Jump to content

அமைச்சர் ரிஷாத் கோரிக்கை விடுத்தது உண்மையே அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை ; மஹேஷ் சேனாநாயக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். 

mahesh_senaaaaaaaa.jpg

அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். 

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்   கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில். 

 குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். 

முதலில் எனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது  தடவையும்  அமைச்சர்  தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். 

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன். 

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை  நான் அவதானித்தேன். குறித்த அமைச்சர் எனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்டது. ஆனால் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை. கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளது. இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என்ற எனக்கு தெரியவில்லை. கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் நான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறிவிட்டேன் என்றார். 

கேள்வி:- யாரை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் ?

பதில்:- ஹ்ம்ம், அவர் கூறிய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, அங்கு எல்லாம் முஹம்மட்களாக இருந்தனர். அவர்களின் உரிய பெயர் எனக்கு தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/56119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்கிடையேயும், காக்கா, போனை போட்டு கேட்டு இருக்கிறார் என்றால்.... என்ன ஒரு துணிவு.

தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது.... அர்த்ததின் மிடுக்கில, அரசரிடம், அவருக்கு சவரம் செய்பவர், காதோட, இளவரசியை, பெண் கேட்டாராம்' 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையேன் இவர் இவ்வளவு மென்றுமுழுங்கிச் சொல்கிறார். பேரம் படியவில்லைப் போலும். இவர் பல கோடிகள் கேட்டிருப்பார்.. அவர் சில கோடிகளில் விசயத்தை முடிப்பம் என்று நினைத்திருப்பார்.

கேவலம் என்ன என்றால்.. இவர்கள் கையில் அரசும்... அரசின் இராணுவ இயந்திரமும்.

ஒருவர் அமைச்சர். இன்னொருவர் இராணுவத் தளபதி

இதொரு நாடு. இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம்.

ஐநா இலங்கையின் அதிகாரங்களை தன்னகத்தே எடுப்பது தான் நல்லது. தமிழ் மக்களை அவர்கள் பாட்டில் அவர்கள் நிலத்தில் ஆள விடுவதும் நல்லது. இதுவே..உலகிற்கும் இலங்கை மக்களுக்கும் பாதுகாப்பு. இன்றேல்.. இலங்கை என்பது உலகப் பயங்கரவாதத்தின் தலைமை இடமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3தரம் போன் எடுப்பது அழுத்தம் இல்லை....இது சிரிலங்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rishatmahesh-720x450.jpg

தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார்! – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் ரிஷாட் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார் என்றும் எனினும் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டரர்.

முதலில் தனக்கு கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும் பின்னர் 3 தடவைகள் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தாரென்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து தன்னால் அறிந்துகொள்ள முடிந்ததால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை தான் ஆராய்வதாக கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஊடகங்கள் பிரசுரித்ததை தான் அவதானித்ததாகவும் குறித்த அமைச்சர் தனக்கு அழுத்தம் கொடுத்தார் என அதில் கூறப்பட்ட போதிலும் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதோடு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளதென்றும் இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என தனக்கு தெரியாததோடு, அதனை கோரிக்கையாகவும் பார்க்கலாம், அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் தான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுவிக்குமாறு கூறிய சந்தேகநபரின் பெயர் தனக்கு இப்போது நினைவில்லை என்றும் எல்லோரும் மொஹம்மட்களாக இருந்தமையினால், அவரின் உரிய பெயர் தனக்கு தெரியவில்லை என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தாக்குதலுடன்-தொடர்புடை-2/

Link to comment
Share on other sites

5 hours ago, alvayan said:

3தரம் போன் எடுப்பது அழுத்தம் இல்லை....இது சிரிலங்கா

மூன்று தடவைதான் நீரும் மன்னிக்கும். ரிச்சாத் நான்காவது தடவையும் எடுத்திருந்தால்.........!  சேனா என்ன செய்திருப்பார்......???? 🤔🤔🤔😬 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள்

ஒன்றைரை ஆண்டு கழிந்து மீண்டும் அமைச்சராக வந்தால் பார்ப்போம் என்ற அர்த்தமாயிருக்குமோ ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர் இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டரர்.

அவ்வாறு கோரிக்கை முன்வைக்கும் உரிமை அவருக்கு உள்ளதென்றும் இதனை ஊடகங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றது என தனக்கு தெரியாததோடு அதனை கோரிக்கையாகவும் பார்க்கலாம் அல்லது அழுத்தமாகவும் பார்க்கலாம். ஆனால் தான் அவரது கோரிக்கைக்கு ஏற்ற பதிலை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்."

இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான  கோரிக்கையை வைக்கும் ஒரு அமைச்சர் குண்டுத்தாக்குதலுக்கு துணைபோயிருப்பார் அவரையும் அழைத்து விசாரிக்கவேண்டும் என்பது இந்த கோழி மூளைக்கு விளங்கவில்லையா. இவனையெல்லாம் எப்படி தேடி கண்டுபிடித்து இராணுவத்தில் இணைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. முகத்தை காட்டியே சின்ன குழந்தைக்கு சோறூட்டலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

இவனையெல்லாம் எப்படி தேடி கண்டுபிடித்து இராணுவத்தில் இணைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. 

தமிழனை கொலை செய்ய தெரிந்தால் சிறிலங்கா இராணுவத்தில் சேர தகுதியுடையவர்கள்......பதவி உயர்வு  எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

தமிழனை கொலை செய்ய தெரிந்தால் சிறிலங்கா இராணுவத்தில் சேர தகுதியுடையவர்கள்......பதவி உயர்வு  எண்ணிக்கையின் அடிப்படையில் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்😄

ராணுவத்தில் இருக்கும்வரை பதவியுயர்வு. அதற்குப் பின் வெளிநாட்டு உயர்ஸ்த்தானிகர் அந்தஸ்த்து. கூடவே எந்தவொரு விசாரணைக்கும் அகப்படமுடியாத காப்பு. முடிந்தால் அமைச்சர் பதவி. குறைந்தது பாதுகாப்புச் செயலாளர் பதவி. இதைவிட வேறு என்ன வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரவில்லை - அமைச்சர் பதியூதீன் மறுப்பு

ரிசாத் பதியூதீன்

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடயம் தான் கோரியதாக கூறப்படுவதை அமைச்சர் ரிசாட் பதியூதீன் மறுத்துள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தது உண்மைதான்" என்று, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராணுவத் தளபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், "அவ்வாறான எந்தவித கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை" என அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக, ராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு தான் வினவியதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீன் Image captionஇலங்கையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீனுடன் முகமது இப்ராஹிம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து, அவரையும் இந்த தாக்குதலில் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன.

"தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு கூறினர். எனவே, நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் கோரியிருந்தனர்" என்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறினார்.

"இதனையடுத்து ராணுவத் தளபதியை நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக விவரம் கூறினேன். மேலும், நபர் ஒருவரின் விவரத்தைக் கூறி, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே ராணுவத் தளபதிடம் நான் கேட்டேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை" என்று அமைச்சர் விவரித்தார்.

"தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

மேலும், "ராணுவத் தளபதியுடன் நடத்திய உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்" என்றும் அமைச்சர் கூறினார்.

"இதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார் ரிசாத் பதியுதீன்.

"ராணுவத்தினரிடமோ போலீஸாரிடமோ வேறு எவரிடமோ எவரையும் விடுவிக்குமாறு நான் வேண்டுகோள் விடுவிக்கவில்ல" என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48302434

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
20 minutes ago, ஏராளன் said:

 

"தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

 

உலகமே இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிறது. இவர் வெறுமனே பயங்கரவாதம் என்கிறார்.

கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகம், அதிலும் கிழக்கில் முக்கியமானவர்கள்.

இவர் தமிழர்கள் என்றே சொல்லாமல், கத்தோலிக்கர்கள் என்று மதத்தினை தூக்கிப் பிடிக்கிறார்.

சிங்கள மல்கொம் ரஞ்சித்க்கும், கிழக்கின் தமிழர்கள் அழிவுக்கும் என்ன தொடர்பு?

கொல்லப்படுவது தமிழர்கள், வருத்தம் தெரிவிப்பது சிங்கள பாதிரியாருக்கா?

தகப்பன் உங்களுடன் இருந்த படம்... சரி... ராணுவத்தளபதிக்கு எதுக்கு 3 தரம் போன் செய்தீர்கள்?

பொய் மேல் பொய் பேசுகிறார். 

இவரும், ஹிஸ்புல்லாவும் இலங்கையின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முழு ஆதரவு தந்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

 சிங்கள மல்கொம் ரஞ்சித்க்கும், கிழக்கின் தமிழர்கள் அழிவுக்கும் என்ன தொடர்பு?

 

பிழைக்க தெரிந்த அரசியல்வாதி.....தமிழர்கள் இவர்களுக்கு கிள்ளிகீரைகள்....

Link to comment
Share on other sites

@Nathamuni

அவர் தான் இஸ்லாமியர் என்பதால் “பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை இஸ்லாமியர்கள் என அழைக்க முடியாது” என ஏனையோர் கூறியது போல் இஸ்லாத்தை பயங்கரவாதத்தோடு சம்பந்தப்படுத்தாமல் பிரித்து தான் கதைப்பார்.

கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகம் என்றாலும் தாக்குதல் நடத்தப்பட்டது கத்தோலிக்க தேவாலயங்களில் என்பதால் கத்தோலிக்கர்கள் என்று கதைக்கிறார். அது கூட பரவாயில்லை.

ஆனால் அதன் பின் முஸ்லிம்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு விட்டு “ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் தலைமையிலான கும்பல் முஸ்லிம்களுடன் வன்முறையில் ஈடுபட்டது” என வெளிநாட்டு ஊடகங்களில் சிங்களவர்கள் செய்திகளை எழுதினார்கள். சிங்களவர்கள் என்ற பெயர் செய்தியில் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அது ரொம்ப ஒவர்.

சிங்கள மல்கம் ரஞ்சித், சிங்கள அரசின் வால், சிங்களவர்களிடையே பிரபலம் பெற்றவர், முஸ்லிம்களுடனும் ஒட்டு என்பதால், கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து நல்ல பெயரெடுக்க பார்த்திருப்பார். தமிழர்கள் கொல்லப்பட்டால் (அதுவும் கிழக்கில் கொல்லப்பட்டால்) முஸ்லிம்களுக்கு என்ன கவலை?

Link to comment
Share on other sites

 

5.39 இல்

கேள்வி: இப்படியான பிரச்சினைகள் எங்கு உருவானது?

பதில்: இது இன்று நேற்றல்ல, உங்களுக்கு தெரியும் நீண்ட காலமாக நல்ல வளங்களை கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளிருக்கிறது, மத்திய கிழக்கு நாடுகள். மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வளவு வளங்கள் இருந்தும் நிம்மதியிழந்து ஒவ்வொரு நாட்டிலும் துன்பமும் யுத்தமும் கொலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு நடைபெறுவதற்கு, இதற்கு பின்னால் ஒரு சக்தி, பயங்கரவாதிகளுக்கும் பயிற்சி வழங்குகிறார்கள், அதேபோல் அரசாங்கத்திலேயுள்ள இராணுவத்திற்கும் பயிற்சி வழங்குகிறார்கள், பிறகு ஆயுத உற்பத்தியை செய்து 2 பேரையும் ஆயுதம் வாங்குமாறு சொல்கிறார்கள். இவ்வாறான ஒரு பெரிய சக்தி, இதன் பின்னாலிருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இஸ்லாத்தின் பெயரை சொல்லி பொய்யான பாதையிலே..., சதி, வெளிநாட்டு சதி என்று தான் சொல்ல வேண்டும். இந்த சதி, இதன் பின்னால், இலங்கையில் மட்டுமல்ல உலக பூராக இஸ்லாமிய நாடுகளிலும் இத்துன்பத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

——————————

இவர் இதில் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரிகிறது. ஆனால் அதே சதி இலங்கையில் ஈஸ்டர் தினமென்று குண்டு வெடிப்பாக நிகழ இலங்கை அரசு மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் துணை போனார்கள் என்பதே என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா? அப்படியிருந்தால் அறிந்துகொள்ள ஆவல்.

மதவெறி பிடித்த அடிப்படைவாதக் காட்டுமிராண்டிகளின் கோரத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதி என்று மிக எளிதாக எம்மால் கூறிவிட்டுப் போகமுடிகிறது. 

சமூகமயப்படுத்தப்பட்டுவரும் இஸ்லாமிய அரபு வஹாபிசத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதியென்று அடிப்படைவாதத்தைத் தனது பதவிக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தும் ஒரு முஸ்ளீம் அமைச்சர் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இதையே உண்மையென்று நம்பி அந்த வேற்றுச் சக்தியைத்தேடும் சிலர் இருக்கவும் செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

12 hours ago, ரஞ்சித் said:

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா? அப்படியிருந்தால் அறிந்துகொள்ள ஆவல்.

மதவெறி பிடித்த அடிப்படைவாதக் காட்டுமிராண்டிகளின் கோரத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதி என்று மிக எளிதாக எம்மால் கூறிவிட்டுப் போகமுடிகிறது. 

சமூகமயப்படுத்தப்பட்டுவரும் இஸ்லாமிய அரபு வஹாபிசத்தை வேற்றுச் சக்தியொன்றின் சதியென்று அடிப்படைவாதத்தைத் தனது பதவிக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தும் ஒரு முஸ்ளீம் அமைச்சர் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இதையே உண்மையென்று நம்பி அந்த வேற்றுச் சக்தியைத்தேடும் சிலர் இருக்கவும் செய்கிறார்கள். 

இவர் சொல்வதை உண்மையென நம்பி நான் இங்கு எழுதவில்லை. இவர் கருத்துக்கு முன்னமே நான் அரசல் புரசலாக இதுபற்றி இன்னொரு திரியில் எழுதியுள்ளேன்.

இவர் “சக்தி” என திரும்ப திரும்ப விளிப்பது secret societies பற்றி. நீங்கள் தான் எல்லா திரியிலும் நான் இது பற்றி எழுதி திரிகிறேன் என்று கூறியதால் அதை தவிர்த்து இங்கு எழுதினேன்.

இப்ப நீங்கள் கேட்டதால் தான் எழுதுகிறேன். இதை தூக்கிப்பிடித்து வாதாட வேண்டாம். 

இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது. அதை தூண்டி விடுவோர் பற்றியே என் கருத்து. அதேநேரம் இலங்கையில் அடிப்படைவாதம் பரவ, தாக்குதல் நடக்க இலங்கை அரசின் பங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் (இவர் உட்பட) பங்கும் இருந்தது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

20 hours ago, ஏராளன் said:

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடயம் தான் கோரியதாக கூறப்படுவதை அமைச்சர் ரிசாட் பதியூதீன் மறுத்துள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தது உண்மைதான்" என்று, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராணுவத் தளபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், "அவ்வாறான எந்தவித கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை" என அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

ஆயினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக, ராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு....

இதில் யார் பொய்யர்.?????????🤔

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்... இங்கு இரண்டு சோறுகள், ஒன்று அமைச்சர், மற்றது அதிகாரி இரண்டும் கேடுகெட்ட தங்கள் அரசின் தன்மைபற்றி உலகிற்கும் அறிவிக்கின்றது.

 

 

ஒன்று சொல்கிறது, "அதோபார் இமயமலை உச்சியில் ஒரு எறும்பு ஊர்ந்து ஊர்ந்து போகிறது."

மற்றது சொல்கிறது, "ஆமாம் பார்த்தேன், அது பின்னங்காலொன்றை இழுத்து இழுத்துப் போகிறது எங்கோ அடிபட்டிருக்க வேண்டும்." 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

அசல் தொப்பிபிரட்டி அரசியல்வாதி.

Link to comment
Share on other sites

 

9 minutes ago, Nathamuni said:

அசல் தொப்பிபிரட்டி அரசியல்வாதி.

சிங்கள மோடையன், முசுலீம் தொப்பி பிரட்டி. ஆனால் தமிழன்.......! கிடைத்த தலைவனையும் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறான். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ ... யாரு தன்ராஜா ..?😍

hqdefault.jpg

(ரெண்டுமே உடான்ஸ் பார்ட்டிகள்),,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

 

சிங்கள மோடையன், முசுலீம் தொப்பி பிரட்டி. ஆனால் தமிழன்.......! கிடைத்த தலைவனையும் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறான். 😲

யாருமே சாகாவரம் பெற்று வருவதில்லை. புலிகள் தம்மால் முடிந்த அதி உச்ச போராட்டத்தை நடாத்தினர்.

தொடர்ஓட்டம் போல அடுத்து வருபவர்கள் எடுத்துக் கொண்டோடுவர்.

நம் காலத்தில் இல்லாவிடினும், நமது விடுதலை வேறு வகையில் வந்து சேரும்.

ஹிஸ்புல்லா, ரிசாட்டை தவிர்த்து பாருங்கள். தமக்கும் ஆதங்கம் உண்டு என தம்மை வன்செயலுக்கு பலமுறை உள்ளாக்கிய சிங்களவர்களுக்கு புரிய வைத்துள்ளனர். மதவாதம் ஒரு காரணி, தேவையான பொருளாதாரத்தை வழஙகி இருக்கும். சிங்களத்தின் பொருளாதாரம் பெரும் அடி வாங்கி உள்ளது. மீன்று எழ நாளாகலாம்.

உரிமைகளை பகிர்ந்து கொள்ளாவிடில், சிங்களமும் நாட்டை இழககும்.

அமெரிக்கன் இலகுவாக உள்ளே வந்துவிட்டான். இதை தடுக்கவே இந்தியா தமிழர் இயககங்களை வளர்த்தது (1983).

நிலையாமை. இதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.