Jump to content

'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லைபடத்தின் காப்புரிமை Reuters

இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.

https://www.bbc.com/tamil/global-48276952

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

வழமையாய் செய்யுறது போலை சும்மா வெருட்டிப்பாக்கத்தான்......அடிக்கிறதுக்கு ஐரோப்பியன் ஓம் படுறாங்கள் இல்லையாம்....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:
 
இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லைபடத்தின் காப்புரிமை Reuters

இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

 

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.

https://www.bbc.com/tamil/global-48276952

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

ஒபாமா அரசாங்கத்தின் ஒப்பந்தப்படி, தனது அணுவாயுத தயாரிப்பை ஈரான் கைவிடும் பட்சத்தில், அதன்மீது கொண்டுவரப்பட்டைருந்த பொருளாதாரத் தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகள் என்பவற்றை விலக்கிக் கொள்வதாகப் பேரம் பேசப்பட்டிருந்தது. இதனடிப்படையில், ஈரான், தனது அணுவாயுத தயாரிப்பை இடைநிறுத்தி (வெளியில் அப்படித்தான் சொல்லிக்கொண்டது) , ஒப்பந்தந்தத்தின் படி சலுகைகளைப் பெற்றுக்கொண்டது. வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரம், மீள எழ ஆரம்பித்தது மட்டுமல்லாமல், ஈரான் மக்களும் பொருளாதார சுபீட்சத்தை அனுபவிக்க ஆரம்பித்தனர். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டதால் உலக எண்ணெய்ச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்து, அமெரிக்கா உற்பட பல நாடுகளில் வாகன ஓட்டுநர்கள் சிறிதுகாலம் குறைந்த விலைக்கு பெட்ரோலினை வாங்கிப் பாவிக்க ஏதுவாக அமைந்தது.

ஆனால், இந்தப் பொருளாதாரச் சலுகைகளைப் பாவித்துக்கொண்டே ஈரான் மறைவாக தனது அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுகிறதென்று அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் தொடர்ந்தும் குறைப்பட்டு வந்ததோடு, ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கான ஈரானின் வெளிப்படையான ஆதரவு, சவுதி அரசுக்கெதிரான ஈரானின் செயற்பாடுகள், இஸ்ரேலுக்கெதிரான ஈரானின் நிலைப்பாடு ஆகியன ஈரான் மீது டிரம்ப் அரசு மீண்டும் நெருக்குவாரங்களை கொடுக்க ஏதுவாக அமைந்தது. 

இயல்பாகவே இஸ்ரேலுக்குச் சார்பான போக்கைக் கொண்ட டிரம்ப் அரசு, தடாலடியாக , ஒருதலைப் பட்சமாக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற, ஈரானும் தன் பங்கிற்கு மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்க, இடையே அகப்ப்ட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தத்தைத் தக்கவைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

வளைகுடாவிற்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பிவைப்பது ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்க மட்டும்தான். மற்றும்படி, அமெரிக்கா இன்னொரு போருக்கு ஆயத்தப்படுவதாகத் தெரியவில்லை. ஈரானினாலும் அமெரிக்காவுடன் ஒரு போரைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. 

சுன்னி அடிப்படைவாதைகளுக்கெதிரான போரில், ஈரானின் பங்கு அளப்பரியது. ஈராக்கில் ஐஸிஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியதில் ஈரானின் பங்கும் உள்ளது. ஆவ்வாறே, சிரியாவில், ஆசாத்தின் படைகளுடன் ஈரானிய ஆதரவுபெற்ற ஹிஸ்பொல்லா அமைப்பு சேர்ந்து போராடியது. அதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு ரஷ்ஷியாவின் ஆதரவும் இருக்கிறது. ஆகவே, அமெரிக்க ஈரான் மீது அவ்வளவு லேசில் கைவைப்பது இப்போதைக்கு நடவாது.

ஆனால், போரென்று வரும் பட்சத்தில், மிக இலகுவாக அமெரிக்கா ஈரானை வீழ்த்திவிடும் என்பது மட்டும் உண்மை (அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குபவனாக இருந்துகொண்டு, இதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி ??!!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

தேர்தல் நெருங்கும் காலமாக பார்த்து சண்டை தொடங்கலாம்.
அமெரிக்காவில் எழுதப்படாத எழுத்து சண்டை நேரத்தில் தேர்தல் வந்தால் அந்த ஜனாதிபதி தோற்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிட்டே இருக்கனே ஒழிய .. ..எதையும் செய்ய மாட்றனப்பா..🤔

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Link to comment
Share on other sites

22 hours ago, ரஞ்சித் said:

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

ஒபாமா அரசாங்கத்தின் ஒப்பந்தப்படி, தனது அணுவாயுத தயாரிப்பை ஈரான் கைவிடும் பட்சத்தில், அதன்மீது கொண்டுவரப்பட்டைருந்த பொருளாதாரத் தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகள் என்பவற்றை விலக்கிக் கொள்வதாகப் பேரம் பேசப்பட்டிருந்தது. இதனடிப்படையில், ஈரான், தனது அணுவாயுத தயாரிப்பை இடைநிறுத்தி (வெளியில் அப்படித்தான் சொல்லிக்கொண்டது) , ஒப்பந்தந்தத்தின் படி சலுகைகளைப் பெற்றுக்கொண்டது. வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரம், மீள எழ ஆரம்பித்தது மட்டுமல்லாமல், ஈரான் மக்களும் பொருளாதார சுபீட்சத்தை அனுபவிக்க ஆரம்பித்தனர். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டதால் உலக எண்ணெய்ச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்து, அமெரிக்கா உற்பட பல நாடுகளில் வாகன ஓட்டுநர்கள் சிறிதுகாலம் குறைந்த விலைக்கு பெட்ரோலினை வாங்கிப் பாவிக்க ஏதுவாக அமைந்தது.

ஆனால், இந்தப் பொருளாதாரச் சலுகைகளைப் பாவித்துக்கொண்டே ஈரான் மறைவாக தனது அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுகிறதென்று அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் தொடர்ந்தும் குறைப்பட்டு வந்ததோடு, ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கான ஈரானின் வெளிப்படையான ஆதரவு, சவுதி அரசுக்கெதிரான ஈரானின் செயற்பாடுகள், இஸ்ரேலுக்கெதிரான ஈரானின் நிலைப்பாடு ஆகியன ஈரான் மீது டிரம்ப் அரசு மீண்டும் நெருக்குவாரங்களை கொடுக்க ஏதுவாக அமைந்தது. 

இயல்பாகவே இஸ்ரேலுக்குச் சார்பான போக்கைக் கொண்ட டிரம்ப் அரசு, தடாலடியாக , ஒருதலைப் பட்சமாக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற, ஈரானும் தன் பங்கிற்கு மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்க, இடையே அகப்ப்ட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தத்தைத் தக்கவைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

வளைகுடாவிற்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பிவைப்பது ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்க மட்டும்தான். மற்றும்படி, அமெரிக்கா இன்னொரு போருக்கு ஆயத்தப்படுவதாகத் தெரியவில்லை. ஈரானினாலும் அமெரிக்காவுடன் ஒரு போரைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. 

சுன்னி அடிப்படைவாதைகளுக்கெதிரான போரில், ஈரானின் பங்கு அளப்பரியது. ஈராக்கில் ஐஸிஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியதில் ஈரானின் பங்கும் உள்ளது. ஆவ்வாறே, சிரியாவில், ஆசாத்தின் படைகளுடன் ஈரானிய ஆதரவுபெற்ற ஹிஸ்பொல்லா அமைப்பு சேர்ந்து போராடியது. அதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு ரஷ்ஷியாவின் ஆதரவும் இருக்கிறது. ஆகவே, அமெரிக்க ஈரான் மீது அவ்வளவு லேசில் கைவைப்பது இப்போதைக்கு நடவாது.

ஆனால், போரென்று வரும் பட்சத்தில், மிக இலகுவாக அமெரிக்கா ஈரானை வீழ்த்திவிடும் என்பது மட்டும் உண்மை (அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குபவனாக இருந்துகொண்டு, இதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி ??!!)

ட்ரம்ப் பதவிக்கு வந்த நாள் முதல் அல்ல, தேர்தலில் குதிக்க முன்னமிருந்தே தான் ஜனாதிபதியானால் ஒபாமா ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட (ஈரானுக்கும் UNSC இன் 5 நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், UK, US, அது தவிர ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட) JCPOA ஒப்பந்தத்திலிருந்து விலகுவேன் என்று கூறி புதிய ஒப்பந்தம் உருவாக்கும் எண்ணத்திலும் கதைத்து வந்தவர். 

அதன்படி காரண சூழ்நிலைகளும் அமைய போன வருடம் அவ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தாரே தவிர தடாலடியாக எல்லாம் விலகவில்லை.

விலகிய பின் ஒரு சில விடயங்களை மேலதிகமாக உள்ளடக்கி புதிய ஒப்பந்தம் அமைக்கும் நோக்கில் அழைப்பு விடுத்த போது அதற்கு ஈரான் மறுத்து விட்டது. 

பின் ஈரான் மீது பொருளாதார தடை அது இதென்று அழுத்தங்களை கொடுக்க பிரச்சினை எங்கோ போனாலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை அமெரிக்கா போரை ஆரம்பிக்க மாட்டுது என நம்புகிறேன். பார்க்கலாம். 

ஈரானும் இப்ப அவ் ஒப்பந்திலிருந்து பகுதியாக தன்னும் விலக தான் நிற்கிறது.

இன்னொரு பக்கம் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் வரும் என பலர் முன்பிலிருந்து கூறினார்கள். ஆனால் இப்ப வரைக்கும் போர் வரவில்லை. அதற்கு பதிலாக ஒரு சில பேச்சுவார்த்தை முயற்சிகளை ட்ரம்ப் மேற்கொண்டிருந்தார். ஆனால் பிரச்சினை தொடர்கிறது.

Depopulation agenda இன் கீழ் ட்ரம்பை போர் தொடங்க வைக்க பின்னணியில் பலர் தொடர்ச்சியாக கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

Depopulation agenda இன் கீழ் ட்ரம்பை போர் தொடங்க வைக்க பின்னணியில் பலர் தொடர்ச்சியாக கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பீட்டன்

இலுமினாட்டிகளின் பொம்மைதான் ஒபாமா என்றால், அவர் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை என்ன?டிரம்ப் இலுமினாட்டிகளின் எதிரியென்றால், ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி அதனுடன் முரண்பாடான போக்கைக் கடைப்பிடித்து போருக்கான முஸ்த்தீபுகளில் இறங்கவேண்டிய அவசியம் என்ன?

Depopulation என்னும் இலுமினாட்டிகளின் கனவு ஒபாமாவினால்த்தனே செய்துமுடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ போரைத் தவிர்த்து சமாதானம் செய்ய, இலுமினாட்டிகளின் எதிர்ப்பாளரான டிரம்ப் சமரச ஒப்பந்தத்தை மீறி போர்நோக்கிப் பயணிக்கிறாரே??

Depopulation  தான் இலுமினாட்டிகளின் உண்மையான கனவென்றால் , அதை இலுமினாட்டிகளின் பொம்மையான ஒபாமாவைவிக் காட்டிலும், அவர்களின் எதிரியான டிரம்ப்பே சிறப்பாகச் செய்வதாக எனக்குப் படுகிறது.

Link to comment
Share on other sites

32 minutes ago, ரஞ்சித் said:

நம்பீட்டன்

இலுமினாட்டிகளின் பொம்மைதான் ஒபாமா என்றால், அவர் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை என்ன?டிரம்ப் இலுமினாட்டிகளின் எதிரியென்றால், ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி அதனுடன் முரண்பாடான போக்கைக் கடைப்பிடித்து போருக்கான முஸ்த்தீபுகளில் இறங்கவேண்டிய அவசியம் என்ன?

Depopulation என்னும் இலுமினாட்டிகளின் கனவு ஒபாமாவினால்த்தனே செய்துமுடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ போரைத் தவிர்த்து சமாதானம் செய்ய, இலுமினாட்டிகளின் எதிர்ப்பாளரான டிரம்ப் சமரச ஒப்பந்தத்தை மீறி போர்நோக்கிப் பயணிக்கிறாரே??

Depopulation  தான் இலுமினாட்டிகளின் உண்மையான கனவென்றால் , அதை இலுமினாட்டிகளின் பொம்மையான ஒபாமாவைவிக் காட்டிலும், அவர்களின் எதிரியான டிரம்ப்பே சிறப்பாகச் செய்வதாக எனக்குப் படுகிறது.

ஒபாமா மட்டுமல்ல, George Bush உட்பட பல ஜனாதிபதிகள் பொம்மைகளாக தான் இருந்தார்கள். 

ஒபாமா ஈராக்கில் மக்களை கொன்றவர் தானே?

இந்த ஒப்பந்தம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து பார்க்கும் ஈரானின் முயற்சிகளை தடுக்கும் வகையில் அமையவில்லை என்று தான் அதிலிருந்து விலகி, புதிய ஒப்பந்தத்தில் அது பற்றி உள்ளடக்க ட்ரம்ப் முயற்சித்தார். புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுத்து விட்டது.

John Bolton போன்ற சிலர் தான் பின்னணியில் ட்ரம்புக்கு போர் தொடங்க அழுத்தம் கொடுக்கிறார்கள். 

ஆனாலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை போர் தொடங்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்றே நான் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

தவிர secret societies என்பது தனியே illuminatti ஐ மட்டும் கொண்டதல்ல. பல secret societies உள்ளன. அவர்களது குறிக்கோள் தனியே depopulation செய்வது மட்டுமல்ல. முழு உலகையும் ஆள்வது, anti christ நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல உள்ளன.

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னமே அமெரிக்கா secret societies இன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. 

சிலரை அவர்களே பொம்மை ஜனாதிபதியாக கொண்டு வந்து தாம் நினைப்பவற்றை அவர்களை வைத்து நிறைவேற்றுவர். அப்படியான சிலர் தான் ஒபாமா, புஷ் போன்றோர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல நடவடிக்கைகள் இவர்களது நோக்கிற்கு எதிராக இருந்தது என்பதால் தான் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிக்கிறார்கள், உலக mainstream media அவரை போட்டுத்தாக்குகிறது என முன்னர் நான் குறிப்பிட்டேனே தவிர அரசியலை பொறுத்த வரை 100% யாரையும் நம்ப முடியாது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன்.

ட்ரம்ப்பாலும் எவ்வளவு தூரம் இவர்களை தாக்குப்பிடிக்க முடியும் என தெரியாது என்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஒபாமா ஈராக்கில் மக்களை கொன்றவர் தானே?

நீங்கள் எழுந்தமானமாக எழுதுவதுபோலத் தெரிகிறது.

ஈராக்கினுள்ளும், ஆப்கானிஸ்த்தானினுள்ளும் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பி போர்களை ஆரம்பித்துவைத்தவர் ஜோர்ஜ் புஷ். இது நடந்தது 2001 ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிற்பாடு (உடனேயே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கூட உள்வீட்டு வேலைதான் என்று நிறுவ வேண்டாம்).

ஒபாமா பதவிக்கு வந்ததோ 2008 ஆம் ஆண்டு. அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் செய்வதாகக் கூறிய மிக முக்கிய விடயங்களில் ஒன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் உள்ள அமெரிக்கத் துருப்புக்களை கால அட்டவணை ஒன்றின் அடிப்படையில் திரும்பப் அழைப்பதென்பது.

ஒபாமா பதவியேற்றபோது ஈராக்கிலிருந்த அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 150,000. இதை அவர் 2011 ஆண்டளவில் வெறும் 5,000 ஆகக் குறைத்துக் காட்டினார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நடக்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்ததோடு அதை அடையும் நோக்கிலும் செயற்பட்டு வந்தார். 

2014 இல் ஐஸிஸ் அமைப்பு வெளிவரும்வரைக்கும் சில நூறு அமெரிக்க ராணுவ ஆலோசகர்களைத்தவிர முற்றான ராணுவ வெளியேற்றத்தை ஒபாமா செய்திருந்தார். 

ஆனால், ஐஸிஸ்களின் கரம் ஈராக்கில் ஓங்கியபின்னரே, மிகச்சிறியளவிலான அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகளையும், விமானப் படைப்பிரிவையும் மீளவும் அங்கே அனுப்பிவைத்தார்.

ஆகவே, ஒபாமா ஈராக்கில் மக்களைக் கொன்றார் என்கிற உங்களின் கூற்று அடிபட்டுப் போய்விடுகிறது.

ஈராக் மீதான இரு போர்களையும், ஆப்கானிஸ்த்தான் மீதான போரையும் ஆரம்பித்து நடத்தியவர்கள் புஷ் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும்தான். வேண்டுமென்றால், அவர்கள் லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லுங்கள். சகட்டுமேனிக்கு ஒபாமா மக்களைக் கொன்றார் என்று எழுதுவது சரியாகப் படவில்லை.

1 hour ago, Lara said:

தவிர secret societies என்பது தனியே illuminatti ஐ மட்டும் கொண்டதல்ல. பல secret societies உள்ளன. அவர்களது குறிக்கோள் தனியே depopulation செய்வது மட்டுமல்ல. முழு உலகையும் ஆள்வது, anti christ நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல உள்ளன.

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னமே அமெரிக்கா secret societies இன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. 

சிலரை அவர்களே பொம்மை ஜனாதிபதியாக கொண்டு வந்து தாம் நினைப்பவற்றை அவர்களை வைத்து நிறைவேற்றுவர். அப்படியான சிலர் தான் ஒபாமா, புஷ் போன்றோர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல நடவடிக்கைகள் இவர்களது நோக்கிற்கு எதிராக இருந்தது என்பதால் தான் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிக்கிறார்கள், உலக mainstream media அவரை போட்டுத்தாக்குகிறது என முன்னர் நான் குறிப்பிட்டேனே தவிர அரசியலை பொறுத்த வரை 100% யாரையும் நம்ப முடியாது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன்.

ட்ரம்ப்பாலும் எவ்வளவு தூரம் இவர்களை தாக்குப்பிடிக்க முடியும் என தெரியாது என்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்களினால், இந்த ரகசியக் குழுக்கள் பற்றியும், அவர்களின் புதிய உலக ஒழுங்குபற்றியும் குறிப்பிடாமல் கருத்துக்களை எழுத முடியாதா லாரா? 

நீங்கள் தேவையில்லாமல் எல்லாவிடத்திலும் இதுபற்றிக் குறிப்பிடுவது திரியின் போக்கையே மாற்றிவிடக் கூடும்.

இக்குழுக்கள் பற்றியும், அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் இன்னொரு பகுதியில் ஒரு திரியை நீங்கள் திறந்து எழுதினால் என்ன? ஆர்வமுள்ளவர்கள் அங்கு வந்து தமது கருத்துக்கள்ளையும் முன்வைக்க முடியுமல்லவா? சிந்தித்துப் பாருங்கள் !

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் எழுந்தமானமாக எழுதுவதுபோலத் தெரிகிறது.

ஈராக்கினுள்ளும், ஆப்கானிஸ்த்தானினுள்ளும் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பி போர்களை ஆரம்பித்துவைத்தவர் ஜோர்ஜ் புஷ். இது நடந்தது 2001 ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிற்பாடு (உடனேயே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கூட உள்வீட்டு வேலைதான் என்று நிறுவ வேண்டாம்).

ஒபாமா பதவிக்கு வந்ததோ 2008 ஆம் ஆண்டு. அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் செய்வதாகக் கூறிய மிக முக்கிய விடயங்களில் ஒன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் உள்ள அமெரிக்கத் துருப்புக்களை கால அட்டவணை ஒன்றின் அடிப்படையில் திரும்பப் அழைப்பதென்பது.

ஒபாமா பதவியேற்றபோது ஈராக்கிலிருந்த அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 150,000. இதை அவர் 2001 ஆண்டளவில் வெறும் 5,000 ஆகக் குறைத்துக் காட்டினார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நடக்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்ததோடு அதை அடையும் நோக்கிலும் செயற்பட்டு வந்தார். 

2014 இல் ஐஸிஸ் அமைப்பு வெளிவரும்வரைக்கும் சில நூறு அமெரிக்க ராணுவ ஆலோசகர்களைத்தவிர முற்றான ராணுவ வெளியேற்றத்தை ஒபாமா செய்திருந்தார். 

ஆனால், ஐஸிஸ்களின் கரம் ஈராக்கில் ஓங்கியபின்னரே, மிகச்சிறியளவிலான அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகளையும், விமானப் படைப்பிரிவையும் மீளவும் அங்கே அனுப்பிவைத்தார்.

ஆகவே, ஒபாமா ஈராக்கில் மக்களைக் கொன்றார் என்கிற உங்களின் கூற்று அடிபட்டுப் போய்விடுகிறது.

ஈராக் மீதான இரு போர்களையும், ஆப்கானிஸ்த்தான் மீதான போரையும் ஆரம்பித்து நடத்தியவர்கள் புஷ் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும்தான். வேண்டுமென்றால், அவர்கள் லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லுங்கள். சகட்டுமேனிக்கு ஒபாமா மக்களைக் கொன்றார் என்று எழுதுவது சரியாகப் படவில்லை.

ஒபாமா ஈராக் மீது போரை ஆரம்பித்தார் என நான் கூறவில்லை, ஈராக்கில் மக்களை கொன்றார் என்றே கூறினேன். 

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இரட்டைக்கோபுர தாக்குதல் inside job தான். 

ஒபாமா சிரியாவிலும் போர் நடத்தினவர் தான். 

ஏதோ அவரை சமாதான தூதுவர் கணக்கில் கதைக்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

ஒபாமா ஈராக் மீது போரை ஆரம்பித்தார் என நான் கூறவில்லை, ஈராக்கில் மக்களை கொன்றார் என்றே கூறினேன். 

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இரட்டைக்கோபுர தாக்குதல் inside job தான். 

ஒபாமா சிரியாவிலும் போர் நடத்தினவர் தான். 

ஏதோ அவரை சமாதான தூதுவர் கணக்கில் கதைக்கிறீர்கள்.

 

ஆளை விடுங்கள். 

Link to comment
Share on other sites

13 minutes ago, ரஞ்சித் said:

உங்களினால், இந்த ரகசியக் குழுக்கள் பற்றியும், அவர்களின் புதிய உலக ஒழுங்குபற்றியும் குறிப்பிடாமல் கருத்துக்களை எழுத முடியாதா லாரா? 

நீங்கள் தேவையில்லாமல் எல்லாவிடத்திலும் இதுபற்றிக் குறிப்பிடுவது திரியின் போக்கையே மாற்றிவிடக் கூடும்.

இக்குழுக்கள் பற்றியும், அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் இன்னொரு பகுதியில் ஒரு திரியை நீங்கள் திறந்து எழுதினால் என்ன? ஆர்வமுள்ளவர்கள் அங்கு வந்து தமது கருத்துக்கள்ளையும் முன்வைக்க முடியுமல்லவா? சிந்தித்துப் பாருங்கள் !

நான் இவர்களை பற்றி எழுத வரவில்லை. தனியே depopulation என குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் தான் இலுமினாட்டி பற்றி இழுத்தீர்கள். அதனால் அது பற்றி விளக்கம் தந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இரட்டைக்கோபுர தாக்குதல் inside job தான். 

 

அது எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுவீர்கள்?🤔 நீங்களும் CIA உடன் கூட இருந்து தாக்குதலாளிகளுக்கு கட்டளை கொடுத்திருந்தால்தான் உண்மை என்று நம்பமுடியும்😂🤣

சதிக்கோட்பாடுகளை தொடக்கவும், பரப்பவும் உலகம் முழுவதும் பலர் உள்ளனர். ஆனால் எல்லோர் மூளையும் புகையடிப்பால் மாறாது அல்லவா!😎

Link to comment
Share on other sites

31 minutes ago, Lara said:

நான் இவர்களை பற்றி எழுத வரவில்லை. தனியே depopulation என குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் தான் இலுமினாட்டி பற்றி இழுத்தீர்கள். அதனால் அது பற்றி விளக்கம் தந்தேன்.

ரஞ்சித் சொன்னமாதிரி எல்லா இடத்திலும் வந்து இப்படி Secret society ஒரு இருப்பதாக எழுதி திரிகளின் போக்கை உங்களின் இருட்டு நம்பிக்கைகளின் பால் நகர்த்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைய செய்திகளில் முக்கியமாக இருப்பது அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டம். இது ட்றம்ப் ஆட்சிக்கு வந்த பின் பின்பற்றப்படும் கடும் கிறிஸ்தவ கொள்கை சார்பானது. இதே போன்று இன்னும் 16 மாகாணங்கள் சட்டங்களை கொண்டு வர முயல்கின்றன.  ட்றம்பால் நியமிக்கப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் துணை கொண்டு இதை செயற்படுத்த முனைகின்றன. ட்றம்ப் அரசு Anti Christ செயற்திட்டங்களை செய்கின்றவர்களின் பொம்மை அரசு எனில் கருக்கலைப்புக்கு எதிராக போக மாட்டார்கள். அத்துடன் கருக்கலைப்பு என்பது depopulation இற்கும் எதிரானது.

இதற்கும் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு பதில் எழுதுவீர்கள் என நினைக்கின்றேன். Secret society  என்பது ஏதோ கடவுளர்கள் போலவும், அவை அமெரிக்க மக்களில் இருந்து உலக மக்கள் எவருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் நீக்கமற நிறைந்து இருந்து உலகை இயக்குகின்றார்கள் என்பது போலவும் நீங்கள் கற்பனையில் ஒன்றை உருவாக்கி  அதையே எல்லா இடங்களிலும் காரணமாக சொல்லி வருகின்றீர்கள்.ஒரு நாட்டில் / உலகி இருக்கும் புலனாய்வுப் பிரிவுகளும் (சி.ஐ.ஏ /மொசாட்/ போன்ற) Lobby பண்ணும் பிரிவுகளையும் தவிர சீக்கிரட் சொசைட்டி என்று ஒன்று இல்லை.

மற்றது, நானும் "ஆளை விடுங்கள்" என்று இறுதி பதிவிட்டு விட்டு இந்த திரியில் இருந்து நகர்கின்றேன்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

அது எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுவீர்கள்?🤔 நீங்களும் CIA உடன் கூட இருந்து தாக்குதலாளிகளுக்கு கட்டளை கொடுத்திருந்தால்தான் உண்மை என்று நம்பமுடியும்😂🤣

சதிக்கோட்பாடுகளை தொடக்கவும், பரப்பவும் உலகம் முழுவதும் பலர் உள்ளனர். ஆனால் எல்லோர் மூளையும் புகையடிப்பால் மாறாது அல்லவா!😎

Inside job என்பதற்கான ஆதாரம் வலுவாக இருப்பதால் தான். இன்னொரு திரியில் அது பற்றி எழுதியுள்ளேன். வேண்டுமானால் பாருங்கள். 😎

எனக்கு சரியென படுவதை நான் எழுதுகிறேன். அதை மற்றவர்கள் நம்புவது நம்பாதது அவர்களை பொறுத்தது.

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

ரஞ்சித் சொன்னமாதிரி எல்லா இடத்திலும் வந்து இப்படி Secret society ஒரு இருப்பதாக எழுதி திரிகளின் போக்கை உங்களின் இருட்டு நம்பிக்கைகளின் பால் நகர்த்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைய செய்திகளில் முக்கியமாக இருப்பது அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டம். இது ட்றம்ப் ஆட்சிக்கு வந்த பின் பின்பற்றப்படும் கடும் கிறிஸ்தவ கொள்கை சார்பானது. இதே போன்று இன்னும் 16 மாகாணங்கள் சட்டங்களை கொண்டு வர முயல்கின்றன.  ட்றம்பால் நியமிக்கப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் துணை கொண்டு இதை செயற்படுத்த முனைகின்றன. ட்றம்ப் அரசு Anti Christ செயற்திட்டங்களை செய்கின்றவர்களின் பொம்மை அரசு எனில் கருக்கலைப்புக்கு எதிராக போக மாட்டார்கள். அத்துடன் கருக்கலைப்பு என்பது depopulation இற்கும் எதிரானது.

இதற்கும் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு பதில் எழுதுவீர்கள் என நினைக்கின்றேன். Secret society  என்பது ஏதோ கடவுளர்கள் போலவும், அவை அமெரிக்க மக்களில் இருந்து உலக மக்கள் எவருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் நீக்கமற நிறைந்து இருந்து உலகை இயக்குகின்றார்கள் என்பது போலவும் நீங்கள் கற்பனையில் ஒன்றை உருவாக்கி  அதையே எல்லா இடங்களிலும் காரணமாக சொல்லி வருகின்றீர்கள்.ஒரு நாட்டில் / உலகி இருக்கும் புலனாய்வுப் பிரிவுகளும் (சி.ஐ.ஏ /மொசாட்/ போன்ற) Lobby பண்ணும் பிரிவுகளையும் தவிர சீக்கிரட் சொசைட்டி என்று ஒன்று இல்லை.

மற்றது, நானும் "ஆளை விடுங்கள்" என்று இறுதி பதிவிட்டு விட்டு இந்த திரியில் இருந்து நகர்கின்றேன்.

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசித்து பாருங்கள். நான் ஒபாமா, புஷ் ஆகியோரை தான் பொம்மைகள் என கூறியுள்ளேன். ட்ரம்பை எங்கே அப்படி சொன்னேன்?

தவிர மலட்டுத்தன்மையை ஏற்படுத்தல், sacrifice என்ற பெயரில் கருக்கலைப்பு செய்தல், குழந்தைகளை கொல்லுதல் (எமது நாட்டில் ஆடுகளை வெட்டுவதை போல்) போன்றன அங்கு நடக்கிறது. ட்ரம்ப் கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் நல்ல விடயம் தான். (என்ன, ஒரு சில இதனுடன் சம்பந்தப்படாத மக்கள் பாதிக்கப்படுவார்கள்)

Secret societies என்பதை கடவுள் என்ற ரீதியில் எங்கே எழுதினேன்? அவர்களும் மனிதர்கள் தான், ஆனால் இரகசிய குழுவாக இயங்கி shadow government நடத்துவோர். உலக வங்கி உட்பட பல வங்கிகளை நடத்துவோரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர். பல நாட்டு புலனாய்வு பிரிவில் உள்ளோரும் இதில் அங்கம் வகிக்கிறார்கள்.

நான் இத்திரிக்கு சம்பந்தப்படும் விடயம் என்பதால் depopulation என்ற சொல்லை பயன்படுத்தினேன். அதை தூக்கிப்பிடித்து வாதாடுவோர் தான் திரியின் போக்கை மாற்றுவோர்.

உலகத்தில் நடக்கும் விடயம் உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தான் இருட்டுக்குள் உள்ளீர்கள் என்று அர்த்தம். நானல்ல. 

(இத்தனைக்கும் நான் சைவ சமயத்தை சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவரும் கிடையாது)

Link to comment
Share on other sites

நான் முன்னைய பதிவில் குறிப்பிட்ட John Bolton பற்றி wikipedia கூறுவது.

Bolton has been called a "war hawk" and is an advocate for regime change in IranSyriaLibyaVenezuelaCubaYemen and North Korea and repeatedly called for the termination of the Iran nuclear deal.[16][17] He was an early supporter of the Iraq War and continues to back this position.[18] He has continuously supported military action and regime change in Syria, Libya, and Iran.

மேலதிகமாக வாசிக்க,

https://en.m.wikipedia.org/wiki/John_R._Bolton

Link to comment
Share on other sites

ஈரானுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ட்ரம்பின் twitter பதிவு.

EA761925-8FD7-4331-8CCD-08EB1F1E5D72.jpg

E774E557-6C25-4CF5-9AB4-AA3161302A71.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.