Jump to content

இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல்

 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்த நொடியிலிருந்து நாட்டில் எழுந்த பதற்றம் இன்னும் தீர்ந்தபாடில்லை...

இதற்கு மேலாக ஆங்காங்கே ஆயுதங்கள் மீட்பதும் அதிரடி கைதுகளும் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன... 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒருவர் இட்ட பதிவால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பு கைகலப்பில் ஈடுபட்டது. இதன் நீட்சியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின....

minuvangoda3.jpg

அதில் ஒரு பிரதேசம்தான் மினுவாங்கொடை... 

சற்று அதிகமாக அடிவாங்கிய இடம் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேதமில்லை. ஆனால் அந்த மக்களின் வாழ்வியலுக்குத்தான் அதிக சேதம்.

ஆம்... வன்முறையாளர்கள் குறிவைத்தது உடைமைகளை... 

என்ன நடந்தது... எப்படி நடந்தது... யாரால் நடந்தது என்பதை அறிந்துகொள்ள நாம் நேரடியாக மினுவாங்கொடை பிரதேசத்திற்கு சென்றிருந்தோம்.

மினு­வாங்­கொடை மத்­தியில் அமைந்­துள்­ளது அந்தப் பள்­ளி­வாசல். சற்று விசா­ல­மான பள்­ளி­வா­ச­லும்தான். அந்த விசா­ல­மான பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் அனைத்­துமே தூள் தூளாகி தரையில் கிடந்­தன.

இத்­த­னைக்கும் ஏன்...

நாம் பள்­ளி­வா­ச­லுக்குள் பேசிக்­கொண்­டி­ருக்­கை­யி­லேயே கண்­ணாடித் துண்­டுகள் கொட்­டிக்­கொண்­டுதான் இருந்­தன. பள்­ளி­வா­ச­லுக்குள் பொலிஸ் அதி­கா­ரிகள் வாக்­கு­மூ­லங்கள் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தனர். ஒவ்­வொரு இடத்தில் நான்­கைந்­துபேர் கூடி தங்­க­ளுக்குள் பேசிக்­கொண்­டி­ருந்­தனர். 

அவர்­களில் ஒரு­வரை அழைத்தோம்...

சொல்­லுங்கள் இங்கே என்ன நடந்­தது என்றோம். விவ­ரிக்க ஆரம்­பித்தார்...

அவரின் பெயர் சப்ரின்...

5.30 மணி­யி­ருக்கும் கூட்டம் கூட்­ட­மாக வரத்­தொ­டங்­கினர். முதன் முதலில் பௌஸ் ஹோட்­ட­லுக்­குத்தான் தாக்­குதல் நடத்­தினர். அங்­கி­ருந்­துதான் ஏனைய இடங்­க­ளுக்கும் இந்த வன்­முறை பர­வி­யது.  பள்­ளி­வா­ச­லுக்குள் யாரையும் இருக்க அனு­ம­திக்­க­வில்லை. ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­ பின்­புதான் தாக்­குதல் நடத்த தொடங்­கினர். தொடர்ந்து நான்கு மணித்­தி­யா­லங்கள்  தாக்­குதல் நடந்­தது. ஏன் நாங்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் இல்­லையா? எங்­க­ளுக்கு இந்த நாட்டில் எந்த உரி­மையும் இல்­லையா?

ஊர­டங்குச் சட்டம் எங்­க­ளுக்கு மட்­டும்­தானா ஏன் அவர்­க­ளுக்கு இல்­லையா என்று தனது ஆதங்­கத்தைக் கொட்டித் தீர்த்தார் அந்த நபர். பள்­ளி­வா­சலை விட்டு வெளியே வந்­ததும் வலப்­பக்­க­மாக இருந்­தது அந்த வீதி. இரா­ணு­வத்­தினர் இரு மருங்­கிலும் பாது­காப்­புக்கு நின்­றனர்.

அந்தக் கடை உரி­மை­யா­ளர்­களைத் தவிர வேறு யாரும் அந்த வீதிக்குள் செல்ல இரா­ணு­வத்­தினர் அனு­ம­திக்­க­வில்லை. ஒரு கட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை உள்ளே செல்ல அனு­ம­தித்­தனர். 

நாமும் உள்ளே சென்றோம்... அந்த வீதி கடைத் தொகு­திகள் நிறைந்த ஒரு வீதி...

இந்த இடம்தான் வெகு­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கொண்ட ஒரு பிர­தேசம். ஆனால் இங்கு வன்­மு­றையை நடத்­தி­ய­வர்கள் எந்த ஒரு நப­ரையும் தாக்­க­வில்லை. மாறாக உட­மை­க­ளுக்­குத்தான் சேதம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். முதலில் வந்தவர்கள் கடை­களை அடித்து நொருக்­கி­யுள்­ளனர்.  அங்­கி­ருந்த கடைகள் ஆடை, நகை, சப்­பாத்து மற்றும் அழ­கு­சா­தனப் பொருட்கள் விற்கும் கடைகள். அடித்து நொருக்­கிய கடை­­களில் இருந்­த­வர்கள் அப்­படி அப்­ப­டியே விட்­டு­விட்டு ஓடி­விட்­டனர்.

பிறகு மீண்­டும் வந்து உடைத்­துப்­ போட்ட கடை­க­ளி­லி­ருந்து வெளியே இழுத்­து­ப்போட்ட பொருட்­களை சேர்த்து கடைக்­குள்ளே தூக்­கிப்­போட்டு போய்­விட்­டனர். பிறகு சற்று நேரத்தில் மீண்டும் வந்த வன்­மு­றை­யா­ளர்கள் கடை­களைத் தீ வைத்துக் கொளுத்­தி­யுள்­ளனர்.

நாம் குறித்த இடத்­திற்கு செல்­லும்­போது நேற்று மதியம் 12 மணி­யி­ருக்கும்...

அப்­போதும் ஆடைக் கடைகள், நகைக்கடைகள்புகைந்­து­கொண்­டுதான் இருந்­தன. ஒரு­வித வெப்­பமும் அந்தச் சூழலில் நிலவ நாம் மெது­வாக அந்தக் கடை­களின் உரி­மை­யா­ளர்கள் குழு­மி­யி­ருந்த இடத்­திற்கு சென்றோம்...

அங்கே ஒரு நகைக் கடை... மினு­வாங்­கொடை சந்­தியில் அது­மட்­டும்­தானாம் ஒரே ஒரு நகைக்­கடை...

அந்த நகைக் கடையின் உரி­மை­யா­ளரைத் தேடினோம். அந்தக் கடைக்கு முன்னால் ஒரு வாங்கில் இழப்பின் வேத­னையை சுமந்­த­படி அமர்ந்­தி­ருந்தார்...

நெருங்கிச் சென்று ஐயா கொஞ்சம் பேச­லாமா என்றோம்...

என்ன தம்பி பேச... கதைக்க ஒன்றும் இல்லை என்று தனது ஆதங்­கத்தை சொன்னார்...

இந்த நகைக் கடை­யின் சேத விப­ரங்கள் எப்­படி என்றோம்...

இன்னும் எரிந்­து­கொண்­டி­ருக்­கி­றது... முழு­மை­யாக எரிந்து முடிந்த பிற­குதான் உள்ளே போக­மு­டியும்...

அதன்­பி­ற­குதான் சேத விபரம் தெரியும்..

எப்­ப­டியும் 20 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மாக வெள்ளி மற்றும் தங்க நகைகள் எரிந்­தி­ருக்கும் என்றார் அந்த நகைக் கடையின் உரி­மை­யாளர்.

அந்த இடத்தில் இன்­னொரு வியா­பாரி நம்­மோடு பேசத் தொடங்­கினார்...

இங்கே மொத்­த­மாக 22 கடை­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­துமே முஸ்­லிம்­களின் கடை­கள்தான். அதில் நான்கு கடைகள் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளு­டை­யது.

இந்தச் சந்­தைக்குள் எங்­க­ளுக்கு எவ்­வித முரண்­பாடோ கருத்து வேற்­று­மையோ இன பாகு­பாடோ கிடை­யாது.

வெளியில் இருந்து வந்­த­வர்­க­ளால்தான் இந்த தாக்­குதல் சம்­பவம் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது என்றார்.

அத்­தோடு இப்­போ­துள்ள அர­சி­யல்­வா­திகள் ஒருவர் மீதும் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அவர்கள் அனை­வ­ருமே ஒன்­றுதான் என்றும் பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த வியா­பாரி தெரிவித்தார்.

அங்கே எரிந்த 22 கடை­களில் முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் கடை­களும் உண்­டென்று சொன்­ன­தினால் நாம் அந்தக் கடை­களைத் தேடிப் போனாம்.

புகை­விட்­டுக்­கொண்­டி­ருந்த ஒரு ஆடைக் கடையின் வெளிப்­ப­டியில் ஒரு ஆணும் பெண்ணும் தலையில் கைவைத்­த­படி அமர்ந்­தி­ருந்­தனர்.

அந்தக் கடையின் பெயரைப் பார்த ்தோம் 'ஸ்ரீபதி டிரஸ் பொய்ன்ட்' என்­றி­ருந்­தது...

அவர்­க­ளிடம் நெருங்­கினோம்... சிங்­க­ளத்தில் பேசத் தொடங்­கினார் அந்த நபர்...

பாருங்கள்... என்ன நடந்­தி­ருக்­கி­றது என்று பாருங்கள்...

கிட்­டத்­தட்ட 350 இலட்­சத்­திற்கும் அதி­க­மான ஆடைகள் எரிந்து நாச­மா­கி­விட்­டன. இதை யார் எமக்கு திருப்பித் தரு­வார்கள் என்று கேள்­வி­களை எழுப்பிக்கொண்டே போனார்.

அவரை சற்று ஆசு­வா­சப்­ப­டுத்தி... ஐயா சொல்­லுங்கள் உங்கள் கடைக்கு என்ன நடந்­தது என்றோம்...

அன்று ஐந்து மணிக்­கெல்லாம் நாம் கடையை மூடி­விட்டு வைத்­தி­ய­ச­ாலைக்கு ஒரு­வரை பார்­வை­யிடச் சென்றோம். 

புது­வ­ருட காலம் என்­பதால் சொந்த பந்­தங்­க­ளுக்கு வெற்­றிலை கொடுத்து வாழ்­த்­து­வது வழக்கம். அன்று அப்­ப­டித்தான் வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு­வரைப் பார்க்க சென்­று­கொண்­டி­ருந்த வேளையில், உங்கள் கடையில் தீ பற்­று­கி­றது என்று ஒரு அழைப்பு வந்­தது.

வைத்­தி­ய­சா­லைக்கு செல்­வதை நிறுத்­தி­விட்டு மீண்டும் இங்கு வந்தேன். வந்து பார்த்­த­போது இங்கே ஏரா­ள­மா­ன­வர்கள் கூடி­யி­ருந்­தனர்.

என்னால் என் கடை­ய­ருகே வர­மு­டி­ய­வில்லை. தூர­மாக நின்று என் கடை எரி­வதைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன்...

என்னால் வேறென்­னதான் செய்­தி­ருக்க முடியும் என்றார்...

அந்த சந்­தர்ப்­பத்தில் பேச ஆரம்­பித்த அந்த நபரின் மனைவி... எமக்­கான அனைத்­துமே இந்த கடைதான்.

இதில்தான் எமது ஒட்­டு­மொத்த குடும்­ப­முமே வாழ்­கி­றது.

ஒரு­வாரம் வரை நாம் தாக்­குப்­பி­டிக்­கலாம். அதன்­பி­றகு நாம் எமது குடும்­பத்தின் வாழ்­வா­தா­ரத்­திற்கு என்ன செய்­வது.

எங்கள் வீட்டுக் குழந்­தை பாலுக்கு அழுமே என்ன செய்வேன் என்று பதை பதைத்தார் அந்த தாய்.

பாதிக்­கப்­பட்ட கடை­க­ளைத்­தாண்டி... வெளியே வர ஒரு பாதி­ரியார் அந்தச் சந்­தியில் நின்­று­கொண்­டி­ருந்தார்.

அவரின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்­தது...

அவ­ரிடம் பேசுவோம் என்று அவரை அணு­கினோம்...

நாம் யார் என்­பதை சொன்­ன­வு­ட­னேயே நாம் கேள்வி எழுப்பும் முன்னே அந்தப் பாதி­ரியார் பேசத் தொடங்­கினார்...

அவர் மினு­வாங்­கொடை மெதடிஸ்ட் தேவா­ல­யத்தின் பாதி­ரியார். 

fdf.jpg

அவரின் பெயர் நதீர பெர்­னாண்டோ...

இது இன­வாதம் அல்ல. சந்­தர்ப்­ப­வாதம். ஆம் நான் இந்தத் தாக்­கு­தலை இப்­ப­டித்தான் விளிப்பேன் என்று பேசத் தொடங்­கினார் பாதி­ரியார் நதீர.

சம்­பவம் நடக்­கும்­போது நான் இங்­கேதான் இருந்தேன். ஆனால் நான் ஒருவன் மட்டும் அத்­தனை பேரையம் எப்­படித் தடுக்க முடியும்.

300 க்கும் அதி­க­மான மோட்டார் சைக்­கிளில் வந்­தார்கள். எங்­கி­ருந்து யார் வந்­தார்கள் என்று தெரி­யாது. 

இது திட்­ட­மிட்ட தாக்­கு­தலா என்று சொல்­வ­தற்கும் எனக்குத் தெரி­யாது.

ஆனால் ஒன்று பாது­காப்பு பற்­றாக்­குறை இருக்­கி­றது என்­பதை சொல்­லி­யா­க­வேண்டும்.

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்­கு­த­லினால் மக்கள் பெரும் கோபத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர்.

அது உண்­மைதான்... யாரும் மறுப்­ப­தற்­கில்லை...

அந்தக் கோபத்தை அடக்கப் பார்த்­தார்­களே தவிர அதி­லி­ருந்து மக்கள் விடு­ப­டு­வ தற்கு எவ்­வித முயற்­சி­க­ளையும் எந்தத் தரப் பும் மேற்­கொள்­ள­வில்லை. கோபம் எனும் காற்று பலூனில் நிறைந்­து­கொண்டே வந்­தது. அந்தக் காற்றை வெளியேற விடாமல் அமர்த்திக்கொண்டே இருந்­தார்கள்.

இந்த பலூன் ஒரு கட்­டத்தில் வெடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதுதான் தற்­போது  வெடித்­துள்­ளது.

ஆயு­தங்கள் எங்கும் இல்லை. நீங்கள் அஞ்­ச­வேண்டாம். பாது­காப்­புக்கு நாம் உத்த­ர­வாதம் தரு­கிறோம் என்று இன்­று­வ­ரையில் ஏன் யாரும் அறி­விக்­க­வில்லை. மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுக்க இவர்கள் தவறிவிட்டனர். ஒரு சந்தேகத்துடனேயே அனைவரும் இருக்கிறார்கள். 

இந்தச் சூழலை நுணுக்கமாக கையாள வேண்டும் என்று பேசிக்கொண்டே பாதிக்கப்பட்ட அந்த பள்ளிவாசலுக்குள் சென்றார் அந்த பாதிரியார். 

அத்தோடு நாமும் அங்கிருந்து விடைபெற்றோம்...

எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றுதான் வன்முறை குறித்தான எந்தப் பதிவையும் இட்டு முடிக்கும்போது யாரும் குறிப்பிடுவது. 

நாமும் அதையே சொல்கிறோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வா காது. நாட்டின் நலனே முக்கியம் என மக்கள் உணர வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகவும் இருக்கிறது...

- எஸ்.ஜே.பிரசாத் -

 

 

http://www.virakesari.lk/article/56048

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.