Jump to content

தொடரும் பதற்றம்: நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிஸ்


Recommended Posts

நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று (திங்கட்கிழமை) இரவு 09.00 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் பதிவான அசாதாரண சூழ்நிலைகள் வேறிடங்களுக்கு பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹாவிலும் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்!

கம்பஹா பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தவகையில் மினுவங்கொட, தொம்பே கனமுள்ள, கிரிடிவெல, மீரகம, நிட்டம்புவ, பூகோட, வேயங்காடா, வெலிவேரிய, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/கம்பஹாவிழும்-ஊரடங்கு-உடன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்.Getty Images இலங்கையின் பல இடங்களில் அமைதி குலைவதாக செய்திகள் வெளியானதை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு. (கோப்பு படம்)

இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ்.

இது தொடர்பாக பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸம் அமீன் பதிவிட்டுள்ள ட்வீட்:

இது தொடர்பான செய்தி: இலங்கையில் தொடரும் மோதல் - சில பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. 

சிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதை அடுத்து, இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை

வடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது. 

இந்த பின்னணியில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.

இதன்படி, கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் வீதிகளில் இறங்கி, அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவித்தனர்.

அத்துடன், வீதியிலுள்ள மக்களை விரைவில் தமது வீடுகளை நோக்கி செல்லுமாறும் பொலிஸார் அறிவித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. 

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது சன நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது. 

அத்துடன், அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் மீது குருணாகல் மாவட்டத்தில் தாக்குதுல்

இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர், பிபிசி க்குத் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த சிலர், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை கொட்டம்பிட்டிய பகுதிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பபட்டதோடு, அவற்றில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள முஸ்லிம்களின் 10க்கும் மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் சுமார் 15 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விவரித்தார்.

குறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

வன்செயல்

இதேபோன்று, அனுக்கண பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளை தாக்கிய காடையர்கள், அங்கிருந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கள்களில் வந்தவர்களே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர், பிபிசி யிடம் கூறினார்.

இன்றைய தினம் அஷ்டமுல்ல பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட காடையர்கள், அங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

தோரதொட்டுவ மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளிலும் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது நிக்கவரட்டிய நகரிலுள்ள கடையொன்றில் பணியாற்றிய முஸ்லிம் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கூறினார்..

இது இவ்வாறிருக்க, குருணாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை நோன்பு துறக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதோடு, இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியிலுள்ள சிங்களவர்களில் ஒரு தரப்பினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஏதண்டவெல, கரந்திப்பில மற்றும் யாயவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களும் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகின.

மேலும், பிங்கிரிய தேர்தல் தொகுதியிலுள்ள கிண்ணியம பகுதியிலுள்ள 03 பள்ளிவாசல்களை அங்கு வந்த சிங்களவர்கள் நேற்றிரவு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேவேளை அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பூவல்ல பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றும் தாக்குதலுக்குள்ளாகியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

பள்ளிவாசல்களுக்குள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-48254210

Link to comment
Share on other sites

அநேக இடங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாம்!

Link to comment
Share on other sites

வடமேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன! தொடரும் ஊரடங்கு

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/119893?ref=bre-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
    • நன்றி. நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐
    • சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?
    • ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி,  இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய  ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.