Jump to content

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி ! நேரடி ரிப்போர்ட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி ! நேரடி ரிப்போர்ட்

 

- லியோ நிரோஷ தர்சன் 

உள்­நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்­தத்தை சந்­தித்­துள்ள இலங்கை மற்­று­மொரு காரி­ரு­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்­த­வர்­களால் கொண்­டா­டப்­ப­டு­கின்ற முக்­கிய பண்­டி­கை­யாகும். அன்­றைய தினத்தில் சற்றும் எதிர்­பா­ர்த்­தி­ராத வகையில் முக்­கிய மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை குறிவைத்து தற்­கொலை தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த தாக்­குதல்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது மாத்­தி­ர­மல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்­கி­யது. 

kathankudi.jpg

உலகப் பயங்­க­ர­வாத அமைப்­பாக கரு­தப்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட உள்ளூர் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் தான் இலங்­கையில் தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர் என்ற உறு­திப்­பட்ட தக­வல்கள் வெளிவந்­த­வுடன் நாட­ளா­விய ரீதியில் பாது­காப்பு தரப்­பினர் தேடுதல் நட­வ­டிக்­கை­களை தற்­போது வரை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

இஸ்­லா­மிய மதசார் அமைப்பு என்­பதால் இலங்­கையில் பரந்து வாழும் முஸ்லிம் மக்கள் மீது சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் ஒரு நிலைமை ஏற்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கைகள் மற்றும் அங்கு மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் என்­பன அந்த சமூ­கத்தின் மீதான ஒரு மாறு­பட்ட நிலைப்­பாட்டை ஏனைய சமூ­கத்­தினர் கொள்­வ­தற்கு கார­ண­மா­கி­யது. குறிப்­பாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பு­டனான தொடர்­புகள் அவர்­களின் கருத்­துக்கள் ஏனைய மதத்­த­வர்கள் மத்­தியில் முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்தது. 

காத்­தான்­குடி சமூ­கத்தைச் சார்ந்த ஒரு­வ­ராக தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் காணப்­பட்­ட­மை­யா­னது கிழக்கு மீதான பார்­வையில் மாற்­றங்களை ஏற்­படுத்தியுள்ளது. முஸ்­லிம்கள் செறிந்து வாழும் காத்­தான்­கு­டியில் தற்­போது ஒரு அச்சம் நிறைந்த சூழலே காணப்­ப­டு­கின்­றது. மக்கள் மத்­தியில் வழ­மைக்கு மாறான மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஏனைய முஸ்லிம் மக்­களை விட காத்­தான்­குடி வாழ் முஸ்­லிம்கள் அந்த சமூ­கத்தில் சற்று வேறு­பட்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­ற னர். இஸ்­லா­மிய பயன்­பா­டுகள் மர­பு­ரீ­தி­யான இஸ்­லா­மிய கொள்­கைகள் என்­ப­வற்றில் தன்­னி­றை­வாக உள்ள காத்­தான்­குடி முஸ்­லிம்கள் தற்­போது ஒரு கலக்­க­ம­டைந்­த­வர்­க­ளாக உள்­ளனர். 

தீவிரப் போக்­கு­டைய சில அமைப்­புக்கள் தொடர்பில் பெரிய பள்­ளி­வா­யலோ அங்­கி ருக்கும் அனைத்துப் பள்­ளி­வா­யல்கள் மற் றும் இஸ்­லா­மிய நிறுவன சம்­மே­ள­னமோ கருத்தில் கொள்­ளா­மை­யினால் ஒட்­டு­மொத்த காத்­தான்­குடி சமூ­கத்­திற்கே களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு செயற்­பட்­டுள்­ள­தா­கவே பிர­தேச மக்­களின் கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் தான் காத்­தான்­கு­டியின் உண்­மை­யான நிலைமையை அறிய அங்கு விஜயம் செய்தோம். 

காத்­தான்­குடி மக்களின் கருத்து 

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற சம்­பவம் மனித சமூகம் விரும்­பாத கொலைச் சம்­ப­வ­மாக நாம் சந்­தித்த புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­கின்­றனர். ஒரு பாட­சாலை அதிபர் என்ற வகை­யிலும்  காத்­தான்­குடி முஹ்­யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாசல் தலைவர் என்ற வகை­யிலும் மிகவும் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். எவ்­வி­தத்­திலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத சம்­ப­வ­மாகும். காத்­தான்­குடி சமூ­கத்தை பொறுத்த வரையில் இவ்­வா­றான பல சம்­ப­வங்­களை அனு­ப­வித்த சமூ­க­மாகும். ஆகவே இவ்­வா­றான தாக்­கு­தல்­களின் வலியும் தாக்­கத்­தையும் அனு­ப­வித்த சமூகம் என்ற வகையில் எவ்­வி­தத்­திலும் இதனை  ஏற்றுக் கொள்ள முடி­யாது என எம்.சி.எம்.ஏ. ஷதார் தெரி­வித்தார். 

முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் ஒரு பிர­தே­ச­மா­கவே காத்­தான்­குடி காணப்­ப­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்ல இலங்­கைக்கு அப்பால் பல உலக நாடு­க­ளிலும் காத்­தான்­குடி சமூகம் பரந்து வாழ்­கின்­றது. எனவே காத்­தான்­கு­டியை மையப்­ப­டுத்தி ஏதேனும் ஒரு சம்­பவம் இடம்­பெற்றால் அதன் தாக்கம் பரந்து வாழ்­கின்ற காத்­தான்­குடி மக்­க­ளுக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதே அங்­குள்ள வர்த்­தக சமூ­கத்­தி­னரின் நிலைப்­பா­டாகும். எனவே தான்  கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இனப்­பி­ரச்­சினை என்­றாலும் சரி கல­வ­ரங்கள் என்­றாலும் சரி காத்­தான்­குடி சமூகம் மிகவும் நிதா­ன­மாக நடந்­து­கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் எமக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.  

காத்­தான்­கு­டியின் பார்­வையில் சஹ்ரான் 

எவ்­வா­றா­யினும் காத்­தான்­கு­டியை சேர்ந்த ஒரு சிறு குழு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் ஈடுபட்­டதும் அதற்கு சஹ்ரான் என்ற நபர் தலைமை தாங்­கி­யமை காத்­தான்­குடி சமூகம் அறிந்­தி­ராத ஒன்று என்­பதும் அங்­குள்ள புத்­தி­ஜீ­விகள் மற்றும் வர்த்­தக சமூ­கத்­தி­னரின் ஒரு­மித்த கருத்­தாக காணப்­ப­டு­கின்­றது.  ஆனால் சஹ்ரான் காத்­தான்­கு­டியில் இருக்­கின்ற மத்­ரஸா ஒன்றில் கல்வி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த காலக்­கட்­டத்தில் முரண்­பாட்டு கருத்­துக்­களை கொண்­டி­ருந்­த­மை­யினால் அவர் இடையில் நீக்­கப்­பட்­டுள்ளார். 

ஆசான்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காது தவ­றான கருத்­துக்­களை பரப்பி வந்­துள்ளார். ஆசி­ரி­யர்கள் வரும் போது மாண­வர்கள் எழுந்து மரி­யாதை செய்ய வேண்­டி­ய­தில்லை போன்ற முரண்­பா­டான கருத்­துக்­க­ளையும் மாண­வர்கள் மத்­தியில் பரப்­பினார். இவ்­வா­றான முரண்­பட்ட கருத்­துக்­களை கொண்­டி­ருந்­த­மை­யினால் காத்­தான்­குடி பாட­சா­லை­களில் ஒழுக்கம் சார்ந்த விட­யங்­க­ளிலும் தாக்கம் செலுத்­தி­யது. அது மாத்­தி­ர­மன்றி வேறு ஒரு இயக்­கத்­துடன் இணைந்து தொடர்ச்­சி­யாக தவ­றான பிர­சா­ரங்­களை செய்து வந்தார். அனைத்து முஸ்லிம் தரப்­பு­க­ளையும் எதிர்த்து செயற்­பட்டார். ஆகவே சஹ்­ரானின் அனைத்து செயற்­பா­டு­க­ளுமே சமூ­கத்­துடன் முரண்­பட்­ட­தா­கவே காணப்­பட்­ட­தா­கவே கருத்துத் தெரிவிக்கப்பட்டது.  

அர­சி­யல்­வா­திகள் தொடக்கம் சமூ­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் வரை அனை­வ­ரையும் விமர்­சித்­துள்ளார். காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் மற்றும் நிறு­வ­னங்கள் சம்­மே­ளனம் என்ற அமைப்பு அங்­குள்­ளது.  காத்­தான்­கு­டியில் என்ன பிரச்­சினை நடந்­தாலும் அதனை கையாண்டு இறுதி தீர்­மா­னத்தை இந்த சம்­மே­ள­னமே எடுக்கும். சம்­மே­ள­னத்­திற்கும் கட்­டுப்­ப­டாத நிலை­யி­லேயே சஹ்­ரானின் செயற்­பா­டுகள் காணப்­பட்­டுள்­ளன. 

2 வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக பாட­சாலை கட்­டடம் ஒன்­றிக்கு அடிக்கல் நாட்டு விழா இடம்­பெற்ற போது தரம் - 5 மாண­வர்­களின் கலை நிகழ்ச்சியைக் கடு­மை­யாக விமர்­சித்த சஹ்ரான் அமைப்­பினர் மனை­வி­யையோ பிள்­ளை­யையோ ஆட விடு­வானா"? என்று மோச­மா­கவும் பகி­ரங்கமாகவும் விமர்­சித்­தாக குறிப்­பி­டு­கின்­றனர். 

சமூ­கத்தில் சஹ்­ரானின் செயற்­பாடுகள் தீவி­ர­ம­டைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மற்­று­மொரு தரப்­பி­ன­ருடன் ஏற்­பட்ட மோத லின் பின்னர் ஊரை விட்டு சென்­றுள்ளார்.  அதற்கு பின்னர் காத்­தான்­கு­டிக்குள் சஹ்­ரானின் செயற்­பா­டுகள் காணப்­பட வில்லை என ஒரு தரப்பு மறு­தலிக்­கின்­றது. 

சஹ்ரான் ஆளுநர் ஹிஸ்­புல்­லா­வுடன் ஒப்­பந்தம் ஒன்றை செய்­துகொண்டதாக புகைப்­ப­டங்கள் பிர­சுரிக்­கப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் காலங்­களில் தான் வழங்கும் ஒப்­பந்­தங்­களின் பிர­கா­ரமே அர­சியல் தரப்­புகள் நடந்­து­கொள்ள வேண்டும் என்று எழுத்து மூல­மாக கோரிக்­கை­யினை சஹ்ரான் விடுத்­துள்ளார். மரபுரீதி­யான இஸ்­லா­மிய வழி­மு­றை­க­ளுக்கு முர­ணாக தீவிரப்போக்­கு­டை­ய­வ­ராக சஹ்­ரானும் அவ­ரது குழுவும் செயற்­பட்­டுள்­ளனர். 

சஹ்­ரானின் வழி நடத்­தல்­களை பின்­பற்ற காத்­தான்­கு­டி­யிலும்  ஒரு கூட்டம் இருந்­துள்­ளது. அவ­ரது பேச்­சுக்­களை கேட்டு அதில் ஈடு­பாடு கொண்ட அந்த கூட்டம் காலப்­போக்கில் எண்­ணிக்­கை­க­ளினால் அதி­க­ரிக்­கப்­பட்டு வெளி உ­லகத் தொடர்­புகள் வரை விஸ்­த­ரித்­துள்­ளது. ஆனால் காத்­தான்­குடி சமூ­கத்­தி­ன­ருடன்  ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட மரபு ரீதி­யான முறுகல்நிலை 2017 ஆம் ஆண்­டிற்கு பின்னர் காத்­தான்­கு­டியில் சஹ்ரான் குழு­வி­னரால் வெளிப்­ப­டை­யாக செயற்­பட முடி­யா­ நிலையை உருவாக்கியுள்ளது. ஏதேனும் ஒரு வழியில் தன்னை பெரி­ய­வ­ராக காண்­பிக்கும் நோக்­கி­லேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து இத்­த­கைய செயலை செய்­துள்ளார் என்றும் காத்­தான்­கு­டி வாசிகள் சிலர் கூறு­கின்­றனர். 

இஸ்­லாத்தை பொறுத்த வரையில் அமை­தி­யான - சாந்­தி­யான மார்க்­க­மாகும். வன்­மு­றைக்கு இட­மில்லை. சௌபான் காலத்­தி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை இஸ்­லாத்தை பெரிதும் பாதித்­துள்­ளது. இஸ்­லா­மிய போர் இடம்­பெற்ற காலங்­களில் கூட சௌபான் காலத்தில் போரிடக் கூடாது என்று மரபு ரீதி­யான செயற்­பாடு இருந்­துள்­ளது. அதே போன்று குழந்­தைகள், பெண்கள் மற்றும் மத ஸ்தலங்களைத் தாக்க வேண்டும் என்று இஸ்­லாத்தில் சொல்­லப்­ப­டுள்­ள­தாக பிர­சாரம் செய்­வதோ -சஹ்ரான் குறிப்­பிட்­டது போன்று இஸ்லாம் அல்­லா­த­வர்­களை கொலை செய்­வதன் மூலம் சொர்க்கம் செல்­லலாம் என்­பதும் வெறும் கற்­ப­னை­யான கதை­யாகும். 

ஆகவே இஸ்­லாத்­திற்கு முர­ணான விட­யத்தை செய்­வ­தற்கு சஹ்ரான் ஏதோ­வொரு வகையில் தூண்­டப்­பட்­டுள்­ள­தா­கவே  குறிப்­பி­டு­கின்­றனர். இஸ்­லாத்தில் இல்­லாத விட­யங்­களை கூறிக்­கொண்டு, அதுதான் இஸ்லாம் என்று இளை­ஞர்­களை தூண்டி இவ்­வா­றான மோச­மான காரி­யத்தை செய­த­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று காத்­தான்­குடி மக்கள் கூறு­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெறும் என்று நாங்கள் யாருமே எதிர்­பார்க்கவில்லை. புல­னாய்வு தக­வல்கள் கிடைத்தும்  ஏன் நட­வ­டிக்கை எடுக்கவில்லை என்றும் தெரி­ய­வில்லை. பாரி­ய­தொரு தாக்­கு­தலை செய்துவிட வாய்ப் பில்லை என்று தவ­றான கணிப்பு இருந்­தி­ருக்­கலாம் என்­பதும் பிர­தே­ச­வா­சி­களின் கருத்­து­க­ளா­கவும் கேள்­வி­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன. 

தற்­போ­தைய நிலைமை 

ஆனால் சம்­ப­வத்தின் பின்­ன­ரான நிலைமை குறித்து அந்த மக்கள் குறிப்­பிடும் போது, காத்­தான்­குடி சமூகம் எதிர்­கொள்­கின்ற பிரச்­சினை பாரி­ய­தொன்­றென்­கின்­றனர். முஸ் லிம் பிர­தே­சங்­களில் கூட காத்­தான்­குடி என்று சொன்னால் சந்­தேக கண்­கொண்டு பார்க்கும் நிலையில் இது வேத­னை­யான விட­ய­மாகும். வாடகை வீடு­க­ளி­லி­ருந்து கூட வெளியேற்றும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. இதனால் வேத­னைப்படு­கின்றோம். வெட்­கப்படு­கின்றோம் என்­கின்­றனர். 

சம்­ப­வத்தின் பின்னர் முஸ்­லிம்­களின் வியா­பா­ரங்கள் பாதித்­துள்­ளன. இந்த நிலைமை விரைவில் மாற­வேண்டும். ஒரு சிறிய குழு வால் செய்த அழி­வாக ஏனைய சமூக மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்­கை­யினை காத்­தான்­குடி புத்­தி­ஜீ­விகள் முன்­வைக்­கின்­றனர்.  

காத்­தான்­கு­டியில் உள்ள 78 பள்­ளி­வா­யல் கள் மற்றும் 108 இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் உள்­ள­டங்கும் சம்­மே­ள­னத்தில் சஹ்­ரானின் இயக்கம் அங்­கத்­துவம் பெற­வில்லை. காத்­தான்­கு­டியை சேர்ந்த ஒரு­சில நபர்கள் சம்­ப­ வத்­துடன் தொடர்­புபட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக ஒட்­டு­மொத்த காத்­தான்­குடி சமூ­கத்­தையும் சந்­தேக கண்­கொண்டு பார்க்க வேண்டாம். தனக்கு சார்ந்­த­வர்­களை மூளைச் சலவை செய்து இத்­த­கைய செயலை செய்­துள்­ளனர் என்­பதே சஹ்ரான் குறித்தும் அவ­ரது தேசிய தௌஹீத் அமைப்பு குறித்தும் காத்­தான்­கு­டி மக்களின் மன­நிலை அமைந்­துள்ளது.

தௌஹீத் 

தௌஹீத் என்­பது ஏகத்­துவம் எனக் குறிப்­பி­டு­கின்­றது. இதில் எவ்­வாறு அடிப்­ப­டை­வாதம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு யாரி­டமும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய பதி­லில்லை.  ஆனால் தௌஹீத் கொள்­கை­யு­டை­ய­வர்கள் சாதா­ரண இஸ்­லா­மிய கட்­ட­மைப்­பி­லி­ருந்து விலகி செயற்­ப­டு­வ­தனால் முரண்­பாடுகள் உரு­வா­கின்­றது. இந்த முரண்­பா­டுகள் இஸ்­லாமிய மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­க­ளாகும். உதா­ர­ண­மாக நோன்பு பிறை என்­ப­திலும் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. சர்­வ­தேச பிறை உள்ளூர் பிறை என பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. உலகம் முழு­வதும் ஒரே தினத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற கருத்தை தௌஹீத் அமைப்­பினர் கொண்­டி­ருப்­பார்கள். ஆனால் பிறை கண்ட பின்னர் தான் நோன்பு பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்­டா­டப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் காத்­தான்­குடி சம்­மே­ள­னத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் அனைத்து தரப்­பு­களும் உள்­ளது. மற்­று­மொரு உதா­ர­ண­மாக கூட்டு துஹாவை எடுத்­துக்­கொள்­ளலாம். தனித்­த­னியே இறை­வ­னிடம் கேட்­கலாம் என்று தௌஹீத் குழு­வினர் கூறு­வார்கள். இவ்­வா­றான முரண்­பா­டு­களைத் தவிர பாரிய ஒரு வேறு­பாட்­டிற்குள் தௌஹீத் அமைப்­புகள் செல்ல வில்லை. அடிப்­ப­டையில் எந்த வேறு­பாடும் இல்லை என்­பது போல் இஸ்­லா­மிய மர­புக்குள் இடையில் புகுத்­தப்­பட்ட விட­யங்­களை செய்ய முடி­யாது என்­பதே தௌஹீத் அமைப்­பு­களின் நிலைப்­பா­டாக உள்­ளன.  

ஆயுதம் - வாள் - பயிற்சி முகாம்

இந்த முரண்­பா­டு­களை தவிர்த்து செயற்­ப­டு­வது குறித்து கலந்­தா­லோ­சிக்கும் வகை யில் பல முறை  தௌஹீத் அமைப்­புக்­களை அழைத்­துள்ள போதிலும் சஹ்ரான் குழு­வி னர் கருத்தில் கொள்ளவில்லை.  காத்­தான்­கு­டியில் உள்ள ஏனைய சில  தௌஹீத் அமைப்­புகள் ஒரு நிதா­ன­மான போக்கில் செயற்­ப­டு­கின்ற நிலையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் தீவிரப் போக்­கு­டை­ய­வர்­க­ளாக செயற்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான தீவிர போ க்கு பல்­வேறு சந்­தே­கங்­களை ஆரம்­பத்தில் தோற்­று­வித்­துள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்­பு­க­ளுடன் சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு தொடர்­புகள் இருக்­குமோ என்ற ஐயப்­பாடு ஒரு கட்­டத்தில் காணப்­பட்­ட­தாக காத்­தான்­கு­டி­யினர் வெளிப்­ப­டுத்­தினர். அதற்­காக ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் ஒரு மைய­மாக காத்­தான்­குடி உள்­ளது என்­பது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும் என்­கின்­றனர். 

ஒல்­லிக்­குளம் பகு­தியில் அமை­யப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற பயிற்சி முகாம் குறித்து கருத்து வெளியி­டு­வதில் பெரிதும் மக்கள் விரும்பவில்லை. பல­ரிடம் கேட்டும் மௌனமே பதி­லா­கி­யது. காத்­தான்­குடி பொலிஸார் குறித்த முகாமின் நிலப்­ப­ரப்பு குறித்து கூறு­கின்­ற­னரே தவிர அவ்­வா­றா­ன­தொரு முகாம் அங்கு எவ்­வாறு இர­க­சி­ய­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு பதிலில்லை. குறித்த ஒல்­லிக்­குளம் முகாம் பகு­தியை சேர்ந்­துள்ள மக்­களும் கருத்­து­ரைப்­பதில் மௌனித்து விட்­டனர். பிர­தான வீதி­யி­லி­ருந்து வெறும் அரை கிலோ­மீற்­ற­ருக்கு குறை­வான தூரத்­தி­லேயே சஹ்­ரானின் ஒல்­லிக்­குளம் பயிற்சி முகாம் காணப்­ப­டு­கின்­றது. பாது­காப்புத் தரப்­பிற்கு எவ்­வாறு இந்த விடயம் தெரி­யாமல் போனது என்­பது மர்­ம­மான விட­ய­மாகும். கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­னரின் பயிற்சி முகாம் பாது­காப்பு தரப்பின் கண்­க­ளி­லி­ருந்து மறைந்­தமை கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். 

பள்­ளி­வா­யல்­களில் கத்­திகள் இருக்­கலாம். ஆனால் வாள் ஏன் வைத்­தி­ருக்­கி­ன­்றார்கள் என்று தெரி­ய­வில்லை. தனது பள்­ளி­வா­யலில் கத்­திகள் வைத்­துள்­ள­தாக காத்­தான்­குடி பெரிய பள்­ளி­வா­யலின் தலைவர் குறிப்­பிட்டார். ஹஜ்ஜி காலங்­களில் குர்பான் கொடுப்­ப­தற்­காக கத்­திகள் வைத்­தி­ருப்போம். ஆனால் 47 வாள் என்­பது கொழும்பு - கொம்­ப­னி­தெரு பள்­ளி­வா­ய­லுக்கு தேவை­யில்­லாத விட­ய­மாகும். எந்­த­வொரு பள்­ளி­வா­யல்­க­ளுக்கும் வாள்கள் தேவை­யில்லை என்­பதே அவ­ரது மேல­திக உறு­திப்­பா­டாக காணப்­ப­டு­கின்­றது.

சாய்ந்­த­ம­ருது - 9 ஆம் குறிஞ்சி

அதே போன்று சஹ்­ரானின் குடும்­பத்­தினர் தற்­கொலை செய்­து­கொண்ட சாய்ந்­த­ம­ருது - 9 ஆம் குறிஞ்சி பகு­தியில் சுமார் 600 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. சஹ்­ரானின் குடும்பம் வாழ்ந்த நீண்ட வரி­சையில் தொடர்வீடுகளை கொண்ட பகுதியில் நடுப்பகுதியில் அமைந் துள்ளது. இதனால் தான் வீட்டிற்குள் தற் கொலை செய்துகொண்ட போது  பக்கத்து வீட்டின் படுக்கையறை சுவரும் வெடி த்து சிதறியுள்ளது. 50 ஆயிரம் ரூபா முற்பணத்தில் மாதம் 5 ஆயிரம் வாடகைக்கு குறித்த வீட்டை பெற்றுள்ள சஹ்ரானின் குடும்பம், அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரியவில்லை. வாடகைக்கு சென்று ஒரு மாதத்திற்கும் குறுகிய காலம் என்பதால் அவ்வாறு இருந்திருக்கலாம்.

ஆனால் சஹ்ரானின் அமைப்பினர் குடும் பமாக தற்கொலை குண்டுதாரிகளாகியமை சாதாரண விடயமாக கருதி விட முடியாது. பயங்கரவாத அமைப்பில் தற்கொலை குண் டுதாரிகள் இருப்பது சாதாரண விடயமா கும். சஹ்ரான் தலைமைதாங்கிய தேசிய தௌஹீத் அமைப்பில் தற்கொலை குண்டு தாரிகளாகிய குடும்பத்தினரே மாறியுள்ளனர். தெமட்டகொடை  சம்பவம் என்றாலும் சரி சாய்ந்தமருது உள்ளிட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை கவனத்தில் கொண் டால் அனைவருமே அண்ணன் - தம்பி, தந்தை, - மகன், கணவன் -மனைவி மற்றும் மச்சான் என தற்கொலை தாக்குதலில் ஈடு பட்டுள்ளனர். 

இதனால் தான் ஏனைய  சஹ்ரான் அமை ப்பினரின் தற்கொலை தாக்குதல்கள் பாது காப்புத் துறைக்கும் அத்துறைசார் நிபுணர் களுக்கும் பல்வேறு வகையிலான சந்தேகங் களுக்கு காரணமாகியுள்ளது.  எவ்வாறாயி னும் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங் கள் கடந்துள்ளன. சிறிய குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட சம்பவம் என்றாலும் அச்ச சூழலிலிருந்து மக்களால் விடுபட முடியாத நிலையே உள்ளது. இந்தத் தீவிரவாதத் தற் கொலைக் குண்டுதாரிகளின் இலக்கு சாதா ரண பொதுமக்கள் என்பதால் பாதுகாப்பு உறுதிப்பாட்டிற்கான உத்தரவாதம் அவசிய மாகின்றது. 

 

http://www.virakesari.lk/article/55821

Link to comment
Share on other sites

ஓரளவுக்கு விபரங்களுடன் வீரகேசரி எழுதியிருக்கு. பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 1:36 PM, கிருபன் said:

ஒல்­லிக்­குளம் பகு­தியில் அமை­யப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற பயிற்சி முகாம் குறித்து கருத்து வெளியி­டு­வதில் பெரிதும் மக்கள் விரும்பவில்லை. பல­ரிடம் கேட்டும் மௌனமே பதி­லா­கி­யது. காத்­தான்­குடி பொலிஸார் குறித்த முகாமின் நிலப்­ப­ரப்பு குறித்து கூறு­கின்­ற­னரே தவிர அவ்­வா­றா­ன­தொரு முகாம் அங்கு எவ்­வாறு இர­க­சி­ய­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு பதிலில்லை. குறித்த ஒல்­லிக்­குளம் முகாம் பகு­தியை சேர்ந்­துள்ள மக்­களும் கருத்­து­ரைப்­பதில் மௌனித்து விட்­டனர். பிர­தான வீதி­யி­லி­ருந்து வெறும் அரை கிலோ­மீற்­ற­ருக்கு குறை­வான தூரத்­தி­லேயே சஹ்­ரானின் ஒல்­லிக்­குளம் பயிற்சி முகாம் காணப்­ப­டு­கின்­றது. பாது­காப்புத் தரப்­பிற்கு எவ்­வாறு இந்த விடயம் தெரி­யாமல் போனது என்­பது மர்­ம­மான விட­ய­மாகும். கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­னரின் பயிற்சி முகாம் பாது­காப்பு தரப்பின் கண்­க­ளி­லி­ருந்து மறைந்­தமை கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். 

இங்கு தான் அனைத்துமே மறைந்துள்ளது ...உருவாக்கி தீனி போட்டவரே நினைக்கவில்லை இப்பிடி 
ஓணானை வேட்டிக்குள் விட்ட அளவுக்கு கொண்டு போய் விடுமென்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகேசரி செய்வது நடந்த அக்கிரமத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சியே. 

காத்தான்குடி ஒன்றும் இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்குத்தனமான சுன்னி அரபுலகில் உள்ள இடம் அல்ல. அது இலங்கையில் கிழக்குமாகாணத்தில் உள்ள ஒரு சிற்றூர். இலங்கையின் அனைத்து மக்களுக்குமான நீதி நடைமுறைகளே அங்கும் பின்பற்றப்படவேண்டும். மாறாக ஒரு மதக்குழுவோ, பள்ளிவாசல் தலைமைப் பீடமோ, மதகுருக்களோ தமக்கென்று மத அடைப்படியில் அமைந்த நீதிமுறையொன்றை வைத்திருக்க முடியாது. ஆனால், வீரகேசரியின் கருத்துப்படி, அரபுலகின் அடிப்படைவாதத்திற்கு நிகராக ஹரிய நீதியை காத்தான்குடி கொண்டிருப்பது தவறானது. 

காத்தான்குடி, இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதில்லை. அங்கும் சாதாரண சமூக நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

யார் வேண்டுமாலும் வாருங்கள்.. வாழுங்கள்.. ஆனால் நீங்கள் ஒரு அயலான் என்பதில் பெருமை கொள்ளாதீர்!!

Link to comment
Share on other sites

காத்­தான்­கு­டியில் உள்ள 78 பள்­ளி­வா­யல் கள் மற்றும் 108 இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.