Jump to content

இறைவனால் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ஷரியாத் சட்டத்தின் அபத்தங்கள்


Recommended Posts

ஒருவ‌ர், தான் செய்த‌ கொலைக்கு ப‌ரிகார‌மாக‌, கொலை செய்ய‌ப்ப‌வ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ச‌ம்ம‌தித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்ற‌த்திற்கான‌ த‌ண்ட‌னையில் இருந்து த‌ப்பிவிட‌லாம் என்ப‌து அறிவுசார்ந்த‌ ச‌ட்ட‌மாக‌ இருக்க‌ முடியுமா..?

அடிப்ப‌டையில் இது ப‌ண‌வ‌ச‌தி உடைய‌, பொருளாதார‌த்தில் ச‌மூக‌ அடுக்கில் உய‌ர‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாக‌வும், ஏழைக‌ளுக்கு பாத‌க‌மான‌துமான‌ ச‌ட்ட‌ம் இல்லையா..?

சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ள் இய‌ற்றும் ச‌ட்ட‌த்திலேயே இம்மாதிரியான‌ வ‌ர்க்க‌ பேத‌த்தை தூக்கிப்பிடிக்கும் ச‌ட்ட‌ங்க‌ள் இல்லாத‌போது, இற‌வ‌னால் அருள‌ப்ப‌ட்ட‌தாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் ச‌ட்ட‌த்தில் இது இருப்ப‌து அப‌த்த‌ம் இல்லையா..?

குரான் 4:92
ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை (தவறாக) கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; மேலும் அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும், அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய..."

இதே வ‌ச‌ன‌த்தின் இர‌ண்டாம் ப‌குதி சொல்வ‌து இன்னும் சிற‌ப்பான‌ (?) ச‌ட்ட‌ விதி..!

குரான் 4:92
"... கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடு தேவையில்லை)" 

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர் முஸ்லிமாக‌ இருந்தும்கூட‌ அவ‌ர் கொன்ற‌வ‌ருட‌ன் ப‌கைமை பாராட்டும் இன‌த்த‌வ‌ராக‌ இருந்தால், ஈட்டு தொகைக்கூட‌ தேவையில்லையாம். அதுதானே.. ப‌கைமை உண‌ர்வு கார‌ண‌மாக‌ எக்க‌ச்ச‌க்க‌மாக‌ ஈடுத்தொகை கேட்டுவிட்டால்..? 

யோசித்துப்பாருங்க‌ள், இப்ப‌டியெல்லாம் நியாய‌ம்-அநியாய‌ம் என்றுகூட‌ பார்க்காம‌ல் பொருளாதார‌ம் ம‌ட்டும் சார்ந்து ச‌ட்ட‌ம், அதுவும் குற்ற‌விய‌ல் ச‌ட்ட‌ம் இய‌ற்றும் ஒன்று இறை(?)ச‌க்தியாக‌ இருக்க‌முடியுமா..?

(In Arabic language "diyat" means blood money and ransom. And it legally means compensation, which is granted to heirs of victim by the murderer)

(கொலைக்கு ப‌ரிகார‌க‌மாய், த‌ண்ட‌னையில் இருந்து விடுப‌ட‌ கொடுக்கப்படும் ப‌ண‌த்திற்கு  அர‌பு மொழியில் "திய‌த்" என்று பெய‌ர்)

ஆங்.... சொல்ல‌ ம‌ற‌ந்திட்டேன், இந்த‌ ச‌ட்ட‌மெல்லாம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொன்றால் ம‌ட்டும்தான். அப்போ செத்த‌வ‌ர் முஸ்லிம் அல்லாத‌வ‌ரா இருந்தால்...? 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு
- குற‌ள்

Link to comment
Share on other sites

  • 3 months later...
On ‎5‎/‎15‎/‎2019 at 11:40 AM, tulpen said:

ஒருவ‌ர், தான் செய்த‌ கொலைக்கு ப‌ரிகார‌மாக‌, கொலை செய்ய‌ப்ப‌வ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ச‌ம்ம‌தித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்ற‌த்திற்கான‌ த‌ண்ட‌னையில் இருந்து த‌ப்பிவிட‌லாம் என்ப‌து அறிவுசார்ந்த‌ ச‌ட்ட‌மாக‌ இருக்க‌ முடியுமா..?

" அறிவுசார்ந்த‌"...  உங்கள் கேள்விக்கு பதில் என்ன என்பது உங்களின் இந்த சொல்லின் வரைவிலக்கண ம் என்ன என்பதை இந்த உரையாடலில் வரையறுத்த பின்னரே தொடரலாம் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகூட பரவாயில்லை, வழக்கில் சாட்சி சொல்லும் போது, 1 முஸ்லீம் ஆணின் சாட்சிக்கு, 5 முஸ்லீம் அல்லாதவர்/முஸ்லிம் பெண்ணின் சாட்சியே சமன் என்பதாக கூட இருக்கிறதாம்.

ஒரு கொலையை ஒரு முஸ்லிம் செய்தால், அதை 2 முஸ்லீம் அல்லாதவர்கள் பார்த்துவிட்டாலும். அந்த சாட்சி செல்லுபடியாகாதாம். 

இந்த லட்சணத்தில் ஷரியாவை மேற்கில் சட்டமாக்க வேண்டும், ஷரியா பெண்களை பாதுகாக்கிறது என்றெல்லாம் புளுடா விட்டு கொண்டு ஒரு கூட்டம் மேற்குலகின் பல்கலை கழங்களிலேயே கூட்டம் போடுகிறது 😡.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.