகுமார்.
 
அதே 1989ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய SJC92 பிரிவு மாணவர்களில் ஐவர் 8D சித்திகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பரி யோவான் கல்லூரிக்கு பெற்றுத் தந்தார்கள்.
 
எந்தவிதமான வன்முறையும் அடக்குமுறையும் எங்கள் கல்வியை பாதிக்க விட மாட்டோம் என்ற எங்கள் மண்ணின் உறுதிப்பாட்டை பரீட்சைக்கு பெறுபேறுகளில் பொறித்துக் காட்டிய ஆண்டுகளாகவும் 1989-1990கள் அமைந்தன.
 
image1%2B%25281%2529.jpeg
 
image2%2B%25282%2529.jpeg
...................................................................
 
 
1983 ஜூலை கலவரத்திற்கு முன்னர், கொழும்பு DS Senanayake கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அகிலன், தனது பெற்றோருடன் Anderson flatsல் வசித்து வந்தார். 
 
சிறு வயதில் ரஜினிகாந்தின் ஸ்டைலால் கவரப்பட்ட அகிலனின் நடை உடை பாவனை எல்லாவற்றிலும் ரஜினியிஸம் கலந்திருக்கும் என்று  அதே தொடர்மாடியில் வசித்த அவரது சிறு பிராயத்து நண்பர் ஒருவர் அகிலனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
 
“Steps ஆல நடந்து வரும் போதும் ரஜினி ஸ்டைல் தான்... race ஓடும் போதும் ரஜினி ஓடுறது போலத் தான்.. தலை இழுப்பும் ரஜினி மாதிரி தான்” என்று அந்த சிறுபிராய நண்பரது அகிலன் பற்றிய நினைவுகள் அமைந்திருந்தது.
 
“அகிலனுக்கு என்றொரு ஸ்டைல் இருந்தது ஐசே .. அவர் யார்ட ஸ்டைலையும் follow பண்ணேல்ல” என்று பதின்ம வயதில் அகிலனோடு நெருங்கிப் பழகிய அவரது நண்பரான சஞ்சீவன், அகிலனின் சிறுவயது ரஜினி மோகம் பற்றி கேட்ட பொழுது சொல்லிக் கொண்டு போனார்.
 
“அவன் ஐசே.. காலம்பற மேல இருந்து படியால இறங்கி வரும் போது.. பாட்டு பாடிக் கொண்டு ஸ்டைலாத் தான் இறங்கி வருவான்” என்ற சஞ்சீவன், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டுத் தான்.. அவனை பார்த்தாலே எங்களுக்கும் அந்த நாள் கலகலப்பாயிடும்” என்றார் சஞ்சீவன். 
 
1983 ஜூலை இனக்கலவரத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்த அகிலனிற்கு முதலில் அடைக்கலம் கொடுத்தது யாழ் இந்துக் கல்லூரி தான். 1984ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அகிலன் பரி யோவான் கல்லூரியில் இணைந்தார்.  
 
image2.jpeg

 
பரி யோவான் கிரிக்கெட் அணியின் U15 அணிக்கு தலைமை தாங்கிய அகிலன், U17 மற்றும் U19 அணிகளின் Vice Captain ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பரி யோவான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளராக, அந்த முழு நீள வெள்ளை Shirt அணிந்து, Principle Bungalow பக்கமிருந்து அகிலன் ஒடிவருவது இன்றும் இதை வாசிக்கும் கனபேருக்கு கண்ணிற்குள் வந்து நிற்கும். 
 
பதினைந்து வயதிலேயே Johnians Cricket Club அணிக்கு விளையாடத் தொடங்கிய அகிலனின் முதலாவது ஓவரும் அவர் தொடர்ந்து வீசிய அந்த ஐந்து wide ballsஐயும் வைத்தே அவரை நக்கலடித்த கணங்களை அவரது நண்பர்கள் இன்றும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.
 
“அகிலன், ரகுராம் ஆக்கள் கொழும்பில இருந்து வந்தாக்கள்.. அவக்கு startல கொஞ்சம் எடுப்பிருந்தது” என்று தங்களின் நட்பின் ஆரம்ப நாட்களைப் பற்றி ரதீசன் பேசத் தொடங்கினார்.

 “Sports meetல அவயள் Thompson house.. நான் Johnstone House.. 4x300 relayயில் அவயள் தான் முதல் மூன்று lapம் leading.. கடைசி lapல் நான் ஓடி எங்கட house வென்றது.. race முடிய அகிலன் வந்து நீங்க இப்படி நல்லா ஓடுவீங்க என்று நினைக்கேல்ல என்று தானாக கதைக்கத் தொடங்கினார்” என்று ரதீசன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
 
“Match தொடங்கும் போது, அகிலன் தான் first slip, சஞ்சீவன் second slip” என்று பரி யோவான் கிரிக்கெட் அணியின் Wicket Keeper ரதீசன் அந்தக் காலத்து பலமான பரி யோவான் அணியை மீண்டும் மனக் கண்முன் கொண்டு வந்தார். 
 
“ஒருக்கா Jaffna Hinduவோட match.. அவங்கட captain புவனேந்திரனுக்கு கால் பிடிச்சிட்டு.. runnerஆக ரவிக்குமார் வந்தார்.. ரவிக்குமார் ball guard போடாமல் வந்திட்டான்..அதை வச்சு அகிலன் அவனுக்கு கொடுத்த அலுப்பு இருக்கே..” என்று விலாவாரியாக அந்த சம்பவங்களை மகிழ்வோடு ரதீசன் இரை மீட்டுக் கொண்டார். யுத்தம் நம்மை விட்டு பறித்த ஆளுமைகளில் யாழ் இந்துவின் ரவிக்குமாரும் ஒருவர். 
 

அகிலன்ட பகிடிகள் சொல்லுறதென்டால்..” என்று ஆரம்பித்து அந்த பதின்ம வயதிற்கேயுரிய பல பகிடிகளைரதீசன் பகிர்ந்து கொள்ள, நாங்கள் இருவரும் பள்ளிக் காலங்களிற்கே மீண்டும் சென்று வந்தோம். “Matchக்குபோய் வரும் போது.. வானிற்குள் ஒரே பகிடி விட்டுக் கொண்டு தான் வருவான்..”என்று பத்து நிமிஷம் தான்இருக்கு என்று கதைக்க தொடங்கிய ரதீசன் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக அகிலன் புராணம் பாடிக்கொண்டிருந்தார்.

 
“அகிலன் என்ர economics கொப்பி மூலையில் எழுதின கவிதையை நான் இப்பவும் அப்படியே வச்சிருக்கிறன்டா..” என்ற ரதீசன், “என்ர மகளுக்கும் அதை காட்டியிருக்கிறன்.. நான் சாகும் போது அந்த கொப்பியையும் சேர்த்து எரிக்க சொல்லியிருக்கிறன்” என்று முப்பதாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் பள்ளிக்கால நட்பின் வலிமையை உணரச் செய்தார். அகிலனின் அந்தக் கவிதை தனக்கு நேரப்போகும் மரணத்தை தானே முன்னுணர்ந்து எழுதியது போலவே இருக்கிறது.
 
image2%2B%25281%2529.jpeg
 
“அகிலன் ஒரு அதி தீவீரமான தமிழ்தேசியவாதிடா” என்னு அகிலனோடு நெருங்கிப் பழகிய SJC89 batch ஐங்கரன், அகிலன் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினார். “அந்த மாதிரி கவிதை எழுதுவான்டா.. சிறுகதைகளும் எழுதியிருக்கிறான்” என்று பலருக்கு தெரியாத அகிலனின் இன்னுமொரு ஆற்றலைப் பற்றி கதைக்கத் தொடங்கினார்.
 
“TESOன்ட பொங்கும் தமிழமுது என்ற magazineல் அகிலன்ட கவிதைகள் வந்திருக்கிடா” என்றார் ஐங்கரன். “ ஒபரேஷன் லிபரேஷன்ட முதலாவது ஆண்டு நினைவாக வெளியான கல்லறை மேலான காற்று கவிதைத் தொகுப்பிலும் அகிலனின் கவிதை வெளிவந்திருக்கு.. ஒருக்கா நூலகம் websiteல் தட்டிப்பார்.. இருந்தாலும் இருக்கும்” என்று ஐங்கரன் சொல்லிக் கொண்டே போனார்.
 
“அகிலன் செத்து முதலாவது ஆண்டு நினைவிற்கு, அவன் எழுதிய கவிதைகள் எல்லாத்தையும் தொகுத்து..மரணம் வாழ்வின் முடிவல்ல என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டனாங்க” என்ற ஐங்கரன் “அகிலன் ஓரு பெட்டையை சுழற்றினவன்.. அப்பவும் கவிதை தான்.. ஒரு நாள் அந்த பெட்டையை பார்த்து..  என்னைக் காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை, என்னை துணையாகவேனும் ஏற்றுக் கொள்.. என்னு கவிதை சொல்லிவிட்டு போனவன்” என்று காதலிக்க கவிதையெனும் பந்தை அழகாக  வீசிய தனது நண்பன் அகிலனை நினைத்து ஐங்கரன் பூரித்துக் கொண்டார். 
 
அகிலனின் தமிழ் மீதான காதலும் பற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலித்தது. “அவர் ஐசே groundலும் சுத்த தமிழில் தான் பம்பலடிப்பார்.. good ball என்று சொல்ல மாட்டார்.. நல்ல பந்து என்றுவார்.. இப்படி கனக்க இருக்கு” என்று அவரோடு அணியில் விளையாடிய நரேஷ் தனது கிரிக்கெட் நினைவுகளை மீட்டுக் கொண்டார். 
 
“அகிலனினட birthdayக்கு நான் தான் படம் எடுத்தனான்” எப்பவுமே அதிகம் அலட்டிக் கொள்ளாத ஜீனிடம்இருந்து கதைகேட்பதே ஒரு சுவாரசியமான அனுபவம். “ஆளை மேல் மாடியில் இருத்தி, சூரியன் மறையிற நேரம் ஒரு நல்ல silhouette shot எடுத்த ஞாபகம்.. அதுவும் சஞ்சீவன்டயோ யார்றயோ camera  தான்” என்று அகிலனின் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்குள் இருந்த ஜீனும் அகிலனின் கதைதகளை நினைவுபடுத்திக் கொண்டார். 
 
ஜீன் எடுத்த அந்த silhouette படம் தான் அகிலனின் கவிதைத் தொகுப்பான மரணம் வாழ்வின் முடிவல்ல என்ற புத்தகத்திற்கு அட்டைப் படமாக அமைந்தது. அகிலனின் புத்தகம் இன்றும் விற்கனையில் உள்ளதால், Noolaham இணையத்தில் இன்னும் பதிவேற்றவில்லையாம்.  
 
“என்னடாப்பா” என்று விளித்து அகிலன் தனது வயதிலும் குறைந்த மாணவர்களுடன் பழகும் விதம் தனித்துவமானது. சத்தம் போடும் வகுப்பறைகளை அதட்டி அடக்காமல் “என்னடாப்பா ஏன் கதைக்கிறியள்” என்று சிரித்துக் கொண்டே அடக்கும் மாணவர்களிற்கு பிடித்த Prefect தான் அகிலன். 
 
அகிலன் அண்ணா ஆள் நல்ல கறுப்பு, ஆனால் நல்ல களையான ஆள். எப்பவும் பம்பலடித்துக் கொண்டே திரியும் அகிலனை பாலர் வகுப்பில் படிக்கும் பெடியளிள்கும் தெரியும், பாலர் வகுப்பிற்கு படிப்பிக்கும் இளம் ஆசிரியைகளிற்கும் நன்றாகவே தெரியும்.
 
 
அகிலனோடு நெருங்கிப் பழகிய இருவரான ஜெய்ஷங்கரதும் சாந்தாராமதும் நினைவுகளை பதிய முடியாமல் போய் விட்டது. அகிலனைப் பற்றி பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளாக இருந்தது, இந்தாண்டு தான் அதற்கான கொடுப்பினை அமைந்தது, அதுவும் அவரது முப்பதாவது ஆண்டு நினைவு நாளில் இந்தப் பதிவை எழுதியதும் ஒரு வகையில் விதி வரைந்த கோலம் தான்.
 
அகிலன் நன்றாக பந்தடித்தார், மணியாக பம்பலடித்தார், ஸ்டைலாக வடிவான பெட்டைகளைச் சுழற்றி மடக்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெட்டையின் பெயரைச் சொல்லி எங்களை கத்த வைத்த சகலகலா வல்லவன் தான் அகிலன் அண்ணா.  அகிலன் ஒரு முழுமையான ஜொனியனாகவே வாழ்ந்தார், வாழ்ந்து முடித்தார். சஞ்சீவன் சொன்ன மாதிரி, அவரொரு “Jolly good fellow” தான்.
 
 “பூச்செடியில்
புதிதாய் பூக்கும் 
பூக்களுக்காக
சிறகடிக்கத் தொடங்கிவிட்ட
இளம் பறவைகளின் ஒலிக்காக
எனை எதிர் கொண்டுவரும் மரணத்திற்காக
நம்பிக்கையோடு நான் காத்திருக்கிறேன்.
உண்மையை மறுப்பவர்களிடம் கூறுங்கள்
என் மரணம்
என்றுமே 
ஒரு முடிவல்ல”
அகிலன் திருச்செல்வம் (SJC89)
 
image1%2B%25282%2529.jpeg
 
 
எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:
வாகனத்தில் இருந்து இறக்கபட்ட பெடியன் முழங்காலில் இருக்க வைக்கப்பட்டதும் அந்த அம்மாவிற்கு வடிவாக தெரிகிறது. முழங்காலில் இருக்கும் பெடியனிற்கு முன்னால் யாழ்ப்பாணமே அறிந்த மண்டையன் குழு கொலைஞன் துப்பாக்கியோடு நிற்பதும் அம்மாவின் கண்களுக்கு தெரிகிறது.
 

இணைப்புக்கு நன்றி பகலவன்.
அந்த மண்டையன் குழு கொலைஞன் யாரென்றும் சொல்லியிருக்கலாம்.
இறந்தவர் கனடாவிலுள்ள திருச்செல்வத்தின் மகனா?
இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி பகலவன்.
அந்த மண்டையன் குழு கொலைஞன் யாரென்றும் சொல்லியிருக்கலாம்.
இறந்தவர் கனடாவிலுள்ள திருச்செல்வத்தின் மகனா?
இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்.

ஒரு அகிலன் தான்...அதே அகிலன் திருச்செல்வம் தான் அண்ணா 😭

சுரேஸ் பிரேமசந்திரனாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.