Jump to content

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன?

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
இடைத்தேர்தல்Getty Images கோப்புப்படம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன?

மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பனர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். சூலூர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். ஓசூர் தொகுதியின் உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற வழக்கின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆகவே தற்போது தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை 212ஆகக் குறைந்துள்ளது. இதில் அ.தி.முகவின் பலம் சபாநாயகரைத் தவிர்த்து 115ஆக உள்ளது. 

மேலும் விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு அணியில் உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அவர்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. மேலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அ.தி.மு.கவின் பலம் 110ஆகக் குறைந்துள்ளது. 

ஸ்டாலின்M.K.STALIN

ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், 22 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது. ஆகவே, இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானக்கும் தேர்தலாகவும் இருக்கும். 

ஏற்கனவே, பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது.

மீதமுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. 

திருப்பரங்குன்றம்

மதுரைக்கு அருகில் உள்ள கோவில் தலமான திருப்பரங்குன்றம் தொகுதி, பொதுவாகவே அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதி. 1977ல் இருந்து இதுவரை எட்டு முறை அ.தி.மு.கவும் ஒரு தடவை அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.திகவும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு தடவைகள் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்றிருக்கிறது. 

2016ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம். சீனிவேல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் மணிமாறனைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதற்குப் பிறகு 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட ஏ.கே. போஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் டாக்டர் சரவணனைவிட சுமார் 42 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 

ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது சுயநினைவின்றி அவரது கைரேகை பெறப்பட்டதாக வழக்குத் தொடர்ந்த சரவணன் அந்த வழக்கில் வெற்றிபெற்றார். ஆனால், அதற்குள் ஏ.கே. போஸ் மரணமடைந்தார். ஆகவே, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இப்போது மீண்டும் தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாகப் பணியாற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தலைமையில் மிகப் பெரிய அணி களமிறங்கியிருக்கிறது. கடந்த முறை சரியாகச் செயல்படாத தி.மு.க. நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் தி.மு.க தரப்பு, போன தேர்தலில் எங்கெல்லாம் வாக்குகள் குறைவாக விழுந்ததோ, அந்தப் பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. 

ஏ.கே. போஸை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றதால், மாநிலம் முழுதும் அறியப்பட்ட சரவணன் மருத்துவர் என்ற முறையிலும் தொகுதிக்குள் அறிமுகமானவர். 

அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரம் செயலாளர் முனியாண்டி போட்டியிடுகிறார். தங்களது ஆதரவாளர்களைக் களமிறக்க அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் முயற்சித்தும் முனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை. தொகுதிக்குள் பெரிதாக அறிமுகமில்லாத முனியாண்டி, கட்சியின் பலத்தை நம்பி களமிறங்கியிருக்கிறார். முதல்வரும் துணை முதல்வரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் சற்று தெம்பாக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிEDAPPADI PALAMNISWAMI / FACEBOOK

இந்தத் தொகுதியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர் உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன். தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலான அணி இவருக்காகத் தீவிரமாக தேர்தல் பணியாற்றிவருகிறது. 

இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டியும் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் மகேந்திரனும் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தின் வாக்குகளே அதிகம் என்பதால் இருவருமே ஜாதியின் பலத்தில் வெற்றிபெறலாம் என நினைக்கின்றனர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சரவணன் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். பிரமலைக்கள்ளர் வாக்குகளும் அ.தி.மு.க வாக்குகளும் இரண்டாகப் பிரிவதால் எளிதில் வெல்லலாம் என நினைக்கிறார் சரவணன். 

இந்தத் தொகுதியில் சுமார் 2,80,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். பிரதான கட்சியின் வேட்பாளர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் என்பவரும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் சக்திவேல் என்பவரும் போட்டியிடுகிறார்கள். 

ஓட்டப்பிடாரம் (தனி)

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி மட்டுமே தனித் தொகுதி. தூத்துக்குடியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் முழுக்க முழுக்க ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய மிகவும் பின்தங்கிய தொகுதி. பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்த ஸ்டெர்லைட் ஆலையும் இந்தப் பகுதிக்குள்தான் வருகிறது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகைய்யா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

1977க்குப் பிறகு நடந்த பத்து சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. நான்கு தடவைகளில் வெற்றிபெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி இரு தடவைகளும் காங்கிரஸ் இரண்டு முறைகளும் சிபிஐ, தி.மு.க. ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் 65071 வாக்குகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்தபடி போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 64578 வாக்குகளும் பெற்றனர். வெறும் 493 வாக்குகளின் இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்பட்டது. 

டாக்டர் கிருஷ்ணசாமிfacebook / PT PARTY

இப்போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது அ.தி.மு.க. தரப்பு. அமைச்சர் காமராஜ் தலைமையிலான ஏழு அமைச்சர்களின் அணி அ.தி.மு.கவின் தேர்தல் பணிகளைக் கவனித்துவருகிறது. ஆனால், இந்தத் தொகுதியின் வேட்பாளராக மோகன் அறிவிக்கப்பட்டதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சின்னதுரை, ஜெயலலிதா ஆகியோர் கடும் அதிருப்தியுடன் இருப்பது ஒரு பின்னடைவு. இருந்தபோதும் தங்களுக்கு சாதகமான தொகுதி என்பதால் வெற்றிபெற்றுவிடலாம் என நம்புகிறது அ.தி.மு.க. 

தி.மு.கவின் சார்பில் இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தொகுதிக்குள் முக்கியத் தலைவர்களான அனிதா ராதாகிருஷ்ணனும் கீதா ஜீவனும் எதிரும்புதிருமாக இருப்பது தேர்தல் பணிகளை பாதிக்கக்கூடும் என கட்சியினர் கருதுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே, கனிமொழியுடன் சேர்ந்து தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிக்க ஆரம்பித்துவிட்டார் சண்முகைய்யா. 

தற்போது கனிமொழி கிராமங்களில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வாக்குக் கேட்பது, தனக்கு சாதகமாக அமையுமென நினைக்கிறார் சண்முகைய்யா. 

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்ததால் பதவியிழந்த சட்டமன்ற உறுப்பினாரான சுந்தர்ராஜ் தொகுதி மக்களிடம் தனக்கு இருக்கும் அறிமுகத்தை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார். பா.ஜ.க. அ.தி.மு.க. மீதான அதிருப்தி தனக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என நம்புகிறார். தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர், நாடார் வாக்குகளையும் ஈர்க்க அ.ம.மு.க. தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. 

அ.தி.மு.க. - அ.ம.மு.க. இடையே வாக்குகள் பிரிவது, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை தங்களுக்கு சாதகமாக இருக்குமென தி.மு.க. நம்புகிறது. ஆனால், ஆளும்கட்சியாக இருப்பதும், புதிய தமிழகம் தங்கள் பக்கம் இருப்பதும் தங்களுக்கு சாதகமாக இருக்குமென அ.தி.மு.க. நினைக்கிறது. 

வாக்குப்பதிவுGetty Images

இந்தப் பகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன், துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த நான்கு குடும்பத்தினரை மேடையேற்றியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் காந்தி கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் கட்சியின் அகல்யா, சீமானால் ஈர்க்கப்படும் இளைஞர் வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார். 

சூலூர்

சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த கனகராஜ் உயிரிழந்துவிடவே, இப்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி.

அ.தி.மு.கவின் சார்பில் கனகராஜின் ஒன்றுவிட்ட சகோதரர் வி.பி. கந்தசாமி போட்டியிடுகிறார். தி.மு.கவின் சார்பில் பொங்கலூர் பழனிச்சாமியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுகுமாரும் போட்டியில் இருக்கிறார்கள். 

2009ல் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி இது. 2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் கே. தினகரன் வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஆர். கனகராஜ் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனைவிட சுமார் 36,600 வாக்குகள் அதிகம் பெற்றார். 

இந்தத் தொகுதியில் முதலில் அ.தி.மு.கவின் செ.ம. வேலுச்சாமிக்குத்தான் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரணமடைந்த கனகராஜின் ஒன்றுவிட்ட சகோதரரை நிறுத்துவதன் மூலம் அனுதாப வாக்குகளை பெறலாம் எனத் திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க. இதனால், வேலுச்சாமி ஆதரவாளர்கள் சற்று அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். எ.வ. வேலுவின் தலைமையில் தேர்தல் பணிகளை தி.மு.க. செய்துவருகிறது. இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள அருந்ததியர் வாக்குகளைப் பெறும்வகையில், அவர்களது தெருக்கள் வீடுகளில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சென்று வாக்குகளைக் கோரியது பலனளிக்குமென அக்கட்சி நம்புகிறது. 

அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் சுகுமார், தொகுதியில் உள்ள தேவர் சமுதாய வாக்குகளையும் அ.தி.மு.க. அதிருப்தி வாக்குகளையும் நம்பிக் களமிறங்கியிருக்கிறார். வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதும் தங்களுக்குச் சாதகம் என நினைக்கிறது டிடிவி தரப்பு. 

விவிபேட்Getty Images

அரவக்குறிச்சி

இடைத்தேர்தலைச் சந்திக்கும் நான்கு தொகுதிகளில் மிகவும் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் தொகுதி இது. அ.தி.மு.கவில் இருந்து வெற்றிபெற்று, டிடிவி தினகரன் பக்கம் சென்றதால், தகுதி இழப்பு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொகுதி இது என்பது இதற்கு முக்கியமான காரணம். 

அ.தி.மு.க. சார்பில் வி.வி. செந்தில்நாதனும் அ.ம.மு.க. சார்பில் பி.எச். ஷாகுல் ஹமீதுவும் களத்தில் இருக்கிறார்கள். 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை நடந்திருக்கும் 16 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும் அ.தி.மு.க. ஐந்து முறையும் தி.மு.க. நான்கு முறையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுதந்திரா கட்சி, சுயேச்சை ஆகியோர் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். 

வாக்குAFP

கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி. செந்தில்பாலாஜி சுமார் 88 ஆயிரம் வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் கே.சி. பழனிச்சாமி சுமார் 64,400 வாக்குகளையும் பெற்றனர். 

கடந்த முறை வெற்றிபெற்ற செந்தில் பாலாஜியே இந்த முறை தங்கள் சார்பில் களத்தில் இருப்பதால் தி.மு.க. உற்சாகமாக இருக்கிறது. தொகுதிக்குள் முக்கியப் பிரச்சனையான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்பதை முக்கியமான வாக்குறுதியாகத் தருகிறார் செந்தில் பாலாஜி. தேர்தல் பணிகளுக்குப் பெயர்போனவர் என்பதால் மிகத் தீவிரமாக பணியாற்றிவருகிறார் அவர். ஆனால், இந்தத் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தேர்தல் களத்தில் ஒதுங்கியே இருக்கிறார்கள். 

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி. செந்தில்நாதன், அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இவருக்காக பணியாற்றிவருகிறார்கள். செந்தில் பாலாஜியின் 'துரோகம்' குறித்துச் சொல்லி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறது அ.தி.மு.க. தரப்பு. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஷாகுல் ஹமீது, தொகுதிக்குள் உள்ள இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார். இவரும் செந்தில் பாலாஜியின் துரோகம் குறித்தே பேசுகிறார். 

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் மோகன்ராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே, ஒரு இந்து' என சொல்லிவிட்டுப்போக, அவர் பக்கமும் சற்று கவனம் திரும்பியிருக்கிறது

 

https://www.bbc.com/tamil/india-48288304

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.