Jump to content

ஆறாத சோகம் தீராத துயரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாத சோகம் தீராத துயரம்

அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும்.

Mulliwaikkal.jpg

அந்தப் பதை­ப­தைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்­ப­டியே உலுக்கி எடுக்கும். முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிலைமை இதுதான். 

முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நடந்து பத்து வரு­டங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்­புக்கள் குறித்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீட்­டுப் பார்க்­கவே விரும்­பு­வ­தில்லை. ஆனால் அந்த நினை­வுகள் நன­வு­க­ளாக எந்­தெந்த சந்­தர்ப்­பங்­களில் மேலெ­ழுந்து மெய்நடுங்கி மனம் நோகச் செய்யும் என்­பது அவர்கள் எவ­ருக்­குமே தெரி­யாது.

கதைப் போக்கில் முள்­ளி­வாய்க்கால் பற்றி பிரஸ்­தா­பித்­தாலே போதும். அங்கு நடந்த கோரக்­காட்­சிகள் மனங்­களில் வாழ்­வி­ய­லாக விரிந்து நடுங்கச் செய்யும். ஆற்­றா­மையும், இய­லா­மையும் ஆட்கொள்ள இதயம் அசுர வேகத்தில் துடிக்கும். தலை­க­னத்து சம்மட்­டியால் அடித்­தது போன்று இடிக்கத் தொடங்­கும். என்னவோ செய்­வது போல வயிறு கனத்து, கலங்கி ஏதேதோ நினை­வுகள் மனதில் முட்டி மோதும். 

பத்து வரு­டங்கள் என்ன, நூறு வரு­டங்கள் கடந்­தாலும், முள்ளிவாய்க்கால் நினை­வுகள் மனங்­களில் இருந்து மறைந்து போகாது. அந்த அள­வுக்கு முள்­ளி­வாய்க்கால் துய­ரங்கள் சக்தி வாய்ந்­தவை. அந்த நினை­வு­களில் சிக்கி காலச்­சக்­க­ரத்தில் சென்­றது போன்று அன்­றைய வாழ்­வி­ய­லுக்கே சிலர் ஆளா­கி­வி­டு­வ­துண்டு. 

உள­வியல் ரீதி­யான முள்­ளி­வாய்க்கால் துய­ரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்­தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்­கின்­றன. அந்தத் துய­ரத்தை ஒரு கூட்டு நிகழ்­வாக நினை­வு­கூர்ந்து, அழுது, அரற்றி, ஆற்­றிக்­கொள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு இன்­னுமே சந்­தர்ப்பம் சரி­யாகக் கிட்­ட­வில்லை. 

துயரம் கார­ண­மாகத் துவண்டு போகின்ற மனங்­க­ளுக்கு உள ஆற்றுப்­ப­டுத்தல் மிகமிக அவ­சியம். தன்­னோடு பாதிக்­கப்­பட்ட ஏனை­ய­ உறவு­க­ளுடன் மனந்­தி­றந்து பேசி, அந்த கூட்டுத் துய­ரத்தில் தமது கவ­லை­க­ளையும், துன்­பங்­க­ளையும், இழப்­புக்­க­ளையும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறு­வ­தற்­காக பாதிக்கப்பட்டவர்களின் உள்­ளங்கள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்­கின்­றன. 

முள்­ளி­வாய்க்கால் அவ­லத்தில் சிக்கித் தவித்­த­வர்கள் இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடி­யாத­வர்­க­ளா­கவும், அந்த துன்­பக்­கி­டங்கில் இருந்து மேலெ­ழுந்து வர முடி­யா­த­வர்­க­ளா­கவும் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்­றார்கள். 

அங்கு அரச படைகள் நடத்­திய கோர தாண்­ட­வத்­தின்­போது, பெற்ற­வர்கள், பிள்­ளைகள் மற்றும் உற்­ற­வர்கள் உடல் சிதறி உயிரிழந்து போக, அந்த இழப்­பின்­போது அழுது அரற்றி, துன்பத்தை வெளிப்­ப­டுத்தி, மனம் கசிந்து, கண்ணீர் உகுத்து, பலருக்கும் அவர்­களை அடக்கம் செய்ய முடி­யாமல் போனது.மழை­யென பொழிந்த எறி­க­ணை­க­ளிலும், சீறி வந்த துப்பாக்கிக் குண்­டு­க­ளிலும், கடற்­ப­ரப்பில் இருந்து பாய்ந்து வந்த பீரங்கிக் குண்­டு­களும் உடல்­களைப் பிய்த்­தெ­றிந்து மக்களை சின்னா­பின்­ன­மாக்­கி­யதால் சித­றிய உடற்­பா­கங்­களைப் பொறுக்கி எடுத்து ஒன்­றாக்கி, பாதிப்­பு­களில் இருந்து உயிர்­தப்­பி­ய­வர்­க­ளினால் ஓர் அடக்க நிகழ்வை செய்ய முடி­யாமல் இருந்­தது. 

mulli.JPG

இறந்­த­வர்கள் போக மிஞ்­சி­ய­வர்கள் உயிர்­களைக் காத்துக்கொள்வதற்­காக ஓடித்­தப்ப வேண்­டிய நிர்ப்­பந்தம். இதனால் படு­கா­ய­ம­டைந்து குற்­று­யி­ராகக் கிடந்­த­வர்­க­ளையும் கூட கண்டகண்ட இடங்­களில் கைவிட்டுச் செல்­கின்ற அவல நிலைமை. கல்­நெஞ்சம் கொள்ள வேண்­டிய அந்தத் தரு­ணங்­க­ளுக்கு ஆளாகித் தவித்­த­வர்­களின் துய­ரங்­களை எழுத்தில் வடிக்க முடி­யாது.

இரத்த உற­வு­க­ளையும், உற்­ற­வர்­க­ளையும் அநி­யா­ய­மாக சாகக் கொடுத்த துயரம் ஒரு­பக்கம். 

இறுதி நேரத்தில் அவர்­க­ளுக்குச் செய்ய வேண்­டிய உத­வி­க­ளையோ அல்­லது அவர்­க­ளுக்கு செய்ய வேண்­டிய மரி­யா­தை­க­ளையோ செய்ய முடி­யாமல் போய்­விட்­டதே என்ற மாளாத் துன்பம் பாதிக்கப்­பட்டோரின் மனங்­களில் மண்­டிக்­கி­டக்­கின்­றன. இந்தத் துய­ரங்கள் அவர்­களைத் துரத்தித்துரத்தி வாட்டி எடுக்­கின்­றன. 

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்­தது. ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஓர் ஒழுங்­க­மைப்பில் ஆர­வா­ர­மின்றி அமை­தி­யான முறையில் ஆன்­மீக சிந்­த­னை­யோடு அனுட்­டிக்­கப்­பட வேண்­டி­யது. அத்­த­கைய ஒழுங்­க­மைப்பு கடந்த பத்து வரு­டங்­களில் ஒரு தட­வை­யேனும் நினை­வேந்­தலை ஒழுங்கு செய்­த­வர்­க­ளினால் செய்­யப்­ப­ட­வில்லை. வவு­னி­யாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்­வுகள் முதன் முத­லாக எதிர்ப்பு­க­ளுக்கும், இரா­ணுவ, புல­னாய்­வா­ளர்­களின் அச்சுறுத்தலுக்கு மத்­தியில் உணர்­வு­பூர்­வ­மாக முன்னெடுக்கப்பட்டது. 

அச்­ச­மான சூழலில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அந்த நினை­வேந்­தல்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மனங்­க­ளிலும், ஏனை­யோரின் மனங்களிலும் சிறி­த­ளவு ஆறு­தலைத் தந்­தன. 

அச்­சு­றுத்­த­லையும் மீறி அனுட்­டிக்­கப்­பட்ட நினை­வேந்தல் நிகழ்வுகளில் பங்­கேற்­ற­தற்­காக இரா­ணு­வத்­தி­னரும், புலனாய்வாளர்­களும் தேடி வரு­­வார்­களோ, தேடி வந்து என்னென்ன செய்­வார்­களோ என்ற அச்சம் கவிழ்ந்த மனநிலையில் நிகழ்­வு­களில் கலந்து கொண்­ட­வர்கள்  நிம்­மதி இழந்து தவிக்க நேர்ந்­தி­ருந்­தது.  இந்த நிம்­ம­தி­யற்ற நினை­வேந்­த­லினால், முள்ளிவாய்க்கால் நினை­வேந்தல் என்­பது ஆறு­த­ல­ளிப்­ப­தா­கவோ அவ­ல­மாகக் கொல்­லப்­பட்­ட­வர்­களின் ஆத்மசாந்­திக்­காக மன­தாரப் பிரார்த்­தனை செய்து மன­மா­றவோ அவர்­களில் எவ­ராலும் முடியவில்லை. 

அந்த நினை­வேந்­தல்­களில் கலந்து கொண்டால் இராணுவத்தினராலும், புல­னாய்வு பிரி­வி­ன­ராலும் தங்­க­ளுக்கு எந்தெந்த வகையில் என்­னென்ன தீங்கு நேருமோ, என்று நெஞ்சம் கலங்­கிய நிலையில் முள்­ளி­வாய்க்கால் துய­ரந்­தோய்ந்த நெஞ்சம் கொண்ட பலரும் வீடு­களில் ஏங்கித் தவித்து வீடு­களில் முடங்கிக் கிடந்­த­துண்டு. இந்த அவல நிலைமை அர­சியல் உரி­மைக்­காகப் போராடி, பயங்­க­ர­வா­திகள் என பெயர் சூட்­டப்­பட்டு முள்ளிவாய்க்கால் வரையில் அடித்து நொறுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கே நேர்ந்­தி­ருந்­தது. இந்த அவ­லத்­தி­னதும், துய­ரத்­தி­னதும் அள­வையும் வேத­னை­யையும் எவ­ராலும் எடுத்­து­ரைத்து விளக்கிக் கூற முடியாது. 

யுத்தம் முடி­வ­டைந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் செல்­வ­தற்கு எவ­ரையும் அர­சாங்கம் உடனடி­யாக அனு­ம­திக்­க­வில்லை.இதனால் இரத்­தத்தில் தோய்ந்த அந்த மண்­ணுக்குச் சென்று தமது உற­வி­னர்­களும் உற்­ற­வர்­களும் உயி­ரி­ழந்த இடங்­களை நேரில் தரி­சித்து மன ஆ­று­தலடைவதற்கான சந்­தர்ப்­பமும் நீண்ட கால­மாக அவர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை.

 முள்­ளி­வாய்க்­காலில் மீள்­கு­டி­யேற்றம் அனு­ம­திக்­கப்­பட்டு,மக்கள் அங்கு சென்­று­வ­ரு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்ட தருணங்களும், அங்கு சென்­ற­வர்கள் எங்­கெங்கு செல்­கின்­றார்கள், என்­னென்ன செய்­கின்­றார்கள், யார்­யா­ரோடு கதைக்­கின்­றார்கள் என்று கண்­கா­ணிப்­ப­தற்­காக நிழல்­போல தொடர்ந்த இராணுவத்தினரும், புல­னாய்­வா­ளர்­களும் அந்த மக்கள் மனங்களில் மேலும் மேலும் அச்­சத்­தையும் பீதி­யையும் விதைப் பதற்கே வழி­வ­குப்­ப­ன­வாக அமைந்­தி­ருந்­தன. 

நினை­வேந்தல் என்­பது மனம் அமை­தி­ய­டை­வ­தற்கும், ஆறுதல் பெறு­வ­தற்­கு­மாக அனுட்­டிக்­கப்­பட வேண்­டி­யது. அது நிர்ப்பந்தமான நிலை­யிலோ அச்­சு­றுத்­த­லான ஓர் உள­வியல் சூழலிலோ அனுட்­டிக்­கப்­பட முடி­யா­தது. அத்­த­கைய நிகழ்­வு­களை நினை­வேந்தல் என்று வரை­ய­றுக்­கவோ வகுத்துக் கூறவோ முடியாது. அவ்­வா­றான செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை இம்­சிக்­கவும், கொடூ­ர­மாகக் கொடு­மைப்­ப­டுத்­த­வுமே உதவும் எனலாம். 

முதன் முத­லாக முள்­ளி­வாய்க்­கா­லி­லேயே முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை வட­மா­கா­ணத்தின் முன்னாள் முதலமைச்சர் நிகழ்த்­தி­ய­போது, முள்­ளி­வாய்க்­காலில் பாதிக்கப்பட்­ட­வர்கள் எவரும் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை என்றே கூற வேண்டும். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும், அவர்­களைச் சார்ந்தவர்­க­ளுமே அங்கு கூடி­யி­ருந்­தார்கள். அந்த நிகழ்வு முழுக்கமுழுக்க அர­சியல் மய­மான ஒரு நிகழ்­வா­கவும், ஒரு சம்பிரதாய நிகழ்­வா­க­வுமே நடந்­தே­றி­யது.. தொடர்ந்து அங்கு இடம்­பெற்ற நினை­வேந்தல் நிகழ்­வு­களும் கட்சி அர­சியல் நிழல் படிந்­த­தா­கவும், அர­சியல் மய­மா­ன­தா­க­வுமே ஒழுங்கமைக்கப்பட்டி­ருந்­தன. 

ஓர் உணர்வு பூர்­ வ­மான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறுதல் அளிக்க­வல்ல புனி­த­மா­ன­தொரு நினை­வேந்தல் நிகழ்­வாக அந்த நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­ப­தற்கு எவ­ரா­லுமே முடி­யாமல் போனது. இது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் சோக­மான ஒரு பக்கம். 

போட்டி நிகழ்­வாகிப் போன நினை­வேந்தல்

வட­மா­காண சபையின் பொறுப்பில் இருந்த முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வொ­ழுங்­குகள் முன்னாள் போரா­ளிகள் மற்றும் யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் வரு­கை­யோடு ஒரு போட்டி நிகழ்­வாக மாறிப்­போ­னது. முன்னாள் போரா­ளிகள் மாவீரர் நாள் நிகழ்­வொ­ழுங்கின் அனு­ப­வத்­தோடும், பொறுப்புரிமை­யோடும் பங்­கெ­டுத்து அதனைச் சிறப்­பிக்க முயன்ற போதிலும், மேலாண்மை மனப்­பாங்­குடன் பங்­கேற்­றி­ருந்த பல்கலைக்­க­ழக மாண­வர்கள் அந்த நிகழ்வை முழு­மை­யாக ஆக்­கி­ர­ மித்­தி­ருந்­தார்கள். 

ஒழுங்­க­மைப்­புக்கள் அவர்­களின் சுய­வி­ருப்­பத்தின் பேரி­லேயே இடம்பெற்றி­ருந்­தன. வட­மா­கா­ண­ ச­பையும் அந்த நினை­வேந்தல் காட்­சியில் இருந்து ஒதுங்க வேண்­டிய நிலையில், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் விருப்பு வெறுப்­புக்குட்­பட்டு முன்னாள் முதலமைச்­சரும் நிகழ்வில் ஒரு பொம்­மை­யைப் போன்று பங்கேற்­கின்ற நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. 

இந்த அம­ளி­க­ளுக்­கி­டையில் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் மனமொ­ரு­மித்து பங்­கேற்க வேண்­டிய, உண்­மை­யா­கவே முள்ளிவாய்க்­காலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் அந்த ஒப்பேற்றலுக்கான நிகழ்­வ­களில் மனம் ஒட்­டியும் ஒட்­டாத நிலையில் பங்­கேற்க நேர்ந்­தி­ருந்­தது. 

இறு­தி­யாக நடை­பெற்ற இந்த நினை­வேந்தல் நிகழ்வு பலதரப்பட்ட­வர்­க­ளி­னதும் கார­சா­ர­மான விமர்­ச­னங்­க­ளுக்கும் கண்ட­னத்­திற்கும் ஆளா­கி­யது. அடுத்த நினை­வேந்தல் நினைவாகிய பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒரு பொது அமைப்­பினால் நேர்த்­தி­யாக ஒழுங்கு செய்­யப்­பட வேண்டும் என்ற தீர்க்­க­மான முடிவை மேற்­கொள்­வ­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தது.

உள்ளூர்வாசிகளான முள்­ளி­வாய்க்கால் மற்றும் அதனைச் சூழ்ந்த கிரா­மங்­களைச் சேர்ந்த மக்­களின் பங்­க­ளிப்­பின்­றியே முள்ளிவாய்க்காலில் இடம்­பெற்ற நினை­வேந்தல் நிகழ்­வுகள் நடந்தேறி முடிந்­தன.

பத்தாவது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் என்­பது சிறப்­பா­கவும் சீரான முறை­யிலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு, பலதரப்பட்டவர்களினதும் பங்­க­ளிப்­புடன் நேர்த்­தி­யாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற வைராக்­கி­யத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

ஆனால், கொழும்­பையும் மட்­டக்­க­ளப்­பையும் மையப்­ப­டுத்­திய உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளினால், நிலை­கு­லைந்­து­போன நாட்டின் பாது­காப்பு நிலை­மைகள், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­களைப் பற்றிச் சிந்­திக்­கக்­கூட முடி­யாத அள­வுக்கு மோச­மா­கிப் போயின. 

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் மூலம் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் எழுச்சி பெற்று விடு­வார்கள் என்ற கற்­ப­னா­வாத கருத்­தியல் கார­ண­மா­கவே, அதனை சுதந்­தி­ர­மான முறையில் அனுட்­டிப்­ப­தற்கு அர­சாங்கம் மறுத்­தி­ருந்­தது. தமிழ் மக்­களின் போராட்ட வர­லாற்றை நினைவில் தேக்கி, போர்க்­குற்றச் செயல்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்ற கோரிக்­கையை தமிழ் மக்கள் சோர்வின்றி நீண்டகாலத்திற்கு வலியுறுத்தி தொல்லை கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வழங்கிவிடும் என்ற எண்ணமும் இந்த அனுமதி மறுப்புக்குப் பின்னணி காரணமாகத் தெரிகின்றது. 

எது எப்படி இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, ஓர் அரசியல் கலந்த நிகழ்வாகவும் தமிழ் மக்களின் ஆன்மாவைக் கீறிக் குதறிய அந்த நிகழ்வுகளை நினைவேந்தல் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைக்களனாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.  

இது தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்ற ஆன்மீகத்தின் சோர்வடையாத வளர்ச்சி நிலைக்கும் உறுதியானதோர் அரசியல் விடிவுக்கான திறப்பு வாயிலாகவும் கட்டி ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.  

அது ஆன்மீக, சமூக, அரசியல் சார்ந்த நிகழ்வாக வாழையடிவாழையாகத் தொடர்ந்து பின்பற்றி நினைவேந்தப்படுத் தக்கவகையில் கட்டமைக்கப்பட வேண்டும். அது ஒரு வழி நிகழ்வாகவோ அல்லது ஒரேயொரு முறையிலானதாகவோ அமையாமல் தமிழ் சமூகத்தின் பல்வேறு கிளைகளில் ஊறித் திளைக்கின்ற பன்முக முறையிலானதாக உருவாக்கப்பட வேண்டும். 

அதற்குரிய உறுதியான தீர்மானத்தைப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கான அடித்தளத்தை இடுவதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது நிகழ்வு அமைய வேண்டும். 

பி.மாணிக்கவாசகம்

 

 

http://www.virakesari.lk/article/56196

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.