Jump to content

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள்

(நெவில் அன்தனி)

கத்தாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும்  ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும் என கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

qattar1.jpg

கத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் மரபுரிமைக்கான உயர் குழு இல்லத்தில் சவூத் அல் மொஹன்னாதியுடன் நடத்தப்பட்ட நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்படும் சகல விளையாட்டரங்குகளும் அராபிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் அனைத்து விளையாட்டரங்குகளும் அடுத்த வருடம் பூர்த்தியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சவூத் அல் மொஹன்னாதியுடனான நேர்காணல்

கேள்வி: சவூதி அரேபியா மற்றும் ஜப்பான் போன்ற  பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு இவ் வருடம் ஆசிய கிண்ணத்தை உங்களது நாடான காத்தார் சவீகரித்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய உங்கள் நாடு அடுத்த உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னின்று நடத்தவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?

பதில்: ஆசிய சம்பியன் என்ற வகையில் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடாக கத்தார் எதிர்கொள்ளவுள்ளது. 2022 நவம்பர் 21ஆம் திகதி எமது அணி லுசெய்ல் விளையாட்டரங்கில் ஆரம்பப் போட்டியில் விளையாடும்போது அது முழு கத்தாருக்கும் பெருமை அளிப்பதாக அமையும். 

வரவேற்பு நாடு என்ற வகையில் எமது கலாசார விழுமியங்களுக்கு அமைய சிறப்பாக நடத்துவோம். உலகக் கிண்ணப் போட்டிக்கான அரங்குகளில் ஒன்றான கலிபா விளையாட்டரங்கு 2017 மே மாதம் திறக்கப்பட்டு அமர் கிண்ண இறுதிப் போட்டியும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த அரங்கு குழுமையூட்டப்பட்டுள்ளதுடன் 40,000 ஆசன வசதிகளையும் கொண்டது.

qattar3.jpg

qattar4.jpg

கத்தாரின் தென்புற நகரான அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 40,000 ஆசனங்களைக் கொண்ட அல் வக்ரா விளையாட்டரங்கு இம் மாதம் திறக்கப்படுவதுடன் அல் கோர் நகரில் நிர்மாணிக்கப்படும் 60,000 ஆசனங்களைக் கொண்ட அல் பெட் விளையாட்டரங்கு இவ் வருட இறுதியில் திறக்கப்படும்.

எட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இதற்காக இலங்கையர்களுக்கும் நாங்கள் நன்றி கூறவேண்டும். உலகக் கிண்ணத்துடனான திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கத்தாரின் கனவை நனவாக்கி அதி சிறந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான எமது முயற்சியில் அவர்களது பங்களிப்பு இருப்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

கேள்ளி: 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அணிகளின் எண்ணிக்கை 32 இலிருந்து 48ஆக அதிகரிக்கலாம் என்ற ஊகம் நிலவுகின்றது. இதனால் இப் போட்டியை கூட்டாக வேற்று நாடொன்றுடன் நடத்த திட்டமிடப்படுவதாகத் தெரிகின்றது. 48 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டிகளை கத்தார் தனித்து நடத்த தயாரா?

பதில்: 2022 உலகக் கிண்ணப் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிப்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயார். 

எமது பிராந்தியத்துக்கும் அதன் மக்களுக்கும் அனுகூலம் தரக்கூடிய பீபா உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த உலகக் கிண்ணம் முழு அரபு உலகுக்கும் மத்திய கிழக்குக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதே எமது இலட்சியமாகும். 

அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பீபா பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்பார்க்கலாம். அதுவரை கத்தாரில் 32 அணிகளுக்கான உலகக் கிண்ணப் பணிகள் தொடரும் என்பதுடன் அதி உயரிய உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவோம் என்ற உறுதியையும் வழங்குகின்றோம்.

கேள்வி: ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ணப் போட்டியே அதி சிறந்தது என பீபா பிரகடனப்படுத்தியது. அதற்கு ஈடாகவோ அல்லது அதனை விட சிறப்பாகவோ உலகக் கிண்ணப் போட்டியை 2022இல் நடத்துவது கத்தாருக்கு பெருஞ்சவாலாக இருக்குமல்லவா.. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்?

பதில்: ரஷ்யாவில் 2018 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டபோது 200 கண்காணிப்பாளர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தோம். பீபாவிடமும் ரஷ்யாவிடமும் நிறைய விடயங்களை அறிந்துகொள்ளும்பொருட்டே அவர்களை அனுப்பினோம். பீபா 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு கத்தார் என 2010இல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒலிம்பிக் விழா, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, யூரோ சம்பியன்ஷிப், 21 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டி அனைத்துக்கும் எமது அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக அனுப்பி சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம். ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை நான் நேரில் கண்ணுற்றேன். ஆனால் அங்கு ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்கு 3,000 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்தது.. ஆனால் கத்தாரில் அரங்குகளுக்கு இடையில் 70 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்குக்கு ஒரு மணித்தியாலத்துக்குள் பயணித்துவிடலாம். எனவே இரசிகர்களுக்கும் அணிகளுக்கும் போதிய ஓய்வு எடுக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் ஒரே நாளில் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை கண்டுகளிப்பதற்கான வசதியும் இரசிகர்களுக்கு கிடைக்கும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவதால், கடற்கரை பொழுதுபோக்கு, பாலைவனச் சுற்றுப் பயணம், நீர்நிலை விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் அனைத்திலும் ஈடுபடக்கூடிய சுவாத்தியம் நிலவும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகை தந்து கால்பந்தாட்டத்துடன் களியாட்டங்களிலும் பங்குபற்றி மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அரபு உலகின் விருந்தோம்பல்களை அனுபவிக்கும் அதேவேளை கத்தாரின் சுவையான உணவுகளையும் உண்ணக்கூடியதாக இருக்கும். 

ஒட்டுமொத்தத்தில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையிலும் அரபு உலகுக்கு பெருமைதரும் வகையிலும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை கத்தார் நடத்தும் என நான் 100 வீதம் நம்புகின்றேன்.

கேள்வி:  உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு நிர்மாணிக்கப்படும் விளையாட்டரங்குகளுக்கான மொத்த செலவினம் எவ்வளவு? 

பதில்: சுற்றுப் போட்டிக்கான செலவினம் 23 பில்லியன் கத்தார் ரியால் (சுமார் 6.6 பில்லியன் அமெரிக்கா டொலர்கள்) என மதிப்பிட்டுள்ளோம். நான் ஏற்கனவே கூறியதுபோன்று எட்டு விளையாட்டு அரங்குகள் நிர்மாணிக்கப்படும். கலிபா விளையாட்டரங்கு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அல் வக்ரா, அல் பேட் என்பன இவ் வருடம் திறக்கப்படும். 

அல் ரயான், அல் துமாமா, ராஸ் அபு அபூத், எட்யூகேஷன் சிட்டி, லுசெய்ல் என்பன மற்றைய ஐந்து அரங்குகளாகும். எட்டு அரங்குகளில் ஆறு அரங்குகள் 40,000 ஆசனங்களைக் கொண்டவை. அல் பேட் அரங்கில் 60,000 ஆசனங்கள் உள்ளன. லுசெய்ல் அரங்குதான் பெரியது. இங்குதான் ஆரம்பப் போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெறும். இந்த அரங்கு 80,000 ஆசனங்களைக் கொண்டது. உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வகையில் ராஸ் அபு விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படுகின்றது. கப்பல் கொள்கலன்கள், அப்புறப்படுத்தக்கூடிய ஆசனங்கள், அலகுகளான கட்டுமாணத் தொகுதிகள் மற்றும் 40,000 ஆசனங்களுடன் ராஸ் அபு விளையாட்டரங்கு அமைக்கப்படும் இந்த அரங்கு, உலகக் கிண்ணம் முடிவடைந்ததும் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். 

எமது விளையாட்டரங்குகள் அனைத்தும் அராபிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டனவாக இருக்கும். இவை முழு உலகையும் கவரும் என்பது உறுதி.

 

 

http://www.virakesari.lk/article/56090

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு

கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றிரவு திறக்கப்பட்ட அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்டியில் அல் சாத் கழகத்தை 4 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட அல் துஹெய்ல் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

al_wakra_stadium_opened_on_16_may_2019.j

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அல் சாத் கழகம் சார்பாக அக்ரம் அலி கோல் ஒன்றைப் போட்டு தனது கழகத்தை முன்னிலையில் இட்டார். இவர் அல் துஹெய்ல் கழகத்தில் விளையாடும் யெஹியாவின் சகோதரர் ஆவார்.

எனினும் 9 நிமிடங்கள் கழித்து அல் துஹெய்ல் சார்பாக யெஹியா கோல் நிலையை சமப்படுத்தினார். 

அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் தரிக் சல்மானுக்கு மத்தியஸ்தர் அல் ஜஸிம் சிவப்பு அட்டைக் காட்ட அல் சாத் கழகம் 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்த ஆறு நிமிட இடைவெளியில் மொரோக்கோ நாட்டவரான எட்மில்சன் இரண்டு கோல்கைளப் (59 நி., 62 நி.) போட்டு அல் துஹெய்ல் அணியை முன்னிலையில் இட்டார். போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எட்மில்சன் தனது மூன்றாவது கோலைப் போட்டு அல் துஹெய்ல் கழகம் சம்பியனாவதை உறுதி செய்தார்.

amir_cup_al_duhail_4_al_sadd_1.jpg

al_duhail_lift_qatar_amir_cup.jpg

இதேவேளை, 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார் மேலும் 6 புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணித்து வருகின்றது.

அவற்றில் அல் பெய்த் அரங்கு வருட இறுதியில் திறக்கப்படவுள்ளது.

மற்றைய ஐந்து விளையாட்டரங்குகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும்.

 

http://www.virakesari.lk/article/56174

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாரில்... பியர் குடிக்கலாமா?

 

இப்படி, ஒரு விளையாட்டு..  நடத்த வேண்டும் என்று,
12  வருடங்களுக்கு முன்பே முடிவு எடுக்கப் பட்டு விட்டது  உண்மை.
பல நிகழ்சி  நிரல்கள்.... முன்பே,  யாரோ... ஒருவரால்  (இலுமினாட்டி ?)
திட்டமிட்டு  செயல்படுத்தப் படுகின்றன. என்றே... எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.