Jump to content

விடுதலைப் புலிகள் மீதான தடையை.. மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது இந்திய அரசு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian Government extended ban of LTTE for 5 more years

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கம் என்ற பட்டியலில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் வெளியிட்டது.

அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது.

எனினும் இந்தியாவில் அந்த தடை உத்தரவு நீக்கப்படவில்லை. இந்த நிலையில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன.

இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் அவர்களது சின்னம், கொடியை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது. இது போன்ற தடை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய அரசு தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Indian Government extended ban of LTTE for 5 more years

Indian Government extended ban of LTTE for 5 more years

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/indian-government-extended-ban-of-ltte-for-5-more-years-350197.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!

இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது.

ltte.jpg

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55888

 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய அரசு தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவில் உலகில் 7வது இடத்தில் இருக்கும் இந்தியா என்ற ஒரு நாடு.... சுண்டங்காய் அளவுமில்லாத இலங்கை என்ற நாட்டின் வேண்டுகோளையும் புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளுகிறது என்றால் இதுதான் உலகில் இருக்கும் உண்மையான சன(நாய்) அகம்.

 rajapalayam%2Bstamp.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்- இந்திய உள்துறை அமைச்சு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா மேலும் ஐந்து வருடங்களிற்கு நீடித்துள்ளது.

2014 இல் நீடிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு இன்று  அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு விடுதலைப்புலிகளின் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும்  நடவடிக்கைகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதுடன் இந்திய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதாக விளங்குவதால்  அந்த அமைப்பை உடனடியாக சட்டவிரோதமானது என அறிவிக்கவேண்டியுள்ளது என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் இணையங்கள் மூலம் தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை பரப்பிவருகின்றனர் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என தெரிவித்துவருகின்றனர் என தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சு இது இந்தியாவில் மிக மிகமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ministry_of_home_affair_in.jpg

2009 தோல்விக்கு பின்னரும் விடுதலைப்புலிகள் இன்னமும் ஈழம் என்பதனை கைவிடவில்லை நிதிசேகரிப்பு மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அந்த நோக்கத்தை நோக்கி இரகசியமாக செயற்படுகின்றனர் எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களும் உறுப்பினர்களும் அமைப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்துயிர்  கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/55935

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத அமைப்புக்கு தடையை போட்டு என்ன செய்ய போகினம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

இல்லாத அமைப்புக்கு தடையை போட்டு என்ன செய்ய போகினம்?!

இருக்கிற ஐஸ் வேலைகளை இரண்டு நாடுகளுமா கோட்டை விட்டுப் போட்டு, இல்லாத புலிக்கு மீசை முறுக்கினம்...

என்னத்த சொல்லுறது..  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை புலிககள் தான் வந்து அழிக்க வேணும் எண்டு இல்லை.அது உங்களாலேயே நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் பதவிக்கு வந்து.. தனது தந்தையின் தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக் கொண்டு.. இந்தத் தடையை விலக்கினால் அன்றி.. ஹிந்தியாவில் ஹிந்து கட்சிகள்.. காங்கிரஸ்.. இடதுசாரி கம்னிஸ்டுக்கள்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாத அமைப்புக்களுக்கு கொஞ்சமும் குறைந்தவை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

Link to comment
Share on other sites

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

6 hours ago, குமாரசாமி said:

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

கோசானுக்குத் தெரிந்த வியாபார தந்திரம்.... கோமணம் கட்டிய சாமியாருக்குத் தெரியவில்லை....🤔

தடையை எடுத்தால், இன்னும் 4 குண்டுகளை வெடிக்கவைத்து தடையை மேலும் பெருக்கலாம் அல்லே.... 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 போருக்குப் பின்னர், இந்தியா தொடர்ந்தும் புலிகள்  மீதான தடையை நீட்டித்துவருவதுபற்றி, கடந்த காங்கிரஸ் அரசில் இருந்த பலர் நியாயம் கற்பித்திருந்தனர்.

குறிப்பாக, சோனியா, ராகுல் மற்றும் சோனியாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்று கருதப்படும் நாராயணன், ஷிவ்ஷங்கர் மேனன், பிரணாப் முகர்ஜீ போன்ற காங்கிரஸ் பிரபலங்கள் மீதே ஈழத்தமிழர்களின் முழுக் கோபமும் இருப்பதால் இவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைப்பட்டு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆப்படியிருந்தும் இத்தடை நீட்டிக்கப்படுகிறதென்றால், இன்றும்கூட இந்தியா தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரில் தனது பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதுடன், இந்தக் கொடூரத்தில் பங்கிகொண்ட தனது தலைவர்களைக் காக்கப் பாடுபடுகிறதென்பது உண்மையாகிவிடுகிறது. 

நீதிவிசாரணை மூலமோ அல்லது சர்வதேசச் சட்டங்கள் மூலமோ சோனியாவையும் அவளது ஏவலாளிகளையும் நீதியின் முன் நிறுத்த முடியாவிட்டாலும், மனச் சாட்சி என்று வரும்போது தாம் செய்த அநியாயங்களுக்குத் தண்டனை ஒருநாள் கிடைக்கும் என்கிற பயம் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெல்லியில் இருந்து கொண்டு பேப்பரில் ரைப் செய்தால் தடை ஆகி போச்சா..? ஒரே டமாஸ்தான்.. கல்யாணம் , காது குத்து , பிளக்ஸ் பேனர் , சந்து, பொந்து , இண்டு இடுக்கு .. சுவரொட்டி எல்லா இடத்திலும் நீக்கமற உள்ளது. வீரத்தின் அடையாளமா பார்க்கினம் .😊
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 11:21 PM, குமாரசாமி said:

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

இல்லை. எடுத்தாலும் எடுக்காட்டியும் ஒண்டுதான். ஆனால் எடுத்தால், தடையை நீடிச்சவைக்கு பிராந்திய வியாபாரம் டல் ஆகீடும். இதுதான் நான் சொல்ல வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லை. எடுத்தாலும் எடுக்காட்டியும் ஒண்டுதான். ஆனால் எடுத்தால், தடையை நீடிச்சவைக்கு பிராந்திய வியாபாரம் டல் ஆகீடும். இதுதான் நான் சொல்ல வந்தது.

60466263_1344935005646351_54720951933374

கோசான்...  நீங்கள், ஈழத்து  கமலஹாசன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவ ஒற்றுமையை வைத்து மட்டும் மதிப்பிடல் ஆகாது 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உருவ ஒற்றுமையை வைத்து மட்டும் மதிப்பிடல் ஆகாது 😜

யாழ். களத்திற்கு, உருவம் முக்கியமில்லை.
உங்கள், கருத்துத்தான்...  முக்கியம்.   🧐  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 4:13 PM, nedukkalapoovan said:

ராகுல் பதவிக்கு வந்து.. தனது தந்தையின் தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக் கொண்டு.. இந்தத் தடையை விலக்கினால் அன்றி.. ஹிந்தியாவில் ஹிந்து கட்சிகள்.. காங்கிரஸ்.. இடதுசாரி கம்னிஸ்டுக்கள்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாத அமைப்புக்களுக்கு கொஞ்சமும் குறைந்தவை அல்ல.

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

Link to comment
Share on other sites

18 minutes ago, ராசவன்னியன் said:

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

அனுபவம் வன்னியரே. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

 

4 hours ago, Paanch said:

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

 

4 hours ago, ராசவன்னியன் said:

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

விசத்தை.... விசத்தால் தான் முறிக்கலாம்,  என்று ஊரில் சொல்வார்கள்.  :grin:

தமிழ் அகராதி:  விசம்  -  நஞ்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.