Jump to content

மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார்

நெல்லை

meeranjpg

Published : 10 May 2019 10:29 IST

Updated : 10 May 2019 10:30 IST

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்  உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது. 

தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். 

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’ ஆகியவை மீரானின் சாதனைப் படைப்புகள். இவரது முதல் சிறுகதை வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளன. மீரானின் சாய்வு நாற்காலி என்ற நாவல், 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் கிட்டத்தட்ட 22 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  

மீரான் சமீபத்தில் எழுதி வெளியான ‘குடியேற்றம்’ நாவல் தவிர மற்ற எல்லா நாவல்களுக்கும் விருதுகள் கிடைத்தன. கிணறு குறித்து ஒரு நாவலை எழுதி வருவதாக அவர் சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தோப்பில் முஹம்மது மீரான் இன்று அதிகாலை திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் காலமானார். அவரது உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் மீரான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 

மீரானுக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும் ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்ற மகன்களும் உள்ளனர். தமிழின் மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீரான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article27088851.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இதை கேட்டதில் ரொம்ப நேரம் மனசுக்கு கஸ்டமாய் இருந்தது.

அப்துல் ரகுமான் இப்போது தோப்பில். அற்புதமான இரெண்டு இஸ்லாமிய இலக்கியவாதிகளை, மனிதநேயத்தை எழுத்தில் வடித்த பெரு மகன்களை இழந்து தவிக்கிறாள் தமிழன்னை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.