Jump to content

கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு

கமல் ஹாசன்Getty Images

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மே 19 அன்று தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது. 

எனவே, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சூலூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல் ஹாசன் பிரசாரம் செய்வதாக இருந்தார்.

ஆனால், மாவட்ட காவல் துறையினர் கமலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளருமான மகேந்திரனிடம் இது குறித்து கேட்டபோது, "நேற்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் இருந்தபோது, எழுத்து வடிவத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சூலூரில் கமல் ஹாசன் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறையிடம் இருந்து தகவல் வந்தது. அரவக்குறிச்சி பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே இந்த தகவல் வந்து சேர்ந்தது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளனர், வேறு எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டியில் மே 11 அன்று நடைபெற்ற பிரசாரத்தில், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவன் பெயர் நாதுராம் கோட்சே," என்று கமல் பேசியதற்கு இந்து அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று, வியாழக்கிழமை, அரவக்குறிச்சி, வேலாயுதம் பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கமல் மேடையில் இருந்து இறங்கியபோது காலணி, கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. ஆனால், அந்தக் காலணி, கல் எதுவும் அவர் மீது படவில்லை.

எனவே, மக்கள் நீதி மையத்தின் தொண்டர்களுக்கும், தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையை சரி செய்ய முயற்சி செய்தனர்.

கமல் ஹாசன்Twitter

இதனைத் தொடர்ந்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், "ம.நீ.ம குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள், நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்கினிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர். அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே," என்று பதிவிட்டுள்ளார்.

 

https://www.bbc.com/tamil/india-48305081

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.