Jump to content

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி )

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில்  எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும்  இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். 

makesh.jpg

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமாக கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதேபோல்  பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதாக என்ற எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

ஆனால் ஆழமாக எந்த விடயங்களும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் யார்  குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட  பாதுகாப்புபடை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்.  

21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும் எமக்கு 24 ஆம் திகதி தான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல் இராணுவமாக 

எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இருவரை இராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/55798

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஆக.. ஐ எஸ்.. அவர்களுடன் தொடர்புபட்ட.. முஸ்லீம் காங்கிரஸின் உள்ளூர் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்.. அவர்களுக்குச் சார்ப்பான இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. சொறீலங்கா மைத்திரி அரசு.. சொறீலங்கா அரச புலனாய்வுத்துறை.. சொறீலங்கா இராணுவம் உட்பட்ட படைகள்.. கோத்தா - மகிந்த கும்பல்.. மோடி கும்பல்.. எல்லாம் இணைந்து செய்த செயல்தான்.. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு.

குண்டு வெடிப்பின் பின்..

மகிந்தா + கோத்தா: நடைமுறை அரசால்.. மக்களை பாதுக்காக்க முடியாது. மீண்டும் எங்களை பதவியில் அமர்த்தினால்.. பயங்கரவாதத்தை அழிந்தொழிப்போம்.

மோடி: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு போல்.. இந்தியாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால்... எமக்கு வாக்களியுங்கள்.

சொறீலங்கா இராணுவம்: வடக்குக் கிழக்கின் பாதுகாப்பை  எங்களிடம் கோரிய படியால்.. நாங்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்பது பொய்.

சொறீலங்கா புலனாய்வுத்துறை: தகவல் முன்னரே கிடைத்தது. அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினோம். ஆனால் தாக்குதலை தடுக்க நடவடிக்கை இல்லை.

றோ: தாக்குதல் திட்டம் தீட்டப்படுவது குறித்து முன்னரே தெரியும். சொறீலங்காவை எச்சரித்தம்.

முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்: நாட்டில் இரத்த ஆறு ஓடும். பள்ளிவாசல்களில் வாள்கள் தற்பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கலாம்.. மீண்டும் புலிகள் வரக்கூடும்.. அல்லது சிங்களவர்கள் தாக்கக் கூடும். சில அரசியல்வாதிகளின் பங்களிப்புக் குறித்து வெளியில் சொல்ல முடியாது. இந்த தாக்குதல் சூத்திரதாரிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தெரியும்.. ஆனால் வெளியில் சொல்ல முடியாது. அது சாணக்கியம் கிடையாது. 

ஐ எஸ்: இலங்கையில்.. புனிதப் போர். சிலுவை தூக்கிகள் 1000 பேரை சரிக்கட்டிட்டம். 350 பேர் மரணம்.. 650 பேர் காயம். 

சொறீலங்கா பொலிஸ்: உளவுத்தகவல் வந்தது. அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டும் இருந்தது. ஆனால்.. தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

மைத்திரி: நாட்டில் மக்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டு.. பயங்கரவாதத்தை முறியடிக்க என்னோடு கைகோர்க்கவும்.

இதுக்கு அப்பால்..

சொறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு முழு உதவியும் வழங்கி தமிழ் மக்களின் சாவை ரசித்த.. அமெரிக்க முன்னாள் தூதர் பிளேக்.. நீங்கள்.. செப் 11 இல் இருந்து அமெரிக்க மீண்டது எப்படி என்று அதில் இருந்து பாடம்படிச்சுக் கொள்ளுங்கள். ஏலவே.. செப் 11 சி ஐ ஏ.. மற்றும் அல் குவைடா கூட்டுச் சதி என்றே பேசப்படுகிறது.  

ஆக இது நன்கு திட்டமிட்டு.. தமிழ் மக்களுக்கு எதிராகவும்.. சொறீலங்காவின் மீதான படுமோசமான.. போர்க்குற்றச் சாட்டுக்களை மழுங்கடிக்கவும்.... சொறீலங்காவின் அரச பயங்கரவாதம்.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம்.. ஹிந்தியாவின் பிராந்திய பயங்கரவாதம்.. அமெரிக்காவின் உலகப் பயங்கரவாதம்.. மகிந்த - கோத்தாவின் சிங்கள பெளத்த பேரினவாதப் பயங்கரவாதம்..எல்லாம் இணைந்து மேற்கொண்ட ஒரு மனித அழிவே இதுவாகும்... அப்படியான சந்தேகமே வலுவடைகிறது. 

Link to comment
Share on other sites

10 hours ago, பிழம்பு said:

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்டு மக்கள் அபிமான முன்னாள் முதல்வர் விக்கி தாக்குதலின் பின்னர் அறிவித்துவிட்டார்! அதனால போர்க்குற்றச்சாட்டு உண்மை என்டு  உறுதியாகின்றது கண்டியளோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.