Jump to content

மன்னாரில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் 508 ஏக்கர் காணி கொள்வனவு! உள் நோக்கம் என்ன?


Recommended Posts

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தில் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த மக்கள் காணிகளில் இல்லாமை காரணமாக அவர்களுடைய காணிகளையும் அடாத்தாக கொள்வனவு செய்து இங்குள்ள முஸ்லீம் நபர்களுடைய பெயர்களில் பெயர் மாற்றம் செய்து பல இடங்களில் பல ஏக்கர் காணிகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்து இருக்கின்றார்.

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது குறித்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டில் இருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார் என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார் அதன் மூலம் பல்கலைகழகம் கட்டப்பட்டுள்ளது

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லீம் மத தீவிரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது.

இந்த உவரிப்பகுதியும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும் இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் இது ஒரு தமிழ் மக்களுடைய கிராமம் அதற்கு அடையாளமாக 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயம் இங்கு இருக்கின்றது

ஆக இப்படியான நில ஆக்கிரமிப்புக்களை முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அரபு நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதிகளை பெற்று தாங்களும் அந்த பணத்தில் சுக போகத்தை பெற்று இங்குள்ள தமிழ் மக்களின் காணிகளை எந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றார்கள்.

குறிப்பாக இந்த உவரி பகுதிகாணி தற்போது கிழக்கு ஆளுனர் எந்த அடிப்படையில் 508 ஏக்கர் கொள்வனவு செய்தார் அவருடைய உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக தேசிய புலனாய்வு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுடன் அதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

இந்த செலான் நிறுவனத்திற்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரித்து இந்த காணிகளை அரச உடைமையாக்கி இப் பிரதேசங்களில் காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

அதே நேரத்தில் 508 ஏக்கர் காணிகள் என்ற போர்வையில் குறித்த பகுதியில் உள்ள 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் எனவே உடனடியாக இது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து உண்மை நிலையை வெளிக்கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட நகர சபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் அக் காணிகளை பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/119924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறயா....

அல்ஹம்திலல்லா

Link to comment
Share on other sites

இப்படி பல இடங்களில் தமிழர் நிலங்கள் பறிபோயுள்ளன. அனைத்தும் மீளப் பெறப்படவேண்டும்

Link to comment
Share on other sites

புணான என்னும் இடத்தில் கட்டியுள்ள பல்கலைக்கழகத்துக்கு விடுதிகள் கட்டுவதற்காக இருக்கலாம்.பின்னர் இரண்டையும் இணைத்து நெடுஞ்சாலை அமைத்து இரு பக்கமும் முஸ்லிம்களை குடியேற்றிவிட்டால் ....காக்கா உங்கட பிளான் பக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, போல் said:

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்து இருக்கின்றார்.

2013 இல் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நாள் இதைப் பற்றியே பேசாமல் இருந்தது ஏன்?

Link to comment
Share on other sites

10 hours ago, ஈழப்பிரியன் said:

2013 இல் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நாள் இதைப் பற்றியே பேசாமல் இருந்தது ஏன்?

இப்பகுதியை பிரதிநித்துவபடுத்தும் செல்வம் அடைக்கலநாதன் என்ன செய்றார்? இதை வெளிக்கொண்டுவர வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான் தேவையா? செல்வம் அடைக்கலநாதன் ரிஷாட், ஹிஸ்புல்லாவிடம் சம்திங் வாங்கிட்டாரா? அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு ஆளுநரால் கொள்வனவு – ஸ்ரீநேசன் தகவல்

srisenasan-hisbulla.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தின் இராமர் தீவு என்னும் இடத்தில் இருந்த கடற்புலிகளின் காணியே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஸ்ரீநேசன் கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நீதி அமைச்சு ஊடாக சமாதான நீதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போது எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல அரசியல்வாதிகள் அளவுக்கதிகமாக காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். தற்போது கிழக்கு ஆளுநராக இருக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் ஒரு நிறுவனத்தின் பெயரில் மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெருகல் பிரதேசத்தில் இராமர் தீவு எனும் இடத்தில் கடற்புலிகளின் தளமாக இருந்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அதேபோன்று திருகோணமலையில் சல்லித்தீவு பிரதேசம் மற்றும் பதுளை வீதியில் புல்லுமலை பிரதேசம் ஆகிய இடங்களில் கணிசமான காணிகள் உள்ளதாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. இவைகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.

சாதாரண முஸ்லிம் மக்கள் இவ்வாறு காணிகளை சிறிது சிறிதாக கொள்வனவு செய்து அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனால் இவ்வாறு அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவர் கொள்வனவு செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்கானது என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://athavannews.com/கடற்புலிகளின்-தளமாக-இருந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

இப்பகுதியை பிரதிநித்துவபடுத்தும் செல்வம் அடைக்கலநாதன் என்ன செய்றார்? இதை வெளிக்கொண்டுவர வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான் தேவையா? செல்வம் அடைக்கலநாதன் ரிஷாட், ஹிஸ்புல்லாவிடம் சம்திங் வாங்கிட்டாரா? அறிய ஆவல்.

காணி வாங்குதல், விற்பனை செய்தல் காதும், காதும் வைத்தது போலவே நடக்கும். வெளியே தெரியாது.

ஒரு சில இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம். 

இப்போது அவர்கள் சந்தேகம் கொண்டு கசிய விட்டிருக்கலாம். அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து பேசுகின்றனர்.

Link to comment
Share on other sites

18 minutes ago, Nathamuni said:

காணி வாங்குதல், விற்பனை செய்தல் காதும், காதும் வைத்தது போலவே நடக்கும். வெளியே தெரியாது.

ஒரு சில இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம். 

இப்போது அவர்கள் சந்தேகம் கொண்டு கசிய விட்டிருக்கலாம். அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து பேசுகின்றனர்.

இப்பொழுது இவர்கள் தமிழ் முகவர் களை வைக்க தமிழர் வாங்குவது போல் வாங்கி முஸ்லிம் கைகளுக்கு மாறுகின்றன. சுன்னாகத்திலும் ஒரு காணி முஸ்லிம் கைகளுக்கு மாறி அங்கு பள்ளி வாசலும் குடியிருப்பும கட்டப்படுகிறது.

தமிழன் நேரடியாக  விற்க மாட்டார்கள் அதனால் முகவர்களை வைத்து வாங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?

வெறும் அறிக்கைகள் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த அரசியலா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.