Jump to content

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி ! நேரடி ரிப்போர்ட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின் காத்தான்குடி ! நேரடி ரிப்போர்ட்

 

- லியோ நிரோஷ தர்சன் 

உள்­நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்­தத்தை சந்­தித்­துள்ள இலங்கை மற்­று­மொரு காரி­ரு­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்­த­வர்­களால் கொண்­டா­டப்­ப­டு­கின்ற முக்­கிய பண்­டி­கை­யாகும். அன்­றைய தினத்தில் சற்றும் எதிர்­பா­ர்த்­தி­ராத வகையில் முக்­கிய மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை குறிவைத்து தற்­கொலை தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த தாக்­குதல்கள் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது மாத்­தி­ர­மல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்­கி­யது. 

kathankudi.jpg

உலகப் பயங்­க­ர­வாத அமைப்­பாக கரு­தப்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­பட்ட உள்ளூர் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் தான் இலங்­கையில் தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர் என்ற உறு­திப்­பட்ட தக­வல்கள் வெளிவந்­த­வுடன் நாட­ளா­விய ரீதியில் பாது­காப்பு தரப்­பினர் தேடுதல் நட­வ­டிக்­கை­களை தற்­போது வரை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

இஸ்­லா­மிய மதசார் அமைப்பு என்­பதால் இலங்­கையில் பரந்து வாழும் முஸ்லிம் மக்கள் மீது சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் ஒரு நிலைமை ஏற்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கைகள் மற்றும் அங்கு மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் என்­பன அந்த சமூ­கத்தின் மீதான ஒரு மாறு­பட்ட நிலைப்­பாட்டை ஏனைய சமூ­கத்­தினர் கொள்­வ­தற்கு கார­ண­மா­கி­யது. குறிப்­பாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பு­டனான தொடர்­புகள் அவர்­களின் கருத்­துக்கள் ஏனைய மதத்­த­வர்கள் மத்­தியில் முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்தது. 

காத்­தான்­குடி சமூ­கத்தைச் சார்ந்த ஒரு­வ­ராக தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் காணப்­பட்­ட­மை­யா­னது கிழக்கு மீதான பார்­வையில் மாற்­றங்களை ஏற்­படுத்தியுள்ளது. முஸ்­லிம்கள் செறிந்து வாழும் காத்­தான்­கு­டியில் தற்­போது ஒரு அச்சம் நிறைந்த சூழலே காணப்­ப­டு­கின்­றது. மக்கள் மத்­தியில் வழ­மைக்கு மாறான மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஏனைய முஸ்லிம் மக்­களை விட காத்­தான்­குடி வாழ் முஸ்­லிம்கள் அந்த சமூ­கத்தில் சற்று வேறு­பட்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­ற னர். இஸ்­லா­மிய பயன்­பா­டுகள் மர­பு­ரீ­தி­யான இஸ்­லா­மிய கொள்­கைகள் என்­ப­வற்றில் தன்­னி­றை­வாக உள்ள காத்­தான்­குடி முஸ்­லிம்கள் தற்­போது ஒரு கலக்­க­ம­டைந்­த­வர்­க­ளாக உள்­ளனர். 

தீவிரப் போக்­கு­டைய சில அமைப்­புக்கள் தொடர்பில் பெரிய பள்­ளி­வா­யலோ அங்­கி ருக்கும் அனைத்துப் பள்­ளி­வா­யல்கள் மற் றும் இஸ்­லா­மிய நிறுவன சம்­மே­ள­னமோ கருத்தில் கொள்­ளா­மை­யினால் ஒட்­டு­மொத்த காத்­தான்­குடி சமூ­கத்­திற்கே களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு செயற்­பட்­டுள்­ள­தா­கவே பிர­தேச மக்­களின் கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் தான் காத்­தான்­கு­டியின் உண்­மை­யான நிலைமையை அறிய அங்கு விஜயம் செய்தோம். 

காத்­தான்­குடி மக்களின் கருத்து 

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற சம்­பவம் மனித சமூகம் விரும்­பாத கொலைச் சம்­ப­வ­மாக நாம் சந்­தித்த புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­கின்­றனர். ஒரு பாட­சாலை அதிபர் என்ற வகை­யிலும்  காத்­தான்­குடி முஹ்­யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாசல் தலைவர் என்ற வகை­யிலும் மிகவும் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். எவ்­வி­தத்­திலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத சம்­ப­வ­மாகும். காத்­தான்­குடி சமூ­கத்தை பொறுத்த வரையில் இவ்­வா­றான பல சம்­ப­வங்­களை அனு­ப­வித்த சமூ­க­மாகும். ஆகவே இவ்­வா­றான தாக்­கு­தல்­களின் வலியும் தாக்­கத்­தையும் அனு­ப­வித்த சமூகம் என்ற வகையில் எவ்­வி­தத்­திலும் இதனை  ஏற்றுக் கொள்ள முடி­யாது என எம்.சி.எம்.ஏ. ஷதார் தெரி­வித்தார். 

முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் ஒரு பிர­தே­ச­மா­கவே காத்­தான்­குடி காணப்­ப­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்ல இலங்­கைக்கு அப்பால் பல உலக நாடு­க­ளிலும் காத்­தான்­குடி சமூகம் பரந்து வாழ்­கின்­றது. எனவே காத்­தான்­கு­டியை மையப்­ப­டுத்தி ஏதேனும் ஒரு சம்­பவம் இடம்­பெற்றால் அதன் தாக்கம் பரந்து வாழ்­கின்ற காத்­தான்­குடி மக்­க­ளுக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதே அங்­குள்ள வர்த்­தக சமூ­கத்­தி­னரின் நிலைப்­பா­டாகும். எனவே தான்  கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இனப்­பி­ரச்­சினை என்­றாலும் சரி கல­வ­ரங்கள் என்­றாலும் சரி காத்­தான்­குடி சமூகம் மிகவும் நிதா­ன­மாக நடந்­து­கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் எமக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.  

காத்­தான்­கு­டியின் பார்­வையில் சஹ்ரான் 

எவ்­வா­றா­யினும் காத்­தான்­கு­டியை சேர்ந்த ஒரு சிறு குழு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் ஈடுபட்­டதும் அதற்கு சஹ்ரான் என்ற நபர் தலைமை தாங்­கி­யமை காத்­தான்­குடி சமூகம் அறிந்­தி­ராத ஒன்று என்­பதும் அங்­குள்ள புத்­தி­ஜீ­விகள் மற்றும் வர்த்­தக சமூ­கத்­தி­னரின் ஒரு­மித்த கருத்­தாக காணப்­ப­டு­கின்­றது.  ஆனால் சஹ்ரான் காத்­தான்­கு­டியில் இருக்­கின்ற மத்­ரஸா ஒன்றில் கல்வி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த காலக்­கட்­டத்தில் முரண்­பாட்டு கருத்­துக்­களை கொண்­டி­ருந்­த­மை­யினால் அவர் இடையில் நீக்­கப்­பட்­டுள்ளார். 

ஆசான்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காது தவ­றான கருத்­துக்­களை பரப்பி வந்­துள்ளார். ஆசி­ரி­யர்கள் வரும் போது மாண­வர்கள் எழுந்து மரி­யாதை செய்ய வேண்­டி­ய­தில்லை போன்ற முரண்­பா­டான கருத்­துக்­க­ளையும் மாண­வர்கள் மத்­தியில் பரப்­பினார். இவ்­வா­றான முரண்­பட்ட கருத்­துக்­களை கொண்­டி­ருந்­த­மை­யினால் காத்­தான்­குடி பாட­சா­லை­களில் ஒழுக்கம் சார்ந்த விட­யங்­க­ளிலும் தாக்கம் செலுத்­தி­யது. அது மாத்­தி­ர­மன்றி வேறு ஒரு இயக்­கத்­துடன் இணைந்து தொடர்ச்­சி­யாக தவ­றான பிர­சா­ரங்­களை செய்து வந்தார். அனைத்து முஸ்லிம் தரப்­பு­க­ளையும் எதிர்த்து செயற்­பட்டார். ஆகவே சஹ்­ரானின் அனைத்து செயற்­பா­டு­க­ளுமே சமூ­கத்­துடன் முரண்­பட்­ட­தா­கவே காணப்­பட்­ட­தா­கவே கருத்துத் தெரிவிக்கப்பட்டது.  

அர­சி­யல்­வா­திகள் தொடக்கம் சமூ­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் வரை அனை­வ­ரையும் விமர்­சித்­துள்ளார். காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் மற்றும் நிறு­வ­னங்கள் சம்­மே­ளனம் என்ற அமைப்பு அங்­குள்­ளது.  காத்­தான்­கு­டியில் என்ன பிரச்­சினை நடந்­தாலும் அதனை கையாண்டு இறுதி தீர்­மா­னத்தை இந்த சம்­மே­ள­னமே எடுக்கும். சம்­மே­ள­னத்­திற்கும் கட்­டுப்­ப­டாத நிலை­யி­லேயே சஹ்­ரானின் செயற்­பா­டுகள் காணப்­பட்­டுள்­ளன. 

2 வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக பாட­சாலை கட்­டடம் ஒன்­றிக்கு அடிக்கல் நாட்டு விழா இடம்­பெற்ற போது தரம் - 5 மாண­வர்­களின் கலை நிகழ்ச்சியைக் கடு­மை­யாக விமர்­சித்த சஹ்ரான் அமைப்­பினர் மனை­வி­யையோ பிள்­ளை­யையோ ஆட விடு­வானா"? என்று மோச­மா­கவும் பகி­ரங்கமாகவும் விமர்­சித்­தாக குறிப்­பி­டு­கின்­றனர். 

சமூ­கத்தில் சஹ்­ரானின் செயற்­பாடுகள் தீவி­ர­ம­டைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மற்­று­மொரு தரப்­பி­ன­ருடன் ஏற்­பட்ட மோத லின் பின்னர் ஊரை விட்டு சென்­றுள்ளார்.  அதற்கு பின்னர் காத்­தான்­கு­டிக்குள் சஹ்­ரானின் செயற்­பா­டுகள் காணப்­பட வில்லை என ஒரு தரப்பு மறு­தலிக்­கின்­றது. 

சஹ்ரான் ஆளுநர் ஹிஸ்­புல்­லா­வுடன் ஒப்­பந்தம் ஒன்றை செய்­துகொண்டதாக புகைப்­ப­டங்கள் பிர­சுரிக்­கப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் காலங்­களில் தான் வழங்கும் ஒப்­பந்­தங்­களின் பிர­கா­ரமே அர­சியல் தரப்­புகள் நடந்­து­கொள்ள வேண்டும் என்று எழுத்து மூல­மாக கோரிக்­கை­யினை சஹ்ரான் விடுத்­துள்ளார். மரபுரீதி­யான இஸ்­லா­மிய வழி­மு­றை­க­ளுக்கு முர­ணாக தீவிரப்போக்­கு­டை­ய­வ­ராக சஹ்­ரானும் அவ­ரது குழுவும் செயற்­பட்­டுள்­ளனர். 

சஹ்­ரானின் வழி நடத்­தல்­களை பின்­பற்ற காத்­தான்­கு­டி­யிலும்  ஒரு கூட்டம் இருந்­துள்­ளது. அவ­ரது பேச்­சுக்­களை கேட்டு அதில் ஈடு­பாடு கொண்ட அந்த கூட்டம் காலப்­போக்கில் எண்­ணிக்­கை­க­ளினால் அதி­க­ரிக்­கப்­பட்டு வெளி உ­லகத் தொடர்­புகள் வரை விஸ்­த­ரித்­துள்­ளது. ஆனால் காத்­தான்­குடி சமூ­கத்­தி­ன­ருடன்  ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட மரபு ரீதி­யான முறுகல்நிலை 2017 ஆம் ஆண்­டிற்கு பின்னர் காத்­தான்­கு­டியில் சஹ்ரான் குழு­வி­னரால் வெளிப்­ப­டை­யாக செயற்­பட முடி­யா­ நிலையை உருவாக்கியுள்ளது. ஏதேனும் ஒரு வழியில் தன்னை பெரி­ய­வ­ராக காண்­பிக்கும் நோக்­கி­லேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து இத்­த­கைய செயலை செய்­துள்ளார் என்றும் காத்­தான்­கு­டி வாசிகள் சிலர் கூறு­கின்­றனர். 

இஸ்­லாத்தை பொறுத்த வரையில் அமை­தி­யான - சாந்­தி­யான மார்க்­க­மாகும். வன்­மு­றைக்கு இட­மில்லை. சௌபான் காலத்­தி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை இஸ்­லாத்தை பெரிதும் பாதித்­துள்­ளது. இஸ்­லா­மிய போர் இடம்­பெற்ற காலங்­களில் கூட சௌபான் காலத்தில் போரிடக் கூடாது என்று மரபு ரீதி­யான செயற்­பாடு இருந்­துள்­ளது. அதே போன்று குழந்­தைகள், பெண்கள் மற்றும் மத ஸ்தலங்களைத் தாக்க வேண்டும் என்று இஸ்­லாத்தில் சொல்­லப்­ப­டுள்­ள­தாக பிர­சாரம் செய்­வதோ -சஹ்ரான் குறிப்­பிட்­டது போன்று இஸ்லாம் அல்­லா­த­வர்­களை கொலை செய்­வதன் மூலம் சொர்க்கம் செல்­லலாம் என்­பதும் வெறும் கற்­ப­னை­யான கதை­யாகும். 

ஆகவே இஸ்­லாத்­திற்கு முர­ணான விட­யத்தை செய்­வ­தற்கு சஹ்ரான் ஏதோ­வொரு வகையில் தூண்­டப்­பட்­டுள்­ள­தா­கவே  குறிப்­பி­டு­கின்­றனர். இஸ்­லாத்தில் இல்­லாத விட­யங்­களை கூறிக்­கொண்டு, அதுதான் இஸ்லாம் என்று இளை­ஞர்­களை தூண்டி இவ்­வா­றான மோச­மான காரி­யத்தை செய­த­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று காத்­தான்­குடி மக்கள் கூறு­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெறும் என்று நாங்கள் யாருமே எதிர்­பார்க்கவில்லை. புல­னாய்வு தக­வல்கள் கிடைத்தும்  ஏன் நட­வ­டிக்கை எடுக்கவில்லை என்றும் தெரி­ய­வில்லை. பாரி­ய­தொரு தாக்­கு­தலை செய்துவிட வாய்ப் பில்லை என்று தவ­றான கணிப்பு இருந்­தி­ருக்­கலாம் என்­பதும் பிர­தே­ச­வா­சி­களின் கருத்­து­க­ளா­கவும் கேள்­வி­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன. 

தற்­போ­தைய நிலைமை 

ஆனால் சம்­ப­வத்தின் பின்­ன­ரான நிலைமை குறித்து அந்த மக்கள் குறிப்­பிடும் போது, காத்­தான்­குடி சமூகம் எதிர்­கொள்­கின்ற பிரச்­சினை பாரி­ய­தொன்­றென்­கின்­றனர். முஸ் லிம் பிர­தே­சங்­களில் கூட காத்­தான்­குடி என்று சொன்னால் சந்­தேக கண்­கொண்டு பார்க்கும் நிலையில் இது வேத­னை­யான விட­ய­மாகும். வாடகை வீடு­க­ளி­லி­ருந்து கூட வெளியேற்றும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. இதனால் வேத­னைப்படு­கின்றோம். வெட்­கப்படு­கின்றோம் என்­கின்­றனர். 

சம்­ப­வத்தின் பின்னர் முஸ்­லிம்­களின் வியா­பா­ரங்கள் பாதித்­துள்­ளன. இந்த நிலைமை விரைவில் மாற­வேண்டும். ஒரு சிறிய குழு வால் செய்த அழி­வாக ஏனைய சமூக மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்­கை­யினை காத்­தான்­குடி புத்­தி­ஜீ­விகள் முன்­வைக்­கின்­றனர்.  

காத்­தான்­கு­டியில் உள்ள 78 பள்­ளி­வா­யல் கள் மற்றும் 108 இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் உள்­ள­டங்கும் சம்­மே­ள­னத்தில் சஹ்­ரானின் இயக்கம் அங்­கத்­துவம் பெற­வில்லை. காத்­தான்­கு­டியை சேர்ந்த ஒரு­சில நபர்கள் சம்­ப­ வத்­துடன் தொடர்­புபட்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்­காக ஒட்­டு­மொத்த காத்­தான்­குடி சமூ­கத்­தையும் சந்­தேக கண்­கொண்டு பார்க்க வேண்டாம். தனக்கு சார்ந்­த­வர்­களை மூளைச் சலவை செய்து இத்­த­கைய செயலை செய்­துள்­ளனர் என்­பதே சஹ்ரான் குறித்தும் அவ­ரது தேசிய தௌஹீத் அமைப்பு குறித்தும் காத்­தான்­கு­டி மக்களின் மன­நிலை அமைந்­துள்ளது.

தௌஹீத் 

தௌஹீத் என்­பது ஏகத்­துவம் எனக் குறிப்­பி­டு­கின்­றது. இதில் எவ்­வாறு அடிப்­ப­டை­வாதம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு யாரி­டமும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய பதி­லில்லை.  ஆனால் தௌஹீத் கொள்­கை­யு­டை­ய­வர்கள் சாதா­ரண இஸ்­லா­மிய கட்­ட­மைப்­பி­லி­ருந்து விலகி செயற்­ப­டு­வ­தனால் முரண்­பாடுகள் உரு­வா­கின்­றது. இந்த முரண்­பா­டுகள் இஸ்­லாமிய மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­க­ளாகும். உதா­ர­ண­மாக நோன்பு பிறை என்­ப­திலும் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. சர்­வ­தேச பிறை உள்ளூர் பிறை என பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. உலகம் முழு­வதும் ஒரே தினத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற கருத்தை தௌஹீத் அமைப்­பினர் கொண்­டி­ருப்­பார்கள். ஆனால் பிறை கண்ட பின்னர் தான் நோன்பு பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்­டா­டப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் காத்­தான்­குடி சம்­மே­ள­னத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் அனைத்து தரப்­பு­களும் உள்­ளது. மற்­று­மொரு உதா­ர­ண­மாக கூட்டு துஹாவை எடுத்­துக்­கொள்­ளலாம். தனித்­த­னியே இறை­வ­னிடம் கேட்­கலாம் என்று தௌஹீத் குழு­வினர் கூறு­வார்கள். இவ்­வா­றான முரண்­பா­டு­களைத் தவிர பாரிய ஒரு வேறு­பாட்­டிற்குள் தௌஹீத் அமைப்­புகள் செல்ல வில்லை. அடிப்­ப­டையில் எந்த வேறு­பாடும் இல்லை என்­பது போல் இஸ்­லா­மிய மர­புக்குள் இடையில் புகுத்­தப்­பட்ட விட­யங்­களை செய்ய முடி­யாது என்­பதே தௌஹீத் அமைப்­பு­களின் நிலைப்­பா­டாக உள்­ளன.  

ஆயுதம் - வாள் - பயிற்சி முகாம்

இந்த முரண்­பா­டு­களை தவிர்த்து செயற்­ப­டு­வது குறித்து கலந்­தா­லோ­சிக்கும் வகை யில் பல முறை  தௌஹீத் அமைப்­புக்­களை அழைத்­துள்ள போதிலும் சஹ்ரான் குழு­வி னர் கருத்தில் கொள்ளவில்லை.  காத்­தான்­கு­டியில் உள்ள ஏனைய சில  தௌஹீத் அமைப்­புகள் ஒரு நிதா­ன­மான போக்கில் செயற்­ப­டு­கின்ற நிலையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் தீவிரப் போக்­கு­டை­ய­வர்­க­ளாக செயற்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான தீவிர போ க்கு பல்­வேறு சந்­தே­கங்­களை ஆரம்­பத்தில் தோற்­று­வித்­துள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்­பு­க­ளுடன் சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு தொடர்­புகள் இருக்­குமோ என்ற ஐயப்­பாடு ஒரு கட்­டத்தில் காணப்­பட்­ட­தாக காத்­தான்­கு­டி­யினர் வெளிப்­ப­டுத்­தினர். அதற்­காக ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் ஒரு மைய­மாக காத்­தான்­குடி உள்­ளது என்­பது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும் என்­கின்­றனர். 

ஒல்­லிக்­குளம் பகு­தியில் அமை­யப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற பயிற்சி முகாம் குறித்து கருத்து வெளியி­டு­வதில் பெரிதும் மக்கள் விரும்பவில்லை. பல­ரிடம் கேட்டும் மௌனமே பதி­லா­கி­யது. காத்­தான்­குடி பொலிஸார் குறித்த முகாமின் நிலப்­ப­ரப்பு குறித்து கூறு­கின்­ற­னரே தவிர அவ்­வா­றா­ன­தொரு முகாம் அங்கு எவ்­வாறு இர­க­சி­ய­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு பதிலில்லை. குறித்த ஒல்­லிக்­குளம் முகாம் பகு­தியை சேர்ந்­துள்ள மக்­களும் கருத்­து­ரைப்­பதில் மௌனித்து விட்­டனர். பிர­தான வீதி­யி­லி­ருந்து வெறும் அரை கிலோ­மீற்­ற­ருக்கு குறை­வான தூரத்­தி­லேயே சஹ்­ரானின் ஒல்­லிக்­குளம் பயிற்சி முகாம் காணப்­ப­டு­கின்­றது. பாது­காப்புத் தரப்­பிற்கு எவ்­வாறு இந்த விடயம் தெரி­யாமல் போனது என்­பது மர்­ம­மான விட­ய­மாகும். கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­னரின் பயிற்சி முகாம் பாது­காப்பு தரப்பின் கண்­க­ளி­லி­ருந்து மறைந்­தமை கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். 

பள்­ளி­வா­யல்­களில் கத்­திகள் இருக்­கலாம். ஆனால் வாள் ஏன் வைத்­தி­ருக்­கி­ன­்றார்கள் என்று தெரி­ய­வில்லை. தனது பள்­ளி­வா­யலில் கத்­திகள் வைத்­துள்­ள­தாக காத்­தான்­குடி பெரிய பள்­ளி­வா­யலின் தலைவர் குறிப்­பிட்டார். ஹஜ்ஜி காலங்­களில் குர்பான் கொடுப்­ப­தற்­காக கத்­திகள் வைத்­தி­ருப்போம். ஆனால் 47 வாள் என்­பது கொழும்பு - கொம்­ப­னி­தெரு பள்­ளி­வா­ய­லுக்கு தேவை­யில்­லாத விட­ய­மாகும். எந்­த­வொரு பள்­ளி­வா­யல்­க­ளுக்கும் வாள்கள் தேவை­யில்லை என்­பதே அவ­ரது மேல­திக உறு­திப்­பா­டாக காணப்­ப­டு­கின்­றது.

சாய்ந்­த­ம­ருது - 9 ஆம் குறிஞ்சி

அதே போன்று சஹ்­ரானின் குடும்­பத்­தினர் தற்­கொலை செய்­து­கொண்ட சாய்ந்­த­ம­ருது - 9 ஆம் குறிஞ்சி பகு­தியில் சுமார் 600 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. சஹ்­ரானின் குடும்பம் வாழ்ந்த நீண்ட வரி­சையில் தொடர்வீடுகளை கொண்ட பகுதியில் நடுப்பகுதியில் அமைந் துள்ளது. இதனால் தான் வீட்டிற்குள் தற் கொலை செய்துகொண்ட போது  பக்கத்து வீட்டின் படுக்கையறை சுவரும் வெடி த்து சிதறியுள்ளது. 50 ஆயிரம் ரூபா முற்பணத்தில் மாதம் 5 ஆயிரம் வாடகைக்கு குறித்த வீட்டை பெற்றுள்ள சஹ்ரானின் குடும்பம், அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரியவில்லை. வாடகைக்கு சென்று ஒரு மாதத்திற்கும் குறுகிய காலம் என்பதால் அவ்வாறு இருந்திருக்கலாம்.

ஆனால் சஹ்ரானின் அமைப்பினர் குடும் பமாக தற்கொலை குண்டுதாரிகளாகியமை சாதாரண விடயமாக கருதி விட முடியாது. பயங்கரவாத அமைப்பில் தற்கொலை குண் டுதாரிகள் இருப்பது சாதாரண விடயமா கும். சஹ்ரான் தலைமைதாங்கிய தேசிய தௌஹீத் அமைப்பில் தற்கொலை குண்டு தாரிகளாகிய குடும்பத்தினரே மாறியுள்ளனர். தெமட்டகொடை  சம்பவம் என்றாலும் சரி சாய்ந்தமருது உள்ளிட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை கவனத்தில் கொண் டால் அனைவருமே அண்ணன் - தம்பி, தந்தை, - மகன், கணவன் -மனைவி மற்றும் மச்சான் என தற்கொலை தாக்குதலில் ஈடு பட்டுள்ளனர். 

இதனால் தான் ஏனைய  சஹ்ரான் அமை ப்பினரின் தற்கொலை தாக்குதல்கள் பாது காப்புத் துறைக்கும் அத்துறைசார் நிபுணர் களுக்கும் பல்வேறு வகையிலான சந்தேகங் களுக்கு காரணமாகியுள்ளது.  எவ்வாறாயி னும் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங் கள் கடந்துள்ளன. சிறிய குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட சம்பவம் என்றாலும் அச்ச சூழலிலிருந்து மக்களால் விடுபட முடியாத நிலையே உள்ளது. இந்தத் தீவிரவாதத் தற் கொலைக் குண்டுதாரிகளின் இலக்கு சாதா ரண பொதுமக்கள் என்பதால் பாதுகாப்பு உறுதிப்பாட்டிற்கான உத்தரவாதம் அவசிய மாகின்றது. 

 

http://www.virakesari.lk/article/55821

Link to comment
Share on other sites

ஓரளவுக்கு விபரங்களுடன் வீரகேசரி எழுதியிருக்கு. பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 1:36 PM, கிருபன் said:

ஒல்­லிக்­குளம் பகு­தியில் அமை­யப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்ற பயிற்சி முகாம் குறித்து கருத்து வெளியி­டு­வதில் பெரிதும் மக்கள் விரும்பவில்லை. பல­ரிடம் கேட்டும் மௌனமே பதி­லா­கி­யது. காத்­தான்­குடி பொலிஸார் குறித்த முகாமின் நிலப்­ப­ரப்பு குறித்து கூறு­கின்­ற­னரே தவிர அவ்­வா­றா­ன­தொரு முகாம் அங்கு எவ்­வாறு இர­க­சி­ய­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு பதிலில்லை. குறித்த ஒல்­லிக்­குளம் முகாம் பகு­தியை சேர்ந்­துள்ள மக்­களும் கருத்­து­ரைப்­பதில் மௌனித்து விட்­டனர். பிர­தான வீதி­யி­லி­ருந்து வெறும் அரை கிலோ­மீற்­ற­ருக்கு குறை­வான தூரத்­தி­லேயே சஹ்­ரானின் ஒல்­லிக்­குளம் பயிற்சி முகாம் காணப்­ப­டு­கின்­றது. பாது­காப்புத் தரப்­பிற்கு எவ்­வாறு இந்த விடயம் தெரி­யாமல் போனது என்­பது மர்­ம­மான விட­ய­மாகும். கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­னரின் பயிற்சி முகாம் பாது­காப்பு தரப்பின் கண்­க­ளி­லி­ருந்து மறைந்­தமை கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகும். 

இங்கு தான் அனைத்துமே மறைந்துள்ளது ...உருவாக்கி தீனி போட்டவரே நினைக்கவில்லை இப்பிடி 
ஓணானை வேட்டிக்குள் விட்ட அளவுக்கு கொண்டு போய் விடுமென்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகேசரி செய்வது நடந்த அக்கிரமத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சியே. 

காத்தான்குடி ஒன்றும் இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்குத்தனமான சுன்னி அரபுலகில் உள்ள இடம் அல்ல. அது இலங்கையில் கிழக்குமாகாணத்தில் உள்ள ஒரு சிற்றூர். இலங்கையின் அனைத்து மக்களுக்குமான நீதி நடைமுறைகளே அங்கும் பின்பற்றப்படவேண்டும். மாறாக ஒரு மதக்குழுவோ, பள்ளிவாசல் தலைமைப் பீடமோ, மதகுருக்களோ தமக்கென்று மத அடைப்படியில் அமைந்த நீதிமுறையொன்றை வைத்திருக்க முடியாது. ஆனால், வீரகேசரியின் கருத்துப்படி, அரபுலகின் அடிப்படைவாதத்திற்கு நிகராக ஹரிய நீதியை காத்தான்குடி கொண்டிருப்பது தவறானது. 

காத்தான்குடி, இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதில்லை. அங்கும் சாதாரண சமூக நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

யார் வேண்டுமாலும் வாருங்கள்.. வாழுங்கள்.. ஆனால் நீங்கள் ஒரு அயலான் என்பதில் பெருமை கொள்ளாதீர்!!

Link to comment
Share on other sites

காத்­தான்­கு­டியில் உள்ள 78 பள்­ளி­வா­யல் கள் மற்றும் 108 இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.