Jump to content

ஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிக்க வேண்டாம்

 

ஒரு சமூ­கத்தை அநீ­திக்­குட்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டதன் கார­ண­மாக கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு மிகப்­பெ­ரிய யுத்­தத்தை எதிர்­கொண்­ட­துடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்­தி­யது.

god_father.jpg

முப்­பது வரு­ட­கால யுத்தம் கார­ண­மாக நாம் எதிர்­கொண்ட பின்­ன­டைவு எத்­த­கை­யது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்­களை சுமந்து வந்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் வடுக்­க­ளுடன் வாழ்­கின்­றார்கள். 

இவ்­வா­றான சூழலில் மீண்டும் ஒரு யுத்­தத்­தையோ அல்­லது அது­போன்­ற­தொரு நிலை­மை­யையோ எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலையில் இந்த நாடு இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் உணர்ந்­துள்­ளனர். எனவே இது­போன்­ற­தொரு நிலைமை நாட்டில் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகியோர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. 

மிக விசே­ட­மாக தற்­போது நாட்டில் தோன்­றி­யுள்ள புதிய சூழலில் எந்­த­வொரு சமூ­கமும் அநீ­திக்கு உட்­ப­டா­த­வ­கையில் நடந்­து­கொள்­ள­ வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். இதில் மக்­களை உரிய முறையில் அர­சியல் மற்றும் மதத் தலை­மைகள் வழி­ந­டத்­த­வேண்டும். குறிப்­பாக தற்­போ­தைய சூழலில் முஸ்லிம் மக்கள் மீதான பார்வை அந்த மக்­களைப் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் அனை­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்த மக்கள் கவ­லையில் இருக்­கின்­றனர். 

இந்த நிலை வேண்டாம். நாட்டில் உயிர் அழிவை ஏற்­ப­டுத்­திய இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்கள் ஆகி­யோரும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விட­யத்தை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர். 

எனவே இந்த மக்கள் மீது வெறுப்­பு­ணர்வைக் காட்டும் வகையில் எந்­த­வொரு சமூ­கமும் செயற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. இந்த இக்­கட்­டான நிலை­மை­யி­லேயே அப்­பாவி முஸ்லிம் மக்­களை ஏனைய மக்கள் பாது­காக்­க­வேண்டும் என்­ப­துடன் அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும். இந்த அசம்­பா­விதம் மற்றும் இழப்­புக்­க­ளுக்கு காரண கர்த்­தா­வாக முஸ்லிம் மக்­களை ஒரு­வரும் நோக்­கி­வி­டக்­கூ­டாது. முஸ்லிம் மக்கள் இந்த சம்­ப­வங்­க­ளையும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வர்­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்து வரு­வ­துடன் அவர்­களை நிரா­க­ரிக்­கின்­றனர். எல்­லோ­ருக்கும் முன்­ன­தாக அவர்­களே இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்­களை நிரா­க­ரித்­து­விட்­டனர். எனவே அந்த மக்கள் அசௌ­க­ரி­யப்­படும் வகையில் நாட்டில் ஏனைய சமூ­கத்­தினர் நடந்­து­கொள்­ளக்­கூ­டாது. அது­மட்­டு­மன்றி தற்­போ­தைய சூழலில் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் மக்­களின் அச்­சத்தைப் போக்­கவும் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் நாட்டில் பாரிய பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பாரிய ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றனர். எனவே இந்த விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் மிகவும் நிதா­ன­மா­கவும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் சமா­தா­னத்தை ஊக்­கு­விக்கும் வகை­யிலும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எக்­கா­ரணம் கொண்டும் முஸ்லிம் மக்­களை வெறுப்­பு­ணர்­வுடன் பார்க்­க­வேண்டாம். இந்தத் தாக்­குதல் கார­ண­மாக நாட்டு மக்கள் எவ்­வ­ளவு தூரம் அச்­ச­ம­டைந்­துள்­ள­னரோ அதே அளவு அந்த மக்­களும் பாரிய அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர். அந்த அச்ச நிலையை போக்­க­வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இதே பிரச்­சி­னையை கடந்த 2009 ஆம் ஆண்டு வரை எதிர்­கொண்டு வந்­தனர். அக்­கா­லத்தில் அந்த மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் ஏராளம். அதனால் இக்­கட்­டான நிலையில் ஒரு சமூ­கத்தின் மீது வித்­தி­யா­ச­மான பார்வை படும்­போது அல்­லது சந்­தே­கப்­பார்வை இருக்­கும்­போது அந்த சமூகம் எந்­த­ள­வு­தூரம் வலி­களைச் சுமந்து நிற்கும் என்­பதை தமிழ் பேசும் மக்­களால் புரிந்­து­கொள்ள முடியும். 

எனவே ஒரு­சில பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்­காக  ஒட்­டுமொத்த சமூ­கத்­தையும் இவ்­வாறு நோக்க முற்­ப­டு­வது நியா­ய­மற்­ற­தாகும். எனவே முஸ்லிம் சகோ­தர மக்­களை முதலில் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் பாது­காப்­புடன் வாழ்­கின்­றனர் என்­பதை அவர்­க­ளுக்கு உண­ர­வைக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும். இந்த இக்­கட்­டான நிலை­மையில் இந்த மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வதொன்றே அவ­சி­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

சமூகம் பொறுப்பாக முடியாது,

ஒரு­சில அடிப்­ப­டை­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்கு அமைய ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் வெறுக்க முற்­ப­டக்­கூ­டாது. விசே­ட­மாக சக முஸ்லிம் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது வார்த்தைப் பிர­யோ­கங்கள் மிக கவ­ன­மாக இருக்­க­வேண்டும். அவர்­க­ளது மனதைப் புண்­ப­டுத்­தும் வ­கை­யி­லான சொற்­பி­ர­யோ­கங்­களைத் தற்­போ­தைய சூழலில் பிர­யோ­கிக்கக் கூடாது. அவர்­களின் உணர்­வு­களை மதிக்க முற்­ப­ட­வேண்டும். இந்த இக்­கட்­டான கட்­டத்­தில்தான் ஏனைய சமூ­கத்­தினர் முஸ்லிம் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளா­கவும் செயற்­ப­ட­வேண்டும். 

இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிக முக்­கிய சில விட­யங்­களைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்துக்குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் சகல தமி­ழரும் புலிகள் என்ற கருத்து உருப்­பெற்­றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்தில் தமி­ழர்­களின் சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்கள் புலி­க­ளுடன்  இணைந்­தனர். நாம் தமிழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. ஆகவே  இப்­போது நாம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் என தமி­ழர்­களைப் பார்த்­த­தைப்போல் முஸ்­லிம்­களைப் பயங்­க­ர­வா­திகள் என பார்க்க வேண்டாம்.  விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களைப் போராட்­டத்துக்கு தள்­ளி­ய­தைப்­போன்று  இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­துக்குள் தள்­ளக்­கூ­டாது 

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இந்த முக்­கி­ய­மான விட­யத்தைக் கூறி­யி­ருக்­கின்றார்.  மிக முக்­கி­ய­மாக 1983 ஆம்   ஆண்டு கல­வரம்  இந்த நாட்டில் எவ்­வா­றான விளைவை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை உணர்ந்து நாம் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி  நினை­வூட்­டி­யி­ருக்­கின்றார்.  அதன் விளை­வாக நாம்  30 வரு­டங்கள்   நெருக்­க­டி­களை எதிர்­கொண்டோம். எனவே யாரும் தற்­போ­தைய  சூழலில்  தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து  பழைய  நிலை­மைக்கு நாட்டைக் கொண்டு சென்­று­வி­டக்­கூ­டாது.  

அதே­போன்று கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விடயம் தொடர்பில் சில முக்­கி­ய­மான ஆழ­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது  கொச்­சிக்­கடை,  மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வப்­பிட்­டிய போன்ற தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள்  முஸ்லிம் மக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதனை நான் தெளி­வாகக் குறிப்­பிகி­டுன்றேன். இது தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட இளைஞர் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செய­லாகும். அதற்கு முஸ்லிம் மக்­களை பலி­யாக்­கி­விடக் கூடாது. 

எனவே நாம் ஒரு­நாளும் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கையைத் தூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம்   கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுப்­ப­தற்கு எந்த உரி­மையும் கிடை­யாது. அவ்­வாறு செய்தால் அது கத்­தோ­லிக்க மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும். நாம் இரண்டு தரப்­பி­னரும் சகோ­த­ரர்கள். நாம் அனை­வரும் ஆதாமின் பிள்­ளைகள். எனவே நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். நடை­பெற்ற அசம்­பா­வி­தத்­துக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. அதனால் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்கக் கூடாது. அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும்  அனை­வரும் வாழ வேண்டும். முஸ்லிம் மக்­களும் கிறிஸ்­தவ மக்­களும் சகோ­த­ரத்­து­ட­வத்­துடன் வாழ வேண்டும். குறை­பா­டுகள் இருக்­கலாம். மனி­தர்கள் மத்­தியில் குறை­பா­டுகள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறுமை காத்து சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்,

அதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் ஜனா­தி­ப­தியும் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேரா­யரும் தெரி­வித்­துள்ள விட­யங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் சில முக்­கிய சட்­ட­திட்­டங்கள் அமு­லுக்கு வந்­துள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் முஸ்லிம் சகோ­தர மக்­களின் கலா­சார விழு­மி­யங்­களைப் பாதிக்­கா­த­வாறு இந்த விட­யங்கள் இருக்­க­வேண்டும். தற்­போது புர்கா அணி­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் பாது­காப்பு நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­தினர் இந்தத் தீர்­மா­னத்தை ஏக­ம­ன­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 

இந்த இடத்தில் முஸ்லிம் அர­சி­யல் த­லை­மை­க­ளுக்கு மிக முக்­கிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் தமது சமூ­கத்­தி­ன­ருக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்டும். இந்தத் தீர்க்­க­மான கட்­டத்தில் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக அமை­யாது என்­பதை தலை­மைத்­து­வங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். கடந்த புதன்­கி­ழமை கூட பாரா­ளு­மன்­றத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் சர்ச்­சைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் மத்­தியில் அமை­தியை ஏற்­ப­டுத்­தவும் சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தவும் அச்ச உணர்வைப் போக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

தலைமைத்துவங்களின் பொறுப்பு,

இதற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் அந்த மக்­களை சரி­யான முறையில் வழி­ந­டத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். எந்­த­வொரு சமூ­கமும் வழி­த­வறிச் சென்­று­வி­டக்­கூ­டாது. அந்த இடத்தில் சர்­வ­மதத் தலை­வர்­க­ளுக்கும் பாரிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனவே அந்த செயற்­பா­டு­க­ளுக்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்புத் தர­வேண்டும். 

இந்­நி­லையில் எந்­த­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் நாட்டில் அநீ­திகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கமும் தாம் அநீ­திக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்றோம் என்று உண­ரா­த­வ­கையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இதில் நாட்டின் அரசின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கும் மதத்­த­லை­வர்­க­ளுக்கும் சிவில் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். 

சிறு­பான்மை மக்கள் பாது­காப்­பாக தம்மை உணரும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும். கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரிய சொல்­லொ­ணாத்­துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­தனர். யுத்தம் என்­பது அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் சொற்­களால் விப­ரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். 

அவ்­வா­றா­ன­தொரு நிலைமை மீண்டும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அதன்­படி பார்க்கும் போது தற்­போது முஸ்லிம் மக்கள் தொடர்­பான அணு­கு­முறை சரி­யா­ன­தாக இருக்­க­வேண்டும். அவர்­களை புறந்­தள்ளும்­வ­கையில் எந்த செயற்­பா­டு­களும் இருக்­கக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தலை­மைத்­து­வங்கள் வேத­னையின் கார­ண­மாக சில கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதைக் காண முடி­கின்­றது. ஆனால் இந்த இடத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் பொறு­மை­யு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் செயற்­ப­டு­வதே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றது. 

ஒரு இக்­கட்­டான நிலை­மைகள் ஏற்­படும் பட்­சத்தில் குறிப்­பாக மக்கள் பொறு­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். யாரும் யாருக்கு எதி­ரா­கவும் வன்­மு­றை­களைக் கையில் எடுத்­து­வி­டக்­கூ­டாது. எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவிட வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலிந்து கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அந்த கோரிக்கையின் தாற்பரியத்தை மக்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். வன்முறையின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

அதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீதான கெடுபிடிகளுக்கோ சந்தேகத்துடனான பார்வைக்கோ ஒருபோதும் இடம் வைக்கக்கூடாது.இதனை நாட்டின் தலைமைத்துவம் உறுதியாகக் கவனிக்கவேண் டும். ஏற்கனவே ஜனாதிபதியின் இது தொடர்பான அறிவிப்புக்கள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்கவேண்டும் என்பதே இங்கு அவசியமாகின்றது. ஒரு சமூகத்தை காயத்துக்குட்படுத்தி வடுக்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது இழப்பை ஈடுசெய்ய முடியாது. 

இதன் பின்னர் இவ்வாறானதொரு அசம் பாவிதம் இடம்பெறாதவகையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதே தேசிய அவசியமாக காணப்படுகின்றது.

எனவே இக்கட்டான இந்த சூழலில் முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். ஒருசில அடிப்படை வாதிகளின் செயற்பாடுகளுக்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயமற்றது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அந்த மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை கவனத்தில் கொண்டு அவற்றை சரியாகப் பயன்படுத்தி அமைதியான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையுடன் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே யதார்த்தமான தேவையாகக் காணப்படுகின்றது. 

ரொபட் அண்டனி

 

http://www.virakesari.lk/article/55734

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.