Jump to content

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்


Recommended Posts

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல்
 
 
main photomain photo
  •  
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 
 
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது.

 

 

நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில் அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா போன்ற மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன.

 

வோஷிங்கடன் டிசி (Washington, DC,) நகரில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்குகொள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற இந்தோ - பசுபிக் மூலோபாயம், இலங்கை, ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், இலங்கையின் உள்ளக அமைதிக்கான உதவி, ஏனயை நாடுகளின் இரணுவப் பயன்பாடுகள், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆற்றல்களை மேம்படுத்தல் போன்ற விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளன.

அத்தோடு பிராந்தியப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது போன்றவை உட்பட பல்வேறு விடயங்களும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன.

இதன் பின்னர் மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்யவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அங்கு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான இலங்கையின் நிலை தொடர்பாக உரையாடவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்காவின் ஏற்பாட்டிலேயே அமைச்சர் திலக் மாரப்பன மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்வதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்தப் பயணத்துக்கு முன்னதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் திலக் மாரப்பனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் சந்தித்து உரையாடுவரெனவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

 

இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை

 

இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்துத் தமது நிலைகளை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அமெரிக்கா, இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் பல நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேதான் சென்ற 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நின்றன. ஆனால் தாக்குதலையடுத்து இலங்கைப் படைகளுடனான கூட்டப் பயிற்சிகளை நிறுத்திவிட்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று விட்டன.

அத்துடன் தமிழர் தாயகமான முல்லைத்தீவுக் கடலில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலை வரையான அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வை அமெரிக்கா ஆரம்பித்திருந்தது.

எனவே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கருதப்பட்டது. அத்துடன் ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலகுவாக ஒன்று கூடும் நிலத்தொடர்புள்ள பிரதேசங்கள் குறிப்பாக சிரியாவில் உள்ள அவர்களின் பிரதான முகாம்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவே அமெரிக்கா மார்தட்டியிருந்தது.

ஆகவே நிலத்தொடர்பில்லாத நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கையில், அதுவும் இலங்கையில் பூர்வீகமாக வாழும் முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல், பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் அதிர்ச்சியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அவசர அவசரமாகக் கொழும்புக்கு வந்து தற்கொலைத் தா்க்குதல் குறித்து விசாரணை நடத்திய மேற்குலக நாடுகளின் இராணுவப் புலனாய்வாளர்கள், தற்போது அமெரிக்காவில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இலங்கையுடன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் சீனா இலங்கை முப்படைகளுக்கும் தேவையான பல மில்லியன்கள் பெறுமதியான அதிநவீன வாகனங்களை வழங்கியுள்ளது.

அதேவேளை, இந்தக் கலந்துரையாடலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் செல்வதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லையெனவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=957&fbclid=IwAR3dnlJNSYLgsm6figxdJQR7DXUP704chUtt3ptqGmwP9Y8IPxpEGk-btDU

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.