Jump to content

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

 

எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

mode.jpg

“பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கையில்,

Kamal.jpg

“எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,“ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே.” என பேசியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55988

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

ராஜீவகாந்தி என்று சொல்கிறவர் தஜிந்தர் பால் சிங் பாகா(பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்) அவருக்கே ஒரு செய்தியை சொல்வதில் தடுமாற்றம் என்றால் என்னத்தை சொல்லுறது.....சுப.சோமர்.....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்கள் பதிவிட்ட செய்தி நமக்குத் தெரிந்தமையால், மேலோட்டமாக வாசித்ததில் தஜிந்தர் சிங் பெயர் வரும் இரண்டாம் பத்தியைக் கவனிக்கவில்லை. நீங்கள் வேடிக்கையாய்க் கேட்டதற்கு நான் முனைப்புடன் பதிலிறுத்துவிட்டேன். எனினும் தஜிந்தர் சிங் குறிப்பிடுவது, இந்திரா காந்தியின் Operation Bluestarக்கு பழி வாங்கும் விதமாக இந்திரா தமது மெய்க்காப்பாளராயிருந்த இரண்டு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன் வெடித்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை, என நினைக்கிறேன். இந்திரா மறைந்ததும் உடனே ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கித் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். டெல்லி கலவரம் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "ஒரு பெரிய ஆலமரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்" என்று பிரதமர் ராஜீவ் வேறு திருவாய் மலர்ந்தருளினார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

மோடி சொல்வதில் அர்த்தமிருக்கிறது.

சீக்கியர்களின் புனிதமான பொற்கோயிலுக்குள் தனது ராணுவத்தை அனுப்பி, தீவிரவாதிகளைக் கொல்கிறேன் என்கிற போர்வையில் பல அப்பாவிகளின் உயிர்களையும் சேர்த்தே பறித்தவர்தான் இந்திரா. இதனாலேயே அவர் தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால், இந்திராவின் கொலைக்குப் பின்னர், அதற்குப் பழிவாங்குவதற்காக ராஜீவ் காந்தியும் அவரது இந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் சிலரும் சேர்ந்து தில்லி அடங்கலாக வட மாநிலங்கள் பலவற்றில் சீக்கியர்களுக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சுமார் பத்தாயிரம் சீக்கிய அப்பாவிகளைக் கொன்று குவித்தார்கள். இது இன்றுவரை காங்கிரஸால் மறைக்கப்பட்டு வரும் ஒரு இனவழிப்பு நடவடிக்கை. சீக்கியர்களைடம் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் ராஜீவின் உண்மையான முகம் தெரியும். அந்த முகத்தின் இன்னொரு பக்கத்தை அவரது ராணுவம் 1987 இல் இருந்து 1990 வரை ஈழத்தில் செய்துகாட்டியது.

ஆனால், இதைச் சொல்வதற்கு இந்துப் பயங்கரவாதி மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது. குஜாரத்தில் இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையைத் திட்டமிட்டு நடத்திக் காட்டினார்,. பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று குவித்ததில் இவரது ஏவலும் பங்கும் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

குஜராத்தில் மோடி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2005 இல் அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுளைய மோடிக்குத் தடை வித்திதிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலுக்கு நன்றி. (மறைக்கப்பட்ட உண்மைகளை அவரவர் வாயால் வெளிக் கொண்டு வருவதற்கு.)

சொக்கத்தக்கம் சோனியா ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை.. மாமியார்.. கணவர் வழியில் வந்தது என்பது வெளிப்படை உண்மை.

இதில் சில ஹிந்திய தீவிரவாதிகள்.. அது பழிவாங்கலாம். ராஜீவ் காந்தி என்பவர்.. உண்மையில்.. தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூர இனப்படுகொலையாளன் என்பதே சர்வதேச நீதிச் சட்டம் ஒழுங்காக அவர் மீது விசாரணை செய்திருந்தால்.. வந்திருக்கும் தீர்ப்பாக இருக்கும். 

அதேபோல்.. சோனியாவும் சர்வதேசச் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்.. சொறீலங்கா இனப்படுகொலையாளர்களுடன் சேர்த்து. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.