Jump to content

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு

May 12, 2019

 

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

DSC03136.jpg?resize=800%2C450

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு  கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது

*ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால்  இனப்படுகொலை செய்யப்பட்டனர்

*தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019

*தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்

* கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி விசாரணை செய்

*தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்

*ஆயுதப்படைகளே  எமது காணிகளை விட்டு வெளியேறு

*பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறு

* ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து

* தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்து

 உள்ளிட்ட கோரிக்கைகளோடு தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் மே 12 முதல் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

 தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தினுடைய ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவில் கொள்ளப்பட்டது

 இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியைஜா  புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்

#mullivaikal #sivajilingam #Tamilmassacre

DSC03136.jpg?resize=800%2C450DSC03154.jpg?resize=800%2C450DSC03155.jpg?resize=800%2C450DSC03173.jpg?resize=800%2C450

 

 

http://globaltamilnews.net/2019/121510/

செஞ்சோலை வளாகத்திலும் சுடரேற்றி அஞ்சலி

May 12, 2019

IMG_9246.jpg?resize=800%2C533

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொன்றொழிக்கப்படட  தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் இன்று முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது

வடமாகாண சபை  முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தினால் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு  மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை இடம்பெற்ற 21 இடங்களில் எதிர்வரும் ஆறு தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்

அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நினைவு நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான  குண்டுவீச்சு தாக்குதலில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவர்களுடைய வளாகத்திலே நண்பகல் பன்னிரண்டு முப்பது மணி அளவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது

குறித்த வளாகத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான  எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் ஆண்டிஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்றிருந்தனர்

#Tamilmassacre #sencholai #mullivaikal

IMG_9231.jpg?resize=800%2C533IMG_9232.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2019/121526/

Link to comment
Share on other sites

படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!
தமிழினப் படுகொலைகாரர்களை எதிர்த்து போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்'

_106924367_phto-2.png

 

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கமைய வாரத்தின் முதலாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கடற்கரைப்பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்கும் போர்குற்றங்களுக்கும் நீதி வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும், வட கிழக்கு மாகாணங்களில் பொதுஜன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையுடன் நடத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், தமிழ் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள கையளிக்கபப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

"ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஆயுத படைகளினால் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நினைவு கூர்ந்து கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் இனவழிப்பு வாரத்தை முன்னெடுக்க வேண்டும்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதியிலிருந்து மே 18 ஆம் திகதி வரை 21 இடங்களில் அனுஷ்டிக்க உள்ளோம். இறுதியாக மே 18 முள்ளிவாய்க்காலில் நடத்த அழைப்பு விடுத்தள்ளோம். ஆகவே சகல தமிழ் தேசிய அமைப்புக்களும் பொது மக்களும் உணர்வுபூர்வமாக தன்னெழுச்சியாக அங்கே ஒன்று கூட வேண்டும்.

"சென்னையிலே ஐல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டது போல முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கும் மக்கள் திரள வேண்டும். அவ்வாறு எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி அணிதிரளுவதனூடாக அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் ஒரு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48244528

Link to comment
Share on other sites

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்” களியாட்டங்களைத் தவிர்ப்போம்!

By

mullibat1605.jpg?resize=640%2C360

 

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் ஞாயிற்றுக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில் நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரங்களையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும்.

மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும்.

நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!

http://www.errimalai.com/?p=40126

Link to comment
Share on other sites

தமிழருக்கு எதிரான அநீதிகளுக்கு சரியான பதில் வேண்டும் நினைவேந்தலின் 2ஆம் நாளில் சிவாஜி

Mullivaikaal-Memorial-in-Mannar-3.jpg

தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சரியான நீதி தந்தேயாக வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மதியம் 2ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில், “முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு தினம் வாரம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

முக்கியமாக, தமிழ் மக்களின் கிராமங்கள், தனியார் காணிகளில் இருந்தும் ஆயுதப்படையினர் வெளியேற வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும், போர்க் குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எந்த விதமான விசாரணைகளும் நடத்தாத காரணத்தினால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பாதுகாப்புச் சபையூடாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த தமிழின படுகொலை வாரத்தினை ஆரம்பித்தோம்.

இந்நினைவேந்தல் நிகழ்வின் 5ஆவது இடமாக இன்று மன்னாரில் இடம்பெற்றது. அத்துடன் 6 நாட்களில் 8 மாவட்டங்களில் 21 இடங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இறுதி நிகழ்வு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும்.

மேலும் மன்னார் உயிலங்குளத்தில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்காகவும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Mullivaikaal-Memorial-in-Mannar-1.jpg

Mullivaikaal-Memorial-in-Mannar-2.jpg

Mullivaikaal-Memorial-in-Mannar-4.jpg

Mullivaikaal-Memorial-in-Mannar-5.jpg

http://athavannews.com/தமிழருக்கு-எதிரான-அநீதிக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.