Jump to content

உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®©à¯à®©à¯à®¯à®°à¯

அனைவருக்கும் அன்பார்ந்த
உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்!

Ãhnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           Image associée

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள அன்னையர் தின வாழ்த்துக்கள்..💐

PicsArt_10-20-09.26.51.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 Fantastic Happy Mother's Day Animated Card Gifs - Etandoz in 2021 |  Happy mothers day pictures, Happy mothers day images, Mothers day gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

யாழ்கள அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையவள் அதிசயம்

 
images.jpg
 70 Views

அன்னையர் தினத்திற்கான சிறப்புக் கட்டுரை

“பசுந் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்

இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா.”

எனும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் என்றென்றும் நம் மனங்களில் ஆழப் பதித்துக் கொள்ள வேண்டியவை. சாதாரண ஒரு மனிதன் 45 டெல் யுனிற் அளவிற்கு தான் வலியை பொறுத்துக் கொள்ள முடியம். ஆனால் ஒரு பெண் பிரசவத்தின் போது 57 யுனிற் அளவிற்கு வலியை அனுபவிக்கின்றாள். இது 20 என்புகள் ஒரே தருணத்தில் உடைவதனால் உண்டாகும் வலிக்கு சமம். அத்துணை வலிகளையும் ஒரு தாயானவள் தன் பிள்ளைக்காக பொறுத்துக் கொள்கின்றாள். தாயில் இருந்து தான் தலைமுறை ஆரம்பிக்கின்றது. சமுதாய மாற்றத்தினையும், தலைமுறை மாற்றத்தினையும் உண்டாக்க கூடிய சக்தி ஒரு தாயிடம் மட்டுமே காணப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

“என்னுடைய தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கின்றது”  – நபிகள் நாயகம்

“எனது நல்ல குணங்கள் அத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த தாயே” – ஆபிரகாம் லிங்கன்

“மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் ” – உலக நியதி

என்று இன்று நாம் பறிக்கும் வெற்றிக் கனிகள் அனைத்திற்கும் பின்னால் எம் தாயின் வியர்வைத் துளிகளும், கண்ணீரும் நிச்சயமாக கலந்திருக்கும். ஒரு குடும்பத்திலே மாதத் தொடக்கத்தில் வேலைக்கு சென்று வருகின்ற ஆணிடம் மனைவி எதிர் பார்ப்பது சட்டைப் பையில் இருக்கும் சம்பளப் பணமாக இருக்கும். அவனது பிள்ளை எதிர்பார்ப்பு என்பது கைப்பையில் இருக்கும் நொறுக்கு தீனியாக இருக்கும். ஆனால் ஒரு தாயானவள்  தன் பிள்ளை இத்தனை நேரம் கழித்து வீட்டிற்கு வருகின்றானே உணவு உண்டானா இல்லையா என அவனது இரைப்பையை பார்ப்பவளாக இருப்பாள்.

இத்துணை சிறப்பு வாய்ந்த அன்னையரை கௌரவிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையினை அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஆனால் இவ் அன்னையர் தினம் குறித்தும்  அதன் காரணகர்த்தாவை பற்றியும் சற்றேனும் சிந்தித்திருப்போமா?

17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தங்கள் தாயை சந்திப்பதற்காக வருடத்தில் மே மாதம் நான்காம் ஞாயிற்று கிழமையில் விடுமுறை வழங்கினார்கள். அது “மதர்ஸ் சண்டே” என அழைக்கப்பட்டது. அதன் போது பரிசுப் பொருட்களுடன் தமது தாயைச் சந்திக்க செல்வார்கள். 1870 களில் வட அமெரிக்காவில் ஜுலியா வார்ட் என்ற பெண் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் படி  நூற்றாண்டு காலமாக பல்வேறு வடிவங்களில் அன்னையர் தினமானது மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பினும், அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம் தான் இன்றைக்கு உலகம் எங்கும் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

1908ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் 5000 பேர் அமரக் கூடிய பிலடெல்பியா அரங்கில்  15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஜார்விஸ் என்ற பெண் சேவகியின் மகள் ஜார்விஸ்  அன்னையர் தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து அன்னையர் தின கமிட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அம்மையார் எதிர்பார்த்ததை விட 1909ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அன்னையர் தின விசேட பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். 1913ஆம் ஆண்டு தன் பணி நிமிர்த்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினர்.  தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1914ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அதிபர் வூட்றோவில்சன் கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டார். இதன் போது மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே அன்னையர் தினம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்று கிழமை அன்று எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தான் கருத்தரித்ததில் இருந்து தன் விருப்பு வெறுப்பைத் துறந்து தன் பிள்ளையின் நலன் கருதி தான் துன்பப்பட்டு தான் கருவறையில் சுமக்கும் தன் பிள்ளையின் சிறு அசைவினைக் கூட வலியாகப் பார்க்காது இன்முகத்துடன் பூரித்து பார்த்து பத்து மாதங்கள் தன் பிள்ளையின் வரவிற்காய் காத்திருந்து பிரசவ வலி சுமந்து பிள்ளையை பெற்றெடுக்கும் போது அவள் அனுபவிக்கும் வலி, அவளை அறியாமலே கண்களோரம் கசியும் கண்ணீர் என அனைத்தையும் மறந்து, தன் மார்பில் முகம் புதைத்து தன் பிள்ளை பால் அருந்தும் வேளையிலே அவள் இதழ் ஓரம் ஏற்படுகின்ற புன்னகையில் பூக்கின்ற தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம்.

வைகையில ஊர் முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைபிடியாய் கூட்டிவந்து

கரை சேர்த்து விட்டவளே

எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்கு வேறு பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா

ஆம்! ஆயிரம் ஆயிரம் சொந்தங்கள் சுற்றி இருந்தாலும், பணத்தினை வாரி இறைத்தாலும் தாய் அன்பை மட்டும் எங்கும் வாங்கிவிட முடியாது. தொப்பிள் கொடியில் நேசம் ஊற்றி மழலைப் பருவத்தில் மடியில் ஏந்தி பருவ வயதில் பெருமிதம் அடைந்து கடைசி வரையும் கண்ணில் சுமக்க கூடியவளே தாய். நாம் பிறக்கும் வரைக்கும் தன் அழகில் அக்கறை கொண்டவள், தாயாக மாறும் போது உடை வாங்கும் போதும், நகை வாங்கும் போதும் தன் பிள்ளைக்கு அதனை அணிவித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றே தன் பிள்ளையை பற்றி மட்டுமே சிந்திக்கின்றாள். நாம் இன்று ஒருவருக்கு ஏதேனும் உதவி செய்து விட்டால் அதனை பல முறை அவரிடம் சொல்லிக் காட்டுகின்றோம்; அல்லது ஒரு முறையாவது அதை பற்றி கதைக்காமல் விட்டு விடுவதில்லை. ஆனால் தன் உடல் நிலையை கவனிக்காது கூலி வேலைக்கு செல்வது மட்டுமின்றி பாக்கு விற்று, முட்டை விற்று தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தன் பிள்ளை ஆசைப்படும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கின்றாள். ஆனால் அதை  ஒரு முறை கூட எம்மிடம் சொல்லிக் காட்டியிருக்க மாட்டாள்.

இன்று எத்தனை தாய்மார்கள் அன்னையர் தினத்தில் போற்றப்படுகின்றனர் என்கின்ற கேள்விக்கு அப்பால் எத்தனை தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் கேட்பதற்கு நாதி அற்று இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் எம்மிடமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. மாறி வரும் இந் நவீன யுகத்திலும் எத்தனையோ தாய்மார்கள் தம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் தம் கனவுகளை மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு வீட்டிலேயே கட்டிப் போடப்படுகின்றனர். அவர்களது வெளி உலகம் என்பது நான்கு சுவர்களுக்குள் முடிவடைந்து விடுகின்றது.

அன்னையர் தினத்தில் அன்னையர்களை பூஜிக்காது போனாலும், அவர்களுக்கு அன்னையர் தினத்திலாயினும் அன்னைக்குரிய மரியாதையை வழங்குங்கள். தாய்மை மதிக்கப்படுகின்ற போது நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்கள் அழிக்கப்படும் என்பதனை நாம் அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டும்.

தாயை போற்றி வீழ்வாரும் இல்லை

தாயை தூற்றி வாழ்வாரும் இல்லை.

 

வேலம்புராசன். விதுஜா

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

https://www.ilakku.org/?p=49129

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.