Jump to content

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

magalkandea.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/55863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிழம்பு said:

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம்

இது உண்மையாக இருக்குமெண்டால்  ஐ எஸ்  பொறுத்த இடத்திலைதான் மாட்டியிருக்கெண்டு அர்த்தம்.

தப்பிக்கூட ஓடேலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அடிக்கும் போது.. மசூதியும் விகாரையும் என்டாங்கள். இப்போது முஸ்லீம்களை அடிக்கும் போது கோவிலும் விகாரையும் என்கிறார்கள்.

இதில்.. விகாரை பொதுப்படையாகி நிற்கிறது.

முஸ்லீம்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழிக்க நினைத்தார்கள். தங்களை தமிழர்கள் இடத்தில் நிலை நிறுத்தலாம் என்று.

ஆனால்.. இன்று தமிழர்களையும் அழித்து தங்களையும் அழித்து.. சிங்களவனுக்கு சொறீலங்காவை தூய பெளத்த சிங்கள நாடாக்க உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

magalkandea.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/55863

பலர் இங்கே விரும்பியது போன்ற ஓர் அரசியலை சம்பந்தன் கையில் எடுகிறாரா?

40 minutes ago, nedukkalapoovan said:

தமிழரை அடிக்கும் போது.. மசூதியும் விகாரையும் என்டாங்கள். இப்போது முஸ்லீம்களை அடிக்கும் போது கோவிலும் விகாரையும் என்கிறார்கள்.

இதில்.. விகாரை பொதுப்படையாகி நிற்கிறது.

முஸ்லீம்கள் தமிழர்களை காட்டிக்கொடுத்து அழிக்க நினைத்தார்கள். தங்களை தமிழர்கள் இடத்தில் நிலை நிறுத்தலாம் என்று.

ஆனால்.. இன்று தமிழர்களையும் அழித்து தங்களையும் அழித்து.. சிங்களவனுக்கு சொறீலங்காவை தூய பெளத்த சிங்கள நாடாக்க உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். 

நெடுக்ஸ்,

கொஞ்சம் நமது முரட்டுப் பிடிவாதங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு, உங்களோடு ஆக்கபூர்வமாக கருத்துப் பரிமாற விரும்புகிறேன். முதல் அடியையும் நானே எடுத்து வைக்கிறேன் பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

இங்கே நீங்கள் கூறிய கருத்துடன் நான் மொத்தமாக உடன் படுகிறேன். ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொருகாலம் வருவதைப் போல, 09 வரை முஸ்லீம்கள் பலருக்கு தமிழரைக் காட்டி அவர்களை தமிழருக்கு எதிராக பாவித்தது சிங்களம். இதன் மூலம், அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

அதன் பின் நிலைமை மறுபடியும் மாறலாம்.

ஆனால் இப்படி மாறி-மாறி சிங்களத்தின் செல்லப் பிராணி ஆக போட்டி போடும் அரசியல்தானா நமக்கு உள்ள ஒரே தெரிவு ?

இல்லை எனில், இதை எமது இனத்தின் நீண்டகால நலன், குறுகியகால நலன் அடிப்படையில் எப்படி அணுகலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

உந்த அடாவடிகள் அடாவடித்தனமாகவே அரசியல் என்று ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பு.. ஐ எஸ் செய்ததா.. அல்லது ஐ எஸ் சை சாட்டு வைத்து சிங்களத்தின் தேவைக்காக.. ஹிஸ்புல்லா... கூட்டம் செய்ததா என்பது தான் கேள்வியே.

இந்தக் குண்டு வெடித்த நேரம்..

1. மைத்திரியை கொல்ல றோ திட்டம் தீட்டியதாக வந்த செய்தி. அதனைத் தொடர்ந்து சொறீலங்காவின் அரசியலே உலகம் சிரிக்கும் படியானது. 

இந்தக் குண்டு வெடிப்பின் பின்..

ஹக்கிம் சொல்கிறார்.. வெளிநாட்டுத் தொடர்பு உண்டு என்று. சொறீலங்கா.. இராணுவத்தளபதி சொல்கிறார்.. இந்தியாவில் வைத்து திட்டம் தீட்டப்பட்டது என்று.

2. சம் சும் கும்பல்... ரணிலுக்கு வழங்கிய ஆதரவின் நிமித்தம்.. வடக்குக் கிழக்கை சட்டபூர்வமாக தற்காலிகமாகவும் இணைத்து ஒரு அரசியல் அரைகுறைத் தீர்வை கொண்டு வருவதற்கான சூழல்.

இதற்கு ஹிஸ்புல்லா கூட்டம் சொன்னது.. வடக்குக் கிழக்கை இணைத்தால்.. நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று.

3. மகிந்த அணியின் தற்போதைய கதாநாயகன்.. அமெரிக்க பிரஜா உரிமையை கடாசிவிட்டு.. ஜனாதிபதியாகும் கனவோடு உள்ள சூழல்.

4. சொறீலங்காவின் பொருளாதாரம் எல்லா வழியிலும் ஆட்டம் கண்டு வந்த நிலையில்.. அதன் அந்நியச் செலவாணி இருப்பை தக்க வைக்க உதவிக் கொண்டிருந்த உல்லாசப் பயணத்துறை மீதான அடி. இதன் மூலம் நாட்டு மக்களை பொருண்மிய நெருக்கடிக்குள் தள்ளி.. ரணில் அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கையை முழு வெறுப்பாக மாற்றுதல்.

5. தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்ட இடங்கள். எல்லாமே அதிகம் தமிழ் மக்கள் அல்லது தமிழ் பாரம்பரிய பின்னணியில் வந்த மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை நோக்கி.

இது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இன்னொரு எச்சரிக்கையாகவும் உள்ளது. தமிழ் மக்களை ஒரு பீதியின் நிமித்தம் வைத்திருப்பதன் மூலம்.. அவர்களின் வாக்குகளை சிதறடிப்பது. அதாவது தமிழ் மக்களுக்குள்ளேயே ஒரு குழப்ப நிலையை உருவாக்கி அவர்களைக் குழப்பி விடுவது.

6. தாக்குதல் நடத்தத் தெரிவான காலம்.

இலங்கையின் வரலாற்றில் சர்வதேச அமைப்பான ஐநா போர்குற்றம் ஒன்றைச் சுமத்திய முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 10 ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை. கடந்த ஆண்டே விக்கி ஐயா இந்த ஆண்டில் நினைவு கூறல் என்பது தமிழ் மக்களின் பலத்தைக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று கூறி இருந்தார்.

7. தாக்குதலாளிகள் பாவித்த குண்டுகளுக்குரிய வெடி மருந்துகளை தங்களின் களச்சியத்தில் இருந்து போனவை கைமாறல் அடைந்திருக்கிறது என்ற கதையை சொறீலங்கா கடற்படை சொல்லி முடிப்பதற்குள்.. சொறீலங்கா பொலிஸ் சொல்கிறது.. இல்லை இல்லை இவை சிரியாவில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளுக்கு ஒப்பென்று.

8. ஐ எஸ் உரிமை கோர முதல்.. சொறீலங்கா சுட்டுவிரல் காட்டிய இடம்.. இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள். கடந்த காலங்களில்.. இந்த அமைப்புகளின் தீவிர செயற்பாடுகளால்.. சிங்கள பெளத்த மக்கள் முஸ்லீம் சமூகம் மீது ஒருவித வெறுப்பில் இருந்த சந்தர்ப்பம். 

9. சர்வதேச காரணிகள். அம்பாந்தோட்டையில் சீன ஆதிக்க துறைமுகத்தில் அமெரிக்க பயிற்சி களம்.. ஒன்றுக்கான அனுமதி நடந்த சூழல்.

10. குண்டு வெடிப்பின் பின் இலங்கைக்கு அறிவுரை கூற ஓடி வந்தவர்களில் ஒருவர் 2006 - 2009 வரை.. விடுதலைப்புலிகளை இணைத்தலைமை நாடுகள் என்ற அதிகார மையத்தின் மாயையால் கட்டி வைச்சு.. அழித்த பின்... தமிழ் மக்களை தங்களின் தேவைக்காக அடிமைப்படுத்திய பின் கைவிட்ட.. அமெரிக்க முன்னாள் தூதர்.. பிளேர்க்.

இதே பிளேர்க் போர் காலத்தில் தமிழ் மக்களுக்குச் சொன்னது என்ன விடுதலைப்புலிகளை அழித்து முடித்ததும்.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எட்ட அமெரிக்கா உதவும். ஆனால்.. அப்படி எதையும் அமெரிக்க முன்னெடுக்கவில்லை. மாறாக கால இழுத்தடிப்பு மூலமும்.. தன் அதிகார வரம்பின் பலத்தின் மூலமும்.. சொறீலங்காவின் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து காப்பாற்றி உள்ளமை.

11. கிறிஸ்தவ மக்கள் மீதான இலக்கு. முஸ்லிம் - கிறீஸ்தவ முரண்பாடு நாட்டில் ஒரு பக்கம் இருக்க.. பெளத்தர்கள் மத்தியில்... கிறீஸ்தவர்களின் மத மாற்றம் அதிக செல்வாக்கைச் செலுத்தி வந்த நிலையில்.. கிறிஸ்தவ மக்கள் மீது எழுந்த வெறுப்பு. 

12. சவுதி உயர்மட்டக் குழு காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்ட சில தினங்களில்.. குண்டு வெடிக்கிறது. இந்தக் குழு.. காத்தான்குடிக்கு மட்டும் போகவில்லை.. சொறீலங்கா அதிபரையும் சந்தித்திருக்கிறது.

13. சிரியா விவகாரத்தில்.. சொறீலங்கா சிரிய அரசுக்கு ஆதரவளித்ததாகச் சொல்லவே இல்லை. இந்த நிலையில்.. சிரியா நிகழ்வுகளுக்காக சொறீலங்காவை தண்டிக்க ஐ எஸ்ஸுக்கு ஒரு தேவையும் இல்லை.

14. சட்டவிரோத சர்வதேச ஆயுத வியாரம் மூலம்.. கோத்தாவுக்கும் வெளிநாட்டு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு. 

15. புலனாய்வுத்துக் தவல்கள் காசுக்கு பரிமாறப்பட்டது.. அல்லது செயலுருவுக்கு இடமளிக்காத வகையில் வைக்கப்பட்ட நிகழ்வு.

16. ரணிலுக்காக.. இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை கூட்டமைப்பு.. ஏற்றுக் கொண்டுள்ள நிலை...

17. சிரியாவில் ஐ எஸ்ஸின் கடைசி இடமும் கைப்பற்றப்பட்டு.. ஐ எஸ் வீழ்ச்சி உற்றுவிட்டது என்ற அறிவிப்பு வந்திருந்த சொற்ப காலத்தில்.. இந்த வெடிப்பு. இதில் ஐ எஸ் மறைமுகமாக தனது விசுவாசுகளின் ஊடாக தன் இருப்பைக் காட்ட முனைந்திருக்கலாம். ஆனால்.. ஐ எஸ்ஸூக்கு காணொளி அனுப்பியவர்கள் இவர்கள். பொதுவாக ஐ எஸ்.. தன் சொந்த திட்டமிடல் தாக்குதலின் உடனடியாக அதற்கு உரிமை கோரும். ஈடுபட்டவர்களை புகழும். ஆனால்.. கொழும்பு குண்டு வெடிப்பு நிகழ்ந்து.. காணொளிகள் அவர்களை சேர்ந்து அதன் பின் தான் அறிக்கை வந்திருக்கிறது. அதன் தலைவரின் காணொளியில் கூட.. அவர் திரையில் தோன்றிய காலம் இன்றி.. அதன் பின்னர் தான் இச்சம்பவத்தை சிலாகித்திருக்கிறார். ஐ எஸ் திட்டமிட்டிருந்தால்.. நிச்சயம்.. தலைவர் இந்த விடயத்தையும் திரையில் தோன்றிய வேளையே சொல்லி இருப்பார். இது ஐ எஸ்ஸூக்கு வெளியில் ஐ எஸ்ஸின் தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தால் கவரப்பட்ட சிலரின் ஆசீர்வாதத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும். ஆனால்.. இதில் ஐ எஸ் ஒரு சிறு காரணி தான். முதன்மைக்காரணிகள் நாட்டுக்குள் தான். 

இதை விட இன்னும் சில மறைமுகக் காரணிகள்.

இவை எல்லாமே சேர்ந்தது தான் இந்தக் குண்டு வெடிப்புக்கள்.

இதில் ஹிஸ்புல்லா.. ஹக்கீம்.. ரிசாத் பவுதீன்.. கருணா.. பிள்ளையான் எல்லாம் செய்வது அற்ப சொற்ப பங்களிப்பு. ஆனால் தட்டிக்கழிக்க முடியாத மக்கள் விரோதங்கள். 

இதில் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள்.

அவர்களின் பிரதிநிதியாக அண்மையில் ஒரு சாமானிய அரசியல்வாதி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது..

தமிழ் மக்களின் பாதுகாப்பை சர்வதேசம் தான் உறுதி செய்ய வேண்டும். இந்த இடத்தில் இருந்து தான் எனி தமிழ் மக்களுக்கான அரசியல் எழலாமே தவிர.. மிச்ச எதுவுமே தமிழ் மக்களுக்கான அரசியலாக இருக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் சதியாகவே இருக்க முடியும்.

எந்தச் சர்வதேசம்.. இணைத்தலைமையை உருவாக்கி எம்மை அழிக்க உதவியதோ.. அதே இணைத்தலைமை அன்று வழங்கிய.. வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்க அழுத்தம் தருவதே தமிழ் மக்களுக்கான ஓர் அரசியலாக எனிப் பரினமிக்க முடியும்.

அதைவிடுத்து.. உந்தச் சுண்டக்காய்.. கருணா.. ஹிஸ்புல்லா..ரிசாத்..பிள்ளையான் எல்லாம் ஏவல் தரகர்கள். அவர்களை எப்படிக் கையாள்வது என்று அவர்களை உருவாக்கிய எஜமானர்கள் நன்கே அறிவர்.

கருணா தேசிய தலைவருக்கு துரோகம் இழைத்தவர் என்றால்.. ஹிஸ்புல்லா.. அஷ்ரப்புக்கு துரோகம் இழைத்த நபர். அஷ்ரப்பை அடியோடு அழிக்க நினைத்தவர். சிங்கள..எஜமானர்களின் செல்லப்பிள்ளை. இன்றேல்.. மைத்திரியால்.. நன்கு திட்டமிட்டு ஆளுநராக்கப்பட்டிருப்பாரா..?!

தமிழ் மக்களின் ஆரோக்கியமான அரசியல் என்பது இவர்களைச் சுற்றி அல்ல. இவர்களுக்கு வெளியில் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் மேலே சொல்லப் பட்டவை பலதோடு ஒத்துப் போகிறேன்.

குறிப்பாக, இதில் செய்தவர்களுக்கும் தெரியாமல் இன்னொரு மறை கரத்தின் இயக்கம் இருக்கிறது என்பதுதான் நான் நினைப்பதும்.

ஆனால் சர்வதேசம் எமக்கு விடிவை தரும் எண்டு இனியும் நம்பும் நிலையில் நானில்லை. அவர்கள் எம்மை கைகழுவி ரொம்ப நாளாகி விட்டது. 

கிட்டத்தட்ட எம்மை மறந்தே போய்விட்ட சர்வதேசத்தை, எம்மை நோக்கி திருப்பும் யுக்திதான் எது?

நாட்டுக்கு வெளியே இருக்கும் எந்த அமைப்பு, இந்த வேலைத் திட்டத்தை கொண்டு செல்ல கூடிய அமைப்பு? எனக்குத் தெரிய யாருமில்லை.

உள்ளூரில் சீவி சம்பந்தன் சுமந்திரன் இணைந்து ஒரு மாற்றத்தை தருவார்கள் என்ற என் நம்பிக்கையும் வாய்க்கவில்லை.

தனியே சீவி செய்வார் எண்டு பார்த்தால் - அவர் தனி கட்சி தொடங்கி நடத்தவே, ரஜனி ரேஞ்சில் தடுமாறுகிறார்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் காணும் தொலைவு வரைக்கும் வெற்றிடம் அல்லவா தெரிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழ் பேசுவோர் அரசியலில், இஸ்லாமியர் தரப்பில், மிதவாத அரசியல் பேசுபவர் ரவூப் ஹக்கீம். 

அவரது குரல், ஹிஸ்புல்லா, றிசாட் மற்றும் அதாவுல்லாவின் தீவிரவாத அரசியலால் மட்டுப்படுத்தப் பட்டது. வடக்கு,  கிழக்கு இணைப்பு கூட மிக மோசமாக இவர்களால் எதிர்க்கப் பட்டது. நோக்கம் இப்போது தெளிவாகி விட்டது.

இந்த பிரச்சனைகளின் முடிவில் அடாவடி அரசியல் தலைமைகள் ஒடுக்கப்படுவார்கள் அல்லது தாமாக ஒதுங்குவர்.

உலகமே எதிர்க்கும் இன்றய நிலையில், தமிழர்களுடன், தமிழ் பேசும் மக்களாக இணையாவிடில் தமக்கும் விடிவில்லை என்பது அவர்களுக்கு மிக விரைவாக புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சுக்கு அப்படி இணைகிறார்கள் என்றே வைத்தாலுக், எங்கள் இரு இனங்களின் வரலாற்றை கவனத்தில் எடுங்கள். மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு பேச்சுக்கு அப்படி இணைகிறார்கள் என்றே வைத்தாலுக், எங்கள் இரு இனங்களின் வரலாற்றை கவனத்தில் எடுங்கள். மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

முஸ்லீம் மக்கள் மத அடையாளத்தை விரும்புவர்கள் அவர்கள் மொழி அடையாளத்தை விரும்பவில்லை,ஆகவே தமிழ் பேசும் ஏனைய மதத்தவர்கள் தங்களுடைய  இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள் ,ம்ற்றும் படி அவர்களுக்கு மொழிபற்று என்பது இல்லை என்றே கூறலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

தமிழ் ஆக்கள் தான் இப்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கினம். ஆனால் முஸ்லிம்கள் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொருகாலம் வருவதைப் போல, 09 வரை முஸ்லீம்கள் பலருக்கு தமிழரைக் காட்டி அவர்களை தமிழருக்கு எதிராக பாவித்தது சிங்களம். இதன் மூலம், அதவுல்லா, ஹிஸ்புலா, ரிசாத் போன்ற அடாவடி அரசியல்வாதிகளும் வளர்தெடுக்கப் பட்டார்கள்.

இப்போ அவர்களை அடக்க நம்மை துணைக்கிழுகிறார்கள். இதன் பின் முஸ்லீம் எதிர் அரசியல் செய்யும் கருணா, பிள்ளையான், போன்ற அடாவடி அரசியல் வாதிகள் இன்னும் ஒரு 10-20 வருடங்களுக்கு கோலோச்சலாம்.

அதன் பின் நிலைமை மறுபடியும் மாறலாம்.

ஆனால் இப்படி மாறி-மாறி சிங்களத்தின் செல்லப் பிராணி ஆக போட்டி போடும் அரசியல்தானா நமக்கு உள்ள ஒரே தெரிவு ?

இல்லை எனில், இதை எமது இனத்தின் நீண்டகால நலன், குறுகியகால நலன் அடிப்படையில் எப்படி அணுகலாம்?

இப்ப முஸ்லிம்கள் பக்கம் தமிழர்கள் நின்றாலும் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களை தொடர்ந்து அழிக்கத்தான் போகிறார்கள்.

ஒரு பகுதி மட்டும் ஒற்றுமை பற்றி கதைத்து ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை எப்பொழுது தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

நீங்கள் மேலே சொல்லி இருப்பது இலக்கு. ஆனால் அடையும் வழித்தடம் (road map) என்ன?

Link to comment
Share on other sites

25 minutes ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

சந்தர்ப்பவாத அயோக்கியர்கள் அனைவரும் அடக்கப்படும் போது மட்டுமே பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி நியாயம் கிடைக்கும்! இதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன!

Link to comment
Share on other sites

1 hour ago, Ahasthiyan said:

எங்களுக்கு ஒரு நியாயமான அதிக பச்ச  தீர்வை சர்வதேசத்தின் உதவியுடன் பெற முயல வேண்டும். இந்த இரு சமூகத்துடனும் இனிமேல் சேர்ந்து வாழ ஏலாது என்பதை புரிய வைக்க வேண்டும். சிங்களவன் வசதியான முதுகில் மாறி மாறி சவாரி செய்கிறான்.

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

மிக அருமையான  யதார்த்த கருத்துக்கள்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

இந்த இரு சமூகத்துடனும் தமிழர்களால் சேர்ந்து வாழ முடியாது என்ற விடயம் சர்வதேசத்திற்கு ஏற்கனவே தெரியும்.

தமிழர்களை அழிக்க இதே சர்வதேச நாடுகள் ஆயுதங்கள், மற்றும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தன. இறுதிக்கட்டப்போரின் போது புலிகள் உட்பட தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதையும் satellite உதவியுடன் இதே சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன. 

சர்வதேசம் நினைத்திருந்தால் போர் முடிந்த பிறகாவது எதையாவது தமிழர்களுக்கு செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதால் ஒரு இலாபமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. அவ்வாறு செய்ய முற்பட்டாலும் இலங்கை அரசாங்கம் விடாது.

இலங்கை அரசாங்கமும் அனைத்து நாடுகளையும் கைக்குள் போட்ட படி உள்ளது. எனவே அதை பகைக்க வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு இல்லை.

தலைவர் பிரபாகரனின் பின் தமிழர்களுக்கு ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை (அரசியலில் தன்னும்) என்பது கூட தமிழர்களை ஒரு பலம் குறைந்த தரப்பாக மற்றவர்கள் பார்க்க காரணமாயிற்று.

நீங்கள் மேலே கூறியவற்றுடன் நான் 90% ஒத்துப் போகிறேன். எதோடு ஒத்துப் போகவில்லை என்பதைச் சொல்லி திரியை ரணகளமாக்க விரும்பவில்லை. அது இந்த சம்பாசணைக்கு தேவையும் இல்லை.

ஆனால் யாரிடமும் அடுத்த செய்ய வேண்டியவை என்ன என்ற பொறிமுறை ஒன்று இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உடனே நீங்கள் செய்யலாமே? உங்கள் பொறிமுறை என்ன என்று கேட்காதீர்கள்.

09 ற்கு பின், சமஸ்டி நோக்கி, ஊரில் இருக்கும் தலைவர்களை மையமாக வைத்து , சிறிது சிறிதாய் நகரலாம் என்ற பொறிமுறையே நான் இதுவரை பரிந்துரைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் நிகழ்வுகள் வைத்து மீளாய்வு செய்யும் போது அந்த பொறிமுறை பயந்தராது என்பது வெள்ளிட மலையாகிறது. 

அப்போ என்னதான் வழி?

இந்த கேள்விக்கு, தெரியாது என்பதுதான் இப்போதைக்காக பதிலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அப்போ என்னதான் வழி?

 

வலு சிம்பிள் எல்லா தமிழரும் வெளி நாடு வருவது.😂

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நீங்கள் மேலே கூறியவற்றுடன் நான் 90% ஒத்துப் போகிறேன். எதோடு ஒத்துப் போகவில்லை என்பதைச் சொல்லி திரியை ரணகளமாக்க விரும்பவில்லை. அது இந்த சம்பாசணைக்கு தேவையும் இல்லை.

ஆனால் யாரிடமும் அடுத்த செய்ய வேண்டியவை என்ன என்ற பொறிமுறை ஒன்று இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உடனே நீங்கள் செய்யலாமே? உங்கள் பொறிமுறை என்ன என்று கேட்காதீர்கள்.

09 ற்கு பின், சமஸ்டி நோக்கி, ஊரில் இருக்கும் தலைவர்களை மையமாக வைத்து , சிறிது சிறிதாய் நகரலாம் என்ற பொறிமுறையே நான் இதுவரை பரிந்துரைத்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் நிகழ்வுகள் வைத்து மீளாய்வு செய்யும் போது அந்த பொறிமுறை பயந்தராது என்பது வெள்ளிட மலையாகிறது. 

அப்போ என்னதான் வழி?

இந்த கேள்விக்கு, தெரியாது என்பதுதான் இப்போதைக்காக பதிலா?

நீங்கள் “தலைவர் பிரபாகரன்” பற்றி நான் எழுதிய விடயத்தில் தான் ஒத்துப்போகவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அதில்லை இங்கு பிரச்சினை. நான் கூற வந்தது அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைக்கு இருந்த power ஒரு காரணம். இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அதே power ஐ எதிர்பார்க்க முடியாது என்றாலும் தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் ஒரு தலைமை இல்லை. 

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை கொண்டிருக்குமானால் சர்வதேசம் தமிழர்களை பகடைக்காயாக உபயோகித்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இயங்கி தனக்கு சார்பான அரசியல் இலங்கையில் வருவதற்கு களமிறங்கலாம். அதன் போது தமிழர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இன்றும் ஒட்டாக உள்ளது.

எமது அரசியல்வாதிகளும் இலங்கை அரசு எது சொன்னாலும் ஆமாம் போடும் ஆட்களாக உள்ளார்கள். அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கூட எழுத்து வடிவில் சம்மதம் பெறாமல் வாய்மூல சம்மதத்தை மட்டும் பெற்றுக்கொள்வர். இப்படியான நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

என்னை பொறுத்தவரை அரசியல் தீர்வு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துவதே சரி. மக்களை கவனிப்பாரற்று கைவிட்டு விட்டு தனியே தீர்வு தீர்வு என்று அலைவதால் எதுவித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் அதை செய்யும் ஆற்றல் கூட எமது சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

Link to comment
Share on other sites

35 minutes ago, சுவைப்பிரியன் said:

வலு சிம்பிள் எல்லா தமிழரும் வெளி நாடு வருவது.😂

சிங்களவர்கள் சிலர் முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டகத்தில் ஏற்றி அரபு நாடுகளுக்கு அனுப்பி விடுமாறு twitter இல் நேற்று பதிவிட்டிருந்தார்கள்.

உங்கள் கருத்தை வாசிக்க எனக்கு ஏதோ அப்பதிவு நினைவுக்கு வந்து விட்டது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

நீங்கள் “தலைவர் பிரபாகரன்” பற்றி நான் எழுதிய விடயத்தில் தான் ஒத்துப்போகவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அதில்லை இங்கு பிரச்சினை. நான் கூற வந்தது அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைக்கு இருந்த power ஒரு காரணம். இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அதே power ஐ எதிர்பார்க்க முடியாது என்றாலும் தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் ஒரு தலைமை இல்லை. 

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை கொண்டிருக்குமானால் சர்வதேசம் தமிழர்களை பகடைக்காயாக உபயோகித்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இயங்கி தனக்கு சார்பான அரசியல் இலங்கையில் வருவதற்கு களமிறங்கலாம். அதன் போது தமிழர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இன்றும் ஒட்டாக உள்ளது.

எமது அரசியல்வாதிகளும் இலங்கை அரசு எது சொன்னாலும் ஆமாம் போடும் ஆட்களாக உள்ளார்கள். அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கூட எழுத்து வடிவில் அனுமதி பெறாமல் வாய்மூல அனுமதியை மட்டும் பெற்றுக்கொள்வர். இப்படியான நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

என்னை பொறுத்தவரை அரசியல் தீர்வு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துவதே சரி. மக்களை கவனிப்பாரற்று கைவிட்டு விட்டு தனியே தீர்வு தீர்வு என்று அலைவதால் எதுவித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் அதை செய்யும் ஆற்றல் கூட எமது சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

சரி நீங்களே சொல்லிவிட்டதால் நானும் சொல்கிறேன். நான் ஒத்துப் போகாத விடயம், பிரபாகரன் தலைமை பற்றியதுதான். ஆனால், அந்த தலைமை வலுவானது என்பதில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து என்றுமே இருந்ததில்லை. அந்த தலைமை கொண்ட கொள்கைக்கு உண்மையானது என்பதிலும், தன்னலமற்றது, ஊழல்லற்றது, கண்ணியமானது என்பதிலும் நான் 100% எப்போதும் உடன் பட்டே இருக்கிறேன்.

கடந்த 400 வருட வரலாற்றில் இதை விட வலுவான தலைமை தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் இருந்ததில்லை என்பது மறுக்கவியாலாத உண்மை. இனி இருக்காது என்பதும் உண்மையே.

அந்த வலுவான தலைமையால்தான், அமிர்தலிங்கம் டெல்லி போய் பார்தசாரதியை பார்த்த நிலை மாறி, ஸ்தானிகர்கள் எல்லாம் கிளிநொச்சிக்கு படை எடுக்கும் காலமும் உருவாகியது என்பதும், இப்போ எம்மிடம் அந்த வலு இல்லை என்பதால்தான் நாம் சீந்துவாரற்று கிடக்கிறோம் என்பதும் உண்மையே.

இது நான் இங்கே எழுத தொடங்கிய காலம் தொட்டு எழுதும் விடயம்தான். ஆனால் என்னை ஒரு வித முத்திரையோடு மட்டுமே பார்த்து பழக்கப் பட்டவர்கள் “என்ன கோசான் இப்பதான் அருமை தெரியுதா” என்று, ஏதோ நான் இன்றுதான் இப்படி எழுதியது போல கேட்பார்கள் 😂

ஆனால் அது எப்போதும் “சரியான தலைமையாக” இருந்ததா என்றால், என் பதில் இன்றைக்கும் இல்லை என்பதே. 

ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்பதை பற்றி யாழில் போதுமான அளவு எழுதியாகி விட்டதாலும், உண்மையிலேயே இவற்றை பேசுவதால் இனி ஒரு பயனுமில்லை என்பதாலும், இதை பற்றி பேசுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
16 hours ago, goshan_che said:

மிகவிரைவில் எம்மை விட எண்ணிக்கை கூட போகும் ஒரு சமுதாயத்துடன் தமிழ்பேசும் என்ற அடைப்புக்குள் நாம் ஒன்றாவது, நீண்ட கால நோக்கில் எமக்கு தீமையாகாதா?

அது சிங்களவர்கள் கவலை. நாம் இப்போது அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை.

Only one wife? Ha.... haaaa...

அட முட்டாப்பயலே. ஒத்தக் காலோட 17..... நீயெல்லாம் என்ன மனிசனப்பா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2019 at 11:53 PM, goshan_che said:

ஆனால் சர்வதேசம் எமக்கு விடிவை தரும் எண்டு இனியும் நம்பும் நிலையில் நானில்லை. அவர்கள் எம்மை கைகழுவி ரொம்ப நாளாகி விட்டது. 

கிட்டத்தட்ட எம்மை மறந்தே போய்விட்ட சர்வதேசத்தை, எம்மை நோக்கி திருப்பும் யுக்திதான் எது?

நாட்டுக்கு வெளியே இருக்கும் எந்த அமைப்பு, இந்த வேலைத் திட்டத்தை கொண்டு செல்ல கூடிய அமைப்பு? எனக்குத் தெரிய யாருமில்லை.

எம்மை இந்த இக்கட்டுக்குள் தள்ளிய இணைத்தலைமை நாடுகளாகிய சர்வதேசத்திற்கு இதனை விளக்கிச் சொல்ல தமிழர் தரப்பில் ஒரு நிரந்தர வெளிவிவகாரக் குழு தொடர்ச்சியாக செயற்பட அமைக்கப்பட வேண்டும். இதில் பிரதான தமிழ் கட்சிகள்.. அறிவுஜீவிகள் சார்பில் ஒரு பிரதிநிதி.. மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி.. பாதிக்கப்படும் மக்கள் சார்பில் அந்த மக்கள் இனங்காட்டும்.. நபரைக் கொண்ட..ஒரு பிரதிநிதி.. வெளிநாட்டுத் தொடர்பாடலுக்கு புலம்பெயர் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதி அமைதல் வேண்டும்.

இந்தக் குழு எமது பிரச்சனைகளை ஆதார பூர்வமாக தொடர்ச்சியா வைப்பதோடு எமது கருத்தொற்றுமையை எமது மக்களின் சார்ப்பில் அவர்களுக்கு இனங்காட்ட வேண்டும்.

சர்வதேசம் எம்மை கைவிடுவதற்கு அல்லது மறப்பதற்கு எம்மவர்களே காரணம். விடுதலைப்புலிகள் எம்மவர்களின் நண்டுக்குணம் அறிந்து தான் மக்களின் நலனுக்காக ஏக பிரதிநிதித்துவம் என்பதை கொண்டு வந்தார்கள். இன்று நாம் ஜெனிவாவில் போய் செய்தது என்ன..?!

சம் சும் கும்பல் மக்களைக் கொலை செய்த அரசுக்கு மன்னிப்புக் கொடுக்க.. அது பயங்கரவாத அழிப்பே என்று சான்றிதழ் கொடுக்க..

கஜேந்திரன் இல்லை என்ற அது போர்க்குற்றம் என்ற

ஆனந்தி.. ஐயோ அம்மா என்ற

விக்கி இல்லை இல்லை.. அது இனப்படுகொலை தான் என்ற..

டக்கிளஸ்.. அது எல்லாரும் செய்வது தானே... மறப்போம் மன்னிப்போம் என்ற..

இப்படி தமிழர்களுக்குள் தமிழ் மக்களின் நலனில் அக்கறையை ஒற்றுமையை சர்வதேசம் இனங்காணவும் இல்லை இவர்களில் யாரை எப்படி நம்புவது என்ற குழப்பம் அதற்கு.

ஆனால்.. புலிகள் முன்னெடுத்தது வேறு. ஏக பிரதிநிதித்துவம். எம் மக்கள் சார்பில்.. நாம் வந்து பேசுகிறோம்.. எமக்கு பேச்சில் எட்டப்படும் விடயங்களை எம் மக்களிடம் கொண்டு செல்லவும் அமுல்படுத்தவும் முடியும் என்று காட்டி படியால் தான்.. சும்மா இருந்த சர்வதேசம் இணைத்தலைமை நாடுகளாகி.. ரோக்கியோ வரை கூப்பிட்டுப் பேசினார்கள். அதனால்.. சர்வதேச கவனத்தையும் எம் மக்களின் பிரச்சனை ஈர்த்துக் கொண்டது.

2009 மே பின்.. எம்மவர்கள் யாரை எந்த நாடு பேச்சுக்கு அழைத்தது தமிழ் மக்கள் சார்பில் பேச..?! இத்தனைக்கும் சனநாய் அகம் காக்குகிறோம் என்று வாய் கிழியக் கத்துகிறார்களே..??!

இந்த நிலை களையப்பட வேண்டும் என்றால்.. எமக்குள் அரசில் வேறுபாடுகளுக்கு அப்பால்.. மண் மக்கள் நலன் முதன்மை பெற வேண்டும். அவற்றை இட்டு ஒற்றுமை வந்தாக வேண்டும். ஒரு சிலர் குறுக்கால் இழுக்கலாம்.. அது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால்.. பலர் ஒன்றாக அமரலாம் இல்லையா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.