Jump to content

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

on May 9, 2019

 

sri-lanka-ahmadi-muslim-refugees5.jpg?zo

 

பட மூலம், Rabwah

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும்வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். “எனக்கு எதிராக முன்னர் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது; அந்த நிலையில், ஒன்று நான் கொல்லப்பட முடியும் அல்லது சிறையில் அடைக்கப்பட முடியும் என்ற அச்சத்தில் முன்னரேயே நான் எனது வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அப்பொழுது நான் தூக்கமின்றி தவித்தேன்; பட்டினி கிடந்தேன்; எனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் கடும் அச்சத்தில் இருந்தேன். ஒரு சில மணித்தியாலங்களில் அனைத்தையும் இழந்திருந்தேன். நானும், எனது மனைவியும் கடும் பயத்திலும், அதிர்ச்சியிலும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இலங்கைக்கு வந்தோம். நண்பர்களின் குடும்பங்கள், உறவினர்கள், எமது தொழில்கள், எமது வீடு வாசல்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், இப்பொழுது இலங்கையும் அதே மாதிரியான ஒரு நாடாகியுள்ளது. நாங்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து இப்பொழுது பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளோம். இன்று பகல் எமது வீட்டுக்கு வெளியில் ஒரு கும்பல் கூடி, ஒரு சிலர் மிக மூர்க்கத்தனமான விதத்தில் எமது வீட்டுக் கதவை உதைத்தார்கள். ஒரு நபர் என்னைப் பிடித்துத் தள்ளியதுடன், எனது கன்னத்தில் அறைந்து, என்னுடைய சட்டை கொலறை பிடித்து என்னை இழுத்தெடுத்தார். அவருக்கு பின்னால் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நின்றார்கள். அவர்கள் இப்படிச்  சொன்னார்கள்: நீங்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும்” – 2019 ஏப்ரல் 27ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்றிருக்கும் பாகிஸ்தான் அகதி.

நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த பாகிஸ்தான் நபர் ஒருவர் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்பதனை என்னிடம் விளக்கிக் கூறினார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஒரு பிள்ளைக்கு 4 வயது, இரண்டாவது பிள்ளைக்கு 2 ½ வயது. அந்தக் கும்பல் அவரை உதைத்துகொல்லப்போவதாக அச்சுறுத்தியது. அதனை அடுத்துஅந்த வீட்டுச் சொந்தக்காரர் அவர் அந்த வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தித்தார். நீர்கொழும்பு லூயிஸ் பிளேசில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு ஒரு வன்முறைக் கும்பல் எவ்வாறு வந்தது என்ற விவரத்தை ஒரு பாகிஸ்தான் பெண்மணி எடுத்துக்கூறினார். உடனடியாக அவர்கள் அந்த வீட்டை வீட்டு வெளியேறாது விட்டால் அவருடைய குடும்பத்தை அவர்கள் தாக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் தாம் அணிந்திருந்த ஆடைகளுடன் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டதுஅல்லது ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டி நேரிட்டது. ஆடைகள்மருந்து வகைள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் முக்கியமான ஆவணங்கள் மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் என்பவற்றை அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

இலங்கைக்கு அகதிகளாக வந்தவர்கள் இப்பொழுது இலங்கைக்குள்ளே அகதிகளாகியுள்ளார்கள்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களின் போது நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பிதேசங்களில் வசித்து வந்த அகதிகளிடமிருந்து நான் நிறையக் கதைகளை கேட்டறிந்து கொண்டேன். அகதிகள் குடும்பங்களை தமது வீடுகளில் வைத்திருந்தால் வீடுகளை நிர்மூலமாக்கப் போவதாக வன்முறைக் கும்பல்கள் தம்மை அச்சுறுத்தியதாக வீட்டுச் சொந்தக்காரர்கள் சொன்னார்கள். இதன் விளைவாகசுமார் 1200 அகதிகளும்தஞ்சம் கோருபவர்களும் (“தஞ்சம் கோருபவர்கள்” எனக் குறிப்பிடப்படுபவர்கள் தமது அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாத ஆட்கள் ஆவார்கள்) மூன்று தற்காலிக முகாம்களில் (இரண்டு அகமதியா பள்ளிவாசல்களிலும்நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும்) இப்பொழுது தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் மோசமான நிலைமைகளின் கீழேயே அவர்கள் அந்த இடங்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளது. இங்கு கழிப்பறை வசதிகள் மிகக் குறைவாக இருந்து வருவதுடன்தண்ணீரும் போதியளவில் கிடைப்பதில்லை. இடப் பற்றாக்குறை காரணமாக பெருந்தொகையானவர்கள் அமர்ந்தவாறே நித்திரை கொள்ள வேண்டியுள்ளது.

ஆட்கள் இரவில் தங்குவதற்கான வசதிகளை கொண்டிராத இரண்டு பள்ளிவாசல்களையும் பொருத்தவரையில் நிலைமை மிக மோசமானதாகும். கடந்த சில நாட்களில் பெய்துள்ள மழை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த இரண்டு பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கிய ஒரு சில உள்ளூர்வாசிகள் சுமார் 700 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய அகதிகள் முகாமிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சுமார் 40 பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் 175 பேர் சுவர்கள் இல்லாத கராஜ் ஒன்றின் தரையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பொலிஸ் நிலையத்தில் தங்கி நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் ஒரு சில கழிப்பறைகளையும் இந்த அகதிகள் பயன்படுத்தி வருகின்றனர். பொலிஸார் அவர்களுக்கு உதவிகளை வழங்கியிருப்பதுடன்அவர்களை கருணையுடனும்பெருந்தன்மையுடனும் நடத்தியுள்ளார்கள். வரையறுக்கப்பட்ட வசதிகளை அவர்கள் இந்த அகதிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால்அகதிகளை பொறுத்தவரையிலும்அதேபோல பொலிஸாரை பொறுத்தவரையிலும் நிலைமை சகிக்க முடியாததாக இருந்து வருகின்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை சிறந்த வசதிகளுடன் கூடிய பொருத்தமான இடம் ஒன்றில் தங்கவைக்குமாறு கோரி பல்வேறு அமைப்புக்களுக்கும்தேவாலயங்களுக்கும் மன்றாட்டத்துடன் கூடிய வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஒரு சிலர் இந்த அகதிகளுக்கென தமது கதவுகளை திறப்பதற்கு பயப்பட்டார்கள். ஆனால், ஒரு சிலர் தைரியத்துடன் அதற்கென முன்வந்தார்கள். எவ்வாறிருப்பினும்பொலிஸ் நிலையத்திலிருந்து அவர்களை அகற்றிவேறு ஒரு இடத்தில் தங்க வைப்பதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்த வன்முறை மற்றும் அச்சுறுத்தல் என்பன காரணமாக தோல்வியடைந்துள்ளன. இந்த அகதிகளில் ஒரு குழுவினர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுதுபௌத்த பிக்குகளின் தலைமையிலான உள்ளூர் குழுக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பொலிஸாரினால் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாதிருந்ததுடன்அந்த அகதிகள் குழுவினர் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு மற்றொரு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுதுஉள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தலைமையில் எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன. அந்தப் பேருந்து திருப்பப்பட்டுஅதில் இருந்தவர்கள் மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டார்கள். மேலும இரு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த கொழும்பு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கென இந்த அகதிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டிருந்தார்கள். ஆனால்பொலிஸார் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களை வழங்க முடியாத நிலைமையில் இருந்து வந்த காரணத்தினால் இந்த இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் மீள இடம்பெயர நேரிட்ட நிலைமை

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து அகதிகள் கடும் எதிர்ப்புக்களையும்வெளியேற்றங்களையும் எதிர்கொண்டு வரும் ஒரேயொரு பிரதேசமாக நீர்கொழும்பு மட்டும் இருந்து வரவில்லை. கண்டிக்கு அருகில் வீடொன்றில் வசித்து வந்த நான்கு ஆப்கானிஸ்தான் அகதிகளும் இதே மாதிரியான ஒரு நிலையை எதிர்கொண்டார்கள். கடந்த வாரத்தில் உள்ளூர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்  சோதனைகளை அடுத்து வீட்டு உரிமையாளரினால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால்பொலிஸ் சோதனைகளின் போது எத்தகைய சந்தேகத்திற்குரிய பொருட்களும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனையடுத்து அவர்கள் சென்ற விருந்தினர் விடுதியும் கூட இப்பொழுது அவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றது. தெஹிவலையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரத்மலானையில் வசித்து வந்த மற்றொரு ஆப்கான் அகதி அயலவர் ஒருவரினால் “எதிரி” என  அழைக்கப்பட்டதுடன்இந்த அகதியை தாக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் தாம் வாடகைக்கு இருக்கும் அந்த வீட்டிற்குள் அச்சத்துடன் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். மொரட்டுவயில் தனது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதிக் குடும்பம்அவர்களுடைய அகதி ஆவணங்கள் தொடர்பாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனை அடுத்துஅந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு வீட்டு உரிமையாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பலர் இலங்கையில் வசிப்பதற்கான சட்டபூர்வமான ஆவணங்களை தம்வசம் வைத்திருந்த போதிலும்பல விருந்தினர் விடுதிகள் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பாகமுஸ்லிம் வீட்டுச் சொந்தக்காரர்கள் இது குறித்து  பெருமளவுக்கு  அச்சமடைந்துள்ளார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் தூண்டப்பட முடியும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

பாணந்துறையில் தங்கியிருக்கும் ஓர் ஆப்கான் அகதி இப்படிக் கூறினார்: “முன்னர் ஆட்கள் எம்மைப் பார்த்து புன்னகை செய்தார்கள். ஆனால்இப்பொழுது அவர்கள் எம்மை சந்தேகத்துடனும்பகைமை உணர்வுடனும் பார்க்கின்றார்கள். அதன் காரணமாக வெளியில் செல்வதற்கு எமக்குப் பயமாக உள்ளது. ஒரு அறையை வாடகைக்கு எடுப்பதற்கு நான் முயற்சித்த பொழுதுஅந்த விருந்தினர் விடுதியின் உரிமையாளர் ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள்’ என உரத்துச் சத்தமிட்டார். வேறு ஒரு விருந்தினர் விடுதிக்கு செல்வதற்கு நான் முயற்சித்தேன். ஆனால்எவரும் எனக்கு தங்குமிட வசதியை பெற்றுத் தருவதற்கு விரும்பவில்லை.”

இந்த அகதிகள் யார்?

இந்த அகதிகளும்தஞ்சம் கோருபவர்களும் தமது சொந்த நாடுகளில் எதிர்கொண்ட துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்புக் கோரி இலங்கைக்கு வந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் ஒரு சிலர் ஹசாரா இன சமூகத்தைச் சேர்ந்த அஹமதியா மற்றும் ஷியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள். ஏனையவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தமது நாட்டில் முஸ்லிம் குழுக்களின் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் ஆவார்கள். தீவிரவாதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள்தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றினால் துன்பங்களை அனுபவித்த சமய சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்து வருகின்றார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக அரசிலிருந்து அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புக்களும் கிடைக்கவில்லை அல்லது மிகச் சிறு அளவிலான பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது. இலங்கையில் இருக்கும் இந்த அகதிகள் பாகிஸ்தான் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். பாகிஸ்தானில் மதநிந்தனை மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இருந்து வருகின்றது. துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்ஊடகவியலாளர்கள்புளொக் செயற்பாட்டாளர்கள்நாத்திகவாதிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒரு சிலரும் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்தார்கள்.

இலங்கை 1951ஆம் ஆண்டின் அகதிகள் சமவாயத்திற்கு கையொப்பமிட்டிருக்கும் ஒரு நாடாக இருந்து வரவில்லை. அதன் காரணமாகஆட்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பான தேசிய நடைமுறைகளை அது கொண்டிருக்கவில்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் (UNHCR) இலங்கை அரசாங்கத்துடன் 2005ஆம் ஆண்டில் செய்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சம் கோரும் ஆட்களை அந்த அலுவலகம் இங்கு பதிவு செய்வதுடன், அவர்கள் தொடர்பாக அகதி அந்தஸ்தை நிர்ணயிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள், ஏனைய நாடுகளில் நிரந்தரமாக குடியேறக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் இலங்கையில் தற்காலிகமாக வசிப்பதற்கென இந்த அகதிகளை வரவேற்றுள்ளன. 2019 மார்ச் 31 இல் உள்ளவாறு, ஏனைய நாடுகளில் குடியேறுவதற்காக காத்திருக்கும் 851 ஆட்கள் இலங்கையில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர். 819 ஆட்களின் அகதி விண்ணப்பங்கள் தொடர்பாக (தஞ்சம் கோருபவர்கள்) இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இவர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்து வருவதுடன், பெரும்பான்மையாக 1341 ஆட்கள் பாகிஸ்தானியர்களாகவும், 201 ஆட்கள் ஆப்கானிஸ்தானைச் சேரந்தவர்களாகவும் உள்ளனர். அதேபோல கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான தமது விண்ணப்பங்கள் ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பெருந்தொகையானவர்களும் இருக்கின்றார்கள். 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தின்போது 20 அகதிகள் நிரந்தர மீள்குடியேற்றத்திற்காக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்கள். ஒரு நீண்ட விண்ணப்ப மீளாய்வுச் செயன்முறை இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவதுவிண்ணப்பத்தை அனுப்பி வைத்தல்நேர்காணல் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறித்து அறிவித்தல் கிடைத்தல் என்பவற்றுக்கிடையில் பல வருட கால இடைவெளி காணப்படுகிறது. அதன் விளைவாக தஞ்சம் கோரும் ஆட்களுக்கு மத்தியில் உயர் அளவிலான நிச்சயமற்ற நிலை மற்றும் அச்ச உணர்வு என்பன நிலவி வருகின்றன. தற்போதைய நெருக்கடி எதிர்பாராத ஒரு நெருக்கடியாக இருந்து வருவதுடன், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இந்த அகதிகளை மிகவும் பலவீனமான நிலைமையில் வைத்திருப்பதுடன், அவர்களுடைய நிர்க்கதி நிலையை மேலும் தீவிரப் படுத்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கையில் அகதிகளின் வாழ்க்கை

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஆளொருவருக்கு ரூ. 10,000 தொகையை கொடுப்பனவாக வழங்குகின்றது அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ரூ. 22,000 வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை இலங்கையில் கௌரவமான விதத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு, தங்குமிட வசதி மற்றும் உணவு என்பவற்றுக்கான செலவுகளை கூட ஈடுசெய்வதற்கு போதியதாக இருந்து வரவில்லை. தஞ்சம் கோருபவர்களுக்கு எத்தகைய கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தமது செலவுகளை தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சில முஸ்லிம் குழுக்கள்கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் மற்றும் அரச சாரா அமைப்புக்கள் என்பன அவர்களுக்கு கல்வி, தங்குமிட வசதி, சுகாதார பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஆதரவளித்து வந்துள்ளன. ஆனால், இந்த உதவிகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து வருவதுடன், ஒரு சிலர் மட்டுமே அவற்றிலிருந்து பயனடைந்துள்ளார்கள்.

தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரை பொறுத்தவரையில் வீடமைப்பு, உணவு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு அல்லது சட்ட ரீதியான வேலை வாய்ப்பு என்பவற்றுக்கான உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்துவதில்லை. அரசாங்கத்தினால் இத்தகையவர்களுக்கு நிரந்தர தங்குமிட வசதிகளோ அல்லது இடைத்தங்கல் வசதிகளோ வழங்கப்படுவதில்லை. உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பு அல்லது சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்பு போன்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் அவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை நியாயமான விதத்திலும்எளிதாக ஒரு சிறு மேலதிகச் செலவுடன் செய்யக்கூடியதாக இருந்து வந்த போதிலும்இது இடம்பெறுவதில்லை. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு அரசாங்க வைத்தியசாலைகளிலும்மருந்தகங்களிலும் கிடைக்கும் சிகிச்சைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பன அக்கறை மற்றும் கருணை என்பவற்றின் அடிப்படையில் பெருமளவுக்கு குறைபாடுகளை கொண்டவையாக இருந்து வருகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் அக்கறையின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன்மருத்துவப் பராமரிப்பை நாடும் தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் தமது அடிப்படை உரிமையை அனுபவிப்பதற்கு பதிலாகஏதோ ஒரு சலுகையை கோரி நிற்பவர்கள் போல உணர நேரிடுகின்றது. கொடுமைகள்வன்முறை மற்றும் பாரபட்சம் என்பவற்றை நேரடியாக அனுபவித்து, அவற்றின் காரணமாக தமது வீடு வாசல்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் எப்பொழுதும் தாம் பிரிந்து வந்திருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளார்கள். தமக்கு பரிச்சயமில்லாத, வரவேற்பார் எவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ வேண்டி நேரிடுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு உளநலச் சேவைகளோ, உள சமூகப் பராமரிப்பு வசதிகளோ கிடைப்பதில்லை.

இலங்கையின் அரசியல் யாப்பு “அனைத்து மட்டங்களிலும் முழுமையான கல்வியை சமத்துவமான விதத்தில் அணுகுவதற்கான உரிமையை அனைத்து ஆட்களுக்கும்” உத்தரவாதப்படுத்திய போதிலும்அகதிகளின் மற்றும் தஞ்சம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை. 06-10 வயதுப் பிரிவைச் சேர்ந்த அகதிப் பிள்ளைகள் UNHCR அனுசரணைக்கு ஊடாக பாடசாலைகளை அணுக முடிகின்றது. ஆனால்இரண்டாம் நிலை கல்வி வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகள் முறைசார் கல்வியை அணுக முடியாத நிலை காணப்படுகின்றது. தஞ்சம் கோருபவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அரசாங்கத்தின் பெருந்தொகையான தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி முறைகளுக்குள்ளும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அவை இந்தப் பிள்ளைகள் தொழில் திறன்களை கற்றுஅவற்றை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய முறைகளாகும். அதன் ஊடாக அவர்கள் இந்தத் திறன்களை பயன்படுத்திதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுடன்இலங்கையில் சுயாதீனமாக வாழக்கூடிய ஒரு நிலைமையும் ஏற்பட முடியும்.

அகதிகளை பார்த்து அச்சப்படுவது ஏன்?

வட மாகாண மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் இந்த அகதிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு முன்வந்த பொழுது, இந்த நெருக்கடிக்கான ஒரு தற்காலிக நிவாரணம் குறித்த நம்பிக்கை துளிர்த்தது. இந்த விடயம் ஜனாதிபதி அவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் கூட சுமார் 1200 அகதிகள் மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். வட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் வடக்கிற்கு இந்த அகதிகளை அழைத்து வரும் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிய வருகின்றது. ஆனால்வட புலத்தைச் சேர்ந்த ஏனைய தமிழ் அரசியல் வாதிகள்சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமய குருமார் ஆகியோர் இந்த அகதிகளை வரவேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருந்தன்மையுடன் கூடிய இந்த  உதவிகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்து வருவதுடன், இந்நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கான இடைக்கால ஏற்பாடுகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மக்களின் நடமாட்டச் சுதந்திரத்தையும் உள்ளடக்கிய விதத்தில் இந்த ஆட்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் என்பவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையும் இருந்து வருகின்றது. அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வலுப்படுத்தப்படுவது அத்தியாவசியமாகும். மேலும்இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முனைப்பான ஒரு பங்கினை வகிக்க வேண்டி இருக்கின்றது. அதேவேளையில், சிவில் சமூகம் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகிய தரப்புக்களும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும். அகதிகள் எதிர்கொண்டு வரும் புதிய அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் ஆட்களுக்கு நிரந்தர மீள்குடியேற்றத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தை துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் முன்வருதல் வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டதைப் போல, அகதிகள் குறித்த அச்சம் மற்றும் கோபம் என்பன பெரும்பாலும் விளக்கமின்மை மற்றும் புரிந்துணர்வின்மை என்பவற்றிலிருந்து தோன்றுகின்றன. அனைத்து இலங்கை வாழ் மக்கள்சுற்றுலாப் பயணிகள்  மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோரைப் போலவே அகதிகளும் குறிப்பிட்ட நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரதூரமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால்அகதிகள் தொடர்பாக அத்தகைய எந்தவொரு சம்பவத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சமய அல்லது இனத்துவ சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும்முஸ்லிம்களையும் உள்ளடக்கிய விதத்தில் இனக் குழுக்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்ற விடயத்தையும் இலங்கை மக்கள் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள். இந்த அறியாமையும்உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்கள் தொடர்பாக தோன்றியிருக்கும் பகைமை உணர்ச்சி மற்றும் சந்தேகங்கள் என்பனவும் இணைந்து இலங்கையில் வசித்து வரும் இந்த அகதிகளுக்கு எதிரான பழிவாங்கல் செயற்பாடுகளின் அலையை தூண்டியுள்ளன.

தமது சொந்த நாடுகளில் கடும் அச்சுறுதல்களை எதிர்கொண்டு, ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் மக்களை ஏற்று, உபசரிப்பது உலகளாவிய ரீதியில் ஒரு சவாலாக இருந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் பெருந்தொகையான நாடுகளில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆதரவு என்பவற்றை கோரியுள்ளார்கள். உலகளாவிய ரீதியில் அகதிகளாக இருந்துவரும் 28.5 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது, பாகிஸ்தான் சுமார் 1.4 மில்லியன் அகதிகளையும்பங்களாதேஷ் சுமார் 900,000 அகதிகளையும் பராமரித்து வருகின்றன என்ற விடயத்தை அவதானிக்க முடிகின்றது. இதனுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையை  பொறுத்தவரையில் ஒரு சிறு எண்ணிக்கையினர் மட்டுமே – 1700 பேருக்கும் குறைவானவர்களே – இவ்விதம் வெளிநாட்டு இங்கு அகதிகளாக இருந்து வருகின்றனர்.

தமது சொந்த நாடுகளில் கடும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் எம்மீது  நம்பிக்கை வைத்து இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள் என்ற விடயம் குறித்து இலங்கையர்கள் என்ற முறையில் நாங்கள் பெருமிதமடைய வேண்டும். அவர்கள் இங்கு தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒரு சில வருடங்களின் போது நாங்கள் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு பராமரிப்பு வழங்கி, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென நம்புகின்றோம். நாங்கள் அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்ய முடியாது. எமது உள்ளங்களையும்இல்லங்களையும் நாங்கள் அவர்களுக்காக திறந்து விடுதல் வேண்டும்.

ruki_fernando-e1522406696800.jpg?resize=ருக்கி பெர்னாண்டோ எழுதி Refugee crisis in Sri Lanka after the Easter Sunday bombings என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

https://maatram.org/?p=7773

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.