Jump to content

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

magalkandea.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/55863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிழம்பு said:

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம்

இது உண்மையாக இருக்குமெண்டால்  ஐ எஸ்  பொறுத்த இடத்திலைதான் மாட்டியிருக்கெண்டு அர்த்தம்.

தப்பிக்கூட ஓடேலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அடிக்கும் போது.. மசூதியும் விகாரையும் என்டாங்கள். இப்போது முஸ்லீம்களை அடிக்கும் போது கோவிலும் விகாரையும் என்கிறார்கள்.

இதில்.. விகாரை பொதுப்படையாகி நிற்கிறது.

முஸ்லீம்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழிக்க நினைத்தார்கள். தங்களை தமிழர்கள் இடத்தில் நிலை நிறுத்தலாம் என்று.

ஆனால்.. இன்று தமிழர்களையும் அழித்து தங்களையும் அழித்து.. சிங்களவனுக்கு சொறீலங்காவை தூய பெளத்த சிங்கள நாடாக்க உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

magalkandea.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/55863

பலர் இங்கே விரும்பியது போன்ற ஓர் அரசியலை சம்பந்தன் கையில் எடுகிறாரா?

40 minutes ago, nedukkalapoovan said:

தமிழரை அடிக்கும் போது.. மசூதியும் விகாரையும் என்டாங்கள். இப்போது முஸ்லீம்களை அடிக்கும் போது கோவிலும் விகாரையும் என்கிறார்கள்.

இதில்.. விகாரை பொதுப்படையாகி நிற்கிறது.

முஸ்லீம்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழிக்க நினைத்தார்கள். தங்களை தமிழர்கள் இடத்தில் நிலை நிறுத்தலாம் என்று.

ஆனால்.. இன்று தமிழர்களையும் அழித்து தங்களையும் அழித்து.. சிங்களவனுக்கு சொறீலங்காவை தூய பெளத்த சிங்கள நாடாக்க உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். 

நெடுக்ஸ்,

கொஞ்சம் நமது முரட்டுப் பிடிவாதங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு, உங்களோடு ஆக்கபூர்வமாக கருத்துப் பரிமாற விரும்புகிறேன். முதல் அடியையும் நானே எடுத்து வைக்கிறேன் பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

இங்கே நீங்கள் கூறிய கருத்துடன் நான் மொத்தமாக உடன் படுகிறேன். ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொருகாலம் வருவதைப் போல, 09 வரை முஸ்லீம்கள் பலருக்கு தமிழரைக் காட்டி அவர்களை தமிழருக்கு எதிராக பாவித்தது சிங்களம். இதன் மூலம், அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

அதன் பின் நிலைமை மறுபடியும் மாறலாம்.

ஆனால் இப்படி மாறி-மாறி சிங்களத்தின் செல்லப் பிராணி ஆக போட்டி போடும் அரசியல்தானா நமக்கு உள்ள ஒரே தெரிவு ?

இல்லை எனில், இதை எமது இனத்தின் நீண்டகால நலன், குறுகியகால நலன் அடிப்படையில் எப்படி அணுகலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

உந்த அடாவடிகள் அடாவடித்தனமாகவே அரசியல் என்று ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பு.. ஐ எஸ் செய்ததா.. அல்லது ஐ எஸ் சை சாட்டு வைத்து சிங்களத்தின் தேவைக்காக.. ஹிஸ்புல்லா... கூட்டம் செய்ததா என்பது தான் கேள்வியே.

இந்தக் குண்டு வெடித்த நேரம்..

1. மைத்திரியை கொல்ல றோ திட்டம் தீட்டியதாக வந்த செய்தி. அதனைத் தொடர்ந்து சொறீலங்காவின் அரசியலே உலகம் சிரிக்கும் படியானது. 

இந்தக் குண்டு வெடிப்பின் பின்..

ஹக்கிம் சொல்கிறார்.. வெளிநாட்டுத் தொடர்பு உண்டு என்று. சொறீலங்கா.. இராணுவத்தளபதி சொல்கிறார்.. இந்தியாவில் வைத்து திட்டம் தீட்டப்பட்டது என்று.

2. சம் சும் கும்பல்... ரணிலுக்கு வழங்கிய ஆதரவின் நிமித்தம்.. வடக்குக் கிழக்கை சட்டபூர்வமாக தற்காலிகமாகவும் இணைத்து ஒரு அரசியல் அரைகுறைத் தீர்வை கொண்டு வருவதற்கான சூழல்.

இதற்கு ஹிஸ்புல்லா கூட்டம் சொன்னது.. வடக்குக் கிழக்கை இணைத்தால்.. நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று.

3. மகிந்த அணியின் தற்போதைய கதாநாயகன்.. அமெரிக்க பிரஜா உரிமையை கடாசிவிட்டு.. ஜனாதிபதியாகும் கனவோடு உள்ள சூழல்.

4. சொறீலங்காவின் பொருளாதாரம் எல்லா வழியிலும் ஆட்டம் கண்டு வந்த நிலையில்.. அதன் அந்நியச் செலவாணி இருப்பை தக்க வைக்க உதவிக் கொண்டிருந்த உல்லாசப் பயணத்துறை மீதான அடி. இதன் மூலம் நாட்டு மக்களை பொருண்மிய நெருக்கடிக்குள் தள்ளி.. ரணில் அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கையை முழு வெறுப்பாக மாற்றுதல்.

5. தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்ட இடங்கள். எல்லாமே அதிகம் தமிழ் மக்கள் அல்லது தமிழ் பாரம்பரிய பின்னணியில் வந்த மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை நோக்கி.

இது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இன்னொரு எச்சரிக்கையாகவும் உள்ளது. தமிழ் மக்களை ஒரு பீதியின் நிமித்தம் வைத்திருப்பதன் மூலம்.. அவர்களின் வாக்குகளை சிதறடிப்பது. அதாவது தமிழ் மக்களுக்குள்ளேயே ஒரு குழப்ப நிலையை உருவாக்கி அவர்களைக் குழப்பி விடுவது.

6. தாக்குதல் நடத்தத் தெரிவான காலம்.

இலங்கையின் வரலாற்றில் சர்வதேச அமைப்பான ஐநா போர்குற்றம் ஒன்றைச் சுமத்திய முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 10 ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை. கடந்த ஆண்டே விக்கி ஐயா இந்த ஆண்டில் நினைவு கூறல் என்பது தமிழ் மக்களின் பலத்தைக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று கூறி இருந்தார்.

7. தாக்குதலாளிகள் பாவித்த குண்டுகளுக்குரிய வெடி மருந்துகளை தங்களின் களச்சியத்தில் இருந்து போனவை கைமாறல் அடைந்திருக்கிறது என்ற கதையை சொறீலங்கா கடற்படை சொல்லி முடிப்பதற்குள்.. சொறீலங்கா பொலிஸ் சொல்கிறது.. இல்லை இல்லை இவை சிரியாவில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளுக்கு ஒப்பென்று.

8. ஐ எஸ் உரிமை கோர முதல்.. சொறீலங்கா சுட்டுவிரல் காட்டிய இடம்.. இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள். கடந்த காலங்களில்.. இந்த அமைப்புகளின் தீவிர செயற்பாடுகளால்.. சிங்கள பெளத்த மக்கள் முஸ்லீம் சமூகம் மீது ஒருவித வெறுப்பில் இருந்த சந்தர்ப்பம். 

9. சர்வதேச காரணிகள். அம்பாந்தோட்டையில் சீன ஆதிக்க துறைமுகத்தில் அமெரிக்க பயிற்சி களம்.. ஒன்றுக்கான அனுமதி நடந்த சூழல்.

10. குண்டு வெடிப்பின் பின் இலங்கைக்கு அறிவுரை கூற ஓடி வந்தவர்களில் ஒருவர் 2006 - 2009 வரை.. விடுதலைப்புலிகளை இணைத்தலைமை நாடுகள் என்ற அதிகார மையத்தின் மாயையால் கட்டி வைச்சு.. அழித்த பின்... தமிழ் மக்களை தங்களின் தேவைக்காக அடிமைப்படுத்திய பின் கைவிட்ட.. அமெரிக்க முன்னாள் தூதர்.. பிளேர்க்.

இதே பிளேர்க் போர் காலத்தில் தமிழ் மக்களுக்குச் சொன்னது என்ன விடுதலைப்புலிகளை அழித்து முடித்ததும்.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எட்ட அமெரிக்கா உதவும். ஆனால்.. அப்படி எதையும் அமெரிக்க முன்னெடுக்கவில்லை. மாறாக கால இழுத்தடிப்பு மூலமும்.. தன் அதிகார வரம்பின் பலத்தின் மூலமும்.. சொறீலங்காவின் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து காப்பாற்றி உள்ளமை.

11. கிறிஸ்தவ மக்கள் மீதான இலக்கு. முஸ்லிம் - கிறீஸ்தவ முரண்பாடு நாட்டில் ஒரு பக்கம் இருக்க.. பெளத்தர்கள் மத்தியில்... கிறீஸ்தவர்களின் மத மாற்றம் அதிக செல்வாக்கைச் செலுத்தி வந்த நிலையில்.. கிறிஸ்தவ மக்கள் மீது எழுந்த வெறுப்பு. 

12. சவுதி உயர்மட்டக் குழு காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்ட சில தினங்களில்.. குண்டு வெடிக்கிறது. இந்தக் குழு.. காத்தான்குடிக்கு மட்டும் போகவில்லை.. சொறீலங்கா அதிபரையும் சந்தித்திருக்கிறது.

13. சிரியா விவகாரத்தில்.. சொறீலங்கா சிரிய அரசுக்கு ஆதரவளித்ததாகச் சொல்லவே இல்லை. இந்த நிலையில்.. சிரியா நிகழ்வுகளுக்காக சொறீலங்காவை தண்டிக்க ஐ எஸ்ஸுக்கு ஒரு தேவையும் இல்லை.

14. சட்டவிரோத சர்வதேச ஆயுத வியாரம் மூலம்.. கோத்தாவுக்கும் வெளிநாட்டு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு. 

15. புலனாய்வுத்துக் தவல்கள் காசுக்கு பரிமாறப்பட்டது.. அல்லது செயலுருவுக்கு இடமளிக்காத வகையில் வைக்கப்பட்ட நிகழ்வு.

16. ரணிலுக்காக.. இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை கூட்டமைப்பு.. ஏற்றுக் கொண்டுள்ள நிலை...

17. சிரியாவில் ஐ எஸ்ஸின் கடைசி இடமும் கைப்பற்றப்பட்டு.. ஐ எஸ் வீழ்ச்சி உற்றுவிட்டது என்ற அறிவிப்பு வந்திருந்த சொற்ப காலத்தில்.. இந்த வெடிப்பு. இதில் ஐ எஸ் மறைமுகமாக தனது விசுவாசுகளின் ஊடாக தன் இருப்பைக் காட்ட முனைந்திருக்கலாம். ஆனால்.. ஐ எஸ்ஸூக்கு காணொளி அனுப்பியவர்கள் இவர்கள். பொதுவாக ஐ எஸ்.. தன் சொந்த திட்டமிடல் தாக்குதலின் உடனடியாக அதற்கு உரிமை கோரும். ஈடுபட்டவர்களை புகழும். ஆனால்.. கொழும்பு குண்டு வெடிப்பு நிகழ்ந்து.. காணொளிகள் அவர்களை சேர்ந்து அதன் பின் தான் அறிக்கை வந்திருக்கிறது. அதன் தலைவரின் காணொளியில் கூட.. அவர் திரையில் தோன்றிய காலம் இன்றி.. அதன் பின்னர் தான் இச்சம்பவத்தை சிலாகித்திருக்கிறார். ஐ எஸ் திட்டமிட்டிருந்தால்.. நிச்சயம்.. தலைவர் இந்த விடயத்தையும் திரையில் தோன்றிய வேளையே சொல்லி இருப்பார். இது ஐ எஸ்ஸூக்கு வெளியில் ஐ எஸ்ஸின் தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தால் கவரப்பட்ட சிலரின் ஆசீர்வாதத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும். ஆனால்.. இதில் ஐ எஸ் ஒரு சிறு காரணி தான். முதன்மைக்காரணிகள் நாட்டுக்குள் தான். 

இதை விட இன்னும் சில மறைமுகக் காரணிகள்.

இவை எல்லாமே சேர்ந்தது தான் இந்தக் குண்டு வெடிப்புக்கள்.

இதில் ஹிஸ்புல்லா.. ஹக்கீம்.. ரிசாத் பவுதீன்.. கருணா.. பிள்ளையான் எல்லாம் செய்வது அற்ப சொற்ப பங்களிப்பு. ஆனால் தட்டிக்கழிக்க முடியாத மக்கள் விரோதங்கள். 

இதில் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள்.

அவர்களின் பிரதிநிதியாக அண்மையில் ஒரு சாமானிய அரசியல்வாதி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது..

தமிழ் மக்களின் பாதுகாப்பை சர்வதேசம் தான் உறுதி செய்ய வேண்டும். இந்த இடத்தில் இருந்து தான் எனி தமிழ் மக்களுக்கான அரசியல் எழலாமே தவிர.. மிச்ச எதுவுமே தமிழ் மக்களுக்கான அரசியலாக இருக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் சதியாகவே இருக்க முடியும்.

எந்தச் சர்வதேசம்.. இணைத்தலைமையை உருவாக்கி எம்மை அழிக்க உதவியதோ.. அதே இணைத்தலைமை அன்று வழங்கிய.. வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்க அழுத்தம் தருவதே தமிழ் மக்களுக்கான ஓர் அரசியலாக எனிப் பரினமிக்க முடியும்.

அதைவிடுத்து.. உந்தச் சுண்டக்காய்.. கருணா.. ஹிஸ்புல்லா..ரிசாத்..பிள்ளையான் எல்லாம் ஏவல் தரகர்கள். அவர்களை எப்படிக் கையாள்வது என்று அவர்களை உருவாக்கிய எஜமானர்கள் நன்கே அறிவர்.

கருணா தேசிய தலைவருக்கு துரோகம் இழைத்தவர் என்றால்.. ஹிஸ்புல்லா.. அஷ்ரப்புக்கு துரோகம் இழைத்த நபர். அஷ்ரப்பை அடியோடு அழிக்க நினைத்தவர். சிங்கள..எஜமானர்களின் செல்லப்பிள்ளை. இன்றேல்.. மைத்திரியால்.. நன்கு திட்டமிட்டு ஆளுநராக்கப்பட்டிருப்பாரா..?!

தமிழ் மக்களின் ஆரோக்கியமான அரசியல் என்பது இவர்களைச் சுற்றி அல்ல. இவர்களுக்கு வெளியில் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் மேலே சொல்லப் பட்டவை பலதோடு ஒத்துப் போகிறேன்.

குறிப்பாக, இதில் செய்தவர்களுக்கும் தெரியாமல் இன்னொரு மறை கரத்தின் இயக்கம் இருக்கிறது என்பதுதான் நான் நினைப்பதும்.

ஆனால் சர்வதேசம் எமக்கு விடிவை தரும் எண்டு இனியும் நம்பும் நிலையில் நானில்லை. அவர்கள் எம்மை கைகழுவி ரொம்ப நாளாகி விட்டது. 

கிட்டத்தட்ட எம்மை மறந்தே போய்விட்ட சர்வதேசத்தை, எம்மை நோக்கி திருப்பும் யுக்திதான் எது?

நாட்டுக்கு வெளியே இருக்கும் எந்த அமைப்பு, இந்த வேலைத் திட்டத்தை கொண்டு செல்ல கூடிய அமைப்பு? எனக்குத் தெரிய யாருமில்லை.

உள்ளூரில் சீவி சம்பந்தன் சுமந்திரன் இணைந்து ஒரு மாற்றத்தை தருவார்கள் என்ற என் நம்பிக்கையும் வாய்க்கவில்லை.

தனியே சீவி செய்வார் எண்டு பார்த்தால் - அவர் தனி கட்சி தொடங்கி நடத்தவே, ரஜனி ரேஞ்சில் தடுமாறுகிறார்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் காணும் தொலைவு வரைக்கும் வெற்றிடம் அல்லவா தெரிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழ் பேசுவோர் அரசியலில், இஸ்லாமியர் தரப்பில், மிதவாத அரசியல் பேசுபவர் ரவூப் ஹக்கீம். 

அவரது குரல், ஹிஸ்புல்லா, றிசாட் மற்றும் அதாவுல்லாவின் தீவிரவாத அரசியலால் மட்டுப்படுத்தப் பட்டது. வடக்கு,  கிழக்கு இணைப்பு கூட மிக மோசமாக இவர்களால் எதிர்க்கப் பட்டது. நோக்கம் இப்போது தெளிவாகி விட்டது.

இந்த பிரச்சனைகளின் முடிவில் அடாவடி அரசியல் தலைமைகள் ஒடுக்கப்படுவார்கள் அல்லது தாமாக ஒதுங்குவர்.

உலகமே எதிர்க்கும் இன்றய நிலையில், தமிழர்களுடன், தமிழ் பேசும் மக்களாக இணையாவிடில் தமக்கும் விடிவில்லை என்பது அவர்களுக்கு மிக விரைவாக புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சுக்கு அப்படி இணைகிறார்கள் என்றே வைத்தாலுக், எங்கள் இரு இனங்களின் வரலாற்றை கவனத்தில் எடுங்கள். மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு பேச்சுக்கு அப்படி இணைகிறார்கள் என்றே வைத்தாலுக், எங்கள் இரு இனங்களின் வரலாற்றை கவனத்தில் எடுங்கள். மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

முஸ்லீம் மக்கள் மத அடையாளத்தை விரும்புவர்கள் அவர்கள் மொழி அடையாளத்தை விரும்பவில்லை,ஆகவே தமிழ் பேசும் ஏனைய மதத்தவர்கள் தங்களுடைய  இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள் ,ம்ற்றும் படி அவர்களுக்கு மொழிபற்று என்பது இல்லை என்றே கூறலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

தமிழ் ஆக்கள் தான் இப்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கினம். ஆனால் முஸ்லிம்கள் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொருகாலம் வருவதைப் போல, 09 வரை முஸ்லீம்கள் பலருக்கு தமிழரைக் காட்டி அவர்களை தமிழருக்கு எதிராக பாவித்தது சிங்களம். இதன் மூலம், அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

அதன் பின் நிலைமை மறுபடியும் மாறலாம்.

ஆனால் இப்படி மாறி-மாறி சிங்களத்தின் செல்லப் பிராணி ஆக போட்டி போடும் அரசியல்தானா நமக்கு உள்ள ஒரே தெரிவு ?

இல்லை எனில், இதை எமது இனத்தின் நீண்டகால நலன், குறுகியகால நலன் அடிப்படையில் எப்படி அணுகலாம்?

இப்ப முஸ்லிம்கள் பக்கம் தமிழர்கள் நின்றாலும் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களை தொடர்ந்து அழிக்கத்தான் போகிறார்கள்.

ஒரு பகுதி மட்டும் ஒற்றுமை பற்றி கதைத்து ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை எப்பொழுது தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

நீங்கள் மேலே சொல்லி இருப்பது இலக்கு. ஆனால் அடையும் வழித்தடம் (road map) என்ன?

Link to comment
Share on other sites

25 minutes ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

சந்தர்ப்பவாத அயோக்கியர்கள் அனைவரும் அடக்கப்படும் போது மட்டுமே பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி நியாயம் கிடைக்கும்! இதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன!

Link to comment
Share on other sites

1 hour ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

மிக அருமையான  யதார்த்த கருத்துக்கள்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

நீங்கள் மேலே கூறியவற்றுடன் நான் 90% ஒத்துப் போகிறேன். எதோடு ஒத்துப் போகவில்லை என்பதைச் சொல்லி திரியை ரணகளமாக்க விரும்பவில்லை. அது இந்த சம்பாசணைக்கு தேவையும் இல்லை.

ஆனால் யாரிடமும் அடுத்த செய்ய வேண்டியவை என்ன என்ற பொறிமுறை ஒன்று இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உடனே நீங்கள் செய்யலாமே? உங்கள் பொறிமுறை என்ன என்று கேட்காதீர்கள்.

09 ற்கு பின், சமஸ்டி நோக்கி, ஊரில் இருக்கும் தலைவர்களை மையமாக வைத்து , சிறிது சிறிதாய் நகரலாம் என்ற பொறிமுறையே நான் இதுவரை பரிந்துரைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் நிகழ்வுகள் வைத்து மீளாய்வு செய்யும் போது அந்த பொறிமுறை பயந்தராது என்பது வெள்ளிட மலையாகிறது. 

அப்போ என்னதான் வழி?

இந்த கேள்விக்கு, தெரியாது என்பதுதான் இப்போதைக்காக பதிலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அப்போ என்னதான் வழி?

 

வலு சிம்பிள் எல்லா தமிழரும் வெளி நாடு வருவது.😂

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நீங்கள் மேலே கூறியவற்றுடன் நான் 90% ஒத்துப் போகிறேன். எதோடு ஒத்துப் போகவில்லை என்பதைச் சொல்லி திரியை ரணகளமாக்க விரும்பவில்லை. அது இந்த சம்பாசணைக்கு தேவையும் இல்லை.

ஆனால் யாரிடமும் அடுத்த செய்ய வேண்டியவை என்ன என்ற பொறிமுறை ஒன்று இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உடனே நீங்கள் செய்யலாமே? உங்கள் பொறிமுறை என்ன என்று கேட்காதீர்கள்.

09 ற்கு பின், சமஸ்டி நோக்கி, ஊரில் இருக்கும் தலைவர்களை மையமாக வைத்து , சிறிது சிறிதாய் நகரலாம் என்ற பொறிமுறையே நான் இதுவரை பரிந்துரைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் நிகழ்வுகள் வைத்து மீளாய்வு செய்யும் போது அந்த பொறிமுறை பயந்தராது என்பது வெள்ளிட மலையாகிறது. 

அப்போ என்னதான் வழி?

இந்த கேள்விக்கு, தெரியாது என்பதுதான் இப்போதைக்காக பதிலா?

நீங்கள் “தலைவர் பிரபாகரன்” பற்றி நான் எழுதிய விடயத்தில் தான் ஒத்துப்போகவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அதில்லை இங்கு பிரச்சினை. நான் கூற வந்தது அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைக்கு இருந்த power ஒரு காரணம். இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அதே power ஐ எதிர்பார்க்க முடியாது என்றாலும் தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் ஒரு தலைமை இல்லை. 

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை கொண்டிருக்குமானால் சர்வதேசம் தமிழர்களை பகடைக்காயாக உபயோகித்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இயங்கி தனக்கு சார்பான அரசியல் இலங்கையில் வருவதற்கு களமிறங்கலாம். அதன் போது தமிழர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இன்றும் ஒட்டாக உள்ளது.

எமது அரசியல்வாதிகளும் இலங்கை அரசு எது சொன்னாலும் ஆமாம் போடும் ஆட்களாக உள்ளார்கள். அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கூட எழுத்து வடிவில் சம்மதம் பெறாமல் வாய்மூல சம்மதத்தை மட்டும் பெற்றுக்கொள்வர். இப்படியான நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

என்னை பொறுத்தவரை அரசியல் தீர்வு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துவதே சரி. மக்களை கவனிப்பாரற்று கைவிட்டு விட்டு தனியே தீர்வு தீர்வு என்று அலைவதால் எதுவித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் அதை செய்யும் ஆற்றல் கூட எமது சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

Link to comment
Share on other sites

35 minutes ago, சுவைப்பிரியன் said:

வலு சிம்பிள் எல்லா தமிழரும் வெளி நாடு வருவது.😂

சிங்களவர்கள் சிலர் முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டகத்தில் ஏற்றி அரபு நாடுகளுக்கு அனுப்பி விடுமாறு twitter இல் நேற்று பதிவிட்டிருந்தார்கள்.

உங்கள் கருத்தை வாசிக்க எனக்கு ஏதோ அப்பதிவு நினைவுக்கு வந்து விட்டது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

நீங்கள் “தலைவர் பிரபாகரன்” பற்றி நான் எழுதிய விடயத்தில் தான் ஒத்துப்போகவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அதில்லை இங்கு பிரச்சினை. நான் கூற வந்தது அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைக்கு இருந்த power ஒரு காரணம். இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அதே power ஐ எதிர்பார்க்க முடியாது என்றாலும் தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் ஒரு தலைமை இல்லை. 

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை கொண்டிருக்குமானால் சர்வதேசம் தமிழர்களை பகடைக்காயாக உபயோகித்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இயங்கி தனக்கு சார்பான அரசியல் இலங்கையில் வருவதற்கு களமிறங்கலாம். அதன் போது தமிழர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இன்றும் ஒட்டாக உள்ளது.

எமது அரசியல்வாதிகளும் இலங்கை அரசு எது சொன்னாலும் ஆமாம் போடும் ஆட்களாக உள்ளார்கள். அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கூட எழுத்து வடிவில் அனுமதி பெறாமல் வாய்மூல அனுமதியை மட்டும் பெற்றுக்கொள்வர். இப்படியான நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

என்னை பொறுத்தவரை அரசியல் தீர்வு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துவதே சரி. மக்களை கவனிப்பாரற்று கைவிட்டு விட்டு தனியே தீர்வு தீர்வு என்று அலைவதால் எதுவித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் அதை செய்யும் ஆற்றல் கூட எமது சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

சரி நீங்களே சொல்லிவிட்டதால் நானும் சொல்கிறேன். நான் ஒத்துப் போகாத விடயம், பிரபாகரன் தலைமை பற்றியதுதான். ஆனால், அந்த தலைமை வலுவானது என்பதில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து என்றுமே இருந்ததில்லை. அந்த தலைமை கொண்ட கொள்கைக்கு உண்மையானது என்பதிலும், தன்னலமற்றது, ஊழல்லற்றது, கண்ணியமானது என்பதிலும் நான் 100% எப்போதும் உடன் பட்டே இருக்கிறேன்.

கடந்த 400 வருட வரலாற்றில் இதை விட வலுவான தலைமை தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் இருந்ததில்லை என்பது மறுக்கவியாலாத உண்மை. இனி இருக்காது என்பதும் உண்மையே.

அந்த வலுவான தலைமையால்தான், அமிர்தலிங்கம் டெல்லி போய் பார்தசாரதியை பார்த்த நிலை மாறி, ஸ்தானிகர்கள் எல்லாம் கிளிநொச்சிக்கு படை எடுக்கும் காலமும் உருவாகியது என்பதும், இப்போ எம்மிடம் அந்த வலு இல்லை என்பதால்தான் நாம் சீந்துவாரற்று கிடக்கிறோம் என்பதும் உண்மையே.

இது நான் இங்கே எழுத தொடங்கிய காலம் தொட்டு எழுதும் விடயம்தான். ஆனால் என்னை ஒரு வித முத்திரையோடு மட்டுமே பார்த்து பழக்கப் பட்டவர்கள் “என்ன கோசான் இப்பதான் அருமை தெரியுதா” என்று, ஏதோ நான் இன்றுதான் இப்படி எழுதியது போல கேட்பார்கள் 😂

ஆனால் அது எப்போதும் “சரியான தலைமையாக” இருந்ததா என்றால், என் பதில் இன்றைக்கும் இல்லை என்பதே. 

ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்பதை பற்றி யாழில் போதுமான அளவு எழுதியாகி விட்டதாலும், உண்மையிலேயே இவற்றை பேசுவதால் இனி ஒரு பயனுமில்லை என்பதாலும், இதை பற்றி பேசுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
16 hours ago, goshan_che said:

மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

அது சிங்களவர்கள் கவலை. நாம் இப்போது அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை.

Only one wife? Ha.... haaaa...

அட முட்டாப்பயலே. ஒத்தக் காலோட 17..... நீயெல்லாம் என்ன மனிசனப்பா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2019 at 11:53 PM, goshan_che said:

ஆனால் சர்வதேசம் எமக்கு விடிவை தரும் எண்டு இனியும் நம்பும் நிலையில் நானில்லை. அவர்கள் எம்மை கைகழுவி ரொம்ப நாளாகி விட்டது. 

கிட்டத்தட்ட எம்மை மறந்தே போய்விட்ட சர்வதேசத்தை, எம்மை நோக்கி திருப்பும் யுக்திதான் எது?

நாட்டுக்கு வெளியே இருக்கும் எந்த அமைப்பு, இந்த வேலைத் திட்டத்தை கொண்டு செல்ல கூடிய அமைப்பு? எனக்குத் தெரிய யாருமில்லை.

எம்மை இந்த இக்கட்டுக்குள் தள்ளிய இணைத்தலைமை நாடுகளாகிய சர்வதேசத்திற்கு இதனை விளக்கிச் சொல்ல தமிழர் தரப்பில் ஒரு நிரந்தர வெளிவிவகாரக் குழு தொடர்ச்சியாக செயற்பட அமைக்கப்பட வேண்டும். இதில் பிரதான தமிழ் கட்சிகள்.. அறிவுஜீவிகள் சார்பில் ஒரு பிரதிநிதி.. மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி.. பாதிக்கப்படும் மக்கள் சார்பில் அந்த மக்கள் இனங்காட்டும்.. நபரைக் கொண்ட..ஒரு பிரதிநிதி.. வெளிநாட்டுத் தொடர்பாடலுக்கு புலம்பெயர் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதி அமைதல் வேண்டும்.

இந்தக் குழு எமது பிரச்சனைகளை ஆதார பூர்வமாக தொடர்ச்சியா வைப்பதோடு எமது கருத்தொற்றுமையை எமது மக்களின் சார்ப்பில் அவர்களுக்கு இனங்காட்ட வேண்டும்.

சர்வதேசம் எம்மை கைவிடுவதற்கு அல்லது மறப்பதற்கு எம்மவர்களே காரணம். விடுதலைப்புலிகள் எம்மவர்களின் நண்டுக்குணம் அறிந்து தான் மக்களின் நலனுக்காக ஏக பிரதிநிதித்துவம் என்பதை கொண்டு வந்தார்கள். இன்று நாம் ஜெனிவாவில் போய் செய்தது என்ன..?!

சம் சும் கும்பல் மக்களைக் கொலை செய்த அரசுக்கு மன்னிப்புக் கொடுக்க.. அது பயங்கரவாத அழிப்பே என்று சான்றிதழ் கொடுக்க..

கஜேந்திரன் இல்லை என்ற அது போர்க்குற்றம் என்ற

ஆனந்தி.. ஐயோ அம்மா என்ற

விக்கி இல்லை இல்லை.. அது இனப்படுகொலை தான் என்ற..

டக்கிளஸ்.. அது எல்லாரும் செய்வது தானே... மறப்போம் மன்னிப்போம் என்ற..

இப்படி தமிழர்களுக்குள் தமிழ் மக்களின் நலனில் அக்கறையை ஒற்றுமையை சர்வதேசம் இனங்காணவும் இல்லை இவர்களில் யாரை எப்படி நம்புவது என்ற குழப்பம் அதற்கு.

ஆனால்.. புலிகள் முன்னெடுத்தது வேறு. ஏக பிரதிநிதித்துவம். எம் மக்கள் சார்பில்.. நாம் வந்து பேசுகிறோம்.. எமக்கு பேச்சில் எட்டப்படும் விடயங்களை எம் மக்களிடம் கொண்டு செல்லவும் அமுல்படுத்தவும் முடியும் என்று காட்டி படியால் தான்.. சும்மா இருந்த சர்வதேசம் இணைத்தலைமை நாடுகளாகி.. ரோக்கியோ வரை கூப்பிட்டுப் பேசினார்கள். அதனால்.. சர்வதேச கவனத்தையும் எம் மக்களின் பிரச்சனை ஈர்த்துக் கொண்டது.

2009 மே பின்.. எம்மவர்கள் யாரை எந்த நாடு பேச்சுக்கு அழைத்தது தமிழ் மக்கள் சார்பில் பேச..?! இத்தனைக்கும் சனநாய் அகம் காக்குகிறோம் என்று வாய் கிழியக் கத்துகிறார்களே..??!

இந்த நிலை களையப்பட வேண்டும் என்றால்.. எமக்குள் அரசில் வேறுபாடுகளுக்கு அப்பால்.. மண் மக்கள் நலன் முதன்மை பெற வேண்டும். அவற்றை இட்டு ஒற்றுமை வந்தாக வேண்டும். ஒரு சிலர் குறுக்கால் இழுக்கலாம்.. அது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால்.. பலர் ஒன்றாக அமரலாம் இல்லையா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.