Jump to content

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC03617.jpg?zoom=1.1024999499320984&res

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019  இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை  நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது

அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது அதனை தொடர்ந்து 13/05/2019 இன்று மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்பட்டு  மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுக்கப்பட்ட்து

இதனை தொடர்ந்து 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைது 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல் இடம்பெறும் அதனை தொடர்ந்து  15/05/2019- புதன் மடை 17/05/2019- வெள்ளி மடை 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு செல்லல் 20/05/2019 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- நள்ளிரவு 12:00 வளர்ந்து வைத்து பொங்கல் இடம்பெறும்  25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு) உடன் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைய உள்ளது

ஆலய பொங்கல் உற்சவத்துக்காக பின்வரும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

  1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு
  2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை
  3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்த பட்ட வாகன வசதிகள். ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)
  4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
  5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை                         (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)
  6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
  7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள்
  8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது
  9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய_நிர்வாகம் அறிவித்துள்ளத

 #விளக்கேற்ற #தீர்த்தம்  #VattapalaiKannakiAmman #வற்றாப்பளைகண்ணகிஅம்மன்

DSC03604.jpg?zoom=1.1024999499320984&resDSC03605.jpg?zoom=1.1024999499320984&resDSC03610.jpg?zoom=1.1024999499320984&resDSC03614.jpg?zoom=1.1024999499320984&res 

http://globaltamilnews.net/2019/121716/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

பூசலார் நாயனார் மாதிரி, ஒரு இடத்தில் இருந்து , மனதால் அந்த கோயிலுக்கு போய், வழிபடலாம்.

அம்மன் எப்ப கூப்புடுவாவோ, தெரியாது தானே.:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

தெய்வமே....அம்மாளாச்சியே தங்கச்சிக்கு ஒரு வழியை காட்டு தாயே......

Bildergebnis für hindu prayer hands

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

ஓம்...

கண்ணகி, மனிதப்பிறவி எண்டதை மறக்கப்படாது கண்டியளே.

தமிழ்நாட்டில, கிராமம்  ஒன்றில் எம்ஜியாருக்கு கோவில் கட்டின ஒருத்தர் மூன்று வேளை பூசை செய்வதாகவும், சனமும் வந்து, துனணூறு, பிரசாதம் வாங்கி போகுதாம் எண்டும் செய்தி வந்ததே.

இது தொடர்ந்தால், நூறுவருசத்துக்கு பொறகு, எம்ஜியார் சாமி கண் திறந்து பார்க்கேல்லையே எண்டு கஸ்டம் வந்தாக்கள் சொல்லிவினம், இல்லையா?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

ஓம்...

கண்ணகி, மனிதப்பிறவி எண்டதை மறக்கப்படாது கண்டியளே.

தமிழ்நாட்டில, கிராமம்  ஒன்றில் எம்ஜியாருக்கு கோவில் கட்டின ஒருத்தர் மூன்று வேளை பூசை செய்வதாகவும், சனமும் வந்து, துனணூறு, பிரசாதம் வாங்கி போகுதாம் எண்டும் செய்தி வந்ததே.

இது தொடர்ந்தால், நூறுவருசத்துக்கு பொறகு, எம்ஜியார் சாமி கண் திறந்து பார்க்கேல்லையே எண்டு கஸ்டம் வந்தாக்கள் சொல்லிவினம், இல்லையா?

குசுப்புவை மறந்தது ஏனோ முனிவரே..... 🙏

2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Paanch said:

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

குஸ்பு அம்மன் எண்டு தொடங்க கிளம்பினவையள்....

அவரது மார்க்கம் வேறு, அம்மன் ஆக்க அலவுட் இல்லை என்று சொல்லப்பட்டதும் அடங்கிவிட்டார்கள். 

எண்ணைய் குறைந்தால், திரி ஊடுபத்தும்.

இதை தடுக்க, சேர்க்க  எண்ணைய் இல்லாவிடில், தண்ணீர் சேர்த்தால், மிதந்துவரும் எண்ணை, தண்ணீர் மேலே படிவதால், திரி தொடர்ந்து எரியும்.

தண்ணீரினால் தான் எரிகிறது என்பது, பூசாரிகளின் தொழில் ரகசியம். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

கொடுமைதான் 

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 

நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இருந்து குழாய் அடித்து 
அப்பிடியே எரிய விட்டு விட்டு 
மின்சாரம் தயாரிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

மத்திய காலப்பகுதி பதினொன்றாம்  நூறாண்டு முதல், பதிணைந்தாம் நூறாண்டு காலப்பகுதி.

மதவெறி மூடத்தனம் இன்றும் தொடர்கிறது.

ஜரோப்பா, மத்தியகிழக்கில் இருந்து, நீயுசீலாந்து, இலங்கை என மூர்க்கமாக நகர்கின்றது.

இந்தியாவில் இந்துத்துவா என்றும், இலங்கையில், மியான்மரில் பெளத்தவாதமாகவும் தொடர்கிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

இதே போல 15 ம் நூற்றாண்டிலும் ஒரு குமாரசாமி  அப்பாவித்தனமாக நினைச்சிருப்பார். 20 ம் நூற்றாண்டில் இன்னொரு குமாரசாமி பிறந்து  21ம்ஸ நூற்றாண்மாடில்ர ஸ்மார்ட் போனில்  நினைத்த உடனே உலகம் முழுவதும் உள்ள தனது நண்பர்களுடன் காட்சித்திரையில் உரையாடுவார் என்று அந்த குமாரசாமி நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இதே போல 15 ம் நூற்றாண்டிலும் ஒரு குமாரசாமி  அப்பாவித்தனமாக நினைச்சிருப்பார். 20 ம் நூற்றாண்டில் இன்னொரு குமாரசாமி பிறந்து  21ம்ஸ நூற்றாண்மாடில்ர ஸ்மார்ட் போனில்  நினைத்த உடனே உலகம் முழுவதும் உள்ள தனது நண்பர்களுடன் காட்சித்திரையில் உரையாடுவார் என்று அந்த குமாரசாமி நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

குமாரசாமியும் குஞ்சரமும் ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆதிகாலத்தில் செயற்கை அழிவுகள் இல்லை.இப்போது எல்லா அழிவுகளும் கண்முன்னே நடக்கின்றது
இப்போது வாராவாரம் ஒருதடவையாவது வீட்டு ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்திருக்குமாறு மக்களை வானொலியில் எச்சரிக்கின்றார்கள்.அந்த அளவிற்கு இரசாயன தொழிற்சாலைகளின் நச்சு வாயுக்கள் அதிகமாகி விட்டது.
கண்பார்வையையையும் காது கேட்பதையும் கெடுக்கும் ஸ்மாட்போன் போன்ற கருவிகள் எத்தனை அழிவுகளை சமுதாயத்திற்கு விளைவிக்கின்றது என்பது தெரியாமல் அதை பெருமையாக நினைத்து உள்ளம் பூரிக்கும் உங்களுடன் கருத்தாடுவதை நினைத்து வெட்கி தலைகுனிகின்றேன்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

குமாரசாமியும் குஞ்சரமும் ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆதிகாலத்தில் செயற்கை அழிவுகள் இல்லை.இப்போது எல்லா அழிவுகளும் கண்முன்னே நடக்கின்றது
இப்போது வாராவாரம் ஒருதடவையாவது வீட்டு ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்திருக்குமாறு மக்களை வானொலியில் எச்சரிக்கின்றார்கள்.அந்த அளவிற்கு இரசாயன தொழிற்சாலைகளின் நச்சு வாயுக்கள் அதிகமாகி விட்டது.
கண்பார்வையையையும் காது கேட்பதையும் கெடுக்கும் ஸ்மாட்போன் போன்ற கருவிகள் எத்தனை அழிவுகளை சமுதாயத்திற்கு விளைவிக்கின்றது என்பது தெரியாமல் அதை பெருமையாக நினைத்து உள்ளம் பூரிக்கும் உங்களுடன் கருத்தாடுவதை நினைத்து வெட்கி தலைகுனிகின்றேன்.

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎30‎/‎2019 at 12:23 PM, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது... 2009 இது பற்றி எழுதியிருக்கிறேன்...அந்த நேரம் இது பற்றி கோயிலுக்கு வரும் ஒரு அம்மாவிடம்  கேட்டதிற்கு அவ, அவரவர் செய்த கர்ம பலனை மாத்த முடியாது என்று சொன்னார்...எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுள் எதற்கு என்று கேட்டேன்..கொஞ்சம் நடப்பதை பின் போடலாம் அல்லது குறைக்கலாம் என்று சொன்னார்.


நாவுறையும்,கண் திட்டியையும் கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லினம்...வன்னியில் புலிகளின் ஆட்சியையும்,மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பார்த்து அம்மன் கண் வைச்சு விட்டாவோ ! இது நான்  சொல்றன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

பொது வெளியில் நான் கேட்ட  யதார்ததமான கேள்வியை யதார்தத்திற்கு எந்தசம்பந்தமும் இல்லாமல் மேற்குலம் என்று ஏதோ உள்ளிக்கோட்டிய நீங்கள் யதார்ததைப்பற்று பேசுகின்றீர்கள்.  நமது முட்டாள்தனங்களை முன்னோர். கலாச்சாரம் என்று புனிதப்படுத்திவிட்டு எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது பழி போடுவது தான யதார்ததமோ? 

யதார்தமாக சிந்தித்து இருந்தால் எப்போதோ விடுதலை அடைந்திருப்போமே. 

Link to comment
Share on other sites

 
 
 
On 5/31/2019 at 9:52 AM, குமாரசாமி said:

 மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். 

மதம் தனிப்பட்ட விடயமாக வீட்டுக்குள் இருக்கு மட்டும் அதனால் எந்தப் பிரச்சணையும் இல்லை. அது வீட்டை விட்டு தெருவுக்கு வந்து சமூக பிரச்சணையாகி மக்களை அகதிகளாக்கி அல்லல் பட வைக்கும் போது அதனை 'தனிப்பட்ட' விடயம் என்று சொல்வது பொருத்தமானதா என்பது கேள்விக்குரியது.


ஈழத்தில் நாம் பட்ட துண்பங்களிற்கு மூலகாரணம் பெளத்த மதவாதமே. புலத்தில் எம்மை தங்க அனுமதித்திருக்கும் மேற்கத்தையம்  மதத்திற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிதவாதம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.