Jump to content

கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்!

May 13, 2019
pagatamil-1-696x522.jpg
 

இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் (11) இந்த சம்பவம் நடந்தது.

தமிழினப் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இந்த போராட்டம் நடந்தது. ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோவிலுள்ள தமிழர் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட போராட்டத்தில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டிருந்தனர். முறைப்படி அனுமதி பெற்று ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தது.

pagatamil-7-300x209.jpgpagatamil-6-300x200.jpgpagatamil-2-300x260.jpg

 

போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென பௌத்த பிக்குவொருவரின் தலைமையில் சுமார் 25 பேரை கொண்ட சிங்கள குழுவொன்று அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டது. இலங்கை கொடிகளுடன் வந்த அவர்கள், இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, போரில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என கோசமிட்டனர்.

pagatamil-3-144x300.jpgpagatamil-4-239x300.jpgpagatamil-5-300x225.jpg

 

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் மருத்துவ சேவையாற்றிய வைத்தியர் வரதராஜனும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.ஒட்டாவா நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா வன்டென்பெல்ட்டும் கலந்து கொண்டு உரையாற்றினார். இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தான் அறிந்து வைத்திருப்பதாகவும், தமது அரசாங்கம் ஐக்கிய நடுகல் அமைப்புடன் சேர்ந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்!

May 13, 2019
pagatamil-1-696x522.jpg
 

இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் (11) இந்த சம்பவம் நடந்தது.

தமிழினப் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இந்த போராட்டம் நடந்தது. ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோவிலுள்ள தமிழர் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட போராட்டத்தில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டிருந்தனர். முறைப்படி அனுமதி பெற்று ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தது.

pagatamil-7-300x209.jpgpagatamil-6-300x200.jpgpagatamil-2-300x260.jpg

 

போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென பௌத்த பிக்குவொருவரின் தலைமையில் சுமார் 25 பேரை கொண்ட சிங்கள குழுவொன்று அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டது. இலங்கை கொடிகளுடன் வந்த அவர்கள், இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, போரில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என கோசமிட்டனர்.

pagatamil-3-144x300.jpgpagatamil-4-239x300.jpgpagatamil-5-300x225.jpg

 

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் மருத்துவ சேவையாற்றிய வைத்தியர் வரதராஜனும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.ஒட்டாவா நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா வன்டென்பெல்ட்டும் கலந்து கொண்டு உரையாற்றினார். இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தான் அறிந்து வைத்திருப்பதாகவும், தமது அரசாங்கம் ஐக்கிய நடுகல் அமைப்புடன் சேர்ந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

எங்கப்பா, ஒரு அய்யர் கூட எங்கடை ஆட்களுக்கு கிடைக்கேல்லையோ? 😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா, ஒரு அய்யர் கூட எங்கடை ஆட்களுக்கு கிடைக்கேல்லையோ?

 😀
 எரைரட்ரை அம்மாங்கடை அய்யர்மார்..சிரீலங்க சுதந்த்திர தினத்தில் அவையோடை சேர்ந்து கொடியேத்தி ,விளக்கு கொழுத்தவேணும்.....எங்கடை சித்தி அய்யர்,அம்பாள் அய்யர்,மவுலீச அய்யர் இதி விசேசம்..சும்ம சொல்லக்கூடாது..இவை அங்கை போகாட்டில்...மாவிலையும்,தோரணமும் எடுக்கேலாது தெரியும்தானே...கலர் கலரா இகினாச் சட்டையோடஐ..அவயின்ரை அம்மாமாரும் அருகிரிக்க காணக் கண்கோடி வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2019 at 5:22 AM, Nathamuni said:

எங்கப்பா, ஒரு அய்யர் கூட எங்கடை ஆட்களுக்கு கிடைக்கேல்லையோ? 😀
 

இதுக்கு ஏனப்பா ஐயர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.